search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடிய"

    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர்.
    • சனீஸ்வர பகவானுக்கு வெள்ளிக்கவசத்தில் சிறப்பு அலங்காரம்.

    காரைக்கால்:

    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்த சனி பகவானை நேற்று மாலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர்.

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியான காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், உலகப் புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இந்த கோவிலில் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி விழா நேற்று மாலை 5.20 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. அப்போது, சனீஸ்வரர், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசித்தார். அதுசமயம், சனீஸ்வர பகவானுக்கு வெள்ளிக்கவசத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

    சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், நளன் குளத்தில் புனித நீராடி, திருநள்ளாறின் நான்கு வீதிகளிலும் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். முன்பதிவு செய்யாத திரளான பக்தர்கள், கோவில் அருகே, கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த ஆன்லைன் முன்பதிவு மையத்தில் ரூ.300, ரூ.600, ரூ.1,000 கட்டண டிக்கெட் பெற்று தரிசனத்துக்கு சென்றனர். இவர்கள் தவிர தர்ம தரிசனம் மூலமாகவும் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கனமழை என்பதாலும், சனிப்பெயர்ச்சியன்று கூட்டம் அதிகம் காணப்படும் என்ற தயக்கத்தாலும், நேற்று அதிகாலை முதல் மாலை 4 மணி வரை மிக குறைவான பக்தர்களே நளன் குளத்தில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். மாலை 4 மணிக்கு மேல் கூட்டம் அதிகரித்தது.

    குறிப்பாக காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானம் மதியம் 3 மணிக்கு மேல் லேசான மழை பெய்தது. இருந்தாலும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நளன் குளத்தில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    சரியாக சனிப்பெயர்ச்சி நேரமான மாலை 5.20 மணிக்கு கனமழை பெய்தது. அப்போது சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. நேற்று அதிகாலை காலை முதல், மாலை வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலை சுற்றி ஆங்காங்கே பல்வேறு இடங்களில் மெகா எல்.இ.டி டி.வி.க்கள் வைக்கப்பட்டு சனிப்பெயர்ச்சி தீபாராதனை உள்ளிட்ட சனீஸ்வர சன்னதியில் நடந்த அனைத்து நிகழ்ச்சிகளும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. இதை பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

    முன்னதாக, நேற்று முன்தினம் இரவு, சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    நேற்று மாலை 6 மணி முதல் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி வரை என 24 மணி நேரமும் கோவில் நடை விடிய, விடிய பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • மங்களகிரி பெருமாள் கோவிலில் அதிகமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பவானி அருகே உள்ள பெருமாள் மலையில் அமைந்துள்ள மங்களகிரி பெருமாள் கோவிலில் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பெருமாள்மலை மங்கள கிரி பெருமாள் ஏராளமான பக்தர்களுக்கு குல தெய்வ மாக இருந்து வருகிறார். இதனால் புரட்டாசி மாதத்தையொட்டி பக்த ர்கள் பலர் மாலை அணிந்து விரதம் இருந்து வரு கிறார்கள்.

    இதை தொடர்ந்து புரட்டாசி கடைசி சனி க்கிழமை என்பதால் பக்தர்கள் பலர் ஈரோடு மற்றும் பவானி பகுதிகளில் இருந்து நேற்று இரவு முதலே குவிய தொடங்கினர்.

    இதை தொடர்ந்து அவர்கள் மலை அடிவார த்தில் கூடாரம் அமைத்து ெபருமாள் படம் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தினர். இதையடுத்து நள்ளிரவு முதல் அதிகாலை வரை ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்

    இதை தொடர்ந்து இன்று அதிகாலை 1 மணி அளவில் பக்தர்கள் பலர் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் செம்மாலைகள் (பெரிய அளவிலான செருப்புகள்) கொண்டு வந்து ஊர்வலமாக சென்று மலை மீது உள்ள மரத்தி ல் கட்டி தரிசனம் செய்தனர்.

    இதையொட்டி அதி காலை 2 மணிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து மங்களகிரி பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஈரோடு, பவானி மற்றும் சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த ஆயிரக்கண க்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் ஆண்கள், பெண்கள்,குழந்தைகள் பக்தர்கள் பலர் மொட்டை அடித்து பெருமாளுக்கு முடி காணிக்கை செலுத்தினர். இதனால் பெருமாள் மலையில் இரவு முதல் விடிய, விடிய பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது.

    தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் காலை வரை சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    தொடர்ந்து இன்று அதி காலை பெருமாளுக்கு அபிஷேகம் செய்ய ப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்ய ப்பட்டது.

