search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "firecrackers"

    • மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளாா்.
    • அனுமதிக்கப்பட்ட பட்டாசு வகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரியில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது என்று மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளாா்.

    இதுதொடா்பாக அவா் கூறியிருப்பதாவது: -

    ஒளித்திருநாளாம் தீபாவளி பண்டிகை அனைவரும் கொண்டாடி மகிழும் முக்கிய திருநாளாகும். இந்த நாளில் வண்ணவண்ண மத்தாப்புகளை கொளுத்தி மகிழும் வழக்கம் உள்ளது. நாம் கொளுத்தி மகிழும் மத்தாப்புகளுடன், ஒலி எழுப்பும் பட்டாசுகளால் ஒலி மாசு ஏற்படவும், நம் காதுகளின் கேட்கும் திறன் குறையவும் வாய்ப்பு உள்ளது. அதேபோல, பட்டாசுகளை வெடிக்கும்போது வெளியாகும் புகையால், காற்று மாசு ஏற்படவும், விபத்துகள் நேரவும் வாய்ப்புள்ளது.

    நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை, மொத்த மாவட்டமும் உயிா்கோளப் பகுதி என வரையறுக்கப்பட்ட மிக மென்மையான சூழலை கொண்டப் பகுதியாகும். பல்வேறு வகையான வனவிலங்குகளுக்கும், அரியவகை தாவரங்களுக்கும் வாழ்விடமாக உள்ளது.

    இச்சூழலில், பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படின், அது மாவட்டத்தின் மென்மையான சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் ஊறு விளைவிப்பதாக அமையும். எனவே, அவற்றைத் தவிா்த்து, வனங்களில் காணப்படும் விலங்குகளையும், அரியவகை தாவரங்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாவட்ட மக்களாகிய அனைவருக்கும் உள்ளது.

    மேலும், சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் தீபாவளியன்று அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கும்படியும், அதிக ஓசை எழுப்பக்கூடிய தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. இதை மீறுவோா் மீது காவல் துறையினா் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வா்.

    இதுபோன்றே, பட்டாசு விற்பனையாளா்களும் அனுமதிக்கப்பட்ட பட்டாசு வகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக்கூடாது. மீறும் விற்பனையாளா்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படுவது மட்டுமின்றி, அபராதமும் விதிக்கப்படும் .

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராம மக்களுக்கு வனத்துறையினர் இனிப்பு வழங்கி பாராட்டினர்.
    • 38 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயத்திற்கு அருகில் கொள்ளுக்குடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராமம் அமைந்துள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது வேட்டங்குடி பறவைகள் சரணாலயம். சுமார் 38 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயத்திற்கு அருகில் கொள்ளுக்குடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த பறவைகள் சரணாலயத்திற்கு மழைகாலங்களில் உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி வெளிநாட்டு பறவைகளும் வந்து இனப்பெருக்கம் செய்து செல்கின்றன.

    இந்த பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பறவைகள் ஒலி எழுப்பினால் அச்சமுற்று வேறு இடத்திற்கு சென்றுவிடும் என்பதால் சரணாலயத்திற்கு அருகில் வசிக்கும் கொள்ளுக்குடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராம மக்கள் ஆண்டு முழுவதும் பட்டாசு வெடிப்பதில்லை. திருமணம், திருவிழாக்கள், தீபாவளி மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல தலைமுறையாக பறவைகளின் நண்பர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்கள் பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காமல் சிறு மகிழ்ச்சியை தியாகமாக செய்வதை போற்றும் வகையில் சிவகங்கை வனக்கோட்டம், திருப்பத்தூர் வனச்சரக அதிகாரிகள் ஆண்டு தோறும் தீபாவளிக்கு முன்பு கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கி கவுரவிப்பார்கள். அது போல் இந்த ஆண்டும் கொள்ளுக்குடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராமத்தை சேர்ந்த சுமார் 200 குடும்பங்களுக்கு வனத்துறை சார்பில் இனிப்பு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

    • மாணவர்களுக்கு சீருடை, இனிப்பு, பட்டாசு மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டது.
    • பணிகளை பாராட்டி நினைவுப்பரிசு, பொன்னாடைகள் வழங்கி கவுரவிப்பு.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி பெயர் பொறித்த சீருடை, தீபாவளி இனிப்புகள், பட்டாசுகள் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டது.

