search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணராயபுரத்தில் முருங்கை சீசன் துவக்கம்
    X

    கிருஷ்ணராயபுரத்தில் முருங்கை சீசன் துவக்கம்

    • கிருஷ்ணராயபுரத்தில் முருங்கை சீசன் துவங்கியது
    • ஒரு கிலோ முருங்கை 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படு கிறது

    கரூர்:

    கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பகுதியில் முருகைக்காய் சீசன் தொடங்கியுள்ளது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பழைய ஜெயங்கொண்டம், புதுப்பட்டி, லட்சுமணம்பட்டி, பாப் பக்காப்பட்டி, மலையாண்டிப்பட்டி, கோரக்குத்தி, மணவாசி, சிவாயம், ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவ லாக, முருங்கைக்காய் சாகுபடி செய்துள்ளனர். தற்போது முருங்கை செடிகளில் பூக்கள் பூத்து வருகிறது.இதில் முருங்கை பிஞ்சுகள் அதிகமாக காய்க்க தொடங்கியுள்ளன.

    நன்கு தரமாக வளர்ச்சியடைந்த முருங்கைக் காய்கள் அறுவடை செய்யப்பட்டு, கரூர், தோகைமலை, குளித்தலை, முசிறி ஆகிய இடங்களில் செயல்படும் காய்கறி மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. தற்போது சீசன் துவக்கம், வரத்து அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ முருங்கை 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படு கிறது. வரும் வாரங்களில் முருங்கை விலை உயரும் என விவசாயிகள் எதிர் பார்த்துள்ளனர்.





    Next Story
    ×