search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே இன்று பயங்கரம் பட்டாசு குடோனில் வெடிகள் வெடித்து 3 பேர் பலி
    X

    வெடி விபத்தில் பட்டாசு குடோன் சிதறி கிடக்கும் காட்சி.

    கடலூர் அருகே இன்று பயங்கரம் பட்டாசு குடோனில் வெடிகள் வெடித்து 3 பேர் பலி

    • கடலூர் அருகே இன்று பயங்கரம் பட்டாசு குடோனில் வெடிகள் வெடித்து 3 பேர் பலியானர்.
    • தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீசார் அங்கு விரைந்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே எம்.புதூரில் நாட்டு வெடிகள் தயாரிக்கும் குடோன் உள்ளது. இன்று காலைஊழியர்கள் பணியில் இருந்தனர். இங்கு இன்று மதியம் திடீர் என குடோனில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. இந்த சத்தம் 2 கி.மீ. தூரத்துக்கு கேட்டது. அதோடு அந்த பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது போல் வீடுகள் குலுங்கியது. அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் சத்தம் வந்த திசை நோக்கி சென்றனர். அப்போது நாட்டு வெடிகள் வைத்திருந்த குடோன் இடிந்து தரைமட்டமாகி கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில்காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர். தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீசார் அங்கு விரைந்தனர்.

    விசாரணையில் இந்த குடோனில் 7பேர் வேலை பார்க்க வந்தனர். 2 பேர் மதிய உணவுக்கான சென்று விட்டனர். மீதமுள்ள 5 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். உடனே தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்தில் 3 பேர் பலியாகி இருந்தனர். மற்ற 2 பேர் உயிருக்கு போராடிய நிலையில் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இறந்த ஒருவரின் உடல் சிதறி கிடந்தது. அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×