ஈரோட்டில் சைபர் கிரைம் போலீசாருக்கு பயிற்சி

ஈரோடு மாவட்டம் முழுவதும் 110 சைபர் கிரைம் போலீசார் அனைத்து போலீஸ் நிலையங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு ஈரோடு செங்குந்தர் பள்ளியில் பயிற்சி நடந்தது. பொது மக்களின் புகார்களை எவ்வாறு பெறுவது அவற்றை எவ்வாறு தீர்க்க நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
ஈரோட்டில் சைபர் கிரைம் போலீசாருக்கு பயிற்சி
Published on

ஈரோடு:

ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் சைபர் க்ரைம் போலீஸ் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவின் ஏ.டி.எஸ்.பி.யாக ஜானகி ராமன் உள்ளார். மாவட்டத்தில் சைபர் கிரைம் தொடர்பான வழக்குகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக சமூக வலை தளம் மோசடி குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சைபர் கிரைம் தொடர் தொடர்பாக ஒரு குற்றம் நடந்தால் 24 நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைமில் புகார் அளித்தால் போலீசார் துரிதமாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட இணையதளத்தை முடக்கி பணத்தை திரும்பப் பெற்றுக் கொடுக்க முடியும் என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

சைபர் கிரைம் பிரிவு ஈரோடு எஸ.பி. அலுவலகத்தில் மட்டுமே உள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் புகாரை விசாரிப்பதற்கு ஏதுவாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் 3 சைபர் பிரிவு போலீசார் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதில் ஒரு எஸ்.எஸ்.ஐ, அவருக்கு 2 போலீசார் இருப்பார்கள். அவர்கள் சைபர் கிரைம் தொடர்பான புகார்களை பெற்று அதனை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பார்கள்.

இவ்வாறாக மாவட்டம் முழுவதும் 110 சைபர் கிரைம் போலீசார் அனைத்து போலீஸ் நிலையங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி இன்று ஈரோடு செங்குந்தர் பள்ளியில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமை தாங்கினார். சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி. ஜானகிராமன் முன்னிலை வகித்தார். இதில் கலந்துகொண்ட சைபர்கிரைம் போலீசாருக்கு பொது மக்களின் புகார்களை எவ்வாறு பெறுவது அவற்றை எவ்வாறு தீர்க்க நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com