search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடிய பெய்த மழை"

    • ,சாலையில் செல்ல முடியாத அளவுக்கும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது.
    • விடிய,விடிய பெய்த வண்ணம் இருந்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில், கடந்த ஒரு வாரமாக வெயில் கொளுத்தியது.இதன் காரணமாக வெப்ப சலனம் அதிகரித்தது.

    இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் இருக்க முடியாத அளவிலும்,சாலையில் செல்ல முடியாத அளவுக்கும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது.

    இந்நிலையில் நேற்று மாலை 6:30 மணி அளவில் திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதை எதிர்பார்க்காத பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், மழையில் நனைந்தபடி சென்றனர்.

    மேலும் சிலர், சாலையோரத்தில் உள்ள கடைகளில் தஞ்சமடைந்து மழை நின்றபின் கலைந்து சென்றனர். இந்த மழை சுமார் 40 நிமிடங்களுக்கும் மேலாக தொடர்ந்தது.பின்னர் இரவில் மீண்டும் பெய்ய தொடங்கிய மழை விடிய,விடிய பெய்த வண்ணம் இருந்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.

    வானிலை ஆய்வு மையத்தினர் கடந்த சில தினங்களாகவே தருமபுரி மாவட்டத்தில் மழை பெய்யும் என்று அறிவித்து வந்தனர். ஆனால் நேற்றுதான் மழை பெய்தது.

    • 3-வது நாளாக மாவட்டம் முழுவதும் விடிய, விடிய மழை பெய்துள்ளது.
    • மாவட்டத்தில் அதிகபட்சமாக கோபியில் 94 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி ரோடுகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

    இந்நிலையில் நேற்று 3-வது நாளாக மாவட்டம் முழுவதும் விடிய, விடிய மழை பெய்துள்ளது. குறிப்பாக கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்ய தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது.

    இதனால் கோபிசெட்டிபாளையம், மொடச்சூர், குள்ளப்பாளையம், வெள்ளாளபாளையம் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக கோபியில் 94 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதேப்போல் கொடிவேரி, சத்தியமங்கலம், குண்டேரிபள்ளம், பெருந்துறை, கவுந்தப்பாடி, வரட்டுபள்ளம் போன்ற பகுதிகளும் விடிய, விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலான அணைகள், ஏரி குளங்கள் நிரம்பி வழிகின்றன. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கோபி-94, கொடிவேரி-72, சத்தியமங்கலம்-58, குண்டேரி பள்ளம்-56, பெருந்துறை-27, கவுந்தப்பாடி-26.8, வரட்டு பள்ளம்-11, தாளவாடி-10.4, பவானிசாகர்-8.20, சென்னிமலை-7, நம்பியூர்-2.

    ×