search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fraud"

    • நகை முதலீட்டு திட்டம் மூலம் ரூ.100 கோடி மோசடி
    • கணவன்-மனைவியை கைது செய்ய தனிப்படை விரைந்தது

    திருச்சி

    திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், நாகர்கோவில் உள்பட 9 இடங்களில் பிரணவ் ஜூவல்லரி நகைக்கடை இயங்கி வந்தது. இதனை திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகிய இருவரும் இயக்குனர்களாக இருந்து நிர்வகித்து வந்தனர்.

    இந்த நகை கடை நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் நகைகளுக்கு செய்கூலி இல்லை சேதாரம் இல்லை என அறிவித்தது. அதுமட்டுமில்லாமல் நடிகர் நடிகைகள் மூலமாக முதலீடு செய்யும் நகைக்கு மாதந்தோறும் 2 சதவீத வட்டித்தொகை, பத்து மாத கடைசியில் முதலீடு தொகைக்கும் அதிகமாக தங்க நகைகள் தருவதாகவும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டனர்.

    இதனை நம்பி பலர் லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்தனர். இந்த நிலையில் கடந்த 2 மாதமாக வட்டித் தொகைக்காக வழங்கப்பட்ட காசோலைகள் பணமில்லாமல் திரும்பிய நிலையில் 9 கிளை நகைக் கடைகளையும் மூடிவிட்டு அதன் உரிமையாளர்கள் தலை மறைவாகிவிட்டனர்.

    அதைத் தொடர்ந்து முதலீடு செய்து ஏமாந்த 635 பேர் திருச்சி, மதுரை, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் அளித்த, புகார்களின் அடிப்படையில், பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. சத்யபிரியா நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில் திருச்சி மெயின் கிளை நகைக்கடை மேலாளர் நாராயணன் என்பவரை கைது செய்தனர். மேலும், திருச்சி சென்னை உள்பட 8 கடைகள் 3 வீடுகள் உள்பட மொத்தம் 11 இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில்

    237 பவுன் தங்க நகைகள்,

    22 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.1,48,711 ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நகைக்கடை உரிமையாளர் மதன் அவரது மனைவி கார்த்திகா, மேலாளர் நாராயணன் ஆகிய 3 பேர் மீது மோசடி, ஏமாற்றுதல், கூட்டு சதி செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் சுமார் ரூ. 14 கோடி மோசடி செய்திருப்பதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கைதான மேலாளர் நாராயணன் மதுரையில் உள்ள முதலீட்டாளர் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தலைமறைவாக இருக்கும் பிரணவ் ஜூவல்லர்ஸ் இயக்குனர்கள் மதன் அவரது மனைவி கார்த்திகா ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் முகாமிட்டு அவர்களைத் தேடி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு பணம் முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியபோது நன்கு அறிமுகமான வாடிக்கையாளர்களிடம் மதன் செல்போன் வாயிலாக தொடர்பு கொண்டு புகார் எதுவும் கொடுக்க வேண்டாம். பணத்தை திருப்பித் தருவதற்கு ஏற்பாடு செய்கிறேன் என கூறிவந்துள்ளார்.

    ஆனால் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து காவல்துறை கவனத்திற்கு செல்லவும் தனது செல்போன்கள் அனைத்தையும் சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவானார். பல கோடி மோசடி செய்துள்ள மதனின் கடைகளில் குறைந்த அளவிலேயே தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் கிளையில் மட்டுமே அதிகபட்சமாக 90 பவுன் நகை கைப்பற்றப்பட்டுள்ளது.

    மோசடி பணத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, கும்பகோணம், நாகர்கோவில் உள்பட தனது நகைக்கடை நிறுவனம் அமைந்துள்ள அனைத்து பகுதிகளிலும் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாக தெரிகிறது. ஆகவே அந்த சொத்துக்களை பறிமுதல் செய்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • குழந்தையின் சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாக கூறி மோசடி.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை காளப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்(வயது32).

