search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hanuman"

    • ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி வழிபட்டால் சனீஸ்வரர், ராகு பகவான் இடையூறுகளில் இருந்து விடுபடலாம்.
    • ஆஞ்சநேயர் இங்கு திறந்த வெளியில் கோபுரம் இல்லாமல் நின்றிருக்கிறார்.

    முன்பு ஒருசமயம் நவக்கிரகங்களில் அதிக குரூரமான ராகுவும், சனியும் ஸ்ரீ ஆஞ்சநேயரிடம் தோல்வியுற்றதனால் ஆஞ்சநேயருக்கு கீழ்ப்படிந்தார்கள்.

    பூவுலகில் மாந்தர்களுக்கு சனியாலும், ராகுவாலும் ஏதேனும் இடையூறு ஏற்படின் அவர்களை திருப்திபடுத்துவதன்

    பொருட்டு ராகுவுக்கு பிடித்த உளுந்தும், சனிக்கு பிடித்த எள் எண்ணெயாலும் செய்த வடைமாலையை

    ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சாத்தி வழிபட்டால் சனி, ராகு இவர்களுடைய இடையூறுகளில் இருந்து விடுபடுகிறார்கள்

    என்பதற்காகத் தான் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துகிறார்கள்.

    கோபுரம் இல்லை

    லோகநாயகனான ஸ்ரீ நரசிம்மரே (எதிரில் உள்ள ஆலயம்) கிரி உருவில் மேல் விதானம் இல்லாமல் இருப்பதால்  

    தாசனான எனக்கும் விதானம் தேவையில்லை என்று ஸ்ரீ ஆஞ்சநேயர் திறந்த வெளியில் கோபுரம் இல்லாமல் நின்றிருக்கிறார்.

    • இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை மிகவும் பிரம்மாண்டமானது.
    • தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கும்பிட்டுச் செல்லும் புகழ் பெற்ற கோவில்.

    இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை மிகவும் பிரம்மாண்டமானது.

    பீடத்திலிருந்து 22 அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது.

    இங்குள்ள ஆஞ்சநேயர் முகம் மிகவும் அழகாக தேஜஸ் உள்ளதாக இருப்பது மிக முக்கியமான சிறப்பம்சம்.

    தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கும்பிட்டுச் செல்லும் புகழ் பெற்ற கோவில்.

    எதிரே உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தின் உப கோவில்தான் இந்த ஆஞ்சநேயர் சன்னதி என்றாலும் இச்சன்னதியில்தான் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

    இச்சா சக்தி (நாமகிரி அம்மன்), கிரியாசக்தி (நரசிம்மர்), ஞானசக்தி (ஆஞ்சநேயர்) ஆகிய மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற கோவில் இது.

    இங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு நேர் எதிராக இருக்கும் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தை தொழுதபடி இருக்கிறார்.

    மிக பிரம் மாண்டமாக காற்று, மழை, வெயில் இவைகளை தாங்கிக் கொண்டு திறந்த வெளியில் தொழுத கைகளோடு நின்றிருக்கிறார்.

    • அவ்வாறு வருகையில் அங்கிருந்து ஒரு பெரிய சாளக்கிராமத்தை பெயர்த்து எடுத்து வந்தார்.
    • ராமன் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் அங்கே வந்தார்.

    ராமாயண காலத்தில் சஞ்சீவி மலையில் உள்ள மூலிகையைப் பெறுவதற்காக இமயத்தில் இருந்து மலையைப் பெயர்த்து எடுத்து வந்தார்.

    பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார்.

    அவ்வாறு வருகையில் அங்கிருந்து ஒரு பெரிய சாளக்கிராமத்தை பெயர்த்து எடுத்து வந்தார்.

    அந்த நேரத்தில் சூரியன் உதயமானதால் வான்வழியாக வந்துகொண்டிருந்த ஆஞ்சநேயர்,

    தமது கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு சூரிய நமஸ்காரம் செய்தார்.

    மீண்டும் வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயற்சித்தார். ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை.

    அப்போது ராமனுக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்து முடித்துவிட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல் என்று

    அசிரீரி ஒலி கேட்க, ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கேயே விட்டு விட்டு கிளம்பினார்.

    ராமன் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் அங்கே வந்தார்.

    ஆஞ்சநேயர் விட்டுப் போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க ஆஞ்சநேயர்

    நரசிம்மரை வணங்கியவாறு நின்று நமக்கெல்லாம் அருள் பாலிக்கிறார்.

    • 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நாமக்கல் கோட்டைக்கு கீழே அமைந்துள்ளது.
    • 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது.

    தமிழகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்.

