என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முருங்கை ஒரு கிலோ ரூ.130"

    • கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் முருங்கை மரத்தில் பூக்கள் உதிர்ந்து வருவதால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது
    • தை மாதம் பிறந்த பிறகு முகூர்த்த நாட்கள் வந்தால் மட்டுமே காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநில காய்கறிகள் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் தற்போது பெரும்பாலான காய்கறிகள் வரத்து குறைந்தும் விவசாயிகளுக்கு லாபம் இல்லாத நிலை உள்ளது.

    குறிப்பாக கடந்த 2 வாரங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் முருங்கை மரத்தில் பூக்கள் உதிர்ந்து வருவதால் விளைச்சல் கடுமையாக பாதிக்க ப்பட்டது. இதனால் உள்ளூர் முருங்கை வரத்து அடியோடு குறைந்தது. நாசிக் மற்றும் பரோடா நகரில் இருந்து நாள் ஒன்றுக்கு 25 டன் முருங்கை வருகிறது.

    இவையும் கிலோ ரூ.100 முதல் ரூ.130 வரை விற்பனையாகி வருகிறது. இவ்வகை காய்கள் பெரும்பாலும் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அடுத்து வரும் வாரங்களிலும் பனியின் தாக்கம் அதிகரி ப்பால் உள்ளூர் காய்கறி வரத்து குறைந்தே இருக்கும் என வியாபாரிகள் தெரி வித்தனர்.

    இதேபோல் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.80க்கும், தக்காளி 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.110 வரையிலும் விற்பனையாகி வருகிறது. வெங்காயம் ஓரளவுக்கு கைகொடு த்தாலும் தக்காளி விலை தொடர்ந்து விவசாயிகளை நஷ்டப்படுத்தி வருகிறது.

    இேதபோல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூசணிக்காய் வரத்து அதிகமாக இருக்கும். ஆனால் அதற்கும் சரியான விலை கிடைக்க வில்லை. கிலோ ரூ.5 முதல் ரூ.6 வரை மட்டுமே விற்பனையாவதால் வெளிமாநில வியா பாரிகளும் பூசணிக்காயை விற்பனைக்கு கொண்டு வராமல் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    தை மாதம் பிறந்த பிறகு முகூர்த்த நாட்கள் வந்தால் மட்டுமே காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பா ர்க்கின்றனர்.

    ×