என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "flood warning"
- சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பு
- கடந்த 3 வாரங்களாக நீர்வரத்து அதிகரிப்பு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணைக்கு கடந்த 3 வாரங்களாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மற்றும் தென் பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக நீர்வரத்து ஏற்பட்டது. இதனால், சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதனால் தென் பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சாத்தனூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது. 119 அடி உயரம் கொண்ட அணையில் நீர்மட்டம் 117 அடியாக தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது.
அணையில் இருந்து கடந்த 26-ம் தேதி விநாடிக்கு 2,800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில், நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று முன்தினம் (27-ந் தேதி) மாலை விநாடிக்கு 4,250 கனஅடி வெளி யேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், அணைக்கு வரும் நீர்வரத்து சற்று குறைந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 3,464 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே வெளி யேற்றப்படுகிறது.
அணையில் 6,875 மில்லியன் கனஅடி தண்ணீர்இருப்பு உள்ளது. அணை பகுதியில் 12.2 மி.மீ., மழை பெய்துள்ளது. தென்பெண்ணையாற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
ஆற்றில் குளிக்கவும், கால்நடைகளை பராமரிக்கவும் வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
59.04 அடி உயரம் உள்ள குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 57 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் 644.30 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. 92 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு விநாடிக்கு 156 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 100 கனஅடி தண்ணீர் செய்யாற்றில் வெளி யேற்றப்படுகிறது.
62.32 அடி உயரம் உள்ள செண்பகத்தோப்பு அணையில் நீர்மட்டம் 49.40 அடியாக உள்ளது.
- கொள்ளிடம் ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது
- கலெக்டர் ரமணசரஸ்வதி வேண்டுகோள்
அரியலூர்:
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை ஏற்கனவே எட்டியுள்ளது. இதை தொடர்ந்து, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் காவிரி ஆற்றில் சுமார் 1,20,000 கன அடி அளவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது. எனவே, அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, துணிகளை துவைக்கவோ, மீன் பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மேலும், பாதுகாப்பற்ற கரையோர பகுதிகளில் நின்று கொண்டு பொதுமக்கள் செல்போனில் 'செல்பி" எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆறு மற்றும் கால்வாய்களில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், அந்த பகுதிகளுக்கு தங்களது குழந்தைகளை விளையாட செல்ல விடாமல் பெற்றோர்கள் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும்.
விவசாயிகள் தங்களின் கால்நடைகளை ஆற்றின் நடுவே அமைந்துள்ள திட்டுகளில் மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்கவும், நீர்நிலைகள் வழியாக அழைத்து செல்வதை தவிர்க்கவும் வேண்டும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- ஈரோடு மாவட்ட காவிரி கரையோர பகுதி மக்களுக்கு அதிகாரிகள் வெள்ள அபாய எச்ரிக்கை விடுத்துள்னர்.
- இதே போல் தண்ணீர் அதிகளவு செல்வதால் பவானி புது பஸ் நிலையம் பகுதி, மார்க்கெட் பகுதி, கூடுதுறை காவிரி ஆற்றிலும் தண்ணீர் அதிகரித்துள்ளது.
அம்மாப்பேட்டை:
கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 120 அடியை எட்டியது.
இதனால் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விட ப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதைதொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் படிப்படியாக குறைந்தது. இதனால் காவிரி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.
இந்த நிலையில் கர்நாடகா மற்றும் கேரளா மாநில ங்களில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணை க்கு சுமார் 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வரத்து வந்து கொண்டு இருக்கிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடிக்கு மேல் உள்ளதால் அணைக்கு வரும் தணணீர் அப்படியே திறந்து விடப்பட்டு வரு கிறது. இதனால் ஈரோடு மாவட்ட காவிரி கரையோர பகுதி மக்களுக்கு அதிகாரிகள் வெள்ள அபாய எச்ரிக்கை விடுத்துள்னர்.
இதனால் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை நெரிஞ்சிப்பேட்டை ஆகிய பகுதிகளில் காவிரி கரையோரத்தில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பேரூராட்சி துறை மற்றும் வருவாய்த் துறையினர் தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.
மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக திறந்து விடப்படும் உபரி நீர் செக்கானூர் கதவணை, நெரிஞ்சிப்பேட்டை கதவணை, கோனே–ரிப்பட்டி உள்ளிட்ட கதவணைகளில் அப்படியே வெளி யேற்றுவார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு நெரிஞ்சிப்பேட்டை தேர்வீதி,பெருமாள் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் திடீரென வீதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் வெளியேறி காவிரி ஆற்றை பார்த்தனர்.
அப்போது மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் போது நெரிஞ்சிப்பேட்டை கதவணை திறப்பது வழக்கம். ஆனால் கதவணையில் தண்ணீர் திறக்கப்படாதது தெரியவந்தது.
இது குறித்து உடனடியாக அந்த பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அந்தியூர் தாசில்தார் விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக தாசில்தார் கதவணை மின்நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து பின் கதவுகள் திறக்கப்பட்டது. அதன் பின்னர் ஊருக்குள் புகந்த தண்ணீர் வடிய தொடங்கியது . இதனால் நெரிஞ்சிப்பேட்டை பகுதியில் பரபரப்பு நிலவியது.
இது குறித்து கரையோர பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கூறும் போது, மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தால் கூட தண்ணீர் அதே மட்டத்தில் தான் செல்லும். ஆனால் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வரும் பொழுது வீதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது.
உடனடியாக நெரிஞ்சி ப்பேட்டை கதவணையில் இருந்து தண்ணீர் வெளி யேற்றப்படாதால் தான் தண்ணீர் ஊருக்குள் போகிறது என்று அறிந்த பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கூறினோம்.
உடனடியாக அதிகாரிகள் கதவுகளை திறந்ததால் ஊருக்குள் போகும் தண்ணீர் வடிய தொடங்கியது. காவிரியில் வெள்ள பெருக்கு ஏற்படும் காலங்களில் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதே போல் தண்ணீர் அதிகளவு செல்வதால் பவானி புது பஸ் நிலையம் பகுதி, மார்க்கெட் பகுதி, கூடுதுறை காவிரி ஆற்றிலும் தண்ணீர் அதிகரித்துள்ளது. இதையொட்டி காரையோர பகுதிகளில் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் ஈரோடு அக்ரகாரம் பேரேஜ், கருங்கல் பாளையம், வெண்டி–பாளையம், கொடிமுடி உள்பட காவிரி கரையோர பகுதிகளில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
- தென்மேற்கு பருவமழையால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- மேட்டூர் அணைக்கு ஒரு லட்சத்து 9 ஆயிரம் கன அடி நீர் வருகிறது.
சேலம்:
கர்நாடகா மாநிலத்தில் உள்ள காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையின் பாதுகாப்பை கருதி, தமிழகத்திற்கு நேற்று வினாடிக்கு1,20,000 கன அடி அளவிற்க்கு காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டது.
கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர் ஒரு லட்சத்து 9 ஆயிரம் கன அடி வீதம் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று பகல் 12 மணிக்கு 113.96 அடியிலிருந்து 114.81 அடியாக உயர்ந்தது.
தற்பொழுது நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை இன்று நள்ளிரவுக்குள் நிரம்பும் வாய்ப்பு உள்ளது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து அமலில் உள்ளது.
- காவிரி நீர் வரத்து அதிகரிப்பதால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப் பெருக்கு.
மாண்டியா:
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளன.
அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரிநீர் முழுவதும் திறந்து விடப்படுகிறது. கே.ஆர்.எஸ்., அணைக்கு வினாடிக்கு, 49 ஆயிரத்து 244 கன அடி தண்ணீர் வரும் நிலையில் அணையிலிருந்து வினாடிக்கு 74 ஆயிரத்து 356 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தண்ணீர் வெளியேறும் மதகுகள் பகுதியில் மூவர்ண கொடியின் நிறத்தில் விளக்குகள் எரியவிடப்பட்டுள்ளன. இது காண்போரை கவர்ந்து வருகிறது.
இதுபோன்று, கபினி அணைக்கு வினாடிக்கு, 26 ஆயிரத்து 847 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இரு அணைகளிலிருந்தும், தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சத்து 4,356 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இந்த தண்ணீர் இன்று இரவு தமிழக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவை வந்தடையும் என தெரிகிறது. கர்நாடகா அணைகளில் இருந்து அதிகபட்ச தண்ணீர் வெளியேற்றப்படுவதால், ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என அபாயம் உள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து அமலில் உள்ளது.
- தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகா ஆறுகளில் வெள்ளப் பெருக்கு.
- கர்நாடகா அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர் கனமழையால் அம்மாநில ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 34,304 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.
இதேபோல் கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.நேற்று மாலை நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 15,727 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.
