search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fraud"

    • இந்தியாவை சேர்ந்த 700 மாணவர்களை வெளியேறுமாறு கனடா தெரிவித்தது.
    • புதிய கொள்கை வருகிற டிசம்பர் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

    ஒட்டாவா:

    அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கல்வி கற்க இந்திய மாணவர்கள் பலர் விண்ணப்பிக்கிறார்கள். இதற்கிடையே சமீபத்தில் ஏஜென்சிகள் மூலம் கனடாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்த இந்திய மாணவர்களிடம் போலி ஆவணங்களை அவர்களுக்கு தெரியாமல் கொடுத்து அனுப்பியது தெரியவந்தது.

    இதையடுத்து இந்தியாவை சேர்ந்த 700 மாணவர்களை வெளியேறுமாறு கனடா தெரிவித்தது. இந்த மோசடியில் பாதிகப்பட்ட மாணவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்நிலையில் மாணவர் விசாவில் வருபவர்களிடம் ஏஜெண்டுகள் செய்யும் மோசடிகளை தடுக்க கனடா அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி கனடாவில் முதுகலை கல்வி கற்பிக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களும், ஒவ்வொரு விண்ணப்பதாரரின் ஏற்பு கடிதத்தையும் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகத்துடன் சரி பார்க்க வேண்டும். ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும் அமைச்சகத்திடம் இருந்து சரி பார்க்கப்பட்ட ஏற்றுக் கொள்ளும் கடிதத்தை பெற வேண்டும். இந்த புதிய கொள்கை வருகிற டிசம்பர் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

    இதுகுறித்து அமைச்சர் மார்க் மில்லர் கூறும்போது, கனடாவுக்கு வரும் பிற நாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விரும்பவில்லை என்று குறிப்பிட்ட அவர் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஏமாற்றப்படாமல் பாதுகாப்பதே தனது நோக்கம் என்றார்.

    இந்த நடவடிக்கை இதற்கு முன்பு மாணவர்கள் ஏமாற்றப்பட்டதைப் போன்ற சூழல் ஏற்படாமல் தடுக்கும் என்பதோடு உண்மையான ஏற்பு கடிதங்களின் அடிப்படையில் மட்டுமே படிப்பதற்கான அனுமதி வழங்கப்படுவதையும் உறுதி செய்யும் என்று கனடா அரசு தெரிவித்தது.

    • அதிக வட்டி தருவதாக ஏமாற்றி முதியவரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
    • அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள வெள்ளக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கதிரவன் (வயது58). அதே பகுதியை சேர்ந்தவர்கள் வாழவந்தான் (35), அவரது மனைவி பவித்ரா (25), உறவினர் திருப்பதி (22).

    இவர்கள் மூவரும் தாங்கள் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகவும் கதிரவனிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். ஆனால் கதிரவன் விருப்ப மின்றி இருந்துள்ளார்.

    பழக்கத்தின் அடிப்ப டையில் பலமுறை வற்பு றுத்தியதால் 5 தவணைகளில் ரூ.11 1/2 லட்சத்தை அந்த நிதி நிறுவனத்தில் கதிரவன் முதலீடு செய்தார்.3 மாதங்களுக்கு மட்டுமே வட்டி கிடைத்தது. அதன்பின்னர் வட்டி வரவில்லை.

    இதையடுத்து சந்தேக மடைந்த கதிரவன் அந்த நிறுவனம் குறித்து விசா ரித்தார். அதில் குறிப்பிட்ட முகவரியில் நிறுவனம் செயல்படவில்லை என தெரியவந்தது. இதையடுத்து பணத்தை திருப்பி தருமாறு வாழவந்தானிடம் கதிரவன் வலியுறுத்தினார்.

    அப்போது பணத்தை திரும்ப கொடுக்க முடியாது என்றும், மீறி கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அருப்புக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கதிரவன் வழக்கு தொடர்ந்தார்.

    கோர்ட்டு உத்தரவின் பேரில் வாழவந்தான் உள்பட 3 பேர் மீது அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவர் பெரியசாமி என்பவரிடம் நிலம் வாங்க வேண்டும் என கூறியுள்ளார்.
    • யாருக்கும் பவர் பத்திரம் செய்து கொடுக்கவில்லை என்பது தெரிய வந்தது

    திருச்சி

    திருச்சி அமராவதி தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாபுராஜ் (வயது 67). ரியல் எஸ்டேட் புரோக்கர்.இவர் பெரியசாமி என்பவரிடம் நிலம் வாங்க வேண்டும் என கூறியுள்ளார். இதை அடுத்து அவர் திருச்சி கே.சாத்தனூர் கவி பாரதி நகரில் உள்ள பர்மா அகதிக்கு சொந்தமான ஒரு இடத்தை காண்பித்துள்ளார்.

    அந்த இடம் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 1200 சதுர அடி இடம் ஆகும். இந்த நிலத்தை சங்கர் என்பவருக்கு பவர் பத்திரம் செய்து கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.பின்னர் பாபுராஜிடம் ரூ.15 லட்சம் வாங்கிக் கொண்டு அந்த நிலத்தை அவரது பெயருக்கு போலியான ஆவணங்கள் மூலம் கே.சாத்தனூர் சப்ரி-ஜிஸ்டர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளனர். பின்னர் விசாரித்த போது அந்த நிலம் பர்மா அகதியான காளி என்பவரது பெயரில் தான் இருக்கிறது.

    யாருக்கும் பவர் பத்திரம் செய்து கொடுக்கவில்லை என்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் பாபுராஜ் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்கு பதிவு செய்து திருச்சி கே.கே. நகர் கே. சாத்தனூர் கவி பாரதி நகரை சேர்ந்த சங்கர் (வயது 56 )என்பவரை கைது செய்தார் மேலும் இது தொடர்பாக மதியழகன், புவனேஸ்வரி பெரியசாமி, தியாகராஜன் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளனர்
    • ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்க மறுத்துள்ளார்.

    திருச்சி

    திருச்சி தெற்கு தாராநல்லூர் சிவசக்தி மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் நந்தகுமார் (வயது 37). பைனான்ஸ் அதிபர்.

    இவரிடம் திருச்சி மாவட்டம் லால்குடி நன்னிமங்லத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி பிரதீபா ஆகியோர் அணுகினர்.

    பின்னர் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என அவர்கள் கூறியுள்ளனர். இதை நம்பிய நந்தகுமார், கணவன், மனைவி இருவரிடமும் ரூ.25 லட்சம் கொடுத்துள்ளார்.

    பின்னர் எந்த லாபத் தொகையும் அவர்கள் கொடுக்காததால், நந்தகுமார் தான் கொடுத்த பணத்தை அவர்களிடம் திரும்ப கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்க மறுத்துள்ளார்.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நந்தகுமார், இது குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுலோச்சனா கணவன், மனைவி ஆகிய 2 பேர் மீதும் மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேஜை, நாற்காலி போன்றவை செய்வதற்கு மர சாமான்கள் வாங்க வேண்டும் என மோசடி.
    • இதுகுறித்து ராஜமாணிக்கம் பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது42). ரியல் எஸ்டேட் அதிபர்.

    இவரது வீட்டின் அருகே சசிகுமார் என்பவர் தனது மனைவி நிர்மலாவுடன் வசித்து வருகிறார். அருகருகே வசிப்பதால், 2 குடும்பத்தினரும் நெருங்கி பழகி வந்தனர்.

    இந்த நிலையில் சசிகுமாரும், அவரது மனைவியும் கடந்த ஆண்டு இறுதியில், ராஜமாணிக்கத்தை சந்தித்து பேசினர்.அப்போது தங்களுக்கு மேஜை, நாற்காலி போன்றவை செய்வதற்கு மர சாமான்கள் வாங்க வேண்டும். அதற்கு நீங்கள் பணம் தந்து உதவுமாறு கேட்டுள்ளனர்.

    இவரும் அவர்களை நம்பி ரூ.8 லட்சம் பணத்தை கொடுத்தார். இதேபோன்று மற்றொருமுறை சசிகுமாரின் மனைவியும் ரூ.3 லட்சம் பணத்தை வாங்கியுள்ளார். தொடர்ந்து இதேபோன்று பல தவணைகளாக மொத்தம் ரூ.16 லட்சம் பணத்தை கணவன், மனைவி 2 பேரும் சேர்ந்து பெற்றுள்னர். பணத்தை திருப்பி தந்துவிடுவதாக கூறிய அவர்கள், வெகுநாட்களை கடந்தும் பணத்தை கொடுக்க வில்லை. மேலும் நீண்ட நாட்களாக அவர்களை அந்த பகுதியிலும் பார்க்க முடியவில்லை.

    இதையடுத்து ராஜமாணிக்கம் அருகே உள்ளவர்களிடம் விசாரித்தார். அப்போது தான் அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கணவன், மனைவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.

    • வெங்காயம் இறக்குமதி செய்து தருவதாக வியாபாரியிடம் ரூ.1½ கோடி மோசடி செய்தது.
    • கணவன்-மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கே.கே.நகர் 80 அடி ரோட்டை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மகன் முகமது சல்மான்(வயது21). இவர் இறக்குமதி பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பைபாஸ் ரோட்டில் உள்ள பொன்மேனியை சேர்ந்த சையத்ரசின் என்பவர் முகமது சல்மானை சந்தித்தார்.

    அப்போது துருக்கி நாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்து தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய முகமது சல்மான் பல்வேறு தவணைகளில் சையத்ரசின் வங்கி கணக்கில் ரூ.1 கோடியே 43 லட்சம் செலுத்தியதாக கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட பின் வெங்காயத்தை இறக்குமதி செய்து தரவில்லை. பலமுறை கேட்டும் உரிய பதில் இல்லை. இதையடுத்து முகமது சல்மான் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பணம் தராமல் சையத்ரசின், அவரது மனைவி ரோசல் ஆகியோர் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. மேலும் பணத்தை திருப்பிக்கேட்டபோது முகமது சல்மானை மிரட்டி யதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பணம் மோசடி தொடர்பாக மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் மோசடி செய்த சையத்ரசின்-ரோசலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு இடத்தை காட்டி இந்த இடத்தில் கடை கட்டி தருவதாக கூறினார்
    • வெகு நாட்கள் ஆகியும் கடை கட்டி தரவில்லை

    திருச்சி

    திருச்சியை அடுத்த முத்தரசநல்லூர் ரெங்கா நகரில் உள்ள ஒரு தனியார் அப்பார்ட்மெண்டில் குடியிருந்து வருபவர் சாதிக் அகமது (வயது 57).

    இவர் மலேசியாவில் வேலை பார்த்துவிட்டு கடந்த 2021-ம் ஆண்டு தாயகம் திரும்பினார்.

    பின்னர் நண்பர் இஸ்மாயில் என்பவரை அணுகி தொழில் தொடங்க ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு அவர் திருச்சி மதுரை ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே ஒரு இடத்தை காட்டி இந்த இடத்தில் கடை கட்டி தருவதாகவும், அதில் தொழில் தொடங்கலாம் என்றும் ஆலோசனை வழங்கினார்.

    இதை நம்பிய சாதிக் அகமது கடந்த 2022-ம் வருடம் செப்டம்பர் மாதம் 4-ந் தேதி ரூ.5 லட்சமும், 14-ந் தேதி ரூ.10 லட்சமும், மீண்டும் 24-ந் தேதி ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.25 லட்ச ரூபாய் பணத்தை முருகானந்தம் மற்றும் நிஜாமுதீன் ஆகியோரிடம் கொடுத்தார்.

    ஆனால் அவர்கள் வெகு நாட்கள் ஆகியும் கடை கட்டி தரவில்லை. கொடுத்த பணமும் திருப்பி தரவில்லை.

    பின்னர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட சாதிக் பணத்தை பெற்றுக் கொண்ட முருகானந்தம், நிஜாமுதீன் ஆகியோரிடம் பணத்தை திரும்ப கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்க மறுத்ததோடு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதை அடுத்து பாதிக்கப்பட்ட சாதிக் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மோசடி செய்த பணத்தை மீட்டு தருமாறு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் கடந்த மாதம் புகார் கொடுத்தார்.

