search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gun shot"

    • நிஷாவின் இடது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
    • துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள சரண் மாவட்டத்தை சேர்ந்த பாடகி நிஷா உபாத்யாய். போஜ்புரி பாடகியான இவர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மேடைகளில் பாடி வருகிறார்.

    இந்நிலையில், பாட்னாவில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட நிஷா மேடையில் ஆடலுடன் பாடிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் மீது திடீரென துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில், நிஷாவின் இடது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டு விழுந்தார்.

    இதையடுத்து நிஷாவை உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு, நிஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக நிஷா இதுவரை எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை என்றாலும் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • ரூ. 4 ஆயிரம் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்தது.
    • கூட்டத்தை பார்த்து பயந்த வருண், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அலுவலகத்தினுள் சரமாரியாக சுட்டார்.

    டெல்லியில் இருதரப்பினர் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் ஏற்பட்ட சலசலப்பு துப்பாக்கி சூட்டில் முடிந்தது. துப்பாக்கி சூட்டில் சிக்கிய நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    வழக்கறிஞர் சுஷில் குப்தா தனது தரப்பை சேர்ந்த ஜஃப்ரூல் மற்றும் சையத் முக்கிம் ராசா என்பவரை தனது அலுவலகத்திற்கு அழைத்திருந்தார். ரூ. 4 ஆயிரம் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதை பேச்சுவார்த்தையில் முடித்துக் கொள்ளும் நோக்கிலேயே முக்கிம் ரசா சுஷில் குப்தா அலுவலகத்துக்கு வந்திருந்தார்.

    முக்கிம் ரசாவுடன் அன்கித், முகிம், வருண் மற்றும் குலாம் முகமது உள்ளிட்டோரும் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். பேச்சுவார்த்தையின் போது இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதையறிந்து அங்கிருந்த பொது மக்கள் அலுவலக வாசலில் திரண்டனர். கூட்டத்தை பார்த்து பயந்த வருண், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அலுவலகத்தினுள் சரமாரியாக சுட்டார்.

    இதில் அங்கிருந்த அனாஸ் அகமது மீது தோட்டா பாய்ந்தது. காயமுற்ற அனாஸ் அகமதுவை அங்கிருந்தவர்கள் அருகாமையில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். மருத்துவமனையில் அனாஸ் அகமதுவை சோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.

    துப்பாக்கி சூடு நடத்திய பின் அங்கிருந்து தப்பிக்க முயன்ற குலாமை அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து கடுமையாக தாக்கினர். இதோடு அங்கு நிறுத்தப்பட்டு இருந்த காரையும் பொது மக்கள் தாக்கினர். பொதுமக்களால் தாக்கப்பட்ட குலாமுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று நினைத்து பொதுமக்கள் மூன்று பேரை தாக்கினர்.

    இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற அன்கித் மற்றும் முகிம் ஆகியோரை போலீசார் இரண்டு மணி நேரங்களில் கண்டுபிடித்தனர். மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள டெடிவிலி பகுதியில் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த விடுதியில் ஒரு நபரின் 16வது பிறந்தநாள் விழா நேற்று இரவு கொண்டாடப்பட்டது.

    இந்த பிறந்தநாள் விழாவை கொண்டாட ஏராளமானோருக்கு கேளிக்கை விடுதியில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பார்ட்டியில் சிறுவர்கள், சிறுமிகள் என பலர் பங்கேற்றனர்.

    அப்போது பார்ட்டியில் பங்கேற்றவர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? அவர் கைது செய்யப்பட்டாரா? 16வது பிறந்தநாளை கொண்டாடியது சிறுவனா? சிறுமியா? என்பது குறித்த விவரங்களை போலீசார் இதுவரை வெளியிடவில்லை.

    • சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

    தாய்லாந்தின் பெட்சபுரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு கண்மூடித்தனமாக சுட்டார்.

    இதில் அங்கிருந்தவர்களின் பீதியில் அலறினர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வீட்டை சுற்றி வளைத்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை போலீசார் அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர்.

