என் மலர்
நீங்கள் தேடியது "Drumstick"
- தனியார் கொள்முதல் நிலையங்களில் முருங்கைக்காய் கொள்முதல் செய்வது வழக்கம்.
- மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.
மூலனூர்:
திருப்பூர் மாவட்டம் மூலனூர், கன்னிவாடி பகுதிகளில் தனியார் கொள்முதல் நிலையங்களில் முருங்கைக்காய் கொள்முதல் செய்வது வழக்கம். இந்த சந்தைக்கு மூலனூர், கன்னிவாடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த முருங்கைக்காய்களை மூலனூர் மற்றும் கன்னிவாடி பகுதியில் உள்ள தனியார் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர்.
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தாராபுரம், மூலனூர் ஆகிய பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து முருங்கைக் காய்களை வாங்கி செல்கின்றனர். பின்னர் இதை மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். வடமாநில வியாபாரிகள் முருங்கை கொள்முதல் செய்வதை தொடங்கியுள்ளதால் மூலனூர் பகுதிகளில் தற்போது முருங்கை வரத்து தொடங்கியுள்ளது. கடந்த வாரம் கிேலா ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் இந்த வாரம் சற்று உயர்ந்து செடி முருங்கை, மரம் முருங்கை, கரு முருங்கை என அனைத்தும் சராசரியாக ரூ.23-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
விலை உயர தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- 100 விவசாயிகள் 30 டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்
- கரும்பு முருங்கை ரூ. 8 முதல் ரூ.10 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். நேற்று 100 விவசாயிகள் 30 டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ. 4 முதல் 5 வரைக்கும், மரம் முருங்கை ரூ.4 முதல் 5 வரைக்கும், கரும்பு முருங்கை ரூ. 8 முதல் ரூ.10 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.
கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர். இத்தகவலை முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து தெரிவித்தார்.
- 125 விவசாயிகள் 100 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
- ஒரு கிலோ செடிமுருங்கை ரூ. 8 க்கும், மரம் முருங்கை ரூ.7 க்கும், கரும்பு முருங்கை ரூ. 10 க்கும் கொள்முதல் செய்தனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.
நேற்று 125 விவசாயிகள் 100 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ. 8 க்கும், மரம் முருங்கை ரூ.7 க்கும், கரும்பு முருங்கை ரூ. 10 க்கும் கொள்முதல் செய்தனர்.
கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர். இத்தகவலை முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.
- மர முருங்கைக்காய் கிலோ ரூ. 9க்கு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனா்.
- முருங்கைக்காய்கள் வாரச் சந்தைகள் மற்றும் தனியாா் கொள்முதல் மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
வெள்ளகோவில்:
வெள்ளக்கோவில் சந்தைக்கு 24 டன் முருங்கைக்காய் வரத்து ஞாயிற்றுக்கிழமை இருந்தது.வெள்ளக்கோவில் பகுதியில் விளையும் முருங்கைக்காய்கள் இப்பகுதியில் செயல்பட்டு வரும் வாரச் சந்தைகள் மற்றும் தனியாா் கொள்முதல் மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
வெள்ளக்கோவில் -முத்தூா் சாலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தனியாா் கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது.இந்த மையத்தில் கரும்பு முருங்கைக்காய் கிலோ ரூ. 11, செடி முருங்கைக்காய் ரூ.11, மர முருங்கைக்காய் கிலோ ரூ. 9க்கு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனா்.
- மர முருங்கைக் காய் கிலோ ரூ. 20க்கு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனா்.
- வெள்ளக்கோவில் முத்தூா் சாலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தனியாா் கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது.
வெள்ளகோவில்:
வெள்ளக்கோவில் முருங்கைக் காய் சந்தைக்கு 13 டன் முருங்கைக்காய்கள் வரத்து ஞாயிற்றுக்கிழமை இருந்தது.
