search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியானாவில் பேஸ்புக் நண்பரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்
    X

    அரியானாவில் பேஸ்புக் நண்பரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்

    அரியானா மாநிலம் குர்கான் பகுதியில் பேஸ்புக் நண்பர் மூலம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #facebookabuse
    சண்டிகர்:

    அரியானா மாநிலம் குர்கான் பகுதியியைச் சேர்ந்த ஒரு பெண், கடந்த 1 வருடமாக பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் ராகுல் என்பவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார்.

    தற்போது தனது பேஸ்புக் நண்பர் ராகுல் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள அந்த பெண், ராகுல் தன்னை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாகவும், அதனை வீடியோ பதிவு செய்து மிரட்டுவதாகவும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில், ராகுல் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவரை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.



    பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பெண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுபோன்ற சமூக வலைதளங்கள் மீதான மோகமும் அதிகரித்து வருவது வருந்தத்தக்க உண்மையாகும். #facebookabuse
    Next Story
    ×