என் மலர்
நீங்கள் தேடியது "All party members"
- தி.மு.க.வின் கனிமொழி, காங்கிரசின் சசிதரூர் உள்ளிட்ட அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்பியது.
- வெளிநாடு சென்ற அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினர்.
புதுடெல்லி:
காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பதிலடியாக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் தவறான தகவலை பரப்பி வருவதை தடுத்திட மத்திய அரசு தி.மு.க,வின் கனிமொழி, காங்.கிரசின் சசிதரூர் உள்ளிட்ட அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்பி வைத்தது.
மத்திய அரசு அமைத்த 7 குழுக்களில் 4 குழுக்களில் பா.ஜ., ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சிவசேனா எம்.பி.,க்கள் இடம்பெற்றனர். மற்ற 3 குழுக்களில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ், திமுக, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் இடம்பெற்றனர்.
உலக நாடுகளுக்கு சென்று திரும்பிய எம்.பி.க்கள் குழுவினரை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்களின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், வெளிநாடு சென்று திரும்பிய அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழுவினர் டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். உலக நாடுகளுக்குச் சென்றபோது ஏற்பட்ட அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்கான பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி அளவிலான முகவர்களின் ஒத்துழைப்பை பெறுவதற்காக அரசியல் கட்சி பிரதிநிதிகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதசாகு அழைத்து பேசினார்.

தி.மு.க. - வக்கீல் கிரி ராஜன்.
காங்கிரஸ்- தாமோதரன், பொன்.கிருஷ்ணமூர்த்தி.
பாரதிய ஜனதா- சவுந்தர ராஜன்.
தேசியவாத காங்கிரஸ்- சாரதி, அபுபக்கர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு- ஆறுமுகநயினார், உதய குமார்.
இந்திய கம்யூனிஸ்டு- ஏழுமலை, பெரியசாமி.
பகுஜன் சமாஜ்- பாரதிதாசன், மாணிக்கராஜ்.
சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை அரசியல் கட்சியினரும் வழங்கலாம் என்றும் கூட்டத்தில் தேர்தல் அதிகாரி கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பல்வேறு கேள்விகளையும் தேர்தல் தொடர்பாக கேட்டனர். #ParliamentElection #AllPartyMembers






