search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "election officer"

    அரசியல் கட்சி தலைவர்களை இழிவுப்படுத்தும் படங்களுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது எனவும் மீறினால் கடும் தண்டனை விதிக்கப்படும் எனவும் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். #ParliamentaryElection
    ஊத்துக்கோட்டை:

    பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சியினருக்கு தேர்தல் நடத்தை முறைகளை பற்றி விவரிக்கும் சிறப்பு கூட்டம் ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்றது.

    தாசில்தார் வில்சன் தலைமை தாங்கினார். உதவி தேர்தல் அலுவலர் பார்வதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    தேர்தல் பிரச்சாரத்தில் பிற கட்சிகள் மீது விமர்சனம் செய்யும் போது அக்கட்சியின் கொள்கைகள், செயல் திட்டங்கள், கடந்த கால செயல்பாடுகள், நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பான விமர்சனங்கள் மட்டும் இருக்க வேண்டும்.

    ஆனால் பிறகட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் சொந்த வாழ்கை பற்றிய விமர்சனங்கள், நிரூபிக்கப்படாத குற்றசாட்டுகள், மற்றும் முறைகேடுகள் குறித்த விமர்சனம் கண்டிப்பாக செய்யக்கூடாது.

    மேலும் அரசியல் கட்சி தலைவர்களை இழிவுப்படுத்தும் படங்களுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது. மீறினால் கடும் தண்டனை விதிக்கப்படும். வாக்குகளை பெறுவதற்காக இன மற்றும் மத உணர்வுகளை தூண்டும் வகையில் வேண்டுகோள்கள் விடுக்கப்படக்கூடாது.

    தேர்தல் பிரச்சார களமாக மசூதி, சர்ச் மற்றும் கோவில் போன்ற வழிபாடு தலங்கள் பயன்படுத்தக்கூடாது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் கொடுத்தல், வாக்காளர்களை அச்சுறுத்தல், வாக்காளர் ஆள்மாற்றம் செய்தல் போன்ற குற்றசெயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படையில் உள்ள ஆயுதம் தாங்கிய போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.

    இவ்வாறு உதவி தேர்தல் அலுவலர் பார்வதி தெரிவித்தார்.

    இதில் துணை வட்டாட்சியர் தாமோதரன், வருவாய் ஆய்வாளர் ரவி, இன்ஸ்பெக்டர்கள் அனுமந்த், மதியரசன், பேரூராட்சி செயல் அலுவலர் ரவீந்திரபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். #ParliamentaryElection
    கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உரிய அனுமதியின்றி கலந்துரையாடல் நடத்தியது தொடர்பாக பள்ளிக்கு விளக்கம் கேட்டு தேர்தல் அதிகாரி நோட்டீசு அனுப்பி உள்ளார். #LSPolls #KamalHaasan
    கோவை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த 24-ந் தேதி கோவையில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, வேட்பாளர் களை அறிமு கம் செய்து வைத்தார்.

    முன்னதாக சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், டாக்டர்களுடன் கலந்துரையாடினார். தகவல் அறிந்து சிங்காநல்லூர் தொகுதி பறக்கும் படை அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, உரிய அனுமதி இல்லாமல் இதுபோன்ற கூட்டம் நடத்தக் கூடாது என்று அதிகாரிகள் கூறினர். இதைத் தொடர்ந்து கலந்துரையாடல் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

    இந்நிலையில், உரிய அனுமதியின்றி கூட்டம் நடத்த அனுமதி வழங்கியது ஏன்? என விளக்கம் கேட்டு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கலெக்டர் ராஜாமணி, சிங்கா நல்லூர் தொகுதி தேர்தல் உதவி அலுவலர் பிரபாகரனுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் பள்ளிக்கு விளக்கம் கேட்டு உதவி தேர்தல் அலுவலர் பிரபாகரன் நோட்டீசு அனுப்பி உள்ளார்.

    அதில், உரிய அனுமதியின்றி கூட்டம் நடத்தியது தொடர்பாக 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. விளக்கத்தில் திருப்தி இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #LSPolls #KamalHaasan

    ‘சென்னை மற்றும் நாகர்கோவில் கல்லூரிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி கலந்து கொண்டது தேர்தல் நடத்தை விதி மீறல் ஆகாது’ என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார். #SatyabrataSahoo #RahulGandhi
    சென்னை:

    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னையில் தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் தேதியன்று மதுரை சித்திரைத் திருவிழா நடப்பதால் ஏற்படும் சிக்கல் குறித்து மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது. கிடைத்த உடன் தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி அனுப்பி வைக்கப்படும். பின்னர், ஐகோர்ட்டு மதுரை கிளைக்கும் அளிக்கப்படும். அதேபோல் தமிழகத்தில் உள்ள 3 சட்டசபை தொகுதிகளின் வழக்கு விவரங்கள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (மாவட்ட கலெக்டர்கள்) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. தி.மு.க. சார்பில் உளவுப் பிரிவு அதிகாரிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என்று கோரி புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த மனு குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்கும்.

    பாராளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலுக்காக இதுவரை 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் வீடியோ படம் எடுத்து கண்காணிக்கும் குழு ஒன்று மற்றும் வீடியோ படங்களை கவனித்து நடவடிக்கை எடுக்கும் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 87 லட்சத்து 99 ஆயிரத்து 500 இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வெள்ளி குங்கும சிமிள்கள், பரிசு பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதிகப்படியான பணம் பரிவர்த்தனை நடைபெற்றால் தகவல் தெரிவிக்க அனைத்து வங்கிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ரூ.10 லட்சத்து மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் அதுகுறித்து வருமானவரித்துறைக்கு முதலில் தகவல் அளிக்கப்படும்.

    தனி நபர் ரூ.50 ஆயிரம் வரையில் கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை. ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக யார் கொண்டு சென்றாலும் அதற்கு உரிய ஆவணம் இருக்க வேண்டும். இல்லை என்றால் பணம் பறிமுதல் செய்யப்படும். நட்சத்திர பேச்சாளர் ரூ.1 லட்சம் வரை வைத்துக் கொள்ளலாம்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் 3 ஆயிரத்து 479 ஒப்படைக்கப்பட்டுள்ளது. உரிமத்தை நீடிப்பு செய்யாத 6 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 4 துப்பாக்கிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 1,312 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 321 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னை மற்றும் நாகர்கோவிலில் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது, தேர்தல் நடத்தை விதி முறைகள் மீறிய செயலா? என்று ஆய்வு செய்யப்பட்டது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தும்போது தேர்தல் ஆணையம் விதித்துள்ள 5 கட்டுப்பாடுகளை கணக்கில் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில், ராகுல் கலந்து கொண்டதில் தேர்தல் நடத்தை விதிமீறல் இல்லை. முன் அனுமதி பெற்று நடத்துவதில் எந்த தவறும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.  #SatyabrataSahoo #RahulGandhi
    மதுரை சித்திரை திருவிழாவை கருத்தில் கொண்டு தேர்தல் தேதியை மாற்ற முடியுமா? என்பது தொடர்பாக 2 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை கலெக்டருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். #Parliamentelection #SatyabrataSahoo
    சென்னை:

    தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலுக்கான மனு தாக்கல் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. இந்த தேர்தல் நடவடிக்கை நாட்களில்தான் தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய திருவிழாக்கள் நடைபெற உள்ளன.

    ஏப்ரல் 6-ந்தேதி தெலுங்கு புத்தாண்டு பிறக்கிறது. ஏப்ரல் 14-ந்தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. ஏப்ரல் 17-ந்தேதி மகாவீர் ஜெயந்தி வருகிறது.

    தேர்தலுக்கு மறுநாளான ஏப்ரல் 19-ந்தேதி புனித வெள்ளி தினம் கொண்டாடப்பட உள்ளது. ஓட்டுப்பதிவு நடக்கும் தினத்தன்று மதுரையில் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா நடைபெறுகிறது. ஓட்டுப்பதிவு நடக்கும் 18-ந்தேதி சித்திரை திருவிழா தேரோட்டம் நடக்க உள்ளது.

    அடுத்தடுத்து வரும் இத்தகைய தொடர் விழாக்கள் காரணமாக 5 நாட்கள் விடுமுறை வர உள்ளது. ஏப்ரல் 17-ந்தேதி (புதன்கிழமை) மகாவீர் ஜெயந்தி விடுமுறை தினமாகும். மறுநாள் ஓட்டுப்பதிவு, இதற்கு அடுத்த நாள் புனித வெள்ளிக்கு விடுமுறை தினமாகும்.

