search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூலனூர் குட்டை முருங்கைகாய்க்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை - வியாபாரிகள், விவசாயிகள் வரவேற்பு
    X

    கோப்புபடம்.

    மூலனூர் குட்டை முருங்கைகாய்க்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை - வியாபாரிகள், விவசாயிகள் வரவேற்பு

    • முருங்கையில் கால்சியம், இரும்பு சத்து, வைட்டமீன்கள் நிறைந்து காணப்படுகிறது.
    • மண் வளத்தால் தனி ருசி ஏற்படுகிறது.

    மூலனூர் :

    தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் மூலனூர் குட்டை முருங்கைகாய்க்கு இந்த ஆண்டு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியு ள்ளது. இதற்கு மூலனூர் முருங்கை விவசாயிகள் வரவேற்பு தெரிவித்து ள்ளனர்.

    ஒரு தமிழ் சினிமாவில் நடிகர் பாக்கியராஜ் முருங்கைகாய் சாப்பிடுவ தால் என்ன விதமான பலன்கள் ஏற்படும் என்பதை பற்றி ருசிகரமான காட்சி ஒன்றை வைத்திருப்பார். அது மட்டுமல்ல முருங்கையில் கால்சியம், இரும்பு சத்து, வைட்டமீன்கள் நிறைந்து காணப்படுகிறது. இதைத்தவிர மலச்சிக்கல், வயிற்றுப்புண், கண் தொடர்பான நோய்கள், சிறுநீரகத்தை பலப்படுத்து வது என பயன் தரும் மருத்துவ தன்மை கொண்டது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில்:- திருப்பூர் மாவட்டத்தில் மூலனூர், வெள்ளகோவில், முத்தூர், காங்கேயம் ஆகிய வட்டார பகுதிகளில் அதிக அளவில் முருங்கைக்காய் விளைவிக்கப்படுகிறது. அதில் மூலனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. முருங்கைக்கு ஏற்ற மண் வளம், குறைவான நீர், மிக குறைவான பராமரிப்பு செலவு ஆகிய காரணத்தால் விவசாயிகளால் விருப்பத்து டன் சாகுபடி செய்யப்படு கிறது. ஆண்டில் பத்து மாதங்கள் மகசூல் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டு இதன் சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது.

    மேலும் மூலனூர் முருங்கைக்கு ருசி அதிகம் என்பதால் பொதுமக்கள் மத்தியில் நுகர்வு அதிகம் உள்ளது. வெள்ளகோவிலில் வாரத்தில் ஞாயிற்றுக்கிழ மைகளில் நடைபெறும் முருங்கைக்காய் சந்தைக்கு மூலனூர் விவசாயிகளால் டன் கணக்கில் விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

    வெளியில் இருந்து வரும் மொத்த வியாபாரிகள், முருங்கைக்காய்களை விவசாயிகளிடமிருந்து வாங்கி சென்னை, திருச்சி, கோவை, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். மேலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- திருச்சி, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களிலும் அதிக அளவில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது என்றாலும் மூலனூர் பகுதியில் சாகுபடி செய்யும் குட்டை ரக முருங்கைக்கே ருசி அதிகம். எங்கள் பகுதி மண் வளத்தால் தனி ருசி ஏற்படுகிறது. .அதனால் தான் மக்களால் விரும்பி வாங்கி செல்கிறார்கள். இந்திய அளவில் மூலனூர் முருங்கை க்கு கிராக்கி அதிகம். இந்த நிலையில் தமிழக அரசு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சிய ளிக்கிறது. இதனால் உற்பத்தியும் லாபமும் அதிகரிக்க வாய்ப்பு ள்ளது. தமிழக அரசுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×