search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in Erode"

    • ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது
    • தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 354 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். கடந்த சில நாட்களாக பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் தினசரி பாதிப்பு திடீரென சற்று அதிகரித்துள்ளது.

    நேற்று முன்தினம் 46 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் நேற்று 55 ஆக உயர்ந்துள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை

    1 லட்சத்து 34 ஆயிரத்து 833 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்த 62 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 1 லட்சத்து 33 ஆயிரத்து 745 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 354 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஒரே நாளில் மேலும் 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 373 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஒரே நாளில் மேலும் 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 726 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்த 65 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 1 லட்சத்து 33 ஆயிரத்து 619 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 373 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • 3-வது நாளாக மாவட்டம் முழுவதும் விடிய, விடிய மழை பெய்துள்ளது.
    • மாவட்டத்தில் அதிகபட்சமாக கோபியில் 94 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி ரோடுகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

    இந்நிலையில் நேற்று 3-வது நாளாக மாவட்டம் முழுவதும் விடிய, விடிய மழை பெய்துள்ளது. குறிப்பாக கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்ய தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது.

    இதனால் கோபிசெட்டிபாளையம், மொடச்சூர், குள்ளப்பாளையம், வெள்ளாளபாளையம் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக கோபியில் 94 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதேப்போல் கொடிவேரி, சத்தியமங்கலம், குண்டேரிபள்ளம், பெருந்துறை, கவுந்தப்பாடி, வரட்டுபள்ளம் போன்ற பகுதிகளும் விடிய, விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலான அணைகள், ஏரி குளங்கள் நிரம்பி வழிகின்றன. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கோபி-94, கொடிவேரி-72, சத்தியமங்கலம்-58, குண்டேரி பள்ளம்-56, பெருந்துறை-27, கவுந்தப்பாடி-26.8, வரட்டு பள்ளம்-11, தாளவாடி-10.4, பவானிசாகர்-8.20, சென்னிமலை-7, நம்பியூர்-2.

    • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க.வை கண்டித்து தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.செந்தில்குமார் தலை மையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
    • பா.ஜ.க. பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் திரளாக உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு காளைமாடு சிலை அருகில் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க.வை கண்டித்து தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.செந்தில்குமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    மொடக்குறிச்சி சி.சரஸ்வதி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கோட்ட பொறுப்பாளர் பாயிண்ட் மணி கண்டன உரையாற்றினார்.

    இதில் முன்னாள் எம்.பி. சவுந்தரம், மகளிர் அணி மாநில பொது செயலாளர் மோகனப்பிரியா, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேஷ்குமார், பொது செயலாளர்கள் எஸ்.எம்.செந்தில், வேதானந்தம், சிவகாமி மகேஷ்வரன், ஈஸ்வரமூர்த்தி, மகளிர் அணி தலைவர் புனிதம்,

    மாவட்ட துணை தலைவர்கள் குணசேகரன், சின்னதுரை, தங்கராஜ், வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி, தொழில் பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திக், செயலாளர் பாலமுரளி, பட்டியல் அணி மாநில துணை செயலாளர் அய்யாசாமி, கலை இலக்கிய பிரிவு தலைவர் சக்திசுப்பிரமணி,

    மத்திய அரசாங்க மக்கள் நலதிட்டங்கள் பிரிவு மாவட்ட தலைவர் பி.எஸ்.செல்வமணி, முன்னாள் வர்த்தக அணி நிர்வாகிகள் செல்வகுமார், தீபம்ராஜா, அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு தலைவர் சரவணன், துனை தலைவர் ரவிந்தரன், மாவட்ட செயலாளர் குமரகுரு, இந்திரகுமார், ஊடக பிரிவு அண்ணாதுரை உள்பட பா.ஜ.க. பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் திரளாக உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர். 

    • ஈரோடு மாவட்டம் முழுவதும் 110 சைபர் கிரைம் போலீசார் அனைத்து போலீஸ் நிலையங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு ஈரோடு செங்குந்தர் பள்ளியில் பயிற்சி நடந்தது.
    • பொது மக்களின் புகார்களை எவ்வாறு பெறுவது அவற்றை எவ்வாறு தீர்க்க நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் சைபர் க்ரைம் போலீஸ் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவின் ஏ.டி.எஸ்.பி.யாக ஜானகி ராமன் உள்ளார். மாவட்டத்தில் சைபர் கிரைம் தொடர்பான வழக்குகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக சமூக வலை தளம் மோசடி குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சைபர் கிரைம் தொடர் தொடர்பாக ஒரு குற்றம் நடந்தால் 24 நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைமில் புகார் அளித்தால் போலீசார் துரிதமாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட இணையதளத்தை முடக்கி பணத்தை திரும்பப் பெற்றுக் கொடுக்க முடியும் என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    சைபர் கிரைம் பிரிவு ஈரோடு எஸ.பி. அலுவலகத்தில் மட்டுமே உள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் புகாரை விசாரிப்பதற்கு ஏதுவாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் 3 சைபர் பிரிவு போலீசார் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இதில் ஒரு எஸ்.எஸ்.ஐ, அவருக்கு 2 போலீசார் இருப்பார்கள். அவர்கள் சைபர் கிரைம் தொடர்பான புகார்களை பெற்று அதனை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பார்கள்.

    இவ்வாறாக மாவட்டம் முழுவதும் 110 சைபர் கிரைம் போலீசார் அனைத்து போலீஸ் நிலையங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி இன்று ஈரோடு செங்குந்தர் பள்ளியில் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமை தாங்கினார். சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி. ஜானகிராமன் முன்னிலை வகித்தார். இதில் கலந்துகொண்ட சைபர்கிரைம் போலீசாருக்கு பொது மக்களின் புகார்களை எவ்வாறு பெறுவது அவற்றை எவ்வாறு தீர்க்க நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    • ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 13 நாட்களாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
    • பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் லேசான அறிகுறியே இருப்பதால் அவர்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் தனிமையிலிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 13 நாட்களாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மேலும் ஒரே நாளில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 714 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 957 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 14 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் லேசான அறிகுறியே இருப்பதால் அவர்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் தனிமையிலிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள ஜவான் பவன் முன்பு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    சூரம்பட்டி:

    ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள ஜவான் பவன் முன்பு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர்கள் சரவணன், மக்கள்ராஜன், திருச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா, இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் செந்தூர் ராஜகோபால், மண்டல தலைவர்கள் ஜாபர் சாதிக், விஜயபாஸ்கர், மாவட்ட முன்னாள் தலைவர் ஈ.ஆர். ராஜேந்திரன், முத்துகுமார், உதயகுமார், செந்தில்ராஜா, முன்னாள் நகர தலைவர் குப்பண்ணா சந்துரு, ஈரோடு பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் விஜய் கண்ணா, விவசாய அணி மாவட்ட தலைவர் பெரியசாமி, வக்கீல் அணி ராஜேந்திரன், மகளிர் அணி புவனேஷ்வரி, முகமது அர்சத், பாட்சா உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ×