search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "8 வழிச்சாலை"

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புக்கு பாப்பிரெட்டிப்பட்டியில் 8 வழிச்சாலை எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பாப்பிரெட்டிப்பட்டி:

    சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 8 வழிச்சாலை வந்தே தீரும் என்று நேற்று பேட்டியின் போது கூறினார். அவர் கூறும் போது போக்குவரத்து அதிகமாக உள்ளதால் விபத்துகளை தடுக்க சாலை விரிவாக்கம் அவசியம் தேவை. இதற்காக சேலம்-சென்னை 8 வழி சாலை வந்தே தீரும் என்று கூறினார்.

    இதை தொடர்ந்து முதலமைச்சரின் பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் புதுப்பட்டி கிராமத்தில் 8 வழிச்சாலை எதிர்ப்புக் குழுவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    விவசாயிகள் கூறுகையில், எங்கள் உயிர் போனாலும் விவசாய நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம். அரசியல்வாதிகள் தேர்தலுக்கு முன்பு ஒரு சொல்லும், தேர்தலுக்கு பின்பு ஒரு சொல்லும் மாறி, மாறி பேசுகின்றனர். எனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.

    இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    இதைத்தொடர்ந்து அவர்கள் சிறிது நேரத்தில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    கேரளாவில் வாக்களிக்க வந்த முதியவர்கள் உள்பட 8 பேர் திடீரென இறந்தனர். மேலும் 4 அதிகாரிகள் மயக்கம் அடைந்தனர். #LokSabhaElections2019
    திருவனந்தபுரம்:

    நாடு முழுவதும் 3-வது கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது. அந்த வகையில் கேரளாவில் நேற்று நடந்த தேர்தலில் அந்த மாநில மக்கள் ஆர்வத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்.

    கோட்டயம் மாவட்டம் வைக்கம் அருகே உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஓட்டு போட வந்த ரோசம்மா (வயது 84) என்ற மூதாட்டி திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

    இதேபோல் கண்டியூர் அருகே பிரபாகரன் (74), காசர்கோடு அருகே பாபுராஜ் (55), தளிபரம்பு என்ற இடத்தில் வேணுகோபால மாரர் (57), கொல்லம் அருகே பர்ஷன் (63), காலடி என்ற இடத்தில் தெரசாகுட்டி (87), தலசேரியில் முஸ்தபா (52), ரன்னி என்ற இடத்தில் சக்கே மேத்யூ (66) ஆகியோர் ஓட்டு போட வந்த இடத்தில் வயது மூப்பு, உடல்நிலை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திடீரென மயங்கி விழுந்து இறந்தனர்.

    இதனிடையே சாளக்குடியில் உள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்த 2 தேர்தல் அதிகாரிகள் திடீரென மயங்கி விழுந்தனர். இதேபோல் ஏனாதிமங்கலம், பிரலசேரி ஆகிய இடங்களில் தேர்தல் பணியில் இருந்த 2 அதிகாரிகளும் மயங்கினர். உடனடியாக அவர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. #LokSabhaElections2019
    பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இன்று பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். #8killed #coachoverturns
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள இஸ்லாம்கோட் நகரில் இருந்து கராச்சி நோக்கி ஒரு சொகுசு பஸ் சென்று கொண்டிருந்தது. இன்று காலை படின் என்னுமிடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 50 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகாமையில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சுமார் 10 பேர் நிலைமை மோசமாக உள்ளதால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    பாகிஸ்தானில் ஆண்டுதோறும் சுமார் 9 ஆயிரம் சாலை விபத்துகளில் சுமார் 5 ஆயிரம் பேர் பலியாவது தொடர்கதையாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #8killed #coachoverturns 
    பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் திருமணத்துக்கு சென்றவர்களை ஏற்றிவந்த வாகனம் வெள்ளத்தில் அடித்துச் சென்ற விபத்தில் இரு குழந்தைகள் ஆறு பெண்கள் என 8 பேர் உயிரிழந்தனர். #8killed #Pakistanflood
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் சில நாட்களாக கனமழைபெய்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டு எல்லையை ஒட்டியுள்ள வசிரிஸ்தான் மாவட்டத்தில் சிலர் ஒரு வாகனத்தில் உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றனர்.

    வானா என்ற இடத்தின் வழியாக சென்றபோது சாலையின் குறுக்கே பாய்ந்த வெள்ளத்தில் அந்த வாகனம் அடித்து சென்றது. அதில் சென்ற பலர் நீரில் மூழ்கி தத்தளித்தனர். அருகாமையில் உள்ளவர்கள் அளித்த தகவலை அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் இரு குழந்தைகள் மற்றும் ஆறு பெண்களின் பிரேதங்களை கைப்பற்றினர்.



    காணாமல் போன 6 குழந்தைகளை மீட்க தேடுதல் நடைபெற்று வருகிறது. #8killed #Pakistanflood #Pakistanflashflood
    வங்கதேசத்தில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். #BangladeshAccident
    டாக்கா:

    வங்கதேசத்தில் சாட்டோகிராம்- காக்ஸ் பஜார் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை, பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு மினி பஸ் சென்றுகொண்டிருந்தது. லோககாரா உபாசிலா என்ற இடத்தில் சென்றபோது, மினி பஸ் மீது எதிரே வந்த மற்றொரு பஸ் பயங்கரமாக மோதியது. இதில் மினி பஸ்சின் முன்பகுதி கடுமையாக சேதம் அடைந்தது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் மினி பஸ்சில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 25 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். #BangladeshAccident
    கர்நாடக மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 20 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 8 தொகுதிகளிலும் போட்டியிட முடிவானது. #ParliamentElection #Congress #JDS
    பெங்களூரு:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி முதல் தொடங்கி 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் 18, 23 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    இதையடுத்து, மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் அனைத்து மாநிலங்களிலும் கூட்டணி உடன்பாடு மற்றும் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக களமிறங்கி உள்ள்ன.

    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 20 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 8 தொகுதிகளிலும் போட்டியிட இறுதிச்சுற்று பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடையே இன்று கையொப்பமானது. #ParliamentElection #Congress #JDS
    20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 8 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சுரேஷ் ரெய்னா பெற்றார். #SureshRaina #T20Cricket
    புதுடெல்லி:

    சையத் முஸ்தாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ‘இ’ பிரிவில் இடம் பிடித்துள்ள உத்தரபிரதேசம்-புதுச்சேரி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த உத்தரபிரதேச அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய புதுச்சேரி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 102 ரன்களே எடுத்தது. இதனால் உத்தரபிரதேச அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் உத்தரபிரதேச அணிக்காக விளையாடிய இந்திய சீனியர் வீரர் சுரேஷ் ரெய்னா 18 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 11 ரன்னை எட்டிய போது சுரேஷ் ரெய்னா 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் (சர்வதேச, உள்ளூர் போட்டிகள் எல்லாம் சேர்த்து) 8 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். 300-வது 20 ஓவர் போட்டியில் ஆடிய சுரேஷ் ரெய்னா 8,001 ரன்கள் குவித்துள்ளார். உலக அளவில் 20 ஓவர் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா 6-வது இடத்தில் உள்ளார்.

    வெஸ்ட்இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் 12,298 ரன்னும் (369 போட்டி), நியூசிலாந்து வீரர் பிரன்டன் மெக்கல்லம் 9,922 ரன்னும் (370 போட்டி), வெஸ்ட்இண்டீஸ் வீரர் பொல்லார்ட் 8,838 ரன்னும் (451 போட்டி), பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 8,603 ரன்னும் (340 போட்டி), ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 8,111 ரன்னும் (259 போட்டி) எடுத்து முறையே முதல் 5 இடங்களில் இருக்கிறார்கள். இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி 251 போட்டிகளில் விளையாடி 7,883 ரன்கள் குவித்து 7-வது இடத்தில் உள்ளார்.

    டெல்லியில் நடந்த சர்வீசஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் ஆடிய பரோடா அணி 18.2 ஓவர்களில் 75 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆடிய சர்வீசஸ் அணி 16.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சூரத்தில் நடந்த ‘பி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு-குஜராத் அணிகள் மோதின. முதலில் ஆடிய தமிழ்நாடு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சதுர்வேத் 34 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 33 ரன்னும், ஜெகதீசன் 29 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். கேப்டன் ஆர்.அஸ்வின் 1 ரன்னில் ‘அவுட்’ ஆனார். பின்னர் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய குஜராத் அணி 19.5 ஓவர்களில் 124 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் தமிழக அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்தது. 3-வது ஆட்டத்தில் ஆடிய தமிழக அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.

    இந்தூரில் நடந்த கோவா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காயத்தில் இருந்து மீண்டு வந்த மும்பை வீரர் பிரித்வி ஷா 47 பந்துகளில் 5 பவுண்டரி, 7 சிக்சருடன் 71 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சூரத்தில் நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விதர்பா அணி 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தானுக்காக ஆடிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 20 ஓவர் போட்டியில் அவர் 5 விக்கெட்டுகள் சாய்த்தது இதுவே முதல்முறையாகும்.
    மத்திய அரசு கொண்டு வந்துள்ள 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து மாநில அரசு பரிசீலனை செய்யும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan #PublicExam
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் 174 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.

    விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டு இலவச ஆடுகள் வழங்கினர்.

    பிறகு அமைச்சர் செங்கோட்டையன் கோபி கரட்டூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் எம்.ஜி.ஆர். நுழைவு வாயிலையும் பார்வையிட்டார். அதில் காமராஜர் பெயர் பொறித்த கல்வெட்டையும் பார்வையிட்டார்.

    அதன் பிறகு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:

    கோபி நகராட்சி நுழைவு அலங்கார வளைவில் காமராஜரின் பெயர் பொறித்த கல்வெட்டு இடம்பெறும். காமராஜருக்கு புகழ்சேர்க்கும் அரசாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    காமராஜரின் பிறந்தநாளில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. தேசிய தலைவர்கள் அத்தனை பேருக்கும் புகழ் சேர்க்கின்ற அரசாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    சுற்றுச்சூழல் துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தூய்மை பாரதம் இந்தியா என்றாலும் கூட தமிழகம் தான் பாலித்தீன் இல்லாத மாநிலமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பள்ளிக் கல்வித்துறையில் வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் 1500 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

    மாணவ- மாணவிகளின் வருகை பதிவேடு பயோமெட்ரிக் முறை சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது அரசின் நிதிநிலையை பொறுத்து படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்.

    பள்ளிகளுக்கு தனியாக துப்புரவு தொழிலாளர்களை அமர்த்த முடியாத சூழல் உள்ளது. இது குறித்து அரசு பரிசீலித்து முடிவு எடுக்கும்.



    மத்திய அரசு கொண்டு வந்துள்ள 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து மாநில அரசு பரிசீலனை செய்யும். பொறுத்திருந்து பாருங்கள். நல்ல பதில் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterSengottaiyan #PublicExam

    சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கியாஸ் கசிந்த் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #apartmentbuildinggasleak
    பெய்ஜிங்:

    சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்வான் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இன்று அதிகாலை இந்த குடியிருப்பின் நான்காவது மாடியில் சமையல் எரிவாயு கசிந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்றும், 3 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்து குறித்து முதல் கட்ட விசாரணை நடந்து வருகிறது.
    #apartmentbuildinggasleak
    ஆப்கானிஸ்தான் நாட்டின் நங்கர்ஹார் மாகாணத்தில் ராணுவத்தினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர். #ISMilitantsKilled
    காபுல்:

    ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சில முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கு பொதுமக்களை கொடுமைப்படுத்துவதுடன் அங்கிருந்தவாறு பிறபகுதிகளில் வன்முறை தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களை கொத்துக் கொத்தாக கொன்று வருகின்றனர்.
     
    இந்த பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டும் பணியில் உள்நாட்டு ராணுவ வீரர்களுடன் அமெரிக்கப் படையினரும் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் பல பகுதிகளில் சுமார் ஆயிரத்து ஐநூறு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் ஆப்கன் ராணுவத்தினர் இன்று வான்வெளி தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். #ISMilitantsKilled
    உத்தரகாண்டில் கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #UttarakhandAccident
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தின் பாராகோட் பகுதியை சேர்ந்த ஒருவரது உடலை தகனம் செய்வதற்காக காரில் எடுத்துச் சென்றனர். அங்குள்ள லோஹா காட் பகுதியில் கார் சென்றபோது திடீரென நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 6 பேரும், மருத்துவமனையில் 2 பேரும் என மொத்தம் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    மேலும், 12 பேர் காயமடைந்தனர்.

    தகவலறிந்த மீட்புக்குழு அங்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டது, பள்ளத்தில் விழுந்தவர்களை கயிறுகள் கட்டி மீட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். #UttarakhandAccident
    சென்னை-தூத்துக்குடி இடையே ரூ.13,200 கோடியில் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
    சென்னை:

    சென்னை-தூத்துக்குடி துறைமுகங்களை இணைக்கும் வகையில், சென்னை-தூத்துக்குடி இடையே புதிதாக 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டமானது சுமார் ரூ.13,200 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

    இது தொடர்பாக, சமீபத்தில் தமிழக அரசுடன் மத்திய சாலை போக்குவரத்து துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தமிழக அரசும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது. தற்போது, 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சென்னை-தூத்துக்குடி இடையே நிறைவேற்றப்படும் இந்த திட்டத்தில், சென்னையில் இருந்து விழுப்புரம் வரை 10 வழிச்சாலையாக அமைக்கப்பட இருக்கிறது. விழுப்புரத்தில் இருந்து தஞ்சாவூர், திருச்சி வரை 8 வழிச்சாலையாக கொண்டுவரப்பட இருக்கிறது. தஞ்சாவூர், திருச்சியில் இருந்து சிவகங்கை வழியாக தூத்துக்குடிக்கு 6 வழிச்சாலை அமைய இருக்கிறது. அதாவது, சென்னையில் இருந்து பண்ருட்டி, விருத்தாசலம், அரியலூர், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, தூத்துக்குடி என இந்த புதிய வழித்தடம் அமைய உள்ளது.

    இந்த புதிய சாலை அமைவதன் மூலம் சுமார் 100 கிலோ மீட்டர் அளவுக்கு பயண தூரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, சென்னை-தூத்துக்குடி இடையே தூரம் 600 கிலோ மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய சாலைக்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்ததும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெறப்பட்டு, சாலை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கும்.

    இந்த திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக, மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் 2 முறை முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியிருக்கிறார். இனி, நிலப்பரப்பை ஆய்வு செய்வது, எந்த வழியாக சாலையை அமைப்பது, எவ்வளவு இடத்தை கையகப்படுத்த வேண்டும் என்பது போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற இருக்கின்றன. 
    ×