search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drumstick"

    • 80 விவசாயிகள் 20டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்,
    • மரம் முருங்கை ரூ.6முதல் 7வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.14 முதல் 15வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    நேற்று 80 விவசாயிகள் 20டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர், இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.8க்கும், மரம் முருங்கை ரூ.6முதல் 7வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.14 முதல் 15வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர்.இத்தகவலை முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    • கிருஷ்ணராயபுரத்தில் முருங்கை சீசன் துவங்கியது
    • ஒரு கிலோ முருங்கை 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படு கிறது

    கரூர்:

    கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பகுதியில் முருகைக்காய் சீசன் தொடங்கியுள்ளது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பழைய ஜெயங்கொண்டம், புதுப்பட்டி, லட்சுமணம்பட்டி, பாப் பக்காப்பட்டி, மலையாண்டிப்பட்டி, கோரக்குத்தி, மணவாசி, சிவாயம், ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவ லாக, முருங்கைக்காய் சாகுபடி செய்துள்ளனர். தற்போது முருங்கை செடிகளில் பூக்கள் பூத்து வருகிறது.இதில் முருங்கை பிஞ்சுகள் அதிகமாக காய்க்க தொடங்கியுள்ளன.

    நன்கு தரமாக வளர்ச்சியடைந்த முருங்கைக் காய்கள் அறுவடை செய்யப்பட்டு, கரூர், தோகைமலை, குளித்தலை, முசிறி ஆகிய இடங்களில் செயல்படும் காய்கறி மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. தற்போது சீசன் துவக்கம், வரத்து அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ முருங்கை 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படு கிறது. வரும் வாரங்களில் முருங்கை விலை உயரும் என விவசாயிகள் எதிர் பார்த்துள்ளனர்.





    • ஒரு கிலோ செடி முருங்கை ரூ.12-க்கும், மர முருங்கை ரூ.8-க்கும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
    • அரசு முருங்கை பவுடர் தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி, மாம்பாறை, கோவிந்தாபுரம், அய்யம்பாளையம், கள்ளிமந்தயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முருங்கைக்காய் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த முருங்கைக்காய்கள் ஒட்டன்சத்திரம் மற்றும் மார்க்கம்பட்டி பகுதியில் உள்ள சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது முருங்கை வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.100-க்கு விற்ற முருங்கை தற்போது விலை கடுமையாக சரிந்துள்ளது.

    ஒரு கிலோ செடி முருங்கை ரூ.12-க்கும், மர முருங்கை ரூ.8-க்கும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. பல்வேறு இன்னல்களுக்கிடையே விவசாயம் செய்து காய்கறிகளை சந்தைக்கு கொண்டு வந்தால் செலவு செய்த பணத்திற்கு கூட விலை கிடைக்காததால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். இதனால் பெரும்பாலான விவசாயிகள் முருங்கை காய்களை கால்நடைகளுக்கு தீவனமாக போட்டு வருகின்றனர்.

    நிலத்தை உழுது பயிரிட்டு முறையாக தண்ணீர் பாய்ச்சி, உரம் வைத்து பராமரித்து வருடம் முழுவதும் வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காதது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதற்கு அரசு தீர்வு காணவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சீசன் காலங்களில் அதிகளவில் முருங்கை விளைகிறது. இதனை பவுடராக்கி வருடம் முழுவதும் பயன்படுத்தலாம். இதற்கு அரசு முருங்கை பவுடர் தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    • முருங்கையில் கால்சியம், இரும்பு சத்து, வைட்டமீன்கள் நிறைந்து காணப்படுகிறது.
    • மண் வளத்தால் தனி ருசி ஏற்படுகிறது.

    மூலனூர் :

    தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் மூலனூர் குட்டை முருங்கைகாய்க்கு இந்த ஆண்டு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியு ள்ளது. இதற்கு மூலனூர் முருங்கை விவசாயிகள் வரவேற்பு தெரிவித்து ள்ளனர்.