    புனிதப் பயணிகளும், சுற்றுலாப் பயணிகளும் பார்க்க வேண்டிய முக்கிய இடம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலாகும்.

    1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நாமக்கல் கோட்டைக்கு கீழே அமைந்துள்ளது.

    நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே உள்ளது.

    இந்த கோவில் இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார்.

    18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது.

    வெட்டவெளியில் மழையிலும், வெயிலிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் நாமக்கல் ஆஞ்சநேயர்.

    • நாமக்கல் மலைக் கோட்டையின் கிழக்கு புறம் அருள்மிகு அரங்கநாதன் கோவில் உள்ளது.
    • இது ஒரு குடைவரை கோவில்.

    நாமக்கல் மலைக் கோட்டையின் கிழக்கு புறம் அருள்மிகு அரங்கநாதன் கோவில் உள்ளது.

    இங்கு திருவரங்கன், 5 தலையுடைய பாம்பரசன் கார்கோடன் மீது படுத்தவாறு பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    இது ஒரு குடைவரை கோவில்.

    இதுவும் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.

    • திருமணம் ஆகாதவர்கள் ஆஞ்சநேயரை தியானித்து வந்தால் நிச்சயம் திருமணம் நடக்கும்.
    • நிம்மதியான வாழ்க்கை அமையும். எடுத்தக் காரியங்கள் எல்லாம் வெற்றிகரமாக நடக்கும்.

    திருமணம் ஆகாமல் காலம் கடந்தால் அவர்கள் ஆஞ்சநேயரை தியானித்து வந்தால் நிச்சயம் திருமணம் நடக்கும்.

    திருமணம் ஆகாத கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவன் அமைவான்.

    நல்ல வேலை வாய்ப்பு ஏற்படும்.

    திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு திருமணம் நடக்கும்.

    நிம்மதியான வாழ்க்கை அமையும்.

    எடுத்தக் காரியங்கள் எல்லாம் வெற்றிகரமாக நடக்கும்.

    சனி பகவானின் பாதிப்புக்குட்பட்டு கஷ்டப்படுகின்றவர்கள் அவசியம் தினசரி ஆஞ்சநேயரை வழிபட்டு வந்தால்

    சனிபகவானின் பாதிப்பில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

    இதுபோன்ற எண்ணற்ற நலன்களை அளிப்பார் ஆஞ்சநேயர் சுவாமி.

    ஜெய்... ஜெய்.... அனுமான்!

    • ஆஞ்சநேய சுவாமியின் தீவிரப் பக்தர்களாக இருப்பவர்களுக்கு மனத் தெளிவு பெருகும்.
    • ஆபத்தான எந்தப் பிரச்சினைகளும் விலகிவிடும். அஞ்சா நெஞ்சம் ஏற்படும்.

    ஆஞ்சநேய சுவாமியைப் பூஜிப்பதினால் நிம்மதியான வாழ்க்கை அமைந்து, சந்தோஷத்தைக் கொடுக்கும்.

    சனி ராகு கேது செவ்வாய் போன்ற கிரகங்களின் தொல்லைகளினால் கஷ்டப்படுபவர்கள் ஆஞ்சநேயரை தோத்திரம் செய்து வந்தால் இன்னல்களில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழலாம்.

    கல்வி சரியாக வராமல் மந்த புக்தியுடையவர்களுக்கு புத்திக் கூர்மை ஏற்பட்டு கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

    பயந்த சுபாவம் உள்ளவர்கள் பயம் தெளிந்து தைரியசாலியாக செயல்படுவார்கள்.

    ஆஞ்சநேய சுவாமியின் தீவிரப் பக்தர்களாக இருப்பவர்களுக்கு

    மனத் தெளிவு பெருகும்.

    ஆபத்தான எந்தப் பிரச்சினைகளும் விலகிவிடும்.

    அஞ்சா நெஞ்சம் ஏற்படும்.

    சத்ருபயம் நீங்கும்.

    பீடைகள் ஒழியும்.

    வியாபாரம் விருத்தியாகும்.

    செல்வ வளம் பெருகும்.

    நல்ல மனைவி அமைவாள்.

    • நினைத்தக் காரியங்கள் சித்தியாகும். துன்பம் நீங்கி சந்தோஷம் வரும்.
    • குழந்தைச் செல்வம் இல்லாதவர்களுக்கு ஆஞ்சநேய சுவாமிகளால் குழந்தைச் செல்வம் உண்டாகும்.

    ஆஞ்சநேயரை தினசரி தியானித்து தொழுபவர்களுக்கு தரித்திரம் நீங்கி சுபீட்சம் வரும்.

    நினைத்தக் காரியங்கள் சித்தியாகும். துன்பம் நீங்கி சந்தோஷம் வரும்.