    இவர் போத்தனூர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வருகிறேன். எனது நிறுவனத்தில் ஜனா என்பவர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அவரை தொடர்பு கொண்ட பெண் ஒருவர் அவரது 22 பவுன் தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்திருப்பதாகவும், அந்த நகையை மீட்க ரூ.43 ஆயிரம் பணம் தேவைப்படுவதாகவும், நகையை மீட்டதும் உங்களது நிறுவனத்திலேயே அந்த நகையை விற்பனை செய்வதாக கூறினார்.

    இதனைத் தொடர்ந்து ஜனாவை மீண்டும் தொடர்பு கொண்ட அந்தப் பெண் தனது குழந்தைக்கு அறுவை சிகிச்சைக்கு பணம் அவசரமாக தேவைப்படுகிறது என கூறி பணம் கேட்டார். இதனை உண்மை என நம்பிய ஜனா பணத்துடன் பெண் அழைத்த வங்கிக்கு சென்றார். அப்போது அங்கு வந்து பணத்தை பெற்றுக் கொண்ட பெண் பணத்துடன் அங்கிருந்து மாயமாகிவிட்டார்.

    எனவே அந்தப் பெண்ணை கண்டுபிடித்து பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறி இருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ.43 ஆயிரம் பணத்துடன் மாயமான அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.

    • மர்மநபர் ஒருவர் பிட்காயினில் நீங்கள் முதலீடு செய்தால் அதிகளவில் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார்.
    • சைபர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

    கோவை,

    கோவையை சேர்ந்த அழகு மீனாட்சி(48) என்பவர் சைபர் கிரைம் போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

    கடந்த மாதம் எனது செல்போன் வாட்ஸ்-அப்புக்கு வந்த குறுந்தகவலில் கூகுள் மேப் குறித்து ரிவ்யூ கொடுத்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து நான் 2 ரிவ்யூ கொடுத்ததற்கு ரூ.150 லாபம் கிடைத்தது. அதன் பின்னர் என்னை டெலிகிராம் குழுவில் இணைத்தனர்.

    அதன் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் பிட்காயினில் நீங்கள் முதலீடு செய்தால் அதிகளவில் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார். நானும் 12 கட்டங்களாக அந்த நபர் கூறிய வங்கி கணக்குகளில் சிறிது, சிறிதாக ரூ. 5 லட்சத்து 2 ஆயிரம் முதலீடு செய்தேன். ஆனால் அந்த நபர் கூறியபடி லாப தொகையை தரமால் மோசடி செய்து விட்டனர்.

    எனவே அந்த மர்ம நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் சைபர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

    • குறைந்த விலையில் தங்கம் இருப்பதாக கூறி மோசடி
    • 3 பெண்களுக்கு போலீசார் வலைவீச்சு

    கோவை,

    கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் பாத்திமா( வயது48). நோட்டு புத்தக கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் சிவானந்த காலனி 5-ம் நம்பர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது 3 பெண்கள் அங்கு வந்தனர். அவர்கள் பாத்திமாவின் அருகே சென்று தங்களிடம் குறைந்த விலையில் தங்கம் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் உடனடியாக தங்க நகை தருவதாக கூறினர்.

    முதலில் அவர்கள் 5 பவுன் தங்க நகையை ரூ.50 ஆயிரத்துக்கு தருவதாக கூறினர். இதனை உண்மை என நம்பிய பாத்திமா நகை வாங்க ஒப்புக்கொண்டார்.

    இந்த நிலையில் மேலும் அவர்கள் இன்னும் தங்களிடம் 5 பவுன் தங்க நகை இருக்கிறது. மொத்தமாக ரூ.1.50 லட்சம் கொடுத்தால் நகைகள் அனைத்தும் தருவதாக கூறி ஆசை வார்த்தை கூறினர்.

    ஆனால் பாத்திமா தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றார். இதனை தொடர்ந்து அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி ரூ.80 ஆயிரத்துக்கு 10 பவுன் தங்க நகைகள் தருவதாக கூறியுள்ளனர்.

    பாத்திமா அவர்களிடம் ரூ.80 ஆயிரம் பணம் கொடுத்தார். 3 பெண்களும் அவர்களிடம் இருந்த நகையை கொடுத்து விட்டு பணத்தை வாங்கி சென்றனர்.