    ஒரு தமிழ் சினிமாவில் நடிகர் பாக்கியராஜ் முருங்கைகாய் சாப்பிடுவ தால் என்ன விதமான பலன்கள் ஏற்படும் என்பதை பற்றி ருசிகரமான காட்சி ஒன்றை வைத்திருப்பார். அது மட்டுமல்ல முருங்கையில் கால்சியம், இரும்பு சத்து, வைட்டமீன்கள் நிறைந்து காணப்படுகிறது. இதைத்தவிர மலச்சிக்கல், வயிற்றுப்புண், கண் தொடர்பான நோய்கள், சிறுநீரகத்தை பலப்படுத்து வது என பயன் தரும் மருத்துவ தன்மை கொண்டது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில்:- திருப்பூர் மாவட்டத்தில் மூலனூர், வெள்ளகோவில், முத்தூர், காங்கேயம் ஆகிய வட்டார பகுதிகளில் அதிக அளவில் முருங்கைக்காய் விளைவிக்கப்படுகிறது. அதில் மூலனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. முருங்கைக்கு ஏற்ற மண் வளம், குறைவான நீர், மிக குறைவான பராமரிப்பு செலவு ஆகிய காரணத்தால் விவசாயிகளால் விருப்பத்து டன் சாகுபடி செய்யப்படு கிறது. ஆண்டில் பத்து மாதங்கள் மகசூல் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டு இதன் சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது.

    மேலும் மூலனூர் முருங்கைக்கு ருசி அதிகம் என்பதால் பொதுமக்கள் மத்தியில் நுகர்வு அதிகம் உள்ளது. வெள்ளகோவிலில் வாரத்தில் ஞாயிற்றுக்கிழ மைகளில் நடைபெறும் முருங்கைக்காய் சந்தைக்கு மூலனூர் விவசாயிகளால் டன் கணக்கில் விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

    வெளியில் இருந்து வரும் மொத்த வியாபாரிகள், முருங்கைக்காய்களை விவசாயிகளிடமிருந்து வாங்கி சென்னை, திருச்சி, கோவை, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். மேலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- திருச்சி, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களிலும் அதிக அளவில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது என்றாலும் மூலனூர் பகுதியில் சாகுபடி செய்யும் குட்டை ரக முருங்கைக்கே ருசி அதிகம். எங்கள் பகுதி மண் வளத்தால் தனி ருசி ஏற்படுகிறது. .அதனால் தான் மக்களால் விரும்பி வாங்கி செல்கிறார்கள். இந்திய அளவில் மூலனூர் முருங்கை க்கு கிராக்கி அதிகம். இந்த நிலையில் தமிழக அரசு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சிய ளிக்கிறது. இதனால் உற்பத்தியும் லாபமும் அதிகரிக்க வாய்ப்பு ள்ளது. தமிழக அரசுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    • 90 விவசாயிகள் 30 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • முருங்கை ரூ.30 முதல் ரூ.55 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையொட்டி மாதத்தில் ஞாயிறு தோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ள கோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர். நேற்று 90 விவசாயிகள் 30 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.40க்கும், மரமுருங்கை ரூ.30முதல் 35வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.50 முதல் 55 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    வியாபாரிகள் முருங்கைகாய்களை சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள மார்கெட் மற்றும் ஓட்டல் மற்றும் மார்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    • ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.55 முதல் 60வரைக்கும், மரம் முருங்கை ரூ.60முதல் 65வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.70 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.
    • நேற்று 30 விவசாயிகள் 500 கிலோ முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்,

    நேற்று 30 விவசாயிகள் 500 கிலோ முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.55 முதல் 60வரைக்கும், மரம் முருங்கை ரூ.60முதல் 65வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.70 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்ப்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில வாரங்களாக வட மாநிலத்தில் இருந்து முருங்கைக்காய் வரத்தொடங்கிவிட்டது. வெள்ளகோவில் வட்டார பகுதிகளில் வரத்து குறைந்து விட்டதாகவும், இப்பகுதியில் மழை இல்லாமல் இருந்தால் வரும் வாரங்களில் முருங்கைக்காய் வரத்து இருக்கும் என முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது, வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.

    நேற்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.30, கத்தரிக்காய் ரூ.50, பீர்க்கங்காய் ரூ.60, பெரிய வெங்காயம் ரூ.30,சின்ன வெங்காயம் ரூ. 60, உருளைக்கிழங்கு ரூ.40, பீட்ரூட் ரூ.40, பீன்ஸ் ரூ.40, கேரட் ரூ.40, பாவற்காய் ரூ.40, பச்சை மிளகாய் ரூ.40, வெண்டைக்காய் ரூ.40, இஞ்சி ரூ.60, அவரைக்காய் ரூ.60, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.30, முள்ளங்கி ரூ. 40, சுரக்காய் ரூ. 10க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    • கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் முருங்கை மரத்தில் பூக்கள் உதிர்ந்து வருவதால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது
    • தை மாதம் பிறந்த பிறகு முகூர்த்த நாட்கள் வந்தால் மட்டுமே காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநில காய்கறிகள் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் தற்போது பெரும்பாலான காய்கறிகள் வரத்து குறைந்தும் விவசாயிகளுக்கு லாபம் இல்லாத நிலை உள்ளது.