வெள்ளக்கோவில் பகுதியில் விளையும் முருங்கைக் காய்கள், இப்பகுதியில் செயல்பட்டு வரும் வாரச் சந்தைகள் மற்றும் தனியாா் கொள்முதல் மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. வெள்ளக்கோவில் முத்தூா் சாலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தனியாா் கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த வாரம் கரும்பு முருங்கைக்காய் கிலோ ரூ. 23, செடி முருங்கைக் காய் ரூ. 23, மர முருங்கைக் காய் கிலோ ரூ. 20க்கு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனா்.
- உடன்குடி வட்டார பகுதியில் திரும்பிய திசைகளில் எல்லாம் முருங்கை விவசாயம் சிறப்பாக உள்ளது.
- கடந்த ஆண்டு இதேமாதம் முருங்கைக்காய் ரூ.30 முதல் 40 வரை கொள்முதல் செய்தனர்.
உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதியில் தற்போது முருங்கை விவசாயம் முழு முயற்சியுடன் நடைபெறுகிறது. முன்பு ஒரு காலத்தில் தென்னை, பனை விவசாயம் நடந்த இடங்களில் எல்லாம் தற்போது முருங்கையை ஊடுபயிராக பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
திரும்பிய திசைகளில் எல்லாம் முருங்கை விவசாயம் சிறப்பாக உள்ளது. ஆனால் 1 கிலோ ரூ.20 முதல் ரூ.25-க்கு மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
கடந்த ஆண்டு இதேமாதம் முருங்கைக்காய் ரூ.30 முதல் 40 வரை கொள்முதல் செய்தனர். தற்போது அடிக்கடி குளிர்ந்த காற்று வீசுவது, திடீர் என சாரல் சாரல் மழை பெய்வதால் முருங்கைபூக்கள் எல்லாம் உதிர்ந்துவிடுகிறது.
முருங்கைக்கு மருந்துகள் தெளித்தல், உரம் வைத்தல் கூறி தொழிலாளி ஊதியம் என செலவு அதிகமாக வருகிறது. ஆனால் இந்த செலவுக்கு ஏற்றபடி விளைச்சலும் இல்லை, விலையும் இல்லை. முருங்கை காயுடன் முருங்கை இலை, முருங்கைப்பூ, முருங்கை பட்டை என 4 விதமாக கொள்முதல் செய்து வெளியிடங்களுக்கு அனுப்பினால் தான் முருங்கை விவசாயத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைக்காய் கிலோ ரூ.20-க்கு விற்பனையானது
- இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கரூர்
கரூர்:
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் கிணற்றில் உள்ள குறைந்த அளவு நீரைக்கொண்டு முருங்கைக்காய் பயிரிடுதல் மற்றும் ஆடு, மாடுகள் வளர்த்து வருகின்றனர். அரவக்குறிச்சி சுற்று வட்டாரப்பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முருங்கைக்காய் பயிரிட்டுள்ளனர். இப்பகுதி விவசாயிகளுக்கு முருங்கை சாகுபடி மட்டுமே தற்போது வாழ்வாதாரமாக விளங்குகிறது. முருங்கையில் செடி முருங்கை, மரமுருங்கை என இரு வகை உள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் முருங்கைக்காய்கள் விளைச்சல் குறைவாக இருந்ததால் 1 கிலோ ரூ.100-க்கு விலைபோனது. பிறகு மார்ச் முதல் முருங்கை சீசன் தொடங்கி காய்கள் விளைச்சல் அதிகமானது. இதனால் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 1 கிலோ ரூ.5 முதல் ரூ.8 வரை விலை போனது. இதனால் விவசாயிகள் முருங்கை காய்களை பறிப்பதற்கு கூட கூலி கட்டாமல் பாதிக்கப்பட்டனர். தற்போது ஜூன் மாதம் விளைச்சல் குறைந்துள்ளதால் 1 கிலோ முருங்கை காய்கள் ரூ.20 முதல் ரூ.25 வரை முருங்கை மார்க்கெட்டுகளில் விலை போகின்றது.
