search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரை ஏமாற்றி ரூ.16 லட்சம் சுருட்டிய கணவன்-மனைவி
    X

    கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரை ஏமாற்றி ரூ.16 லட்சம் சுருட்டிய கணவன்-மனைவி

    • மேஜை, நாற்காலி போன்றவை செய்வதற்கு மர சாமான்கள் வாங்க வேண்டும் என மோசடி.
    • இதுகுறித்து ராஜமாணிக்கம் பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது42). ரியல் எஸ்டேட் அதிபர்.

    இவரது வீட்டின் அருகே சசிகுமார் என்பவர் தனது மனைவி நிர்மலாவுடன் வசித்து வருகிறார். அருகருகே வசிப்பதால், 2 குடும்பத்தினரும் நெருங்கி பழகி வந்தனர்.

    இந்த நிலையில் சசிகுமாரும், அவரது மனைவியும் கடந்த ஆண்டு இறுதியில், ராஜமாணிக்கத்தை சந்தித்து பேசினர்.அப்போது தங்களுக்கு மேஜை, நாற்காலி போன்றவை செய்வதற்கு மர சாமான்கள் வாங்க வேண்டும். அதற்கு நீங்கள் பணம் தந்து உதவுமாறு கேட்டுள்ளனர்.

    இவரும் அவர்களை நம்பி ரூ.8 லட்சம் பணத்தை கொடுத்தார். இதேபோன்று மற்றொருமுறை சசிகுமாரின் மனைவியும் ரூ.3 லட்சம் பணத்தை வாங்கியுள்ளார். தொடர்ந்து இதேபோன்று பல தவணைகளாக மொத்தம் ரூ.16 லட்சம் பணத்தை கணவன், மனைவி 2 பேரும் சேர்ந்து பெற்றுள்னர். பணத்தை திருப்பி தந்துவிடுவதாக கூறிய அவர்கள், வெகுநாட்களை கடந்தும் பணத்தை கொடுக்க வில்லை. மேலும் நீண்ட நாட்களாக அவர்களை அந்த பகுதியிலும் பார்க்க முடியவில்லை.

    இதையடுத்து ராஜமாணிக்கம் அருகே உள்ளவர்களிடம் விசாரித்தார். அப்போது தான் அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கணவன், மனைவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×