    இந்த புகாரின் பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் முருகானந்தம், நிஜாமுதீன் ஆகிய இருவர் மீதும் மோசடி உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    இதே போல் திருச்சி மேலப்பஞ்சபூர் மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ஜெயா.

    இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது கடையில் அதே பகுதியைச் சேர்ந்த தேவி (39) என்பவர் ரூ. 1500க்கு பொருட்கள் கடன் வாங்கியுள்ளார்.

    பின்னர் அந்த தொகையை திரும்ப செலுத்தவில்லை. இதை கேட்ட போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தேவி ஜெயாவை தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வந்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு மூலத்தோப்பு பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 21 ) கஞ்சா விற்றுக் கொண்டிரு ந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்து அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

    இதே போன்று திருச்சி இ.பி. ரோடு சினிமா தியேட்டர் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த இ.பி. ரோடு பகுதியை சேர்ந்த ராஜா ( 28) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்

    • திருமணம் செய்வதாக லண்டன் வாலிபர் ஏமாற்றினார்
    • சைபர் கிரைம் போலீசார் விசாரணை

    கோவை,

    கோவை வடவ்ளி அருகே உள்ள பிரபாநகரை சேர்ந்தவர் 32 வயது இளம் பெண். இவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். தனியாக வசித்த எனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக லண்டனை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நாங்கள் நட்பாக பழகி வந்தோம்.

    அப்போது அவர் என்னி டம் விமான ஓட்டியாக உள்ளதாக கூறினார். மேலும இந்திய பெண்ணை திருமணம் செய்ய விரும்பு வதாகவும் என்னிடம் கூறினார். இதனையடுத்து நான் அவரை திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அவருடன் பழகி வந்தேன். இந்தநிலையில் அவர் லண்டனின் இருந்து பரிசு பொருட்கள் மற்றும் தங்கத்தை அனுப்புவதாக கூறினார்.

    மேலும் என்னை நேரில் வந்து பார்க்க வருவதாகவும் கூறினார். கடந்த 13-ந் தேதி அவர் என்னை தொடர்பு கொண்டு மும்பைக்கு வந்து விட்டதாக கூறினார். இதனை தொடர்ந்து மும்பை விமான நிலையத்தில் இருந்து சுங்க இலாக்கா அதிகாரி என ஒருவர் என்னை தொடர்பு கொண்டனர்.

    அப்போது அவர்கள் உங்களது பெயரை கூறி லண்டனில் இருந்து ஒருவர் வந்து உள்ளார். அவர் சில பரிசு பொருட்கள் மற்றும் தங்கம் உள்பட ரூ.68 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொண்டு வந்துள்ளார். அதற்கு வரியாக ரூ.16 லட்சத்து 43 ஆயிரத்து 600 செலுத்த வேண்டும் என்றார். இதனையடுத்து நான் வாலிபரை தொடர்பு கொண்டு கேட்டபோது என்னிடம் தற்போது பணம் இல்லை. உடனடியாக நீ பணத்தை அனுப்புமாறு கூறினார்.

    இதனை உண்மை என நம்பிய நான் பணத்தை அவர்கள் கூறி வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தேன். அதன் பின்னர் அந்த வாலிபரின் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. எந்த பரிசு பொருட்களும் எனக்கு வந்து சேரவில்லை. என்னை நம்ப வைத்து அவர் மோசடி செய்து விட்டார். எனவே என்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி என்னிடம் ரூ.16 லட்சத்து 43 ஆயிரத்து 400 பணத்தை மோசடி செய்த லண்டன் வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.இளம்பெண் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நகை முதலீட்டு திட்டம் மூலம் ரூ.100 கோடி மோசடி
    • கணவன்-மனைவியை கைது செய்ய தனிப்படை விரைந்தது

    திருச்சி

    திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், நாகர்கோவில் உள்பட 9 இடங்களில் பிரணவ் ஜூவல்லரி நகைக்கடை இயங்கி வந்தது. இதனை திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகிய இருவரும் இயக்குனர்களாக இருந்து நிர்வகித்து வந்தனர்.