    கோபி அருகே உள்ள மூல வாய்க்கால் ஸ்ரீதேவி பூதேவி கரி வரதராஜ பெருமாள் கோவிலில் காலை 7 மணி அளவில் சாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், மற்றும் வாச னை திரவியங்கள் அடங்கிய அபிஷேகங்கள் நடைபெற்றன.

    அதை தொடர்ந்து சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

    மேலும் கோபிசெட்டி பாளையம் வரதராஜ பெரு மாள் கோவில், பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில், கோபி மொடச்சூர் பெருமாள் கோவில், கொள ப்பலூர் பெருமாள் கோவில், அழுக்குளி பெரு மாள் கோவில், மேட்டுவளவு பெரு மாள் கோவில் மற்றும் சுற்று வட்டாரபகுதியில் உள்ள பெருமாள் கோவில்க ளில் சிறப்பு பூஜைகள் செய்ய ப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றன.

    இதையொட்டி பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    அந்தியூர் வரதராஜ பெரு மாள், சீனிவாச பெருமாள், அழகுராஜ பெருமாள், உள்ளி ட்ட கோவில்களில் புரட்டாசி கடைசி சனி க்கிழமையை யொட்டி சிறப்பு அலங்கார த்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாளித்தார். அந்தியூர் பேட்டை திருப்பதி பேட்டை பெருமாள் கோவிலில் சனிக்கி ழமை மற்றும் அமாவாசையையொட்டி கோ பூஜை நடந்தது.

    அந்தியூர் தவிட்டுப்பாளை யம், வெள்ளையம்பாளை யம், சின்னத்தம்பி பாளை யம், அண்ணா மடுவு, கந்த ம்பாளை யம், பச்சாம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்த ர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    இதையொட்டி கவுந்த ப்பாடி சந்தைபேட்டை பழ மையான கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று அதி காலை சிறப்பு அபிஷேம் செய்ய ப்பட்டது. இதை தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலி த்தார். இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஆப்பக்கூடல் அருகே உள்ள கள்ளிப்பட்டி அடுத்த பெருமுகை சஞ்சீவிராயன் பெருமாள் கோவிலில் இன்று காலை சிறப்பு தரிசனம் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் இன்று அதி காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களு க்கு அருள் பாலித்தார்.

    இதையொட்டி இன்று காலை முதலே ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏரா ளமான பக்தர்கள் கோவி லுக்கு வந்திருந்தனர். இதை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தொட ர்ந்து பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் வழங்கப்பட்டது.

    • கொள்ளை உள்ளிட்ட குற்றங்களை தடுக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
    • போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை தீவிர மாக கண்காணிக்க வேண்டும்.

    பு.புளியம்பட்டி, 

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஜவகர் பதவி ஏற்ற பின் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த உத்தர விட்டார்.

    மேலும் கஞ்சா, கள்ளச்சா ராயம், லாட்டரி சீட்டு, குட்கா மற்றும் ரவுடிகள் செயல்பாடு போன்ற சட்ட விரோத செயல்களை ஒழிக்கவும், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற ங்களை தடுக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இதேபோல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை தீவிர மாக கண்காணிக்க வேண்டும். மற்றும் பொது மக்கள் புகார் மற்றும் அவர்களது பிரச்சினைகள் குறித்து உடனடியாக நடவடி க்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    இதையடுத்து புளிய ம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் சப்-இன்ஸ்பெ்கடர் ரபி மற்றும் போலீசார் நேற்று இரவு பவானிசாகர் ரோடு, கோவை சாலை, நால்ரோடு சோதனை சாவடி, நம்பியூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைத்து இரவு நேர வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வாகன ங்களின் ஆர்.சி. புத்தகம், இன்சூரன்ஸ் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்தும் மற்றும் வாகனங்களையும் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    • ,சாலையில் செல்ல முடியாத அளவுக்கும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது.
    • விடிய,விடிய பெய்த வண்ணம் இருந்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில், கடந்த ஒரு வாரமாக வெயில் கொளுத்தியது.இதன் காரணமாக வெப்ப சலனம் அதிகரித்தது.

    இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் இருக்க முடியாத அளவிலும்,சாலையில் செல்ல முடியாத அளவுக்கும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது.

    இந்நிலையில் நேற்று மாலை 6:30 மணி அளவில் திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதை எதிர்பார்க்காத பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், மழையில் நனைந்தபடி சென்றனர்.

    மேலும் சிலர், சாலையோரத்தில் உள்ள கடைகளில் தஞ்சமடைந்து மழை நின்றபின் கலைந்து சென்றனர். இந்த மழை சுமார் 40 நிமிடங்களுக்கும் மேலாக தொடர்ந்தது.பின்னர் இரவில் மீண்டும் பெய்ய தொடங்கிய மழை விடிய,விடிய பெய்த வண்ணம் இருந்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.