    தங்களைப் பிடித்திருந்த தோஷங்கள் நீங்கும். நலிந்து போன வியாபாரம் புதுப்பொலிவுடன் நடக்கும்.

    எதிரியாக நடந்து வந்த நண்பர்கள் நட்புடன் பழகுவார்கள். பகையாகிப் போன உறவினர்கள் பாசத்துடன் பழகுவார்கள்.

    ஆஞ்சநேயரை அனுதினம் பூஜை செய்து வந்தால் யாராலும் குணப்படுத்த முடியாத கடுமையான வியாதிகள் கூட விரைவில் குணம் அடையும்.

    வாழ்க்கையில் வெறுப்படைந்து மனசஞ்சலத்தால் தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்கள் கூட ஆஞ்சநேய சுவாமியை தியானித்து வந்தால், மனம் தெளிவுற்று அந்த எண்ணத்திலிருந்து விடுபட்டு புது வேகத்துடன் செயல்படுவீர்கள்.

    குழந்தைச் செல்வம் இல்லாதவர்களுக்கு ஆஞ்சநேய சுவாமிகளால் குழந்தைச் செல்வம் உண்டாகும்.

    உடன் பிறந்தவர்களினால் ஏற்படும் கெடுதல்கள் கூட விலகிவிடும்.

    • ஆஞ்சநேயர் சுவாமி கடுமையான பிரம்மச்சாரிய விரதத்தை அனுஷ்டிப்பவர்.
    • அவரை வழிபடும் பக்தர்களுக்கு ராமபிரானின் அருளும் கிடைத்த பாக்கியம் செய்தவர்களாவர்.

    ஸ்ரீ ராமபிரானுக்காகவும் சீதா பிராட்டிக்காகவும் வாழ்ந்து (ராமசேவையை தன்னுடைய உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் ஆஞ்சநேயர்)

    ஸ்ரீ ராமபிராமனை தன் உள்ளத்தில் குடி வைத்து தனது உடல் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்தவர் ஆஞ்சநேயர் என்பதால்

    அவரை வழிபடும் பக்தர்களுக்கு ராமபிரானின் அருளும் கிடைத்த பாக்கியம் செய்தவர்களாவர்.

    (அதனால் தான் ராமபிரானுக்கு எங்கெங்கே ஆலயம் உள்ளதோ அங்கெல்லாம் ஆஞ்சநேயர் சுவாமிக்கும் தனியாக சன்னதி உண்டு.)

    ஆஞ்சநேயர் சுவாமி கடுமையான பிரம்மச்சாரிய விரதத்தை அனுஷ்டிப்பவர்.

    ஆதலால் அவரை வழிபடும் பக்தர்களும் மிகுந்த ஆச்சாரத்தோடும், கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

    ஆஞ்சநேயரை பல்வேறு பெயர்களில் வழிபடுவார்கள்.

    அனுமான், வாயுபுத்திரன், ராமேஷ்சுடன், மகாலிஷ்டன், மாருதி, அர்ச்சுசைகன் என்பது பெயர்களாகும்.

    தமிழ்நாட்டில் அவரை அனுமான் என்பார்கள்.

    கன்னட நாட்டில் அவரை ஹனுமந்தையா என்பார்கள். ஆந்திர நாட்டில் ஆஞ்சநேயலு என்பார்கள்.

    மகாராஷ்டிரத்தில் மாருதி என்பார்கள். அந்தந்த நாட்டில் பெயர்கள் மாறினாலும் அவருடைய சக்திகள் அனைத்தும் ஒன்றே ஆகும்.

    (ஆஞ்சநேயர் மீது நமது மனம் முழுமையாக ஈடுபட்டு அவருடைய தீவிர பக்தராக மாறிவிட்டால் ஆஞ்சநேயரின் முழு பலமும் தங்களுக்கு வந்துவிட்டதை உணர்வீர்கள்)

    • விபீஷணனுக்கு ராமன் `சிரஞ்சீவி’ வரம் அளித்தார்.
    • யாரேனும் ராமஜெயம் சொல்ல, அதை நான் காதுகுளிர கேட்க வேண்டும்.

    அனுமனுக்கு `சிரஞ்சீவி' வரம் அளித்தார் ராமன். அதேபோல ராவண வதத்திற்குப் பிறகு, இலங்கைக்கு அரசனான விபீஷணனுக்கு முடிசூட்டி வைத்த ராமன் அவனுக்கும் `சிரஞ்சீவி' வரம் அளித்தார். அப்போது ராமருக்கு ஒரு சந்தேகம் உண்டானது. `தான் மட்டும் தான் சிரஞ்சீவி' என்று நினைத்துக் கொண்டிருக்கும் அனுமன், தற்போது விபீஷணனும் சிரஞ்சீவியாகி விட்டதை நினைத்து வருந்துவானோ' என்று நினைத்த ராமர், அது பற்றி அனுமனிடம் கேட்கவும் செய்தார்.

