search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai Collector"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காக கீழக்கரை கிராமத்தில் 44 கோடி ரூபாய் செலவில் 66 ஏக்கரில் மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது.

    மதுரை:

    ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக்குப்பிறகு கலெக்டர் சங்கீதா கூறியதாவது:

    * அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காக கீழக்கரை கிராமத்தில் 44 கோடி ரூபாய் செலவில் 66 ஏக்கரில் மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது.

    * அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அடுத்த ஆண்டு வழக்கமான இடத்திலேயே நடைபெறும் என அறிவித்துள்ளார்.

    2024-ம் ஆண்டு அலங்காநல்லூர் அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கமான இடத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 30 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்துவது கட்டாயம் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    • சிசிடிவி பொருத்தாவிட்டால் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் சிறார்களுக்கான அதிகளவு போதை மாத்திரை மற்றும் போதை டானிக் பயன்படுத்துவதால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மதுரை மாவட்ட குழந்தைகள் நல வாரியம் சார்பில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் சிறார்கள் போதைக்கு அடிமையாகுவதை கட்டுப்படுத்த வேண்டும். போதை மாத்திரை விற்பனை செய்யும் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.

    இந்நிலையில், மதுரையில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்துவது கட்டாயம் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    சிசிடிவி பொருத்தாவிட்டால் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • குறைதீர் கூட்டத்துக்கு அதிகாரிகள் குறித்த நேரத்தில் வரவில்லை.
    • இதனால் மாவட்ட கலெக்டர் அவர்களை வெளியே நிற்க வைத்தார்.

    மதுரை:

    தமிழகம் முழுவதும் திங்கட்கிழமைகளில் கலெக்டர் அலுவலகங்களில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நீண்ட காலமாக பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காதவர்கள் கலெக்டரை நேரடியாக சென்று சந்தித்து மனு அளித்து தீர்வு கண்டு வருகின்றனர்.

    இந்தக் கூட்டங்களில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனு எந்த துறையைச் சார்ந்தது என்று கலெக்டர் பார்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வசம் அந்த மனு அளிக்கப்பட்டு தீர்வு காண அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    அந்த வகையில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தின்போது அதிக அளவிலான மக்கள் மனு கொடுப்பதற்காக வந்திருந்த போது தள்ளு முள்ளு ஏற்பட்டு பிரச்சனை உருவானது.

    இதற்கு அதிகாரிகள் தாமதமாக வந்ததே மக்களின் கூட்டம் அதிகரிக்க காரணமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்நிலையில், இன்று மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வைத்து மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது.

    இதில் பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் மூலம் பெறப்பட்ட மனுக்களை அந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து தீர்வு காணுவதற்காக இளைஞர்கள் முதல் வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் என நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்திருந்தனர். இதற்காக வரவேண்டிய அதிகாரிகள் காலை 9.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வர வேண்டும்.

    ஆனால் பெரும்பாலான அதிகாரிகள் காலை 10 மணி மற்றும் அதற்கு மேற்பட்ட நேரத்திலும் பணிக்கு வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கலெக்டர் சங்கீதா, குறை தீர்க்கும் கூட்ட அரங்கிற்குள் உள்ளே வரக்கூடாது என அதிரடியாக உத்தரவிட்டார்.

    இதனால் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் அரங்கிற்குள் அதிகாரிகள் உள்ளே வர விடாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, தாமதமாக வந்த அதிகாரிகளை வெளியே நிற்க வைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கையை பொதுமக்கள் பெரிதும் வரவேற்று பாராட்டினர்.

    • கல்லூரி தாளாளர் அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதாகவும், அப்போது அவர் நிர்வாண நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
    • இதுபற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, சம்பந்தபட்ட கல்லூரி மாணவிகளை இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் தனியார் நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி தாளாளராக டாஸ்வின் ஜான் கிரேஸ் (வயது 48)என்பவர் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதாகவும், அப்போது அவர் நிர்வாண நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.இதுபற்றி சம்பந்தப்பட்ட மாணவி, சக மாணவிகளிடம் தெரிவித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் கல்லூரி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போலீசார் பள்ளி தாளாளரை கைது செய்தனர்.

    பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிற 24-ந்தேதி வரை காவலில் வைக்கப்பட்டார்.இதைத்தொடர்ந்து கல்லூரி மூடப்பட்டது. மேலும் கல்லூரி விடுதி செயல்படாததால் அங்கு தங்கியிருக்கும் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுபற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, சம்பந்தபட்ட கல்லூரி மாணவிகளை இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தினார். அப்போது கல்லூரி மாணவிகள் கல்லூரி மூடப்பட்டதால் தங்கள் படிப்பு பாதிக்கப்படக்கூடாது. கல்லூரி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வேறு கல்லூரிகளில் இடம் இருந்தால் எங்களை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

    தொடர்ந்து பேசிய கலெக்டர் மேகநாத ரெட்டி, விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு வருவாய் துறை மூலம் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.அவர்கள் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். தற்போது பள்ளி தாளாளர் ,வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அட்டை மற்றும் தனித்துவ அடையாள அட்டை, ஆதார் அட்டை, வருமானச்சான்று, மதிப்பெண் சான்று ஆகியவற்றின் நகலுடன் நேரடியாக விண்ணப்பங்கள் வருகிற 30- தேதிக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.
    மதுரை:

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத்திறனாளிகள் 2021-22-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

    இதை பெறுவதற்கு 2021-22-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறையின் வாயிலாக 9-ம் வகுப்பும், அதற்கு மேல் பட்டப்படிப்பு மற்றும் உயர்கல்வி படித்தவர்களுக்கு ரூ.7 ஆயிரம் முதல் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு www.scholarship.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அட்டை மற்றும் தனித்துவ அடையாள அட்டை, ஆதார் அட்டை, வருமானச்சான்று, மதிப்பெண் சான்று ஆகியவற்றின் நகலுடன் நேரடியாக விண்ணப்பங்கள் வருகிற 30- தேதிக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண். 0452-2529695-ல் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    மதுரை சித்திரை திருவிழாவை கருத்தில் கொண்டு தேர்தல் தேதியை மாற்ற முடியுமா? என்பது தொடர்பாக 2 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை கலெக்டருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். #Parliamentelection #SatyabrataSahoo
    சென்னை:

    தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலுக்கான மனு தாக்கல் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. இந்த தேர்தல் நடவடிக்கை நாட்களில்தான் தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய திருவிழாக்கள் நடைபெற உள்ளன.

    ஏப்ரல் 6-ந்தேதி தெலுங்கு புத்தாண்டு பிறக்கிறது. ஏப்ரல் 14-ந்தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. ஏப்ரல் 17-ந்தேதி மகாவீர் ஜெயந்தி வருகிறது.

    தேர்தலுக்கு மறுநாளான ஏப்ரல் 19-ந்தேதி புனித வெள்ளி தினம் கொண்டாடப்பட உள்ளது. ஓட்டுப்பதிவு நடக்கும் தினத்தன்று மதுரையில் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா நடைபெறுகிறது. ஓட்டுப்பதிவு நடக்கும் 18-ந்தேதி சித்திரை திருவிழா தேரோட்டம் நடக்க உள்ளது.

    அடுத்தடுத்து வரும் இத்தகைய தொடர் விழாக்கள் காரணமாக 5 நாட்கள் விடுமுறை வர உள்ளது. ஏப்ரல் 17-ந்தேதி (புதன்கிழமை) மகாவீர் ஜெயந்தி விடுமுறை தினமாகும். மறுநாள் ஓட்டுப்பதிவு, இதற்கு அடுத்த நாள் புனித வெள்ளிக்கு விடுமுறை தினமாகும்.

    அதன் பிறகு சனி, ஞாயிறு வருவதால் மொத்தம் 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்க உள்ளனர். எனவே இந்த சமயத்தில் வாக்காளர்கள் பலர் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. இது வாக்குப்பதிவை கணிசமாக பாதிக்கக்கூடும் என்ற அச்சம் அனைத்துக் கட்சி தலைவர்களிடமும் எழுந்துள்ளது.