    முன்னதாக தலைமை–யாசிரியர் வேதரெத்தினம், உதவிஆசிரியை சுசீலா, ஆட்டோ ஓட்டுநர் அன்புமணி ஆகியோரின் பணிகளை பாராட்டி நினைவுப்பரிசு, பொன்னாடைகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் கருணாநிதி, வட்டார கல்வி அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், அறிவழகன், ரோட்டரி துணை ஆளுநர் சிவக்குமார், ஆதப்பன், இளங்கோவன், திலகமணி, முத்து சாமி, அறிவழகன், உறுப்பினர் அஜித் ராஜா, ஹாஜா அலாவுதீன், தலைமையாசிரியர்கள் சுபாஷ், முருகாdந்தம், ஆசிரியர்கள் வேதரெத்தினம், ஹரி கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    • தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்கவேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

    தமிழகத்தில் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவில் 7 மணி தொடங்கி இரவு 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

    உச்சநீதிமன்றம் தடை செய்துள்ள பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்றும், ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டாசு வெடிகளை வெடிக்க கூடாது என்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அறிவுறுத்தல் செய்துள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் வெடிக்கலாம் என்றும், சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

    • சிவகாசி அருகே பட்டாசு-திரி வைத்திருந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இந்த சம்பவம் தொடர்பாக திருத்தங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருத்தங்கல் அருகே உள்ள பழைய வெள்ளையாபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (33). எளிதில் தீப்பற்றக்கூடிய திரிகளை வைத்திருந்ததாக திருத்தங்கல் போலீசார் மாரிமுத்துவை கைது செய்தனர்.

    சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி நாராயணபுரம் ரோட்டில் சிவகாசி கிழக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கோவை வேலப்பர் கவுண்டர் வீதியைச் சேர்ந்த நாகராஜ் (39) என்பவர் அனுமதியின்றி 10 பெட்டிகளில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். அதனை போலீசார் பறிமுதல் செய்து நாகராஜை கைது செய்தனர்.

    சிவகாசி எம்.மேட்டுப்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி பட்டாசு குழாய்களை வைத்திருந்ததாக வீரபாகு, ராஜகோபால் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1,200 பட்டாசு குழாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல் பட்டாசு திரி, பட்டாசுகளை வைத்திருந்ததாக கீழகோதைநாச்சியார்புரத்தைச் சேர்ந்த இளையராஜா, கங்காகுளத்தைச் சேர்ந்த கருப்பசாமி, திருத்தங்கல்லைச் சேர்ந்த பவுன்தாய், முனியம்மாள் ஆகிய 4 பேரை திருத்தங்கல் போலீசார் கைது செய்தனர். 

    • விநாயகர் சிலை ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க அனுமதியில்லை என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
    • சதுர்த்தி விழா முன்னேற்பாடு கூட்டம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்துசட்டம், ஒழுங்கு பராமரிப்பு தொடர்பாக முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்விழாவிற்காக தகுந்த முன்அனுமதியை விழா குழுவினர் பெற வேண்டும். விழா ஒருங்கிணைப்பாளர்கள் விநாயகர் சிலை அமைப்பதற்கு நில உரிமையாளர்கள், காவல்துறை, தீயணைப்புத்துறை, மின்சாரதுறையிடம் தடையின்மை சான்றுகளை பெற்று உரிய அனுமதியினை வருவாய்த்துறையிடம் பெற வேண்டும். சிலையானது தூய களிமண்ணால் தயாரிக்க வேண்டும்.

    தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளின்படி செயல்பட வேண்டும். நீரில் கரையக்கூடிய நச்சு இல்லாத இயற்கை சாயங்கள் பூசப்பட்ட சிலைகளை தயாரிக்க வேண்டும். சிலை அமைத்து வழிபாடு செய்யும் இடம் மற்றும் அதனை சுற்றி தேவையான முதலுதவிப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பிடிக்காத பொருட்கள் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    கூம்பு வடிவிலான ஒலி பெருக்கியை பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்கு மாற்றாக பெட்டி வடிவிலான ஒலி பெருக்கியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். விழா ஒருங்கிணைப்பாளர்கள் 2 தன்னார்வலர்களை நியமித்து சிலையை பாதுகாக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மற்ற மதத்தினரை பாதிக்கும், துன்புறுத்தும் வகையில் சத்தமாக கோஷங்களை எழுப்ப அனுமதிக்கக் கூடாது.