    வானிலை ஆய்வு மையத்தினர் கடந்த சில தினங்களாகவே தருமபுரி மாவட்டத்தில் மழை பெய்யும் என்று அறிவித்து வந்தனர். ஆனால் நேற்றுதான் மழை பெய்தது.

    • நேர்லகிரி, நாச்சிக்குப்பம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது.
    • கன மழை வெளுத்து வாங்கியதால் இப்பகுதியில் ஆறுகளிலும் ஏரிகளிலும் நீர் நிரம்பி வருகிறது.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக வெயில் பொதுமக்களை வாட்டி வைத்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் வேப்ப னப்பள்ளி,குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, சூளகிரி,அத்திமுகம் தீர்த்தம், நேர்லகிரி, நாச்சிக்குப்பம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் தாழ்வான பகுதிகளிலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் கன மழை வெளுத்து வாங்கியதால் இப்பகுதியில் ஆறுகளிலும் ஏரிகளிலும் நீர் நிரம்பி வருகிறது.

    மேலும் கனமழையால் இப்பகுதிதில் குளிர்ந்த சீதோசன நிலை நிலவி வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • 3-வது நாளாக மாவட்டம் முழுவதும் விடிய, விடிய மழை பெய்துள்ளது.
    • மாவட்டத்தில் அதிகபட்சமாக கோபியில் 94 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி ரோடுகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

    இந்நிலையில் நேற்று 3-வது நாளாக மாவட்டம் முழுவதும் விடிய, விடிய மழை பெய்துள்ளது. குறிப்பாக கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்ய தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது.

    இதனால் கோபிசெட்டிபாளையம், மொடச்சூர், குள்ளப்பாளையம், வெள்ளாளபாளையம் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக கோபியில் 94 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதேப்போல் கொடிவேரி, சத்தியமங்கலம், குண்டேரிபள்ளம், பெருந்துறை, கவுந்தப்பாடி, வரட்டுபள்ளம் போன்ற பகுதிகளும் விடிய, விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலான அணைகள், ஏரி குளங்கள் நிரம்பி வழிகின்றன. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கோபி-94, கொடிவேரி-72, சத்தியமங்கலம்-58, குண்டேரி பள்ளம்-56, பெருந்துறை-27, கவுந்தப்பாடி-26.8, வரட்டு பள்ளம்-11, தாளவாடி-10.4, பவானிசாகர்-8.20, சென்னிமலை-7, நம்பியூர்-2.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • நேற்று இரவு பெய்த கன மழையின் காரணமாக 11 மணியளவில் புளியமரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்று காலையில் வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை நேரத்தில் திடீரென மழை பெய்தது. இந்த மழை விட்டு விட்டு பெய்ய தொடங்கியது.

    இரவு 7 மணி முதல் இன்று அதிகாலை வரை கனமழை பெய்தது. நகரில் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடந்தது. இன்று காலையும் சாரல் மழை பெய்தது.

    தருமபுரி, காரிமங்கலம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பென்னா கரம், ஏரியூர், ஒகேனக்கல், நாகரை, இண்டூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், மொரப்பூர், அரூர், கிருஷ்ணாபுரம், இருமத்தூர் உள்பட பல இடங்களில் நள்ளிரவு மழை பெய்தது.தருமபுரி அடுத்த ஒட்டப்பட்டி அவ்வை செல்லும் சாலையில் நேற்று இரவு பெய்த கன மழையின் காரணமாக 11 மணியளவில் புளியமரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.

    இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து சாய்ந்து விழுந்த புளியமரத்தை அப்புறப்படுத்தி சீரமைத்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

    இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் மழை பெய்தது. மத்தூர், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, கல்லாவி, போச்சம்பள்ளி, பர்கூர், காவேரிப்பட்டணம், ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை உள்பட பல இடங்களில் நேற்றிரவு மழை பெய்தது. இந்த மழையால் ஒருசில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் இரவு இருளில் மக்கள் தவித்தனர்.

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விடிய விடிய பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தருமபுரியில் 2 சென்டிமீட்டர் மழையும், பாலக்கோடு 2.02 சென்டி மீட்டர், பெண்ணாகரம் 1 சென்டிமீட்டர் ,ஒகேனக்கல் 2.50 சென்டிமீட்டர், அரூர் 8 சென்டிமீட்டர் ,பாப்பிரெட்டிப்பட்டி 2.50 சென்டிமீட்டர், மாவட்டத்தில் மொத்தம் 18.02 சென்டி மீட்டர் மழையும் சராசரி 2.57 சென்டி மீட்டர்மழையும் பதிவாகியுள்ளது.

    ×