search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவில் வாரச்சந்தையில் முருங்கைக்காய் கிலோ ரூ.120க்கு விற்பனை
    X

    முருங்கைக்காய்.

    வெள்ளகோவில் வாரச்சந்தையில் முருங்கைக்காய் கிலோ ரூ.120க்கு விற்பனை

    • 30 விவசாயிகள் 2 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • வெள்ளகோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையொட்டி ஞாயிறுதோறும் முருங்கை க்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். நேற்று 30 விவசாயிகள் 2 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபா ரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.90 முதல் 100 வரைக்கும், மரம் முருங்கை ரூ.95முதல் 100 வரைக்கும், கரும்புமுருங்கை ரூ.115முதல் 120 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்ததாகவும். சில வாரங்களுக்கு முன்பு முருங்கை பூ பூத்த நிலையில் மழை பெய்ததால் முருங்கைக்காய் வரத்து தற்போது மிகவும் குறைந்துள்ளதாகவும். இன்னும் இரண்டு வாரத்திற்கு வரத்து குறைவாக தான் இருக்கும், தற்போது தென் மாவட்டங்களில் இருந்து தான் மார்க்கெட் மற்றும் ஓட்டல்களுக்கு முருங்கைகாய் வந்து கொண்டு உள்ளது அதானல் விலை உயர்ந்துள்ளது என்று முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    Next Story
    ×