    போலீசார் மீதும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனால் போலீசார் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டு பதிலடி கொடுத்தனர்.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

    • இந்தியா 11-17 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் வெய் கியான்- ஜினாவ் லிய் ஜோடியிடம் தோல்வியை சந்தித்தது.
    • 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான பந்தயத்தில் இந்தியா வெண்கலப்பதக்கம் வென்றது.

    மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் வருண் தோமர்- ரிதம் சங்வான் இணை 11-17 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் வெய் கியான்- ஜினாவ் லிய் ஜோடியிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டது.

    வருண் தோமர் வென்ற 2-வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே அவர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார்.

    இதேபோல் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான பந்தயத்தில் இந்தியாவின் ரித்ரான்ஷ் பட்டீல்- நர்மதா நிதின் ராஜூ ஜோடி 16-8 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் கியாங்கு ஜாங்- ஹனான் யு இணையை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.

    • ரெயில் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த துய்மைப்பணியாளர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார்.
    • தற்காலிக விசாவில் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த அகமது, கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை.

    ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அப்ரன் பகுதியில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்கு நேற்று (செவ்வாய்கிழமை) வந்த நபர் ரெயில் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த துய்மைப்பணியாளர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார்.

    இந்த தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது, அந்த நபர் போலீசார் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டார்.

    இதையடுத்து, கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர். கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் இந்தியாவின் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் முகமது ரஹ்மதுல்லா சயது அகமது (வயது 32) என்பதும் தெரியவந்துள்ளது.

    தற்காலிக விசாவில் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த அகமது, கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாகிஸ்தானில் திருநங்கைகளின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறார்.
    • ஏற்கனவே தனக்கு பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக மர்வியா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 26 வயதான மர்வியா மாலிக், கடந்த 2018ம் ஆண்டு அந்நாட்டின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராகி சாதனை படைத்தார்.

    இவர் பாகிஸ்தானில் திருநங்கைகளின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறார்.

    இந்நிலையில் லாகூர் நகரில் மர்வியா மாலிக் மீது இரண்டு நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர். இந்த சம்பவத்தில் மர்வியா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    ஏற்கனவே தனக்கு பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக மர்வியா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு பயந்து சில காலம் லாகூரை விட்டு தள்ளி இருந்ததாகவும், அண்மையில் ஒரு அறுவை சிகிச்சைக்காக லாகூர் வந்தபோது தன்னை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளதாகவும் மர்வியா கூறியுள்ளார்.

    தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் திடீரென நபா தாஸை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
    • தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நபா கிஷோர் தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஒடிசா மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருப்பவர் நபா கிஷோர் தாஸ். பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜராஜ் நகருக்கு அருகே உள்ள காந்தி சவுக் பகுதிக்கு சென்றார்.

    காரில் இருந்து இறங்கிய அவரை சூழ்ந்துகொண்ட ஆதரவாளர்கள் அவருக்கு மாலை அணிவித்துக்கொண்டிருந்தனர். அப்போது, சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் திடீரென நபா தாஸை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

    இதில், நெஞ்சில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மந்திரி நபா தாசை மீட்ட அவரது ஆதரவாளர்கள் காரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நபா கிஷோர் தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், " ஒடிசா அமைச்சர் நபா தாஸின் மறைவு வருத்தமளிக்கிறது. அமைச்சர் நபா தாஸின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

    • பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப் - இன்ஸ்பெக்டர் கோபால் தாஸ் மந்திரி நபா தாஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
    • புவனேஷ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் நபா தாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருப்பவர் நபா கிஷோர் தாஸ்.

    பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜராஜ் நகருக்கு அருகே உள்ள காந்தி சவுக் பகுதிக்கு சென்றார்.

    காரில் இருந்து இறங்கிய அவரை சூழ்ந்துகொண்ட ஆதரவாளர்கள் அவருக்கு மாலை அணிவித்துக்கொண்டிருந்தனர். அப்போது, மந்திரி நபா தாஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

    காரை விட்டு கீழே இறங்கிய உடன் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், மந்திரியின் நெஞ்சில் 2 குண்டுகள் பாய்ந்தன. இந்த சம்பவத்தில் கார் அருகே அவர் சுருண்டு விழுந்தார்.

    பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப் - இன்ஸ்பெக்டர் கோபால் தாஸ் மந்திரி நபா தாஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். உதவி சப்-இன்ஸ்பெக்டர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நெஞ்சில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மந்திரி நபா தாசை மீட்ட அவரது ஆதரவாளர்கள் காரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஜஹர்சுஹுடா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது நிலைமை கவலைக்கிடமானது. இதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் அமைச்சர் நபா தாஸ் புவனேஷ்வருக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    புவனேஷ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் நபா தாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    • சர்க்கிங்கே மார்க்கெட்டில் துப்பாக்கியுடன் நுழைந்த வாலிபர் ஒருவர் அங்கிருந்த பொதுமக்களை நோக்கி சரமாரியாக சுட்டார்.
    • வாலிபரை பிடிக்க முயன்றபோது அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கலிபோர்னியா மாகாணம் உள்ளிட்ட இடங்களில் நடந்த துப்பாக்கி சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் வாஷிங்டன் மாகாணம் யாக்கிமா நகரில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. அங்கு சர்க்கிங்கே மார்க்கெட்டில் துப்பாக்கியுடன் நுழைந்த வாலிபர் ஒருவர் அங்கிருந்த பொதுமக்களை நோக்கி சரமாரியாக சுட்டார்.

    இதில் கடையில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர். பின்னர் கடையில் இருந்து வெளியே வந்த வாலிபர் சுட்டதில் மேலும் ஒருவர் பலியானார். அதன்பின் துப்பாக்கி சூடு நடத்தியவர் அங்கிருந்து தப்பி சென்றார்.

    அவரை போலீசார் தேடி வந்த நிலையில் அந்த வாலிபர் ஒரு கிடங்குக்கு பின்னால் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு போலீசார் சென்று வாலிபரை பிடிக்க முயன்றபோது அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, "துப்பாக்கி சூடு நடத்திய நபர் 21 வயதான ஜரிட் ஹாடாக் என்பது தெரியவந்தது. அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அதற்கு முன்பு தனது தாயிடம் போனில் பேசி உள்ளார். அவருக்கும் சுட்டுகொல்லப்பட்டவர்களுக்கும் எந்த மோதலும் இல்லை'" என்றார்.

    • தேவ்சிஷ், அவரது நண்பர் இருவரும் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.
    • துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அமெரிக்காவின் சிகாகோ நகரில் இந்தியாவை சேர்ந்த தேவ்சிஷ் நந்தேழு (வயது23) வசித்து வந்தார். இவர் தனது நண்பர் ஒருவருடன் பிரின்ஸ்டன் பார்க் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை நோக்கி கார் ஒன்று வந்தது. காரில் இருந்து இறங்கிய இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கியை காட்டி தேவ் சிஷ்யையும், அவரது நண்பரையும் மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் பொருட்கள் கேட்டனர்.

    அதற்கு தேவ்சிஷ் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில் தேவ்சிஷ், அவரது நண்பர் இருவரும் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தேவ்சிஷ் மார்பு அருகே குண்டு பாய்ந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தேவ்சிஷ், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பருக்கு மார்பில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் சிகாகோ பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    அமெரிக்காவில் கொள்ளை முயற்சியில் இந்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேவ்சிஷ், இந்தியாவின் எந்த மாநிலத்தை சேர்ந்தவர், அமெரிக்காவில் என்ன செய்துகொண்டு இருந்தார் போன்ற தகவல் வெளியாகவில்லை.

    இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    சீன நாட்காட்டியின்படி இன்று புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும் சீனர்கள் தங்கள் புத்தாண்டு பிறப்பை கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மாண்டெரி பார்க் பகுதியில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் இன்று சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போது, புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இந்த துப்பாக்கிச்சூடில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×