    காவல்துறையால் பரிந்துரைக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சிலையை வாகனங்களில் கொண்டு சென்று கரைக்க வேண்டும். அவ்வாறு செல்லும்போது பட்டாசு வெடிபொருட்களை வெடிக்க அனுமதி கிடையாது. எனவே விழாக் குழுவினர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை உரிய முறையில் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது செய்யப்பட்டார்.
    • அவர்கள் வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    விருதுநகர்

    சாத்தூர் அருேக அழகாபுரி பகுதியில் அனுமதியின்றி பட்டாசுகளை தயாரிப்பதாக சாத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு பண்டல் பண்டலாக பட்டாசுகள் தயாரித்து வைத்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அனுமதியின்றி பட்டாசு தயாரித்த சாயல்பட்டியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 59), இரவார்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (51) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

    • பட்டாசுக்கான ஜி.எஸ்.டி வரியை 18-ல் இருந்து 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று சிவகாசியில் நடந்த பட்டாசு வணிகர் கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • சீன பட்டாசு வருகையால் சிவகாசியில் பட்டாசு தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    சிவகாசி

    சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் 3-வது மாநில மாநாடு நடந்தது. மாநிலத் தலைவர் ராஜா சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன், பொருளாளர் கந்தசாமி, ராஜன் முன்னிலை வகித்தனர்.

    சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆசைத்தம்பி வரவேற்றார். விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் குத்து விளக்கு ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், டான்பாமா சங்கத்தலைவர் கணேசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசுகையில், காலத்திற்கு ஏற்றவாறு பட்டாசு உற்பத்தியில் மாற்றங்களை கொண்டு வருவதால் பட்டாசு, தீப்பெட்டி உற்பத்தியில் சிவகாசி தமிழ்நாட்டின் தலைநகராக விளங்கி வருகிறது. சீன பட்டாசு வருகையால் சிவகாசியில் பட்டாசு தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் 100 ஆண்டுகளைக் கடந்து இந்த தொழில் சிறப்பாக செயல்படுவதற்கு சிவகாசியை சேர்ந்த தொழில் அதிபர்களே காரணம் ஆவார்கள். பட்டாசு உற்பத்தி, பிரச்சினைகளுக்கு மத்திய அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றார்.

    மாநாட்டு மலரை தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கணேசன் வெளியிட, மாணிக்கம் தாகூர் எம்.பி. பெற்றுக்கொண்டார். சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் பேசுகையில், நீதிமன்ற தீர்ப்புக்கு பயந்து அதிகாரிகள் பட்டாசு தொழிலை பாதுகாக்க முன்வரவில்லை.

    உச்சநீதிமன்றத்தில் பட்டாசு வழக்கில் முதலில் தீர்வு காண வேண்டும். பட்டாசு ஏற்றுமதி செய்ய பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் மத்திய அரசு இதனை கண்டுகொள்ளவில்லை. தற்போது இலங்கை யில் உள்ள கொழும்பு துறைமுகம் வழியாக பட்டாசுகளை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு பட்டாசு ஏற்றுமதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    தமிழக முழுவதும் உள்ள அனைத்து நிரந்தர பட்டாசு கடை உரிமங்களை 5 ஆண்டுகளுக்கு புதுப்பித்து வழங்குவது, விண்ணப்பித்த 90 நாட்களுக்குள் வழங்குவது, தீபாவளிக்கு 5 நாட்கள் விடுமுறை அளிப்பது, பட்டாசுக்கான ஜி.எஸ்.டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்

    • கடலூர் அருகே இன்று பயங்கரம் பட்டாசு குடோனில் வெடிகள் வெடித்து 3 பேர் பலியானர்.
    • தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீசார் அங்கு விரைந்தனர்.