    அதற்கு பதில் அளித்த அனுமன். `எங்கே நான் ஒருவன் மட்டுமே சிரஞ்சீவியாக இருந்து விடுவேனோ என்று பயந்திருந்தேன். நல்ல வேளையாக விபீஷணனையும் சிரஞ்சீவியாக்கி விட்டீர்கள். எனக்கு சந்தோஷம் தான் ராமா' என்று பணிவுடன் பதில் சொன்னார் அனுமன்.

    `அதெப்படி, உனக்கு சந்தோஷம்?' என்று ராமன் கேட்டார்.

    `நான் சிரஞ்சீவி என்றால் இந்த உலகம் முற்றிலும் அழிந்த பிறகும் நான் நிலைத்திருப்பேன் என்பதுதானே? நான் தனி ஒருவனாக இருந்தால், என் காதுகளுக்கு வேலையே இல்லாமல் போய்விடுமே. யாரேனும் ராமஜெயம் சொல்ல, அதை நான் காதுகுளிர கேட்க வேண்டும் என்ற என் ஆசை, நான் தனித்து நிற்கும் போது ஈடேறாது அல்லவா? தற்போது விபீஷணனும் சிரஞ்சீவியாகி விட்டதால் அவர் `ராம' நாமம் உச்சரித்துக் கொண்டே இருப்பார், நான் கேட்டுக் கொண்டே இருப்பேன். இந்தப் பேறு நான் தனிஆளாக இருந்தால் கிடைக்காதே" என்று பணிவுடன் சொன்னார், அனுமன்.

    • தேஜா சஜ்ஜா நடித்துள்ள திரைப்படம் 'ஹனு-மான்'.
    • இப்படம் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் 'ஹனு-மான்'. இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடிக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.


    இப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.நிரஞ்சன் ரெட்டி தயாரித்துள்ளார். இப்படம் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


    ஹனு-மான் போஸ்டர்

    இந்நிலையில், 'ஹனுமான்' பட தயாரிப்பு நிறுவனம் ரசிகர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். பண்டிகை கொண்டாட்டமாக ஒரு கச்சிதமான போஸ்டரை வெளியிட்டு, படத்திற்கான விளம்பரங்களைத் தொடங்கியுள்ளனர். இந்த போஸ்டரில் தேஜா சஜ்ஜா ஒரு மாறுபட்ட பாரம்பரிய அவதாரத்தில் தோன்றியுள்ளார். மேலும் அவர் விநாயகர் சதுர்த்தி விழாவை, ஒரு பெரிய கூட்டத்துடன் கொண்டாடுகிறார். இந்த போஸ்டரை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

    • கிழக்கு மேற்கு கோபுரங்கள் அடிமுதல் நுனிவரை கருங்கற்களால் கட்டப்பட்டவை.
    • ராமேஸ்வரம் கோவில் கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

    இத்திருக்கோவிலானது மிகவும் பழமை வாய்ந்தது.

    இதன் கர்ப்ப கிரகம் இலங்கையை சேர்ந்தது.

    பராக்கிரம பரகு என்ற மன்னனால் கி.பி.1173ல் கட்டியதாக கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது.

    ராமேஸ்வரம் கோவில் கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

    இக்கோவிலின் கிழக்கு மேற்கு கோபுரங்கள் அடிமுதல் நுனிவரை கருங்கற்களால் கட்டப்பட்டவை.

    இக்கோவிலில் உள்ள நந்தி (செங்கற்சுண்ணாம்பு) அறையால் அமைக்கப்பட்டது.

    இதன் நீளம் 22 அடி, அகலம் 12 அடி உயரம் 17 அடி). இது அழகிய வடிவில் அமையப் பெற்று பார்ப்பதற்கு அழகாக அமையப்பெற்றுள்ளது.

    இத்திருக்கோவிலில் உள்ள பிரகாரங்கள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் அமையப் பெற்றுள்ளது.

    இத்திருக்கோவில் மூன்றாம் பிரகாரம் உலகத்திலேயே நீண்ட பிரகாரமாக கருதப்படுகிறது.

    பக்தர்களுக்கு வசதி

    பக்தர்கள் தங்குவதற்கு தேவஸ்தானத்தில் நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதிகள் கிடைக்கும்.

    இவை தவிர தனியார் துறையில் தங்கும் விடுதிகளும் (லாட்ஜ்) ஏராளமாக உள்ளன.

    இவைகளில் நவீன வசதியுடன் கூடிய அறைகள் குறைந்த வாடகையில் கிடைக்கும்.

    ×