    அதன் பிறகு சனி, ஞாயிறு வருவதால் மொத்தம் 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்க உள்ளனர். எனவே இந்த சமயத்தில் வாக்காளர்கள் பலர் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. இது வாக்குப்பதிவை கணிசமாக பாதிக்கக்கூடும் என்ற அச்சம் அனைத்துக் கட்சி தலைவர்களிடமும் எழுந்துள்ளது.

    குறிப்பாக மதுரையில் நடக்கும் உலக புகழ்பெற்ற சித்திரை திருவிழா ஓட்டுப்பதிவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு மதுரை சித்திரை விழா ஏப்ரல் 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த திருவிழா ஏப்ரல் 8-ந்தேதி முதல் ஏப்ரல் 22-ந்தேதி வரை நடைபெறும் பிரமாண்ட திருவிழாவாகும். இந்த திருவிழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் மதுரை சென்று பங்கேற்பார்கள்.

    குறிப்பாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி மிக சிறப்பாக மதுரையில் நடத்தப்படும். அழகர்கோவிலில் இருந்து புறப்படும் கள்ளழகர் மண்டப சேவைகளை ஏற்றுக் கொண்டு ஏப்ரல் 18-ந்தேதி மதுரைக்குள் வருவார்.

    மதுரை தல்லாகுளத்தில் 18-ந்தேதி கள்ளழகர் எதிர்சேவை நடைபெற உள்ளது. அன்றைய தினம் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா தேரோட்டமும் நடைபெற உள்ளது.

    மறுநாள் (19-ந்தேதி) கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவார். இந்த 2 நாட்களும் மதுரை விழாக்கோலமாக இருக்கும்.

    அன்றைய தினம் (18-ந்தேதி) பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் தென் மாவட்டங்களில் வாக்காளர்கள் தங்கள் பகுதி வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கை பதிவு செய்வதில் இடையூறு ஏற்படலாம் என்று பல்வேறு கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். மதுரை சித்திரை திருவிழாவை கருத்தில் கொண்டு தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம், தமிழ்நாட்டில் தேர்தல் தேதி மாற்றப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று மாலைமலர் நிருபர் கேட்டார். அதற்கு சத்யபிரத சாகு கூறியதாவது:-

    தேர்தல் குறித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டபோது ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களுக்கு தேர்வுகள் எப்போது நடைபெறுகிறது. வேறு ஏதேனும் விழாக்கள் மாவட்ட அளவில் வருகிறதா? என்பது பற்றி ஏற்கனவே கருத்து கேட்கப்பட்டது. அதை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரியும் (கலெக்டர்) தலைமை தேர்தல் அதிகாரிக்கு அறிக்கை அளித்தனர்.

    அந்த வகையில் மதுரையில் சித்திரை திருவிழா 18, 19-ந்தேதிகளில் நடைபெறுவது பற்றி அந்த மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் ஏற்கனவே தெரிவித்துள்ளாரா? என்பது பற்றி எங்கள் கவனத்துக்கு இன்னும் வரவில்லை. அதுபற்றி நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.

    இதற்கிடையே மதுரை மாவட்ட கலெக்டரிடம் சித்திரை திருவிழா குறித்து கேட்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு நடக்கும் ஏப்ரல் 18-ந்தேதி சித்திரை திருவிழாவும் வருவதால் ஓட்டுப்பதிவுக்கு அதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்று கேட்டு இருக்கிறோம்.

    2 நாட்களில் மதுரை கலெக்டர் இது தொடர்பாக எங்களுக்கு அறிக்கை தர உள்ளார். அதன் பிறகு இது தொடர்பான வி‌ஷயத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு செய்யப்படும்.

    தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் கேட்டுக் கொண்டன. மேலும் கோடை காலம் வருவதால் தமிழ்நாட்டில் சீக்கிரமாகவே பாராளுமன்ற தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.

    இதன் அடிப்படையில் தான் தலைமை தேர்தல் ஆணையம் முடிவு எடுத்து தேர்தல் அட்டவணையை அறிவித்துள்ளது. எனவே குறிப்பிட்ட ஒரு தொகுதிக்காக தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடக்கும் தேர்தலை இன்னொரு நாளுக்கு மாற்ற முடியுமா? என்பது தெரியவில்லை.

    கலெக்டர் தரும் அறிக்கையை பொறுத்தே இதுபற்றி இறுதி முடிவு தெரிய வரும்.

    இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். #Parliamentelection #SatyabrataSahoo

    அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி அளவிலான முகவர்களின் ஒத்துழைப்பை பெறுவதற்காக அரசியல் கட்சி பிரதிநிதிகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதசாகு அழைத்து பேசினார். #ParliamentElection #AllPartyMembers
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

    இதற்கான பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி அளவிலான முகவர்களின் ஒத்துழைப்பை பெறுவதற்காக அரசியல் கட்சி பிரதிநிதிகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதசாகு அழைத்து பேசினார்.

    தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-


    அ.தி.மு.க.- துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், இன்பதுரை எம்.எல்.ஏ.

    தி.மு.க. - வக்கீல் கிரி ராஜன்.

    காங்கிரஸ்- தாமோதரன், பொன்.கிருஷ்ணமூர்த்தி.

    பாரதிய ஜனதா- சவுந்தர ராஜன்.

    தேசியவாத காங்கிரஸ்- சாரதி, அபுபக்கர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு- ஆறுமுகநயினார், உதய குமார்.

    இந்திய கம்யூனிஸ்டு- ஏழுமலை, பெரியசாமி.

    பகுஜன் சமாஜ்- பாரதிதாசன், மாணிக்கராஜ்.

    சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை அரசியல் கட்சியினரும் வழங்கலாம் என்றும் கூட்டத்தில் தேர்தல் அதிகாரி கேட்டுக்கொண்டார்.

    இந்த கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பல்வேறு கேள்விகளையும் தேர்தல் தொடர்பாக கேட்டனர். #ParliamentElection #AllPartyMembers
    கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கில் தேர்தல் அதிகாரி அறிக்கை தாக்கல் செய்யும்படி ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #MadrasHCBench
    மதுரை:

    அண்மையில் மாநிலம் முழுவதும் கூட்டுறவு சங்கத்தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. மேலும் பல இடங்களில் கூட்டுறவு சங்கத்தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன.

    தமிழகத்தில் நடந்த கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மதுரை ஐகோர்ட்டில் பலர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த வழக்கு இன்று (13-ந்தேதி) நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.



    அப்போது தமிழகத்தில் எத்தனை கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது? என்பது குறித்தும், வெளிப்படையாக தேர்தல் நடத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? எத்தனை பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்? என்பது குறித்தும் வருகிற 19-ந்தேதி கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் கூட்டுறவு சங்கத்தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் செய்வதை டிஜிட்டல் முறையாக்கவும், அதனை வீடியோ பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். #MadrasHCBench
    பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பது தெரிவிக்கும் கருவி பயன் படுத்தப்படும் என்று தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். #Parliamentelection #ElectionOfficer

    சென்னை:

    அடுத்த ஆண்டு மே மாதத்துக்கு முன்னதாக பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து மாநில சட்ட சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாமா என்று அரசியல் கட்சிகளிடம் மத்திய அரசு கருத்து கேட்டது.

    இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தல் குறித்து கிண்டியில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதாசாகு கலந்துகொண்டு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், துணை தேர்தல் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

    தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவியை இயக்க பற்றிய கருத்தரங்கம் நடந்தது. இதில் இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர் சவுமியாஜித் கோஷ், தேசிய அளவிலான தலைமை பயிற்சியாளர் என்.டி.பர்மர், பெங்களூர் பி.எச்.இ.எல். தொழில்நுட்ப வல்லுனர்கள் பயிற்சி அளித்தனர்.

    பின்னர் தமிழக தலைமை அதிகாரி சத்தியபிரதாசாகு நிரூபர்களிடம் கூறியதாவது:-

    வாக்குப் பதிவின்போது பயன் படுத்தக் கூடிய மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களையும் சோதனை செய்யப்படும் பணிகள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையிலேயே நடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விதிமுறை கொடுத்துள்ளது.


    இதுபோன்ற பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிகள் குறித்து கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதில் தேர்தல் அதிகாரிகளான 32 மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்றனர்.

    திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளோம். ஆணையம் தேதியை அறிவித்த பின் தேர்தல் நடத்தப்படும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பது தெரிவிக்கும் கருவி பயன் படுத்தப்படும். அதற்கான பயிற்சி தேர்தல் அதிகாரிகளுக்கு அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    ×