search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water Level Rising"

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த 1 வாரமாக கனமழை பெய்து வருகிறது.
    • லோயர் கேம்பம் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த 1 வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து மற்றும் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் இடுக்கி மாவட்டத்தில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் தற்போது 122.80 அடியாக உள்ளது.

    நேற்று 1000 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 1401 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 1300 கன அடி நீர் திறக்கப்படுவதால் லோயர் கேம்பம் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 3182 மி.கன அடியாக உள்ளது.

    தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வரும் நிலையில் அணையின் நீர் மட்டம் 123 அடியை எட்ட உள்ளது. இம்மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழையும் தொடங்கி விடும். இதனால் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் 2-ம் போக நெல்சாகுபடிக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று விவசாயிகள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 55.09 அடியாக உள்ளது. வரத்து 2042 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 2733 மி.கன அடி.

    57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.95 அடியை எட்டியதால் அணையில் இருந்து நேற்று முதல் தேனி, திண்டுக்கல் மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் 100 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 434.30 மி.கன அடியாக உள்ளது.

    126 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 114.30 அடியாக உள்ளது. வரத்து 93 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 80.69 மி.கன அடி.

    கன மழை காரணமாக கும்பக்கரை, சுருளி, அணைப்பிள்ளையார் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பெரியாறு 17.4, தேக்கடி 2.4, உத்தமபாளையம் 0.8, சண்முகாநதி அணை 1, போடி 15.4, வைகை அணை 64, மஞ்சளாறு 15, சோத்துப்பாறை 95, பெரியகுளம் 90, வீரபாண்டி 4.8, அரண்மனைப்புதூர் 13.8, ஆண்டிபட்டி 31.6, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    வைகை அணை நிரம்புவதால் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. #Vaigaidam
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது வைகை அணை. பெருந்தலைவர் காமராஜரால் கட்டப்பட்ட இந்த அணையின் முழு கொள்ளளவு 71 அடி. இந்த அணை முல்லைப் பெரியாறு அணை தண்ணீர் மூலமும், மூல வைகை ஆற்றில் வரும் தண்ணீர் மூலமும் நிரம்புகிறது.



    இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டத்தில் உள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதோடு குடிநீருக்கு முக்கிய ஆதாரமாகவும் வைகை அணை உள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளாக கடும் வறட்சி நீடித்ததால் வைகை அணை நிரம்பவில்லை. இந்தஆண்டு தென்மேற்கு பருவ மழை கைகொடுத்ததாலும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்த கூடுதல் தண்ணீர் திறந்ததாலும் கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி அணை முழு கொள்ளளவை எட்டியது.

    அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்தது.

    கடந்த சில நாட்களாக வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியான வரு‌ஷநாடு, மயிலாடும்பாறை, கண்டமனூர், கடமலைக்குண்டு, மூலவைகை பகுதியில் கன மழை நீடித்து வருகிறது. இதனால் வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.

    நேற்றும் விடிய விடிய கன மழை கொட்டித் தீர்த்தது. எனவே அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. 66 அடியை எட்டியதும் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 68 அடியை தொட்டதும் 2-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடி ஆனதும் 3-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உபரி நீர் அப்படியே திறந்து விடப்படும். இன்று காலை அணையின் நீர் மட்டம் 66.01 அடியாக இருந்தது. எனவே முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டத்தில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அணைக்கு 2,510 கன அடி நீர் வருகிறது. பாசனத்துக்காக 1,460 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இதே நிலை நீர் வரத்து நீடித்தால் அணை ஓரிரு நாளில் நிரம்பி விடும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். #Vaigaidam



    ×