    பின்னர் பாத்திமா நகை அடகு கடைக்கு சென்று தங்க நகையை பரிசோதித்து பார்த்தார். அப்போது அது போலி நகைகள் என்பது தெரிய வந்தது. இது குறித்து அவர் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண்கள் பெற்ற கடனை இவர் வாங்கி கொண்டு தவணையை தான் செலுத்துவதாக கூறியதாக தெரிகிறது.
    • பாண்டிசெல்வி பல பெண்களிடம் ரூ.70 லட்சம் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் கம்மா பட்டியை சேர்ந்த வர் பாண்டிசெல்வி(வயது35). இவர் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் அதே பகுதியை சேர்ந்த பல பெண்கள் பெற்ற கடனை இவர் வாங்கி கொண்டு தவணையை தான் செலுத்துவதாக கூறியதாக தெரிகிறது.

    ஆனால் அந்த தொகையை சரியாக செலுத்தாததால் அந்த பெண்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் விருதுநகர் கிழக்கு போலீசிடம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தனர்.

    இதையடுத்து நேற்று பாண்டி செல்வியை விசாரணைக்கு போலீஸ் நிலையத்திற்கு வந்தார். இதையறிந்த பாதிக்கப்பட்ட பெண்கள் 70-க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையத்தை முற்றுகை யிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது பாதிக்கப் பட்ட பார்வதி என்ற பெண் தான் அணிந்திருந்த வளை யலால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படு கிறது. உடனே அங்கிருந்த வர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். பாண்டிசெல்வி பல பெண்களிடம் ரூ.70 லட்சம் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகளிா் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தனிநபா்கள் தொழில் தொடங்க கடன் பெற்றுத் தருவதாக விளம்பரம் செய்யப்பட்டது.
    • மோசடியில் தொடா்புடைய மற்ற நபா்களைக் கைது செய்யும் பணியில் தனிப் படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனா்.

    காங்கயம்:

    திருப்பூா் மாவட்டம், காங்கயம், அவிநாசியில் தனியாா் நிதி நிறுவனம் சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தனிநபா்கள் தொழில் தொடங்க கடன் பெற்றுத் தருவதாக விளம்பரம் செய்யப்பட்டது.

    இதனை நம்பி ஏராளமானவா்கள் செலுத்திய பணத்தைப் பெற்றுக் கொண்டு தலைமறைவானது தொடா்பாக பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில், திருப்பூா் மாவட்ட குற்றப் பிரிவில் அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் நிா்மல்குமாா், பொது மேலாளா் தேவிகா, கோபி ஆகியோா் மீது அக்டோபா் 11-ந் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சாமிநாதன் உத்தரவின்பேரில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில், அந்த நிறுவனத்தின் காங்கயம் கிளையில் மகளிா் குழு ஒன்றுக்கு தலா 10 போ் வீதம் 55 குழுக்கள் மூலம் 550 பெண்கள் தலா ரூ.1,341 என மொத்தம் ரூ.7, 37, 550ஐ செலுத்தியுள்ளனா்.

    அதேபோல, தனிநபா் கடனுக்காக 261 போ் தலா ரூ.1,000 வீதம் ரூ.2.61 லட்சம் செலுத்தியுள்ளனா். இதில், 86 போ் தனிநபா் கடனுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக பொய்யான தகவல்களைக் கூறி காப்பீட்டுக் கட்டணம், ஆவணங்களை சமா்ப்பிப்பதற்கான செலவு என மொத்தம் ரூ.10 லட்சம் வரையில் வசூலித்துள்ளதும் தெரியவந்தது.

    அதேபோல, அவிநாசி கிளையில் 52 குழுக்கள் மூலம் 520 பெண்களிடம் தலா ரூ.1,341 வீதம் ரூ.6,97,320, தனிநபா் கடனுக்காக 355 பேரிடம் தலா ரூ.1,000 வீதம் ரூ.3, 55,000 வசூலித்துள்ளனா். மேலும், 140 போ் தனிநபா் கடனுக்குத் தோ்வாகியுள்ளதாகக்கூறி ரூ.13 லட்சத்தை வசூலித்துள்ளனா்.இந்த நிறுவனம் சாா்பில் மொத்தம் ரூ.43 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இது தொடா்பாக திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம் உத்தமதானபுரத்தைச் சோ்ந்த ஆா்.கோபி (எ) வினோத் (40), திருச்சி மாவட்டம், கே.கே.நகா் எல்.ஐ.சி.காலனியைச் சோ்ந்த தேவிகா (43), திருச்சி பீமன் நகரைச் சோ்ந்த ஜெ.ஜான்கென்னடி (எ) ஆன்டனி (34) ஆகிய 3 பேரை தனிப் படையினா் கைது செய்தனா்.இதில், கோபியும், தேவிகாவும் அக்கா, தம்பி என்பது தெரியவந்தது. மூவரிடமிருந்த ரூ.11 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனா்.

    கோபி என்பவா் மீது வேதகிரி, வினோத், கோபால் என்ற பல்வேறு பெயா்களில் கள்ளக்குறிச்சி, ஈரோடு, தென்காசி, திருச்சி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் 6 மோசடி வழக்குகளும், தேவிகா (எ) பிரீத்தி மீது திருவள்ளூா், தஞ்சாவூா் ஆகிய இடங்களில் 2 மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

    இந்த மோசடியில் தொடா்புடைய மற்ற நபா்களைக் கைது செய்யும் பணியில் தனிப் படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனா்.

    • அஸ்தம்பட்டி கங்கா நகரை சேர்ந்தவர் ஜாபர் (வயது 32). இவர் சமூக இணையதளமான டெலிகிராம் செல்போனில் பயன்படுத்தி வருகிறார்.
    • ஜாபர் தனது வங்கி கணக்கு மூலமாக ரூ.18 லட்சத்து 25 ஆயிரத்தை அனுப்பினார்.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி கங்கா நகரை சேர்ந்தவர் ஜாபர் (வயது 32). இவர் சமூக இணையதளமான டெலிகிராம் செல்போனில் பயன்படுத்தி வருகிறார். இதில் கடந்த 4-ந்தேதி ஒரு விளம்பர லிங்க் வந்தது. அதில் உங்களுக்கு பகுதி நேரம் வேலை வழங்கப்படும். அதற்கு முன்பு சில பதிவுகளை நிரப்பி கொடுக்க வேண்டும். இதற்கு உங்களுக்கு திருப்திகரமான சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்த கவர்ச்சிகர அறிவிப்பை நம்பி லிங்கை கிளிக் செய்து, அதில் கொடுக்கப்பட்ட வேலைகளை செய்து கொடுத்தார். இதையடுத்து அவரிடம் உங்களுக்கு வேலை வேண்டுமானால் பணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டது. மேலும் அதற்கான லிங்கும் ஜாபரின் செல்போனுக்கு டெலிகிராம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து ஜாபர் தனது வங்கி கணக்கு மூலமாக ரூ.18 லட்சத்து 25 ஆயிரத்தை அனுப்பினார். இதையடுத்து அவருக்கு வேலையும் கிடைக்கவில்லை. தான் அனுப்பிய பணமும் கிடைக்கவில்லை.

    தான் ஏமாற்றம் அடைந்ததை நினைத்து அதிர்ச்சி அடைந்த ஜாபர் இது குறித்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவல கத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சைபர்கிைரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை தளர்த்தி ஜாமின் வழங்கி உத்தரவு.
    • மோசடி தொடர்பான புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும் என தமிழக அரசு தகவல்.

    ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி அளவில் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

    இதைதொடர்ந்து, ராஜேந்திர பாலாஜி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் வழங்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை தளர்த்தி ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளி மாநிலங்கள் செல்லும்போது சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையையும் தளர்த்தி ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஆனால், வெளிநாடு செல்லும்போது சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, ஆவினில் வேலை வாங்கி தருவதாக மோசடி தொடர்பான புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    • பர்னீச்சர் கடையை விரிவுபடுத்துவதற்காக பணம் வாங்கி ஏமாற்றிய வியாபாரி
    • கேரளாவில் பதுங்கியவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை

    கோவை,

    கோவை பாப்பநாயக்கன்பாளையம், கார்டன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தராஜன் (வயது 59). தனியார் வங்கியில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

    இந்த நிலையில் விவேகானந்தராஜன் பீளமேடு போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சசிகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் கேரளாவில் பர்னீச்சர் கடை நடத்தி வருவதாகவும், தொழிலை விரிவுபடுத்துவதற்காக பணம் தேவைப்படுகிறது. நீங்கள் தரும்பட்சத்தில் வட்டியுடன் அசலை குறித்த காலத்துக்குள் திருப்பி செலுத்தி விடுவதாக வாக்குறுதி அளித்தார். இதனை நம்பிய நான் அவருக்கு ரூ.54.07 லட்சம் கொடுத்தேன்.

    என்னிடம் பணத்தை பெற்றுக் கொண்ட சசிகுமார், குறித்த காலத்துக்குள் பணத்தை திருப்பி செலுத்தவில்லை. எனவே நான் அவரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். இதற்கு அவர் மறுத்து வருகிறார். எனவே போலீசார் இதுதொ டர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    புகாரின்பேரில் பீளமேடு போலீசார் வழக்குபதிவு செய்து கேரளாவில் பதுங்கியிருந்த சசிக்குமாரை பிடித்து வந்து போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினர். இதில் அவர் விவேகானந்தராஜனிடம் ரூ.54 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி மோசடி செய்தது தெரிய வந்தது.

    பின்னர் சசிக்குமாரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கூட்டமாக சென்றால் லோன் தரமாட்டார்கள் என கூறி ஏமாற்றி மோசடி
    • காரில் தப்பிய கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

    பீளமேடு,

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அயன் சிங்கம்பட்டியை சேர்ந்த 51 வயதுடைய நபர்.

    இவர் கோவையில் தங்கி மின்சார வாரியத்தில் போர்மேனாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று, மின்வா ரிய ஊழியர், கோவை விமான நிலையம் அருகே உள்ள வங்கி முன்பு தனது நண்பர்கள் 2 பேருடன் பேசி கொண்டிருந்தார்.

    அப்போது, மின்வாரிய ஊழியர், ஒரு விளம்பரத்தை பார்த்து, அதில் உள்ள எண்ணுக்கு தொடர்பு ெகாண்டார். அவர்களிடம் எனக்கு ரூ.40 லட்சம் கடன் வேண்டும் என கேட்டுள்ளார்.

    அதற்கு அவர்கள், உங்களுக்கு கடன் வேண்டும் என்றால், நீங்கள் முன்பணமாக, ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் தர வேண்டும். மேலும் அந்த பணத்தை நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து பெற்றுக்கொள்வோம். அதன்பின்னர் உங்கள் வங்கி கணக்கில் ரூ.40 லட்சம் செலுத்தப்படும் என்றனர்.

    இதனை உண்மை என நம்பிய 3 பேரும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துடன் கோவையில் உள்ள ஒரு வங்கி முன்பு காத்திருந்தனர். அப்போது அவர்களின் அருகே ஒரு கார் வந்தது.

    அதில் இருந்து 4 பேர் திபுதிபுவென இறங்கினர். அவர்கள், நேராக லட்சுமணிடம் சென்று, நீங்கள் தானே போன் செய்து, லோன் வேண்டும் என கேட்டது என்றனர். அதற்கு அவரும் ஆமாம் என்று தெரிவிக்க, நாங்கள் கூறிய பணத்தை எடுத்து வந்தீர்களா என அந்த கும்பல் கேட்டனர்.

    அதற்கு இவர்கள் தாங்கள் வைத்திருந்த பணப்பெட்டியை திறந்து காண்பித்தனர். அதில் பணம் இருப்பதை பார்த்த அந்த கும்பல், காரில் ஏறுங்கள், உங்களை வங்கி அழைத்து சென்று பணத்தை வாங்கி தருகிறோம் என தெரிவித்தனர்.

    இதனை உண்மை என நம்பி 3 பேரும் அவர்களுடன் காரில் ஏறினர். சிறிது தூரம் சென்றதும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள், கூட்டமாக சென்றால் லோன் தரமாட்டார்கள்.

    நீங்கள் இங்கு காத்திருங்கள். நாங்கள் சென்று வாங்கி வருகிறோம் என தெரிவித்தனர். அதற்கு இவர்கள் நாங்களும் வருகிறோம் என்றனர். இதனால் அந்த கும்பல் வலுக்கட்டாயமாக 3 பேரையும் காரில் இருந்து கீழே இறக்கி விட்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

    இவர்களும் பணம் வந்துவிடும் என சில மணி நேரம் அங்கு காத்திருந்தனர். ஆனால் வரவே இல்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததும், லட்சுமணன் பீளமேடு போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடன் வாங்கி தருவதாக ஏமாற்றி பணத்தை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • சரக்குகளை பெற்றுக்கொண்டு பணம் தராமல் ஏமாற்றினர்
    • கோவை பெண் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

    கோவை.

    சென்னை பூந்தமல்லியை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 48). இவர் கோவை ராமநாதபுரம் போலீசில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் சென்னையில் ஏலக்காய்-மிளகு மொத்த வியாபாரம் செய்து வருகிறேன். இந்த நிலையில் கோவை ராமநாதபுரம், கொங்கு நகரை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் என்னை தொடர்பு கொண்டு, நாங்கள் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ஏலக்காய், மிளகு ஆகிய பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறோம் என்று கூறினர். இதனை நம்பிய நான் கோவைக்கு புறப்பட்டு வந்தேன்.

    அங்குள்ள அலுவ லகத்தில் இருந்த புருஷோத்த மன், மோசஸ்மேத்யூ, காஜாஉசேன், மருதாசலம், கீதாஞ்சலி, பரத், ஆனந்த் உள்பட 7 பேரிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு ரூ.14 லட்சத்து 45 ஆயிரத்து 718 மதிப்பில் ஏலக்காய், மிளகு ஆகியவற்றை அனுப்பி வைத்தேன்.

    சரக்குகளை பெற்று க்கொண்ட அவர்கள், இதற்கான பணத்தை தராமல் ஏமாற்றி வருகின்ற னர். எனவே சம்பந்தப்பட்ட வர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    புகாரின்பேரில் ராமநாதபுரம் போலீசார் பெண் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சீட்டு நிறுவனத்தில் பங்குதாரர் என கூறினார்
    • பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோடி
    • தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு

    துறையூர்,

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே து.ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 42). மனைவி வித்யா (35), மைத்துனர் ரகுநாதன் (31) இவர்கள் மூவரும் சேர்ந்து அந்த பகுதியில் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இவர்கள் அதே ஊரை சேர்ந்த மைதிலியிடம் (40). எங்கள் நிறுவனத்தில் தாங்கள் முதலீடு செய்தால் அதிக லாபத் தொகை தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை உண்மை என நம்பிய மைதிலி பல்வேறு தவணைகளில் ரூ. 8 லட்சம் வரை கொடுத்துள்ளார்.

    இதனையடுத்து மைதிலி சீட்டு நிறுவனக் கணக்கினை கேட்டார். ஆனால் அவர்கள் தரவில்லை. லாபத்தில் பங்கு கேட்டும் தரவில்லையாம். இதனால் விரக்தியடைந்த மைதிலி, கொடுத்த அசல் பணத்தையாவது திருப்பி தருமாறு கேட்ட போது பிரபாகரன் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார்.

    இதனால் தான் ஏமாற்றபட்டதை உணர்ந்த மைதிலி, திருச்சி மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தார்.

    இப்புகாரின் பேரில் துறையூர் போலீசார் பணமோசடி செய்ததாக தம்பதி உள்பட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, தலைமறைவானவர்களை வலை வீசி தேடி வருகின்றனர். துறையூர் அருகே சீட்டு நிறுவனம் நடத்துவதாக கூறி, பண மோசடி நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×