    இந்த நகை கடை நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் நகைகளுக்கு செய்கூலி இல்லை சேதாரம் இல்லை என அறிவித்தது. அதுமட்டுமில்லாமல் நடிகர் நடிகைகள் மூலமாக முதலீடு செய்யும் நகைக்கு மாதந்தோறும் 2 சதவீத வட்டித்தொகை, பத்து மாத கடைசியில் முதலீடு தொகைக்கும் அதிகமாக தங்க நகைகள் தருவதாகவும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டனர்.

    இதனை நம்பி பலர் லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்தனர். இந்த நிலையில் கடந்த 2 மாதமாக வட்டித் தொகைக்காக வழங்கப்பட்ட காசோலைகள் பணமில்லாமல் திரும்பிய நிலையில் 9 கிளை நகைக் கடைகளையும் மூடிவிட்டு அதன் உரிமையாளர்கள் தலை மறைவாகிவிட்டனர்.

    அதைத் தொடர்ந்து முதலீடு செய்து ஏமாந்த 635 பேர் திருச்சி, மதுரை, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் அளித்த, புகார்களின் அடிப்படையில், பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. சத்யபிரியா நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில் திருச்சி மெயின் கிளை நகைக்கடை மேலாளர் நாராயணன் என்பவரை கைது செய்தனர். மேலும், திருச்சி சென்னை உள்பட 8 கடைகள் 3 வீடுகள் உள்பட மொத்தம் 11 இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில்

    237 பவுன் தங்க நகைகள்,

    22 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.1,48,711 ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நகைக்கடை உரிமையாளர் மதன் அவரது மனைவி கார்த்திகா, மேலாளர் நாராயணன் ஆகிய 3 பேர் மீது மோசடி, ஏமாற்றுதல், கூட்டு சதி செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் சுமார் ரூ. 14 கோடி மோசடி செய்திருப்பதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கைதான மேலாளர் நாராயணன் மதுரையில் உள்ள முதலீட்டாளர் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தலைமறைவாக இருக்கும் பிரணவ் ஜூவல்லர்ஸ் இயக்குனர்கள் மதன் அவரது மனைவி கார்த்திகா ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் முகாமிட்டு அவர்களைத் தேடி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு பணம் முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியபோது நன்கு அறிமுகமான வாடிக்கையாளர்களிடம் மதன் செல்போன் வாயிலாக தொடர்பு கொண்டு புகார் எதுவும் கொடுக்க வேண்டாம். பணத்தை திருப்பித் தருவதற்கு ஏற்பாடு செய்கிறேன் என கூறிவந்துள்ளார்.

    ஆனால் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து காவல்துறை கவனத்திற்கு செல்லவும் தனது செல்போன்கள் அனைத்தையும் சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவானார். பல கோடி மோசடி செய்துள்ள மதனின் கடைகளில் குறைந்த அளவிலேயே தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் கிளையில் மட்டுமே அதிகபட்சமாக 90 பவுன் நகை கைப்பற்றப்பட்டுள்ளது.

    மோசடி பணத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, கும்பகோணம், நாகர்கோவில் உள்பட தனது நகைக்கடை நிறுவனம் அமைந்துள்ள அனைத்து பகுதிகளிலும் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாக தெரிகிறது. ஆகவே அந்த சொத்துக்களை பறிமுதல் செய்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • குழந்தையின் சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாக கூறி மோசடி.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை காளப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்(வயது32).

    இவர் போத்தனூர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வருகிறேன். எனது நிறுவனத்தில் ஜனா என்பவர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அவரை தொடர்பு கொண்ட பெண் ஒருவர் அவரது 22 பவுன் தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்திருப்பதாகவும், அந்த நகையை மீட்க ரூ.43 ஆயிரம் பணம் தேவைப்படுவதாகவும், நகையை மீட்டதும் உங்களது நிறுவனத்திலேயே அந்த நகையை விற்பனை செய்வதாக கூறினார்.