    குறிப்பாக கடந்த 2 வாரங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் முருங்கை மரத்தில் பூக்கள் உதிர்ந்து வருவதால் விளைச்சல் கடுமையாக பாதிக்க ப்பட்டது. இதனால் உள்ளூர் முருங்கை வரத்து அடியோடு குறைந்தது. நாசிக் மற்றும் பரோடா நகரில் இருந்து நாள் ஒன்றுக்கு 25 டன் முருங்கை வருகிறது.

    இவையும் கிலோ ரூ.100 முதல் ரூ.130 வரை விற்பனையாகி வருகிறது. இவ்வகை காய்கள் பெரும்பாலும் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அடுத்து வரும் வாரங்களிலும் பனியின் தாக்கம் அதிகரி ப்பால் உள்ளூர் காய்கறி வரத்து குறைந்தே இருக்கும் என வியாபாரிகள் தெரி வித்தனர்.

    இதேபோல் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.80க்கும், தக்காளி 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.110 வரையிலும் விற்பனையாகி வருகிறது. வெங்காயம் ஓரளவுக்கு கைகொடு த்தாலும் தக்காளி விலை தொடர்ந்து விவசாயிகளை நஷ்டப்படுத்தி வருகிறது.

    இேதபோல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூசணிக்காய் வரத்து அதிகமாக இருக்கும். ஆனால் அதற்கும் சரியான விலை கிடைக்க வில்லை. கிலோ ரூ.5 முதல் ரூ.6 வரை மட்டுமே விற்பனையாவதால் வெளிமாநில வியா பாரிகளும் பூசணிக்காயை விற்பனைக்கு கொண்டு வராமல் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    தை மாதம் பிறந்த பிறகு முகூர்த்த நாட்கள் வந்தால் மட்டுமே காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பா ர்க்கின்றனர்.

    • நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை, ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் முருங்கைக்காய் பயிரிடப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் பெரும் பாலும் கிணற்று பாசனத்தை நம்பியே பணிகள் நடைபெறுகிறது.
    • ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.200-க்கு விற்பனையாகிறது. வரும் நாட்களில் தேவை அதிகரிப்பின் காரணமாக முருங்கை உள்ளிட்ட காய்களின் விலை மேலும் உயரும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை, ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் முருங்கைக்காய் பயிரிடப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் பெரும் பாலும் கிணற்று பாசனத்தை நம்பியே பணிகள் நடைபெறுகிறது.

    தற்போது மகசூல் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதனால் சந்தை களுக்கு வழக்கத்தை விட மிகவும் குறைந்த அளவே முருங்கைகாய் வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே முருங்கைக்காயின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    அதன்படி கடந்த 2 நாட்களாக நெல்லை, பாளை மார்க்கெட்டுகளில் கிலோ ரூ.100 க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் இன்று 2 மடங்கு விலை உயர்ந்து ரூ.200க்கு விற்கப்பட்டது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    வழக்கத்தை விட தற்போது முருங்கைக்காய் விளைச்சல் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. வரத்து குறைந்து தேவை அதிகரித்ததின் காரணமாக முருங்கைக்காய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் முருங்கைகாய் விளைச்சல் போதிய அளவில் இல்லாததால் வெளி மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அதன்படி ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து முருங்கைக்காய்கள் நெல்லைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.

    கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த முருங்கைக்காய் விலை இன்று மேலும் உயர்ந்துள்ளது.

    ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.200-க்கு விற்பனையாகிறது. வரும் நாட்களில் தேவை அதிகரிப்பின் காரணமாக முருங்கை உள்ளிட்ட காய்களின் விலை மேலும் உயரும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கொள்முதல் நிலையத்திற்கு சுற்று வட்டார பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த முருங்கைக் காயை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
    • மர முருங்கை ,செடி முருங்கை,கரும்பு முருங்கை அனைத்து ரகமும் கிலோ 110 ரூபாய்க்கு விலைபோனது.

    வெள்ளகோவில் : 

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் முருங்கை மார்க்கெட்டுக்கு கடந்த வாரம் குறைந்த அளவே வரத்து வந்த நிலையில் கிலோ ரூ.90 க்கு விற்பனையானது. இந்நிலையில் இந்த வாரம் 300 கிலோ வரத்து வந்திருந்ததால் விலை ரூ.110க்கு உயர்ந்து விற்பனையானது‌.

    திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளகோவில் ,மூலனூர், தாராபுரம், முத்தூர் ,குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் முருங்கை ஆண்டு பயிராக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.தொடர் மழை மற்றும் காற்று காரணமாக பூக்கள் உதிர்வால் முருங்கை இந்த வாரத்தில் வரத்து குறைவு காரணமாக வெள்ளகோவில் முருங்கை கொள்முதல் நிலையத்தில் முருங்கைக்காய் கிலோ ஒன்றுக்கு 110 ரூபாய்க்கு விற்பனையானது.

    வெள்ளகோவிலில் இயங்கும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு சுற்று வட்டார பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த முருங்கைக் காயை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதனை வியாபாரிகள் வாங்கி கோவை, சென்னை மார்க்கெட்டுக்கு அனுப்புகின்றனர். மேலும் அருகில் உள்ள ஒட்டன்சத்திரம் மார்கெட்டுக்கும் விவசாயிகள் முருங்கையை விற்பனைக்கு கொண்டு செல்வர்.இந்த வாரம் மர முருங்கை ,செடி முருங்கை,கரும்பு முருங்கை அனைத்து ரகமும் கிலோ 110 ரூபாய்க்கு விலைபோனது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், முருங்கைக்கு நிலையற்ற விலையால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், இந்த பகுதியில் அதிக முருங்கை சாகுபடி நடைபெற்று வருவதால், இங்கு முருங்கை பொருட்களை பவுடராக்கும் தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டாக உள்ளது. தொழிற்சாலை அமைக்கப்பட்டால் ஒரு சீரான விலை கிடைக்கும் வாய்ப்பு இருக்கும். தற்போது பூக்கள் உதிர்வால் விளைச்சல் குறைந்த நிலையில் இருப்பதால் விலை உயர்ந்து விற்பனையானது எனக்கூறினர்.

    • வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
    • மரம் முருங்கை ரூ.20முதல் 25 வரைக்கும், கரும்புமுருங்கை ரூ.65முதல் 70வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    மடத்துக்குளம்,அக்.31-

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வேடப்பட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம்-இந்திராணி தம்பதியரின் மகள் பட்டீஸ்வரி (வயது 19). சற்று காது கேட்கும் திறனை இழந்த மாற்றுத்திறனாளியான இவர் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிப்பை முடித்து, மருத்துவ படிப்பு படிப்பதற்காக நீட் தேர்வு எழுதினார். இதில் 720க்கு 117 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    மாற்றுத்திறனாளி மாணவி

    மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்க தேர்வாகி உள்ளார். ஆனால் படிப்பதற்கு போதிய பண வசதி இல்லாததால் மருத்துவ கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வருகிறார். பட்டீஸ்வரியின் தந்தை கூலி வேலையும், தாய் தூய்மை பணியாளராகவும் பணியாற்றி வரும் நிலையில் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் குடும்பத்தை நடத்துவதற்கே போதுமானதாக இல்லை. இதனால் அரசு தனக்கு மருத்துவ படிப்பு படிக்க தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து பட்டீஸ்வரி மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    மருத்துவம் படிக்க வேண்டும் என்பது எனக்கு சிறு வயது முதலே விருப்பம். இதனால் சிறுவயதில் இருந்தே நன்றாக படித்து வந்தேன். 10-ம்வகுப்பு தேர்வில் 410 மதிப்பெண்ணும், பிளஸ்-2 தேர்வில் 512 மதிப்பெண்ணும் பெற்றேன். மருத்துவம் படிப்பதற்காக நீட் தேர்வு எழுதினேன்.கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் 104 மதிப்பெண்கள் பெற்றேன். இதனால் எனக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. 2-வது முறையாக 2022ம் ஆண்டு நீட் தேர்வு எழுதினேன். இதில் 117 மதிப்பெண்கள் பெற்றேன். இதன் மூலம் எனக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்க இடம் கிடைத்துள்ளது. ஆனால் போதிய பண வசதியில்லாததால் மருத்துவம் படிக்க முடியாத நிலையில் உள்ளேன்.

    ஆசிரியர்கள் உதவி

    எனது தந்தை தினக்கூலி வேலைக்கு சென்று வருகிறார். தாய் தூய்மை பணியாளராக பணியாற்றுகிறார். அண்ணன் காளீஸ்வரன் காட்டுவேலைக்கு சென்று வருகிறார். இதன் மூலம் எங்களுக்கு குறைந்த வருமானமே கிடைக்கிறது. எனது தாய்க்கு அடிக்கடி உடல் நிலை பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு மாதந்தோறும் மருந்து மாத்திரைகள் வாங்க செலவு ஆகிறது. இதனால் மருத்துவம் படிக்க சீட் கிடைத்தும் என்னால் படிக்க முடியாத நிலை உள்ளது.

    மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதற்கு கூட எங்களது குடும்பத்திடம் பணம் கிடையாது. நான் படித்த மடத்துக்குளம் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணம் வசூலித்து தந்தார்கள். மருத்துவம் படிக்க புத்தகம், தங்குவதற்கான விடுதி கட்டணம் என நிறைய செலவாகும். அந்த அளவுக்கு எங்களால் பணத்தை புரட்ட முடியவில்ைல. மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் என்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன் உதவிகள் செய்வதாக கூறியுள்ளார்.

    தாய்க்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதால் நான்தான் வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டிய நிலை உள்ளது. முதலில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாததால் ஒரு வருடம் வீட்டில் இருந்தவாறே அடுத்த நீட் தேர்வுக்கு தயாரானேன். மாநில பாட புத்தகங்களை வைத்தே படித்தேன். யூ-டியூப் மூலம் ஆசிரியர்கள் கற்றுகொடுத்தவற்றையும் பார்த்து தேர்வுக்கு தயாரானேன். தாய்க்கு உடல் நிலை பாதிப்பால் வீட்டில் உள்ள ஆடு-மாடுகளை நான்தான் மேய்த்து விட்டு வருகிறேன். அதனை பராமரிக்கவும் செய்கிறேன். சமையல் வேலைகளையும் செய்கிறேன். தம்பி யுவபாரதி(10) 5-ம்வகுப்பு படிக்கிறான். அவனையும் கவனிக்க வேண்டியது உள்ளது.

    வீட்டுவேலைகள்

    வீட்டு வேலைகளையும் பார்த்து விட்டு நீட் தேர்வுக்கு தயார் ஆனேன்.தினமும் அதிகாலை 4மணிக்கு எழுந்து படிப்பேன். இரவு வீட்டு வேலைகள் முடிந்ததும் 8-30மணி முதல் 11-30 மணி வரை படிப்பேன்.

    எனக்கு காது லேசாக கேட்காது. இதனால் என்னை சிலர் ஏளனமாக கூட பேசுவார்கள். அதையெல்லாம் மனதில் வைக்காமல் தேர்வுக்கு தயாரானேன். தற்போதைய செலவுக்காக வீட்டில் உள்ள ஆடு, மாடுகள் சிலவற்றை விற்று விட்டோம். மீதி செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வருகிறேன். தற்போது பலர் உதவி செய்து வருகிறார்கள். மடத்துக்குளம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் , வேடப்பட்டி பள்ளி ஆசிரியர்கள் , வேடப்பட்டி ஊராட்சி தலைவர் ஆகியோர் நிதி அளித்துள்ளார்கள். இருப்பினும் அரசு எனது மருத்துவ படிப்புக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    • மரம் முருங்கை ரூ.65முதல் 70 வரைக்கும், கரும்புமுருங்கை ரூ.75முதல் 80 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.
    • வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்,

    நேற்று 25 விவசாயிகள் 1 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.70 முதல் 80 வரைக்கும், மரம் முருங்கை ரூ.65முதல் 70 வரைக்கும், கரும்புமுருங்கை ரூ.75முதல் 80 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்ததாகவும், சில வாரங்களுக்கு முன்பு முருங்கை பூ பூத்த நிலையில் மழை பெய்ததால் முருங்கைக்காய் வரத்து தற்போது மிகவும் குறைந்துள்ளதாகவும். இன்னும் ஒரு வாரத்திற்கு வரத்து குறைவாக தான் இருக்கும்.தற்போது தென் மாவட்டங்களில் இருந்து தான் மார்க்கெட் மற்றும் ஓட்டல்களுக்கு முருங்கைகாய் வந்து கொண்டு உள்ளது என்று முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    • 30 விவசாயிகள் 2 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • வெள்ளகோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையொட்டி ஞாயிறுதோறும் முருங்கை க்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். நேற்று 30 விவசாயிகள் 2 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபா ரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.90 முதல் 100 வரைக்கும், மரம் முருங்கை ரூ.95முதல் 100 வரைக்கும், கரும்புமுருங்கை ரூ.115முதல் 120 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்ததாகவும். சில வாரங்களுக்கு முன்பு முருங்கை பூ பூத்த நிலையில் மழை பெய்ததால் முருங்கைக்காய் வரத்து தற்போது மிகவும் குறைந்துள்ளதாகவும். இன்னும் இரண்டு வாரத்திற்கு வரத்து குறைவாக தான் இருக்கும், தற்போது தென் மாவட்டங்களில் இருந்து தான் மார்க்கெட் மற்றும் ஓட்டல்களுக்கு முருங்கைகாய் வந்து கொண்டு உள்ளது அதானல் விலை உயர்ந்துள்ளது என்று முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    ×