    குறிப்பாக மதுரையில் நடக்கும் உலக புகழ்பெற்ற சித்திரை திருவிழா ஓட்டுப்பதிவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு மதுரை சித்திரை விழா ஏப்ரல் 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த திருவிழா ஏப்ரல் 8-ந்தேதி முதல் ஏப்ரல் 22-ந்தேதி வரை நடைபெறும் பிரமாண்ட திருவிழாவாகும். இந்த திருவிழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் மதுரை சென்று பங்கேற்பார்கள்.

    குறிப்பாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி மிக சிறப்பாக மதுரையில் நடத்தப்படும். அழகர்கோவிலில் இருந்து புறப்படும் கள்ளழகர் மண்டப சேவைகளை ஏற்றுக் கொண்டு ஏப்ரல் 18-ந்தேதி மதுரைக்குள் வருவார்.

    மதுரை தல்லாகுளத்தில் 18-ந்தேதி கள்ளழகர் எதிர்சேவை நடைபெற உள்ளது. அன்றைய தினம் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா தேரோட்டமும் நடைபெற உள்ளது.

    மறுநாள் (19-ந்தேதி) கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவார். இந்த 2 நாட்களும் மதுரை விழாக்கோலமாக இருக்கும்.

    அன்றைய தினம் (18-ந்தேதி) பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் தென் மாவட்டங்களில் வாக்காளர்கள் தங்கள் பகுதி வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கை பதிவு செய்வதில் இடையூறு ஏற்படலாம் என்று பல்வேறு கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். மதுரை சித்திரை திருவிழாவை கருத்தில் கொண்டு தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம், தமிழ்நாட்டில் தேர்தல் தேதி மாற்றப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று மாலைமலர் நிருபர் கேட்டார். அதற்கு சத்யபிரத சாகு கூறியதாவது:-

    தேர்தல் குறித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டபோது ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களுக்கு தேர்வுகள் எப்போது நடைபெறுகிறது. வேறு ஏதேனும் விழாக்கள் மாவட்ட அளவில் வருகிறதா? என்பது பற்றி ஏற்கனவே கருத்து கேட்கப்பட்டது. அதை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரியும் (கலெக்டர்) தலைமை தேர்தல் அதிகாரிக்கு அறிக்கை அளித்தனர்.

    அந்த வகையில் மதுரையில் சித்திரை திருவிழா 18, 19-ந்தேதிகளில் நடைபெறுவது பற்றி அந்த மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் ஏற்கனவே தெரிவித்துள்ளாரா? என்பது பற்றி எங்கள் கவனத்துக்கு இன்னும் வரவில்லை. அதுபற்றி நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.

    இதற்கிடையே மதுரை மாவட்ட கலெக்டரிடம் சித்திரை திருவிழா குறித்து கேட்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு நடக்கும் ஏப்ரல் 18-ந்தேதி சித்திரை திருவிழாவும் வருவதால் ஓட்டுப்பதிவுக்கு அதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்று கேட்டு இருக்கிறோம்.

    2 நாட்களில் மதுரை கலெக்டர் இது தொடர்பாக எங்களுக்கு அறிக்கை தர உள்ளார். அதன் பிறகு இது தொடர்பான வி‌ஷயத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு செய்யப்படும்.

    தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் கேட்டுக் கொண்டன. மேலும் கோடை காலம் வருவதால் தமிழ்நாட்டில் சீக்கிரமாகவே பாராளுமன்ற தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.

    இதன் அடிப்படையில் தான் தலைமை தேர்தல் ஆணையம் முடிவு எடுத்து தேர்தல் அட்டவணையை அறிவித்துள்ளது. எனவே குறிப்பிட்ட ஒரு தொகுதிக்காக தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடக்கும் தேர்தலை இன்னொரு நாளுக்கு மாற்ற முடியுமா? என்பது தெரியவில்லை.

