search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை பெண்ணிடம் ரூ.5.2லட்சம் மோசடி
    X

    கோவை பெண்ணிடம் ரூ.5.2லட்சம் மோசடி

    • மர்மநபர் ஒருவர் பிட்காயினில் நீங்கள் முதலீடு செய்தால் அதிகளவில் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார்.
    • சைபர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

    கோவை,

    கோவையை சேர்ந்த அழகு மீனாட்சி(48) என்பவர் சைபர் கிரைம் போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

    கடந்த மாதம் எனது செல்போன் வாட்ஸ்-அப்புக்கு வந்த குறுந்தகவலில் கூகுள் மேப் குறித்து ரிவ்யூ கொடுத்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து நான் 2 ரிவ்யூ கொடுத்ததற்கு ரூ.150 லாபம் கிடைத்தது. அதன் பின்னர் என்னை டெலிகிராம் குழுவில் இணைத்தனர்.

    அதன் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் பிட்காயினில் நீங்கள் முதலீடு செய்தால் அதிகளவில் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார். நானும் 12 கட்டங்களாக அந்த நபர் கூறிய வங்கி கணக்குகளில் சிறிது, சிறிதாக ரூ. 5 லட்சத்து 2 ஆயிரம் முதலீடு செய்தேன். ஆனால் அந்த நபர் கூறியபடி லாப தொகையை தரமால் மோசடி செய்து விட்டனர்.

    எனவே அந்த மர்ம நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் சைபர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

    Next Story
    ×