    இதனைத் தொடர்ந்து ஜனாவை மீண்டும் தொடர்பு கொண்ட அந்தப் பெண் தனது குழந்தைக்கு அறுவை சிகிச்சைக்கு பணம் அவசரமாக தேவைப்படுகிறது என கூறி பணம் கேட்டார். இதனை உண்மை என நம்பிய ஜனா பணத்துடன் பெண் அழைத்த வங்கிக்கு சென்றார். அப்போது அங்கு வந்து பணத்தை பெற்றுக் கொண்ட பெண் பணத்துடன் அங்கிருந்து மாயமாகிவிட்டார்.

    எனவே அந்தப் பெண்ணை கண்டுபிடித்து பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறி இருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ.43 ஆயிரம் பணத்துடன் மாயமான அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.

    • மர்மநபர் ஒருவர் பிட்காயினில் நீங்கள் முதலீடு செய்தால் அதிகளவில் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார்.
    • சைபர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

    கோவை,

    கோவையை சேர்ந்த அழகு மீனாட்சி(48) என்பவர் சைபர் கிரைம் போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

    கடந்த மாதம் எனது செல்போன் வாட்ஸ்-அப்புக்கு வந்த குறுந்தகவலில் கூகுள் மேப் குறித்து ரிவ்யூ கொடுத்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து நான் 2 ரிவ்யூ கொடுத்ததற்கு ரூ.150 லாபம் கிடைத்தது. அதன் பின்னர் என்னை டெலிகிராம் குழுவில் இணைத்தனர்.

    அதன் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் பிட்காயினில் நீங்கள் முதலீடு செய்தால் அதிகளவில் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார். நானும் 12 கட்டங்களாக அந்த நபர் கூறிய வங்கி கணக்குகளில் சிறிது, சிறிதாக ரூ. 5 லட்சத்து 2 ஆயிரம் முதலீடு செய்தேன். ஆனால் அந்த நபர் கூறியபடி லாப தொகையை தரமால் மோசடி செய்து விட்டனர்.

    எனவே அந்த மர்ம நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் சைபர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

    • குறைந்த விலையில் தங்கம் இருப்பதாக கூறி மோசடி
    • 3 பெண்களுக்கு போலீசார் வலைவீச்சு

    கோவை,

    கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் பாத்திமா( வயது48). நோட்டு புத்தக கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் சிவானந்த காலனி 5-ம் நம்பர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது 3 பெண்கள் அங்கு வந்தனர். அவர்கள் பாத்திமாவின் அருகே சென்று தங்களிடம் குறைந்த விலையில் தங்கம் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் உடனடியாக தங்க நகை தருவதாக கூறினர்.

    முதலில் அவர்கள் 5 பவுன் தங்க நகையை ரூ.50 ஆயிரத்துக்கு தருவதாக கூறினர். இதனை உண்மை என நம்பிய பாத்திமா நகை வாங்க ஒப்புக்கொண்டார்.

    இந்த நிலையில் மேலும் அவர்கள் இன்னும் தங்களிடம் 5 பவுன் தங்க நகை இருக்கிறது. மொத்தமாக ரூ.1.50 லட்சம் கொடுத்தால் நகைகள் அனைத்தும் தருவதாக கூறி ஆசை வார்த்தை கூறினர்.

    ஆனால் பாத்திமா தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றார். இதனை தொடர்ந்து அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி ரூ.80 ஆயிரத்துக்கு 10 பவுன் தங்க நகைகள் தருவதாக கூறியுள்ளனர்.

    பாத்திமா அவர்களிடம் ரூ.80 ஆயிரம் பணம் கொடுத்தார். 3 பெண்களும் அவர்களிடம் இருந்த நகையை கொடுத்து விட்டு பணத்தை வாங்கி சென்றனர்.

    பின்னர் பாத்திமா நகை அடகு கடைக்கு சென்று தங்க நகையை பரிசோதித்து பார்த்தார். அப்போது அது போலி நகைகள் என்பது தெரிய வந்தது. இது குறித்து அவர் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×