search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    X

    மேட்டூர் அணை (கோப்பு படம்)

    மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    • தென்மேற்கு பருவமழையால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • மேட்டூர் அணைக்கு ஒரு லட்சத்து 9 ஆயிரம் கன அடி நீர் வருகிறது.

    சேலம்:

    கர்நாடகா மாநிலத்தில் உள்ள காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    ஏற்கனவே அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையின் பாதுகாப்பை கருதி, தமிழகத்திற்கு நேற்று வினாடிக்கு1,20,000 கன அடி அளவிற்க்கு காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டது.

    கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர் ஒரு லட்சத்து 9 ஆயிரம் கன அடி வீதம் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று பகல் 12 மணிக்கு 113.96 அடியிலிருந்து 114.81 அடியாக உயர்ந்தது.

    தற்பொழுது நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை இன்று நள்ளிரவுக்குள் நிரம்பும் வாய்ப்பு உள்ளது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×