என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோடு மாவட்டத்தில் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 27 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்5 Nov 2021 10:33 AM GMT (Updated: 5 Nov 2021 10:33 AM GMT)
தீபாவளி அன்று நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக மாவட்டம் முழுவதும் 27 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:
தீபாவளி பண்டிகையை யொட்டி பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
தடை செய்யப்பட்ட பட்டாசுகள், அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடிக்க கூடாது என்றும், காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.
இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவுப்படி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தடை செய்யப்பட்ட பட்டாசு வெடிக்கப்படுகிறதா? நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க போலீசார் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று தீபாவளி அன்று நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக மாவட்டம் முழுவதும் 27 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோபி பஜனை கோவில் வீதி பிரகாஷ் (25), அங்கம் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த மணிகண்டன், தமிழரசன், வசந்தகுமார், சித்தாம் பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் என 5 பேர் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடித்ததாகவும், அதிக சத்தங்கள் எழுப்பிய பட்டாசுகளை வெடித்ததாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை யொட்டி பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
தடை செய்யப்பட்ட பட்டாசுகள், அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடிக்க கூடாது என்றும், காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.
இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவுப்படி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தடை செய்யப்பட்ட பட்டாசு வெடிக்கப்படுகிறதா? நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க போலீசார் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று தீபாவளி அன்று நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக மாவட்டம் முழுவதும் 27 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோபி பஜனை கோவில் வீதி பிரகாஷ் (25), அங்கம் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த மணிகண்டன், தமிழரசன், வசந்தகுமார், சித்தாம் பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் என 5 பேர் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடித்ததாகவும், அதிக சத்தங்கள் எழுப்பிய பட்டாசுகளை வெடித்ததாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X