    கடலூர்: 

    கடலூர் அருகே எம்.புதூரில் நாட்டு வெடிகள் தயாரிக்கும் குடோன் உள்ளது. இன்று காலைஊழியர்கள் பணியில் இருந்தனர். இங்கு இன்று மதியம் திடீர் என குடோனில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. இந்த சத்தம் 2 கி.மீ. தூரத்துக்கு கேட்டது. அதோடு அந்த பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது போல் வீடுகள் குலுங்கியது. அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் சத்தம் வந்த திசை நோக்கி சென்றனர். அப்போது நாட்டு வெடிகள் வைத்திருந்த குடோன் இடிந்து தரைமட்டமாகி கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில்காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர். தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீசார் அங்கு விரைந்தனர்.

    விசாரணையில் இந்த குடோனில் 7பேர் வேலை பார்க்க வந்தனர். 2 பேர் மதிய உணவுக்கான சென்று விட்டனர். மீதமுள்ள 5 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். உடனே தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்தில் 3 பேர் பலியாகி இருந்தனர். மற்ற 2 பேர் உயிருக்கு போராடிய நிலையில் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இறந்த ஒருவரின் உடல் சிதறி கிடந்தது. அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    குளித்தலை பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    குளித்தலை:

    குளித்தலை போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் சுங்ககேட் பகுதியில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தீபாவளி பண்டிகை அன்று இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடித்து காற்று மண்டலத்திற்கு கேடு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட குளித்தலை கடம்பர் கோவில் பகுதியை சேர்ந்த ராம்குமார் (வயது 22), மைலாடி பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (24) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.


    தீயணைப்பு வீரர்கள் தங்களது தீயணைப்பு நிலையங்களிலேயே தீபாவளியை கொண்டாடினர். மேலும் தீபாவளியின்போது பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையை அனைவரும் உற்சாகத்துடன் கொண்டாடினர். பண்டிகை கொண்டாட்டத்தின்போது எதிர்பாராதவிதமாக, பட்டாசு வெடிக்கையில் ஆங்காங்கே தீ விபத்து ஏற்படுவது வழக்கம்.

    இந்த தீ விபத்துகளில் ஏற்படும் சேதத்தைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தீயணைப்பு-மீட்புப்பணித் துறையினர் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் தீயணைப்பு வாகனங்களில் நீர் நிரப்பப்பட்டு தயார்நிலையில் இருந்தன.

    தமிழகத்தில் தீபாவளி தினமான நேற்று முன்தினம் 11 இடங்களில் பாட்டாசு வெடிக்கும்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்தாவது:-

    தமிழகத்தில் 346 தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் 42 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. தீபாவளியை முன்னிட்டு சென்னையில் கூடுதலாக 24 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் தயார்நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.

    தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன்

    தீபாவளியின்போது தீ விபத்து அசம்பாவிதங்களை தடுக்க கடந்த 3-ந் தேதி காலை முதலே அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் தீயணைப்பு வீரர்கள், வாகனங்கள் தயார்நிலையில் இருந்தன.

    தீயணைப்பு வீரர்கள் தங்களது தீயணைப்பு நிலையங்களிலேயே தீபாவளியை கொண்டாடினர். மேலும் தீபாவளியின்போது பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பெரும்பாலான இடங்களில் பொதுமக்களும் ஆபத்து இல்லாமலேயே பட்டாசுகள் வெடித்தனர்.

    தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று 11 இடங்களில் பட்டாசு வெடிக்கும்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 3 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைத்து பெரும் சேதத்தைத் தவிர்த்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    தீபாவளி அன்று நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக மாவட்டம் முழுவதும் 27 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    தீபாவளி பண்டிகையை யொட்டி பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

    தடை செய்யப்பட்ட பட்டாசுகள், அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடிக்க கூடாது என்றும், காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.

    இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவுப்படி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தடை செய்யப்பட்ட பட்டாசு வெடிக்கப்படுகிறதா? நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க போலீசார் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் நேற்று தீபாவளி அன்று நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக மாவட்டம் முழுவதும் 27 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கோபி பஜனை கோவில் வீதி பிரகாஷ் (25), அங்கம் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த மணிகண்டன், தமிழரசன், வசந்தகுமார், சித்தாம் பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் என 5 பேர் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடித்ததாகவும், அதிக சத்தங்கள் எழுப்பிய பட்டாசுகளை வெடித்ததாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ×