search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in the last 14 days"

    • ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 13 நாட்களாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
    • பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் லேசான அறிகுறியே இருப்பதால் அவர்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் தனிமையிலிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 13 நாட்களாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மேலும் ஒரே நாளில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 714 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 957 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 14 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் லேசான அறிகுறியே இருப்பதால் அவர்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் தனிமையிலிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ×