என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "friend"
மதுரை:
மதுரை தெற்குவாசல் போலீஸ் சரகத்துக்குட்பட்ட காஜா தெருவை சேர்ந்தவர் ஜாகீர்உசேன். இவரது மகன் பஷீர் முகமது (வயது 26). இவர் கே.கே. நகர் 80 அடி ரோட்டில் உள்ள மோட்டர் சைக்கிள் விற்பனையகத்தில் வேலை பார்த்து வந்தார்.
விடுமுறை நாள் என்பதால் நேற்று மாலை பஷீர் முகமது தனது நண்பர்கள் பெருங்குடி பள்ளி வாசல்தெருவை சேர்ந்த சுல்தான் அலாவுதீன், வில்லாபுரம் ஹவுசிங் போர்டை சேர்ந்த வீரார் அப்துல்லா (28), தெற்கு மாசி வீதி முகமது யூசுப் (25) மற்றும் சிலருடன் சோலையழகுபுரத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் மதுகுடிக்க சென்றார்.
அப்போது சுற்றுலா செல்வது தொடர்பாக பஷீர்முகமதுவுக்கும், சுல்தான் அலாவுதீனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். இதனால் சுல்தான் அலாவுதீன் அங்கிருந்து சென்றுவிட்டார்.
மதுகுடித்துவிட்டு பஷீர்முகமது, நண்பர்கள் வீரார் அப்துல்லா, முகமது யூசுப் ஆகியோர் பாண்டிய வேளாளர் தெரு சந்திப்பில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சுல்தான் அலாவுதீன் மீண்டும் அவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
இதில் ஆத்திரமடைந்த சுல்தான் அலாவுதீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பஷீர் முகமதுவை கொடூரமாக குத்தினார். இதை தடுக்க வந்த வீரார் அப்துல்லா, முகமது யூசுப்புக்கும் கத்திக் குத்து விழுந்தது.
ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 பேரையும் அங்கிருந்த வர்கள் மீட்டு ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் வழியிலேயே பஷீர் முகமது பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் ஆபத்தானநிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சுல்தான் அலாவுதீனை தேடி வருகின்றனர்.
வயது பாரபட்சம் இன்றி, அனைவரையும் ஆட்டிப்படைக்கும் செல்போன் மோகத்தால் சிறுவன் கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் நிகழ்ந்துள்ளது.
தாகே பிரேம் சுயநினைவை இழந்ததை அடுத்து, அவர் மீது பெட்ரோலை ஊற்றி எரித்து கொலை செய்துவிட்டு, அவரது செல்போனை திருடிச் சென்றுள்ளார். தனது மகன் மாயமானதாக தாகே பிரேமின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கொலை செய்ததை கட்டாம் பிரேம் சாகர் ஒப்புக்கொண்டார்.
மேலும், தமக்கு கடன் இருந்ததாகவும், அதனை அடைக்க தாகே பிரேமின் செல்போனை எடுக்கவே அவனை கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
செல்போன் மோகத்தால் வாழ்வை இழந்த வாலிபர் மீது கொலை, ஆள்கடத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #MobileKillsYoung
பணிமாறுதலை கண்டித்து கதறி அழுது மாணவர்கள் பாசப்போராட்டம் நடத்தியது மகிழ்ச்சி என்றும், நண்பனாக இருந்து பாடம் நடத்தியதால் அவர்கள் தங்களது அன்பை காட்டியதாகவும் பள்ளிப்பட்டு ஆசிரியர் பகவான் தெரிவித்தார்.
ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கு தனி மரியாதை இருந்தது ஒருகாலம். ஆனால் தற்போது ஆசிரியர்-மாணவர் உறவு என்பது ஏதோ கடமைக்காகவே இருக்கிறது. ஆனால் இந்த காலத்திலும் மாணவர்கள் மனதில் இடம்பிடிக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் பகவான்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் இவர் ஆங்கில ஆசிரியராக 5 ஆண்டுகள் பணியாற்றி வந்தார். இவரது அயராத முயற்சியால் இந்த பள்ளி ஆங்கிலத்தில் 100 சதவீத தேர்ச்சி பெற்றது. மாணவர்களிடம் பாடத்தை தாண்டிய அக்கறை காட்டியதால் பகவானை மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பிடித்து விட்டது.
இந்த சூழ்நிலையில் பகவான், திருத்தணி அடுத்த அருங்குளத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு பணிஇடமாறுதல் செய்யப்பட்டார். இதனை அறிந்த மாணவ, மாணவிகள் அவர் வேறுபள்ளிக்கு செல்லக்கூடாது என்று கதறி அழுதனர்.
பள்ளிக்கு வந்து பணிவிடுப்பு கடிதம் வாங்கிய பகவானை, வெளியே செல்ல விடாமல் அவர்கள் அரங்கேற்றிய பாசப்போராட்டம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஆசிரியரை கட்டி அணைத்தபடி மாணவ-மாணவிகள் கதறி அழுதனர். பகவானும் மாணவர்களை பிரிய மனமில்லாமல் கண்ணீர் வடித்தார். இதனையடுத்து ஆசிரியர் பகவான் இந்த பள்ளியில் 10 நாட்கள் மட்டும் பணி செய்ய அதிகாரி அனுமதி அளித்தார்.
மாணவர்கள் - ஆசிரியர் இடையேயான இந்த பாசப்போராட்ட காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் பகவான் கூறுகையில்:-
மாணவர்களின் செயல் ஆச்சரியமாக இருக்கிறது. நான் எனது பணியை தான் செய்தேன். எந்த மாணவர்களையும் திட்டியது இல்லை. ஒரு நண்பனாக இருந்து பாடம் நடத்தினேன். அதற்கு பிரதிபலனாக மாணவர்கள் இப்படி ஒரு அன்பை காட்டுவார்கள் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. எனக்காக மாணவர்கள் அழுதது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு.
இந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைவரும் வறுமையில் உள்ளவர்கள். மாணவர்களுக்கு நல்ல ஆசிரியராக பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி. இவர்களை விட்டுச்செல்ல எனக்கும் விருப்பம் இல்லை. இருப்பினும் அரசு உத்தரவை ஏற்று தான் ஆக வேண்டும்.
எனக்கு நண்பர்களும், தமிழகத்தில் உள்ள சில அதிகாரிகளும் வாழ்த்து தெரிவித்தனர். பொறுப்பும், கடமையும் அதிகரித்துள்ளது. இன்றைய சூழலில் கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கிலம் எட்டாக்கனியாக உள்ளது. என்னால் முடிந்த அளவு சிறந்த கல்வியை மாணவர்களுக்கு அளிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-17, கோவில் சாலையை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 55). இவர் என்.எல்.சி.யில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி அசோக்குமார் வேலைக்கு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த உறவினர்கள் அசோக்குமாரை பல இடங்களில் தேடினர். அவரை பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து அசோக்குமாரின் அண்ணன் சதீஷன் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அசோக்குமாரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அசோக்குமாரின் வங்கி கணக்கில் இருந்து 19 லட்சம் ரூபாய் வரை எடுக்கப்பட்டுள்ளது போலீசாருக்கு தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் தங்களது விசாரணையை துரிதப்படுத்தினர். அசோக்குமாரின் நண்பர் சுரேஷ்குமாரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அசோக்குமாரை அவரது நண்பர் சுரேஷ்குமார் மற்றும் வடலூரை சேர்ந்த ராஜேஷ் (36), நெய்வேலியை சேர்ந்த காமராஜ் (32) ஆகியோர் கடத்தி சென்று கொலை செய்து உடலை புதைத்திருப்பது தெரியவந்தது.
மேலும் இந்த சம்பவத்தில் குறிஞ்சிப்பாடியை அடுத்த சித்தாலிகுப்பம் பகுதியை சேர்ந்த இளங்கோவன் (45) என்பவரும் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிந்தது.
அதன்படி போலீசார் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள சித்தாலிக்குப்பத்தைச் சேர்ந்த இளங்கோவனுக்கு சொந்தமான மீன் குட்டையில் புதைக்கப்பட்டிருந்த அசோக்குமாரின் உடலை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி எடுத்து சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.
இதைத்தொடர்ந்து சுரேஷ்குமார், ராஜேஷ், மீன் குட்டை வைத்திருந்த இளங்கோவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாகி விட்ட காமராஜை தேடிவருகின்றனர்.
என்.எல்.சி. அதிகாரி கொலை செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
என்.எல்.சி. அதிகாரி அசோக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அவர் தனது நண்பர்கள் சுரேஷ்குமார், ராஜேஷ், காமராஜ் ஆகியோருடன் அடிக்கடி மது குடித்து வந்தார். சுமார் 2 ஆண்டுகளாக அவர்களுக்குள் பழக்கம் இருந்துள்ளது.
அசோக்குமாருக்கு இன்னும் திருமணமாகவில்லை. சுரேஷ்குமார் உள்பட 3 பேருக்கும் திருமணமாகி விட்டது. அவர்கள் வேலை எதுவும் பார்க்காமல் சுற்றி திரிந்தனர். அசோக்குமாருடன் ஏற்பட்ட நட்பால் அவரிடம் அடிக்கடி பணம் கடன் வாங்கி உள்ளனர்.
அப்போது அசோக் குமார் தான் கடனாக கொடுத்த பணத்தை அவர் களிடம் கேட்டு வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் அசோக் குமாரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டினர்.
மேலும் அசோக்குமாரின் வங்கி கணக்கில் அதிக அளவில் பணம் இருப்பதும் அவர்களுக்கு தெரிய வந்தது. அதனை அப கரிக்கவும் அவர்கள் திட்ட மிட்டனர். இதற்காக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அசோக்குமாரை அங்கு அழைத்து சென்று மது வாங்கி கொடுத்தனர்.
மது போதையில் இருந்த அசோக்குமாரின் ஏ.டி.எம். கார்டு அபகரித்து, ரகசிய எண்ணை கேட்டு தெரிந்து கொண்டனர். அதன் பின்னர் மது மயக்கத்தில் இருந்த அசோக்குமாரை தாக்கினர்.
மேலும் அசோக்குமாரின் முகத்தை செல்லோ டேப்பால் ஒட்டினர். இதனால் மூச்சுத்திணறி அவர் இறந்து விட்டார். பின்னர் அவரின் உடலை புதைக்க முடிவு செய்தனர். அப்போது அவர்கள் சித்தாலிக்குப்பத்தைச் சேர்ந்த இளங்கோவனிடம் தொடர்பு கொண்டனர். அவர் உடனே எனக்கு சொந்தமான மீன் குட்டை உள்ளது. அங்கு அசோக்குமாரின் உடலை புதைத்தால் யாருக்கும் தெரியாது என்றார். அதன் பேரில் இளங்கோவன் காரை எடுத்து கொண்டு அங்கு வந்தார்.
பின்னர் அவர்கள் 4 பேரும் சேர்ந்து அந்த காரில் அசோக்குமாரின் உடலை ஏற்றி பெத்தான்குப்பத்தில் உள்ள மீன் குட்டைக்கு கொண்டு சென்றனர். அங்கு 12 அடி ஆழத்தில் குழி தோண்டி அசோக்குமாரின் உடலை புதைத்தனர். இதில் யாருக்கும் சந்தேகம் அடையாமல் இருக்க மீன் குட்டையை சுற்றிலும் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் போட்டு மூடினர். அதன் பின்னர் அவர்கள் ஒன்றும் தெரியாதது போல் சென்று விட்டனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சுரேஷ்குமார், ராஜேஷ், இளங்கோவன் ஆகிய 3 பேரை போலீசார் நேற்று மாலை நெய்வேலி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கைதான 3 பேரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அரியானா மாநிலம் குர்கான் பகுதியியைச் சேர்ந்த ஒரு பெண், கடந்த 1 வருடமாக பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் ராகுல் என்பவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார்.
தற்போது தனது பேஸ்புக் நண்பர் ராகுல் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள அந்த பெண், ராகுல் தன்னை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாகவும், அதனை வீடியோ பதிவு செய்து மிரட்டுவதாகவும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பெண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுபோன்ற சமூக வலைதளங்கள் மீதான மோகமும் அதிகரித்து வருவது வருந்தத்தக்க உண்மையாகும். #facebookabuse
நாகர்கோவில்:
வடசேரி கருத்த விநாயகர்கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 25). அவரது நண்பர் மணிகண்டன் (36). இவர் கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்தவர்.
இரண்டுபேருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் இருந்துவந்தது. இந்த நிலையில் மணிகண்டன் தனது நண்பர் சுரேசிடம் பணம் கொடுத்திருந்தார். அவற்றை திருப்பி கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலையில் சுரேஷ் குளிப்பதற்காக வீட்டில் இருந்து ஒழுகினசேரி சுடுகாடு வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் தனது நண்பர் சுரேசை வழிமறித்து பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதில் அவர்களுக்குள் தகராறு முற்றியது. ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுரேசை வெட்ட முயன்றர். இதில் சுதாரித்துக் கொண்ட அவர் விலகினார். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து வடசேரி போலீசில் சுரேஷ் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பெர்னார்ட் சேவியர், சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் சாம்ஜி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நண்பனை வெட்டி கொல்ல முயன்ற மணிகண்டனை கைது செய்தனர்.
மேலும் கைது செய்து செய்யப்பட்ட மணிகண்டன் 2009-ம் ஆண்டு வடசேரி பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கிலும் கைது செய்யப்பட்டவர் என்பது செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்