search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gifts"

    • 100 நாட்கள் 100 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க அறிவுறுத்தினார்.
    • சிறப்பான முறையில் மரக்கன்றுகள் வளர்க்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய பசுமைப் படையின் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு 100 நாள் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தொடங்கியது.

    திருப்புகலூர் ஊராட்சி மன்றத் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கி மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து மாணவர்கள் தங்கள் இல்லங்களில் ஒரு நாளைக்கு ஒரு மரக்கன்று என்ற முறையில் 100 நாட்கள் 100 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க அறிவுறுத்தினார்.

    மேலும் சிறப்பான முறையில் மரக்கன்றுகள் வளர்க்கும் மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக பரிசுகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) தமிழ்ச்செல்வி, தேசிய பசுமை படையின் ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் ஐசக்காட்சன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • இரண்டாம் ஆண்டு தொடக்க விழாயையொட்டி நேஷனல் ஷாப்பிங் மால் வாடிக்கையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • வர்த்தக சங்க தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார்.

    நெற்குப்பை

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள அஞ்சப்பர் டவரில் நேஷனல் ஷாப்பிங் மாலின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு வாஷிங் மெஷின், பிட்ஜ், 32 இஞ்ச் எல்.இ.டி. டி.வி., டேபிள் டாப் கிரைண்டர், மிக்ஸி, 100 வாடிக்கையாளர்களுக்கு தோசை தவா உட்பட பல பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக இவ்விழாவில் நேஷனல் ஷாப்பிங் மால் உரிமையாளர் எம்.முகமது நசுருதீன் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றார். வர்த்தக சங்க தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார்.

    வின்னர்ஸ் மனித வள மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்தராஜ் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். முதல் பரிசு வாஷிங் மெஷின் பெறுபவர் புகழேந்தி ராங்கியம், இரண்டாவது பரிசு பிரிட்ஜ் பெறுபவர் மகாலட்சுமி வளையப்பட்டி, மூன்றாவது பரிசு 32 இஞ்ச் எல்.இ.டி. டி.வி. பெறுபவர் கண்ணன் பொன்னமராவதி, நான்காவது பரிசு டேபிள் டாப் கிரைண்டர் பெறுபவர் தஸ்வின் பொன்னமராவதி, ஐந்தாவது பரிசு மிக்ஸி பெறுபவர் கதிர்வேல் நெற்குப்பை மற்றும் 100 வாடிக்கையாளர்களுக்கு தலா ஒன்று வீதம் 100 தோசை தவா வழங்கப்பட்டது.

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.
    • மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவல ர்களுடன் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர். குறைதீர்வு கூட்டத்தில் பட்டா தொடர்பான 58 மனுக்களும், முதியோர் உதவி த்தொகை தொடர்பாக 46 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 29 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 102 மனுக்களும், மாற்றுதிறனாளி நல அலுவலகம் தொடர்பாக 18 மனுக்களும், இதர மனுக்கள் 157 ஆக மொத்தம் 410 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும்.

    குறைதீர்வு கூட்டத்தின் வாயிலாக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் நியாய விலைக்கடையின் பணியாளர்கள் மற்றும் எடையாளர்களில் சிறப்பாகவும், பொதுமக்கள் வரவேற்கத்தக்க வகையிலும், பணிபுரி ந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில மற்றும் மாவட்ட அளவில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிட ஆணையிடப்ப ட்டது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் 2022 -ம் ஆண்டிற்கு கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொழுதூர் நியாய விலைக்கடை விற்பனை யாளருக்கு முதல்பரிசு ரூ.4,000 மற்றும் திருமுட்டம் நியாய விலைக்கடை விற்பனையாளாருக்கு   2-ம் பரிசு ரூ.3,000 மற்றும் குறிஞ்சிப்பாடி நியாயவிலைக்கடை எடையாளருக்கு முதல்பரிசு ரூ.3,000 மற்றும் வேப்பூர் நியாய விலைகடை எடையாளருக்கு 2 -ம் பரிசு ரூ.2,000 என பரிசுத்தொகைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.தொடர்ந்து தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் விழுப்புரம் கோட்த்தின் மூலம் கடலூர் பனங்காட்டு பகுதி ஐ-இல் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 240 வீடுகளில் பயனாளி பங்களிப்பு தொகை முழுவதும் செலுத்திய 9 பயனாளிகளுக்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் வீடுகளு க்கான ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) கற்பகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் குமாரதுரை மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தண்டலைச்சேரி அரசு கலை அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா நடைப்பெற்றது.
    • கல்லூரி படிப்பு என்பது நமது வாழ்க்கையின் ஆதாரம், எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடியது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தண்டலைச்சேரி அரசு கலை அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அங்கம்மாள் தலைமை வகித்தார்.

    மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தமயந்தி முன்னிலை வகித்தார்.

    பேராசிரியர் திலகர் வரவேற்றார்.

    தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக அயல்நாட்டு தமிழ் கல்வித் துறை பேராசிரியர் வெற்றிச்செல்வன் கருத்துரையாற்றினார். நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், ஜேஸீஸ் தலைவர் செந்தில், வழக்கறிஞர் அரசு தாயுமானவன் ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

    சிறப்பு அழைப்பாளராக மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்துக்கொண்டு பேசு கையில், மாணவ பருவம் என்பது மகிழ்ச்சியானது மட்டுமல்ல பொறுப்பு மிகுந்ததாகும்.

    கல்லூரி படிப்பு என்பது நமது வாழ்க்கையின் ஆதாரம், எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடியது. அரசு வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் போட்டி தேர்வு எழுதவேண்டும்.

    அதற்கான மனநிலையை இப்போதே ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

    அதற்காக தயார் நிலையில் நாம் இருக்க வேண்டும்.

    இக்கல்லூரி மேம்பாட்டி ற்காக அரசு மூலம் பல திட்டங்களை செயல்படுத்த முயற்சி எடுத்து வருகிறோம்.

    இக்கல்லூரியை சிறப்பு வாய்ந்ததாக மாற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றார்.

    இதையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் தனியார் கம்பெனிகளில் தேர்வு செய்யப்பட்டதற்கான நியமன உத்தரவை வழங்கி னார்கள்.

    மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், பேராசிரியர் அலெக்ஸாண்டர் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

    பேராசிரியர் யோக பிரகாசம் நன்றி கூறினார்.

    பேராசிரியர் பன்னீர்செல்வம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    • உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
    • வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த பெண்கள் அனுபவங்களை விளக்கினர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உலக மகளிர் தின விழா நடந்தது.

    மானாமதுரை செர்டு சமூக சேவை நிறுவனத்தின் சார்பில் நடந்த விழாவையொட்டி மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் பங்கேற்ற பேரணி நடந்தது. திருப்புவனம் புதூர் பகுதியில் இருந்து தொடங்கிய பேரணியில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.

    காவல்துறை சார்பு ஆய்வாளர் பாண்டீசுவரி பேரணியை தொடங்கி வைத்தார். நரிக்குடி சாலையில் பேரணி நிறைவடைந்தது. அதன் பின்னர் நடந்த விழாவில் செர்டு சமூக சேவை நிறுவன இயக்குநர் எல்.பாண்டி வரவேற்றார்.

    ஒருங்கிணைப்பாளர் போதும்பொண்ணு, சார்பு ஆய்வாளர் பாண்டீசுவரி உள்ளிட்ட மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் பேசினர். வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த பெண்கள் அனுபவங்களை விளக்கினர். அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • திருவாரூர் மாவட்டம், அலிவலம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
    • சமத்துவ பொங்கல் திருவிழா வாழ்த்து மடலினை கலெக்டர் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கினார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், அலிவலம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

    விழாவில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து கொண்டார். விழாவில் சிறுவர், சிறுமியர்களுக்கான ஓட்டப்பந்தயம், சாக்கு ஓட்டம், மிதிவண்டி போட்டி, கனியும் கரண்டியும், பெண்களுக்கான கோலப்போட்டி போன்ற போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    தொடர்ந்து, சமத்துவ பொங்கல் திருவிழா வாழ்த்து மடலினை கலெக்டர் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கினார்.

    இவ்விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, துணை இயக்குநர் பொன்னியசெல்வன், வட்டாட்சியர் நக்கீரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், புவனேஸ்வரி, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் மணிகண்டன், வாசுகி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • இல்லம் தேடி கல்வி 2-ஆம் ஆண்டு தொடக்க விழா திருத்துறைப்பூண்டி தாலுக்கா தேசிங்குராஜபுரம் கிராமத்தில் நடைபெற்றது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுப்பொருட்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    இல்லம் தேடி கல்வி இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழா திருத்துறைப்பூண்டி தாலுக்கா தேசிங்குராஜபுரம் கிராமத்தில் நடைபெற்றது.

    இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ரேவதி வேதகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.

    ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் முனைவர் துரை ராயப்பன் தலைமை வகித்தார்.

    ராமதேவர் சித்தர் அறக்கட்டளை மாநில தலைவர் முனைவர் ரவிச்சந்திரன் மற்றும் அன்பு உள்ளங்கள் சமூக அறக்கட்டளை நிறுவனர் ராஜாமணி இருவரும் முன்னிலை வகித்தனர்.

    இல்லம் தேடி கல்வி மேற்பார்வையாளர் அனு பிரியா, சமூக ஆர்வலர் துரை முருகன் ஆகியார் சிறப்புரையாற்றினர்.

    இந்திகழ்ச்சியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுப்பொருட்களும் வழங்கி கெளரவி க்கப்பட்டனர்.

    சேவா பாரதி - தமிழ்நாடு அமைப்பு சார்பாகவும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

    அனைவருக்கும் கவிதா ரவிச்சந்திரன் மற்றும் தீபக் ரவிச்சந்திரன் இருவரும் சிற்றுண்டி வழங்கினார். சமூக ஆர்வலர் முருகவேல் ரவி நன்றி கூறினார்.

    • பெரும்பாண்டி புனித பெரியநாயகி மாதா ஆலயத்தில் “மூன்று ராஜாக்கள் பொங்கல் விழா” நடந்தது.
    • திருப்பலி நிறைவேற்றி திருவிருந்து கொடுத்து வாழ்த்தினார்

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பெரும்பாண்டி புனித பெரியநாயகி மாதா ஆலயத்தில் "மூன்று ராஜாக்கள் பொங்கல் விழா" நடைபெற்றது.

    இயேசு கிறிஸ்து பிறப்பையொட்டி வானத்தில் தோன்றிய விண்மீன்களை கணக்கிட்டு உலகின் இரட்சகர் மீட்பர் உலகின் அரசர் பிறந்திருக்கிறார் என்கிற செய்தியை அறிந்து மூன்று ராஜாக்கள் பரிசு பொருட்களுடன் வந்து குழந்தை இயேசுவை தொழுது கொண்டு உலகிற்கு வெளிப்படுத்திய அந்த மூன்று ராஜாக்களுக்கு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க திருச்சபையில் உள்ள கிறிஸ்தவர்கள் மூன்று ராஜாக்கள் திருநாளை கொண்டாடுகின்றனர்.

    அந்த வகையில் தமிழ்நாட்டை பொறுத்த வரையில் தமிழர் திருநாள் பொங்கல் நன்னாளாக இயற்கைக்கு நன்றி சொல்லும் தமிழர்கள் குறிப்பாக கிறிஸ்தவர்கள் இந்த மூன்று ராஜாக்கள் பெயரில் தமிழர் திருநாளாம் பொங்கல் நாளை பெரும்பாண்டி கிராம மக்கள் "சமூக நல்லிணக்க சமத்துவ பொங்கல்" என்று கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் கத்தோலிக்க திருச்சபையின் குடந்தை மறை மாவட்ட முதன்மை குரு அருட்தந்தை டாக்டர் அமிர்தசாமி , ஜோதிமலை இறைபணி குடில் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் , அல் மைதீனா பள்ளிவாசல் இமாம் மௌலானா அபுதாகிர் பைசி பாகவி என மூன்று மதத்தைச் சேர்ந்த இறை அறிஞர்கள் தொடங்கி வைத்து ஆசி வழங்கினர்.