    கலெக்டர் தரும் அறிக்கையை பொறுத்தே இதுபற்றி இறுதி முடிவு தெரிய வரும்.

    இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். #Parliamentelection #SatyabrataSahoo

    தீண்டாமை சுவர் விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் சுப்ரீம் கோர்ட்டில் இன்று ஆஜரானார். இதனையடுத்து வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
    புதுடெல்லி:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சந்தையூரில் பிரசித்திபெற்ற ராஜகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி ஒரு பிரிவினரால் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.

    இதன் காரணமாக இரு சமூகத்தினரிடையே பிரச்சனை ஏற்பட்டது. சுவரை அகற்ற வலியுறுத்தி போராட்டங்களும் நடத்தப்பட்டன.

    ஒரு பிரிவினர் மலையில் குடியேறினர். மாநிலம் முழுவதும் எதிரொலித்த இந்த பிரச்சனை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் இரு சமூகத்தினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தியது.

    இந்த நிலையில் பிரச்சனைக்குரிய சுவரின் ஒரு பகுதியை இடிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அந்த சுவரை தீண்டாமை சுவர் என அறிவித்த மாவட்ட நிர்வாகம், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்தது. தீண்டாமை சுவர் என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து கருப்பையா என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மதுரை மாவட்ட கலெக்டர் ஆகஸ்டு 28-ந் தேதி (இன்று) ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.


    அதன்படி இன்று மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன் சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜரானார். அவரிடம் சுவர் எழுப்பப்பட்டது எப்படி என்பது உள்பட பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். அனைத்து தரப்பினரும் பேசி ஒரு முடிவை எடுக்க வேண்டும். முடிவு எடுக்கப்படவில்லை என்றால் சுவரை இடிக்கும் உயர்நீதிமன்ற உத்தரவு நடைமுறைபடுத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    கலெக்டர் தரப்பில், சம்பந்தப்பட்ட இடத்தில் தீண்டாமை சுவர் இல்லை. யார் வேண்டுமானாலும் கோவிலுக்கு செல்லலாம். இரு தரப்பினரையும் அழைத்து பேசிய பிறகு தற்போது அமைதி நிலவுகிறது என தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
    திருமங்கலம் அருகே உள்ள சந்தையூரில் சர்ச்சைக்குரிய சுவரை இடித்த வழக்கில் மதுரை கலெக்டர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    மதுரை:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சந்தையூரில் கட்டப்பட்டு இருந்த சுவரால் இரு சமூகத்தினரிடையே பிரச்சனை நிலவியது.

    இதையடுத்து சுவரை இடிக்கக்கோரி ஒரு சமூகத்தினர் ஊரை காலி செய்து அருகில் உள்ள மலையில் குடியேறினர். மேலும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். போராட்டம் 2 மாதங்கள் வரை நீடித்தது.

    இந்த சுவர் விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சந்தையூருக்கு சென்றனர்.

    இதையடுத்து மதுரை மாவட்ட நிர்வாகம் இரு சமூக மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய சுவரின் ஒரு பகுதியை இடிக்க உத்தரவிட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.


    இதை விசாரித்த ஐகோர்ட்டு, சுவரை இடிக்க உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அந்த சுவரை மாவட்ட நிர்வாகம் தீண்டாமை சுவர் என அறிவித்து கடந்த ஜனவரி மாதம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுவர் இடிக்கப்பட்டது.

    இந்த நிலையில் சந்தையூர் சுவரை தீண்டாமை சுவர் என மாவட்ட நிர்வாகம் அறிவித்ததை எதிர்த்து ஆதி தமிழர் பேரவை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டிருந்தது.

    இந்த வழக்கு இன்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது சர்ச்சைக்குரிய சுவர் இருந்த இடம் அரசுக்கு சொந்தமானதுதானா? என்பது தொடர்பாக விளக்கம் அளிக்க வருகிற ஆகஸ்டு இறுதி வாரத்தில் மதுரை கலெக்டர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர். #SupremeCourt
    ×