search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைக்காய் கிலோ ரூ.20-க்கு விற்பனை
    X

    அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைக்காய் கிலோ ரூ.20-க்கு விற்பனை

    • அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைக்காய் கிலோ ரூ.20-க்கு விற்பனையானது
    • இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கரூர்

    கரூர்:

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் கிணற்றில் உள்ள குறைந்த அளவு நீரைக்கொண்டு முருங்கைக்காய் பயிரிடுதல் மற்றும் ஆடு, மாடுகள் வளர்த்து வருகின்றனர். அரவக்குறிச்சி சுற்று வட்டாரப்பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முருங்கைக்காய் பயிரிட்டுள்ளனர். இப்பகுதி விவசாயிகளுக்கு முருங்கை சாகுபடி மட்டுமே தற்போது வாழ்வாதாரமாக விளங்குகிறது. முருங்கையில் செடி முருங்கை, மரமுருங்கை என இரு வகை உள்ளன.

    கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் முருங்கைக்காய்கள் விளைச்சல் குறைவாக இருந்ததால் 1 கிலோ ரூ.100-க்கு விலைபோனது. பிறகு மார்ச் முதல் முருங்கை சீசன் தொடங்கி காய்கள் விளைச்சல் அதிகமானது. இதனால் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 1 கிலோ ரூ.5 முதல் ரூ.8 வரை விலை போனது. இதனால் விவசாயிகள் முருங்கை காய்களை பறிப்பதற்கு கூட கூலி கட்டாமல் பாதிக்கப்பட்டனர். தற்போது ஜூன் மாதம் விளைச்சல் குறைந்துள்ளதால் 1 கிலோ முருங்கை காய்கள் ரூ.20 முதல் ரூ.25 வரை முருங்கை மார்க்கெட்டுகளில் விலை போகின்றது.

    இந்த விலை ஏற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஒரு ஆண்டில் ஜனவரி, டிசம்பர் மாதங்களைத்தவிர மற்ற மாதங்களில் விளைச்சல் அதிகரிக்கும். விவசாயிகள் அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், க.பரமத்தி, பள்ளப்பட்டி, ஆத்துமேடு, ஈசநத்தம் உள்ளிட்ட அரவக்குறிச்சி பகுதிகளில் உள்ள முருங்கைக்காய் மார்க்கெட் கமிஷன் மண்டிகளில் முருங்கைக்காயை விற்று விடுவார்கள். அங்கு விவசாயிகளிடமிருந்து வாங்கிய முருங்கைக்காய்கள் பெங்களூரு, சென்னை, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, விஜயவாடா உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் லாரிகளில் அனுப்பி வருகின்றனர். தற்போது முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளதால் நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம், என்றனர்.

    Next Story
    ×