    மேலும், இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் முன்னாள் எம்.எல்.ஏ. ராம.ராமநாதன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முத்து, பெரும்பாண்டி ஊராட்சி தலைவர் பாஸ்கர், கும்பகோணம் மாமன்ற 5- வது வார்டு உறுப்பினர் சக்கரபாணி, விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் தளபதி சுரேசு,கருத்தியல் பரப்புச் செயலாளர் செந்தோழன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

    இவ்விழாவை கிராம நாட்டாமை குடந்தை அரசன், காரியம் மஸ்டீபன் ராஜ், கணக்கர் தெரு துரியோததாஸ், செய்தி தொடர்பாளர் செல்வராசு ,கிராம முகேஷ் , பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    நிறைவாக பங்கு தந்தை பெர்னான்டஸ் திருப்பலி நிறைவேற்றி திருவிருந்து கொடுத்து வாழ்த்தினார்.

    • தமிழக அரசின் பொங்கல் பரிசாக அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கப்பணம், தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வருகிற 2-ந்தேதி அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் இதனை தொடங்கி வைக்க உள்ளனர்.

    சேலம்:

    பொங்கல் பண்டி கையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு தமிழக அரசின் பொங்கல் பரிசாக அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கப்பணம், தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் பரிசு வினி

    யோகத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 2-ந்தேதி தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே அந்தந்த மாவட்டங்க ளில் அமைச்சர்கள் இதனை தொடங்கி வைக்க உள்ளனர்.

    இந்த நிலையில் சீனா, அமெரிக்கா போன்ற நாடுளில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா பி.எப்.7 தொற்று இந்தியாவிலும் நுழைந்துள்ளது. கொரோனா முதல் அலை போன்று இந்த தொற்று உயிர் சேதத்தையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றன.

    புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் புதிய வகை கொரோனாவுக்கு கொண்டாட்டமாக அமைந்து விடாத வகையில் மக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    இதையடுத்து தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை ரேஷன்

    கடைகளில் கூட்ட நெரிசல்

    இன்றி எவ்வாறு வினியோகம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு பெற தகுதியானவர்கள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    ரேஷன் கார்டுதாரர்கள் எத்தனை பேர் உள்ளனர்? அவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு எவ்வாறு வழங்குவது என்பதுபற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் மொத்தம் சுமார் 10 லட்சத்து 58 ஆயிரம் ரேசன் கார்டுகள் உள்ளன. இவர்கள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது.

    • முகாமில் ஆடு, மாடு, கோழிகள் என 760 கால்நடைகளுக்கு தடுப்பூசி, சிகிச்சை அளிக்கப்பட்டன.
    • சிறந்த 10 கால்நடைகளின் கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    மன்னார்குடி:

    மன்னார்குடி பேங்க் ஆப் பரோடா, மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணைந்து மன்னார்குடி அருகே உள்ள காரிக்கோட்டை கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாமை நடத்தியது.

    இந்த முகாமுக்கு மிட்டவுன் ரோட்டரி சங்கம் தலைவர் டி.ரெங்கையன் தலைமை தாங்கினார். காரிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பி.பன்னீர்செல்வம் வரவேற்றார்.

    திருவாரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை ( பொறுப்பு ) டாக்டர் டி.ராமலிங்கம் விளக்க உரையாற்றினார்.

    ரோட்டரி மாவட்ட கால்நடை மருத்துவ முகாம்கள் தலைவர் டாக்டர் வி‌.பாலகிருஷ்ணன், மன்னார்குடி பேங்க் ஆப் பரோடா மேலாளர் சுவேந்து சாட்டர்ஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினர்களாக கால்நடை பராமரிப்பு துறை கூடுதல் இயக்குனர் ( ஓய்வு ) டாக்டர் டி. தமிழ்ச்செல்வன், பேங்க் ஆப் பரோடா விவசாயி அலுவலர் ஆர். மோனிகா, மிட்டவுன் ரோட்டரி சங்கம் செயலாளர் வி. கோபாலகிருஷ்ணன், மிட்டவுன் ரோட்டரி சங்கம் உடனடி முன்னாள் தலைவர் டாக்டர் சி.குருசாமி, மிட்டவுன் ரோட்டரி சங்கம் பொருளாளர் டி.அன்பழகன், முன்னாள் தலைவர் சாந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் ஆடு, மாடு, கோழிகள் என 760 கால்நடைகளுக்கு தடுப்பூசி, சிகிச்சை அளிக்கப்பட்டன.

    அம்மை நோய் தடுப்பூசி, குடற்புழு நீக்க மருந்து, சினை ஊசிகள், சினை பார்த்தல், காளைகளுக்கு ஆண்மை நீக்கம் உள்ளிட்ட பல்வேறு வகையான சிகிச்சைகள், தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

    இதையடுத்து சிறந்த 10 கால்நடைகளின் கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து பான் செக்கர்ஸ் கல்லூரி ரோட்ராக்ட் சங்கத்தின் உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பாளர் லலிதா தேவி, ஜோஸ்லின், சோபியா மற்றும் ஆகியோருக்கு கால்நடை பராமரிப்பு குறித்து ரோட்டரி மாவட்ட கால்நடை மருத்துவ முகாம் தலைவர் டாக்டர் வி‌. பாலகிருஷ்ணன் விளக்கி கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் குழு டாக்டர்கள் கார்த்திக், வெற்றிவேல், ராகவி, கால்நடை ஆய்வாளர்கள் குருநாதன், ராணி எலிசபெத், செங்குட்டுவன், கால்நடை பராமரிப்புத்துறை உதவியாளர்கள் பாரதி, நடராஜன், அமுதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பேங்க் ஆப் பரோடா அலுவலர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

    • 100-க்கும் மேற்பட்ட கால்நடைகள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றன.
    • முகாம்கான ஏற்பாடுகளை கால்நடை துறையினர் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மா பேட்டைஒன்றியம், விழிதியூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புதுறை சார்பில் கால்நடை மருத்து வம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு விழிதியூர் ஊராட்சிமன்ற தலைவர் கலையரசி கோவிந்தராஜன் தலைமை வகித்தார். மெலட்டூர் கால்நடை உதவி இயக்குனர் மணிச்சந்தர், திருக்கருகாவூர் கால்நடை மருத்துவர் சௌந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கால்நடை மருத்துவர்கள் கனகா தேவி, ரகுநாத், ஷோபன் ராஜ், கால்நடை ஆய்வாளர்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.

    இதில் சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முகாமில் முகாமில் விழிதியூர் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 100 க்கும் மேற்ப ட்ட கால்நடைகள்முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றன.

    முகாம்கான ஏற்பாடுகளை கால்நடை துறையினர் மற்றும் ஊராட்சிமன்ற நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

    • மானாமதுரை அருகே மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வரவேற்பு அளித்தனர்.
    • புதிய கல்வி ஆண்டில் மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தந்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாரம் தெ.புதுக்கோட்டை அரசு நிதியுதவி பெறும் எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் புதிய கல்வி ஆண்டு தொடக்க நாள் நிகழ்ச்சி நடந்தது.

    தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் மற்றும் உதவி ஆசிரியர்கள் வருகை தந்த பள்ளி நிர்வாக குழு தலைவர் சத்தியசீலன் செயலாளர் அன்பழகன் உறுப்பினர்கள் தங்கராசு சத்தியமூர்த்தி மற்றும் பெற்றோர்கள் மாணவர்களுக்கு சந்தனம் குங்குமம் கொடுத்து வரவேற்றனர்.

    புதிய கல்வி ஆண்டில் மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தந்தனர். 5 வயது முடிந்த குழந்தைகளை முதல் வகுப்பில் சேர பெற்றோர்கள் அழைத்து வந்தனர். அவர்களை வரவேற்று குழந்தைகள் பிறப்பு சான்றிதழ், ஆதார் நகல்களை சரிபார்த்து முதல் வகுப்பில் 26 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். பள்ளி மாணவர்கள் அனை வருக்கும் தமிழக அரசால் வழங்கப்பட்ட விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.

    பள்ளியின் சார்பில் பெற்றோர்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகள், மாணவர்களுக்கான 23 வழிகாட்டி நெறி முறைகள் கொண்ட குறிப்பு வழங்கப்பட்டது. உதவி ஆசிரியை தேவி 1 முதல் 5 வகுப்பு மாண வர்கள் 150 பேருக்கு மதிய உணவு சாப்பிடும் எவர்சில்வர் தட்டுகள் வழங்கி னார். பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    ×