இந்த இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு வினாடிக்கு 23,511 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அணைக்கு தற்போது 3 ஆயிரத்து 865 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஏழு பிரதான மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது. வைகை அணை நீர்மட்டம் 69 அடியை எட்டியதால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. #FloodAlert
கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
மேலும் வருசநாடு, வெள்ளிமலை ஆகிய மூலவைகையாறு நீர்பிடிப்பு பகுதியிலும் பெய்து வரும் மழையால் வைகை அணைக்கு நீர்வரத்து 2762 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 68.34 அடியாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 66 அடியை எட்டியபோது முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விரைவில் 69 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று மாலை 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு 2-வது முறையாக வைவை அணை நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முல்லைப்பெரியாய அணையின் நீர்மட்டம் 133.75 அடியாக உள்ளது. 1953 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1977 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.54 அடியாக உள்ளது. 130 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 4.2, தேக்கடி 8, கூடலூர் 13.6, சண்முகாநதி அணை 17, உத்தமபாளையம் 8.6, வீரபாண்டி 8, வைகை அணை 8.4, மஞ்சளாறு 77, சோத்துப்பாறை 16, கொடைக்கானல் 3 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. இன்று காலையும் தொடர்ந்து பெய்து வருகின்றது. #VaigaiDam
இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டத்தில் உள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதோடு குடிநீருக்கு முக்கிய ஆதாரமாகவும் வைகை அணை உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக கடும் வறட்சி நீடித்ததால் வைகை அணை நிரம்பவில்லை. இந்தஆண்டு தென்மேற்கு பருவ மழை கைகொடுத்ததாலும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்த கூடுதல் தண்ணீர் திறந்ததாலும் கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி அணை முழு கொள்ளளவை எட்டியது.
அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்தது.
கடந்த சில நாட்களாக வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியான வருஷநாடு, மயிலாடும்பாறை, கண்டமனூர், கடமலைக்குண்டு, மூலவைகை பகுதியில் கன மழை நீடித்து வருகிறது. இதனால் வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.
நேற்றும் விடிய விடிய கன மழை கொட்டித் தீர்த்தது. எனவே அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. 66 அடியை எட்டியதும் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 68 அடியை தொட்டதும் 2-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடி ஆனதும் 3-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உபரி நீர் அப்படியே திறந்து விடப்படும். இன்று காலை அணையின் நீர் மட்டம் 66.01 அடியாக இருந்தது. எனவே முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டத்தில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அணைக்கு 2,510 கன அடி நீர் வருகிறது. பாசனத்துக்காக 1,460 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இதே நிலை நீர் வரத்து நீடித்தால் அணை ஓரிரு நாளில் நிரம்பி விடும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். #Vaigaidam
டிஎன்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான குன்றி விளாங்கோம்மை, மல்லியம்மன் துர்க்கம், கம்மனூர், உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது.
இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. விநாடிக்கு ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்ததால் அணை தனது முழு கொள்ளளவான 42 அடியை எட்டியது.
எனவே உபரிநீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் வினோ பாநகர், கொங்காரபாளையம், தோப்பு, கோவிலூர் வாணிப்புத்தூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குண்டேரிப்பள்ளம் அணையின் உபரிநீர் ஓடையில் கால்நடைகள் மேய்க்கவோ. வேறு தேவைகளுக்காகவோ யாரும் இறங்க வேண்டாம் என்றும், கரையோரம் உள்ள பொதுமக்கள் மேடான பகுதிக்கும் பாதுகாப்பான இடங்களுக்கும் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குண்டரிப்பள்ளம் அணை தூர் வாரப்படாததால் அணையில் அதிகளவு நீர் தேக்கமுடியாத நிலை ஏற்பட்டு வருவதாகவும், அணைக்கு வரும் நீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு வீணாக பவானி ஆற்றில் கலப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் உபரிநீர் ஓடையில் 2 அல்லது 3 தடுப்பணைகள் கட்டவேண்டும் என்றும் அவ்வாறு கட்டினால் வீணாக பவானி ஆற்றில் கலக்கும் தண்ணீரை அதிகளவு சேமிக்க முடியும் என்றும் அவ்வாறாக சேமிக்கும் பட்சத்தில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடையும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். #Dam #Floodwarning
கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் அதிகப்படியான கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு அதிக அளவில் நீர் திறக்கப்பட்டு வருகிறது.
அதே போல், கேரள மாநிலத்தில் உள்ள முல்லை பெரியாறு அணையும் அதன் முழு கொள்ளளவை எட்டிவிட்டது. இதையடுத்து தற்போது வைகை அணைக்கு 4 ஆயிரத்து 941 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இன்று அதிகாலை நிலவரப்படி, வைகை அணை 66 அடியை எட்டியுள்ளது. அதன் முழு கொள்ளளவு 71 அடியாக இருக்கும்பட்சத்தில், முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தற்போது விடப்பட்டுள்ளது.
வைகை நதிக்கரையோரம் வாழும் மதுரை மற்றும் தேனி மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கால்நடைகளை சுத்தம் செய்யவோ வேண்டாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கிடைக்கும் நீரை உரிய முறையில் சேமித்து வைக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #FloodAlert #Madurai #VaigaiDam
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்