என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தீபாவளி தினத்தன்று தமிழகத்தில் 11 இடங்களில் பட்டாசு தீ விபத்து
Byமாலை மலர்6 Nov 2021 4:31 AM GMT (Updated: 6 Nov 2021 5:17 AM GMT)
தீயணைப்பு வீரர்கள் தங்களது தீயணைப்பு நிலையங்களிலேயே தீபாவளியை கொண்டாடினர். மேலும் தீபாவளியின்போது பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சென்னை:
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையை அனைவரும் உற்சாகத்துடன் கொண்டாடினர். பண்டிகை கொண்டாட்டத்தின்போது எதிர்பாராதவிதமாக, பட்டாசு வெடிக்கையில் ஆங்காங்கே தீ விபத்து ஏற்படுவது வழக்கம்.
இந்த தீ விபத்துகளில் ஏற்படும் சேதத்தைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தீயணைப்பு-மீட்புப்பணித் துறையினர் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் தீயணைப்பு வாகனங்களில் நீர் நிரப்பப்பட்டு தயார்நிலையில் இருந்தன.
தமிழகத்தில் தீபாவளி தினமான நேற்று முன்தினம் 11 இடங்களில் பாட்டாசு வெடிக்கும்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்தாவது:-
தீபாவளியின்போது தீ விபத்து அசம்பாவிதங்களை தடுக்க கடந்த 3-ந் தேதி காலை முதலே அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் தீயணைப்பு வீரர்கள், வாகனங்கள் தயார்நிலையில் இருந்தன.
தீயணைப்பு வீரர்கள் தங்களது தீயணைப்பு நிலையங்களிலேயே தீபாவளியை கொண்டாடினர். மேலும் தீபாவளியின்போது பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பெரும்பாலான இடங்களில் பொதுமக்களும் ஆபத்து இல்லாமலேயே பட்டாசுகள் வெடித்தனர்.
தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று 11 இடங்களில் பட்டாசு வெடிக்கும்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 3 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைத்து பெரும் சேதத்தைத் தவிர்த்தனர்.
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையை அனைவரும் உற்சாகத்துடன் கொண்டாடினர். பண்டிகை கொண்டாட்டத்தின்போது எதிர்பாராதவிதமாக, பட்டாசு வெடிக்கையில் ஆங்காங்கே தீ விபத்து ஏற்படுவது வழக்கம்.
இந்த தீ விபத்துகளில் ஏற்படும் சேதத்தைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தீயணைப்பு-மீட்புப்பணித் துறையினர் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் தீயணைப்பு வாகனங்களில் நீர் நிரப்பப்பட்டு தயார்நிலையில் இருந்தன.
தமிழகத்தில் தீபாவளி தினமான நேற்று முன்தினம் 11 இடங்களில் பாட்டாசு வெடிக்கும்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்தாவது:-
தமிழகத்தில் 346 தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் 42 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. தீபாவளியை முன்னிட்டு சென்னையில் கூடுதலாக 24 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் தயார்நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.
தீபாவளியின்போது தீ விபத்து அசம்பாவிதங்களை தடுக்க கடந்த 3-ந் தேதி காலை முதலே அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் தீயணைப்பு வீரர்கள், வாகனங்கள் தயார்நிலையில் இருந்தன.
தீயணைப்பு வீரர்கள் தங்களது தீயணைப்பு நிலையங்களிலேயே தீபாவளியை கொண்டாடினர். மேலும் தீபாவளியின்போது பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பெரும்பாலான இடங்களில் பொதுமக்களும் ஆபத்து இல்லாமலேயே பட்டாசுகள் வெடித்தனர்.
தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று 11 இடங்களில் பட்டாசு வெடிக்கும்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 3 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைத்து பெரும் சேதத்தைத் தவிர்த்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...பொன்னாடை, நினைவு பரிசை தவிர்க்க சசிகலா வேண்டுகோள்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X