search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
    X

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் பாலசுப்ரமணியம் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    கடலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.
    • மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவல ர்களுடன் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர். குறைதீர்வு கூட்டத்தில் பட்டா தொடர்பான 58 மனுக்களும், முதியோர் உதவி த்தொகை தொடர்பாக 46 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 29 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 102 மனுக்களும், மாற்றுதிறனாளி நல அலுவலகம் தொடர்பாக 18 மனுக்களும், இதர மனுக்கள் 157 ஆக மொத்தம் 410 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும்.

    குறைதீர்வு கூட்டத்தின் வாயிலாக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் நியாய விலைக்கடையின் பணியாளர்கள் மற்றும் எடையாளர்களில் சிறப்பாகவும், பொதுமக்கள் வரவேற்கத்தக்க வகையிலும், பணிபுரி ந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில மற்றும் மாவட்ட அளவில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிட ஆணையிடப்ப ட்டது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் 2022 -ம் ஆண்டிற்கு கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொழுதூர் நியாய விலைக்கடை விற்பனை யாளருக்கு முதல்பரிசு ரூ.4,000 மற்றும் திருமுட்டம் நியாய விலைக்கடை விற்பனையாளாருக்கு 2-ம் பரிசு ரூ.3,000 மற்றும் குறிஞ்சிப்பாடி நியாயவிலைக்கடை எடையாளருக்கு முதல்பரிசு ரூ.3,000 மற்றும் வேப்பூர் நியாய விலைகடை எடையாளருக்கு 2 -ம் பரிசு ரூ.2,000 என பரிசுத்தொகைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.தொடர்ந்து தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் விழுப்புரம் கோட்த்தின் மூலம் கடலூர் பனங்காட்டு பகுதி ஐ-இல் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 240 வீடுகளில் பயனாளி பங்களிப்பு தொகை முழுவதும் செலுத்திய 9 பயனாளிகளுக்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் வீடுகளு க்கான ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) கற்பகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் குமாரதுரை மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×