இந்த விலை ஏற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஒரு ஆண்டில் ஜனவரி, டிசம்பர் மாதங்களைத்தவிர மற்ற மாதங்களில் விளைச்சல் அதிகரிக்கும். விவசாயிகள் அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், க.பரமத்தி, பள்ளப்பட்டி, ஆத்துமேடு, ஈசநத்தம் உள்ளிட்ட அரவக்குறிச்சி பகுதிகளில் உள்ள முருங்கைக்காய் மார்க்கெட் கமிஷன் மண்டிகளில் முருங்கைக்காயை விற்று விடுவார்கள். அங்கு விவசாயிகளிடமிருந்து வாங்கிய முருங்கைக்காய்கள் பெங்களூரு, சென்னை, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, விஜயவாடா உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் லாரிகளில் அனுப்பி வருகின்றனர். தற்போது முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளதால் நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம், என்றனர்.
- 80 விவசாயிகள் 20டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்,
- மரம் முருங்கை ரூ.6முதல் 7வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.14 முதல் 15வரைக்கும் கொள்முதல் செய்தனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் வாரச்சந்தையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
நேற்று 80 விவசாயிகள் 20டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர், இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.8க்கும், மரம் முருங்கை ரூ.6முதல் 7வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.14 முதல் 15வரைக்கும் கொள்முதல் செய்தனர்.
கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர்.இத்தகவலை முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.
- கிருஷ்ணராயபுரத்தில் முருங்கை சீசன் துவங்கியது
- ஒரு கிலோ முருங்கை 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படு கிறது
கரூர்:
கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பகுதியில் முருகைக்காய் சீசன் தொடங்கியுள்ளது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பழைய ஜெயங்கொண்டம், புதுப்பட்டி, லட்சுமணம்பட்டி, பாப் பக்காப்பட்டி, மலையாண்டிப்பட்டி, கோரக்குத்தி, மணவாசி, சிவாயம், ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவ லாக, முருங்கைக்காய் சாகுபடி செய்துள்ளனர். தற்போது முருங்கை செடிகளில் பூக்கள் பூத்து வருகிறது.இதில் முருங்கை பிஞ்சுகள் அதிகமாக காய்க்க தொடங்கியுள்ளன.
நன்கு தரமாக வளர்ச்சியடைந்த முருங்கைக் காய்கள் அறுவடை செய்யப்பட்டு, கரூர், தோகைமலை, குளித்தலை, முசிறி ஆகிய இடங்களில் செயல்படும் காய்கறி மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. தற்போது சீசன் துவக்கம், வரத்து அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ முருங்கை 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படு கிறது. வரும் வாரங்களில் முருங்கை விலை உயரும் என விவசாயிகள் எதிர் பார்த்துள்ளனர்.
- ஒரு கிலோ செடி முருங்கை ரூ.12-க்கும், மர முருங்கை ரூ.8-க்கும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
- அரசு முருங்கை பவுடர் தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி, மாம்பாறை, கோவிந்தாபுரம், அய்யம்பாளையம், கள்ளிமந்தயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முருங்கைக்காய் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்த முருங்கைக்காய்கள் ஒட்டன்சத்திரம் மற்றும் மார்க்கம்பட்டி பகுதியில் உள்ள சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது முருங்கை வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.100-க்கு விற்ற முருங்கை தற்போது விலை கடுமையாக சரிந்துள்ளது.
ஒரு கிலோ செடி முருங்கை ரூ.12-க்கும், மர முருங்கை ரூ.8-க்கும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. பல்வேறு இன்னல்களுக்கிடையே விவசாயம் செய்து காய்கறிகளை சந்தைக்கு கொண்டு வந்தால் செலவு செய்த பணத்திற்கு கூட விலை கிடைக்காததால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். இதனால் பெரும்பாலான விவசாயிகள் முருங்கை காய்களை கால்நடைகளுக்கு தீவனமாக போட்டு வருகின்றனர்.
நிலத்தை உழுது பயிரிட்டு முறையாக தண்ணீர் பாய்ச்சி, உரம் வைத்து பராமரித்து வருடம் முழுவதும் வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காதது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதற்கு அரசு தீர்வு காணவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சீசன் காலங்களில் அதிகளவில் முருங்கை விளைகிறது. இதனை பவுடராக்கி வருடம் முழுவதும் பயன்படுத்தலாம். இதற்கு அரசு முருங்கை பவுடர் தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.