என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முருங்கைக்காய் விலை கிடுகிடு உயர்வு
- கொள்முதல் நிலையத்திற்கு சுற்று வட்டார பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த முருங்கைக் காயை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
- மர முருங்கை ,செடி முருங்கை,கரும்பு முருங்கை அனைத்து ரகமும் கிலோ 110 ரூபாய்க்கு விலைபோனது.
வெள்ளகோவில் :
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் முருங்கை மார்க்கெட்டுக்கு கடந்த வாரம் குறைந்த அளவே வரத்து வந்த நிலையில் கிலோ ரூ.90 க்கு விற்பனையானது. இந்நிலையில் இந்த வாரம் 300 கிலோ வரத்து வந்திருந்ததால் விலை ரூ.110க்கு உயர்ந்து விற்பனையானது.
திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளகோவில் ,மூலனூர், தாராபுரம், முத்தூர் ,குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் முருங்கை ஆண்டு பயிராக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.தொடர் மழை மற்றும் காற்று காரணமாக பூக்கள் உதிர்வால் முருங்கை இந்த வாரத்தில் வரத்து குறைவு காரணமாக வெள்ளகோவில் முருங்கை கொள்முதல் நிலையத்தில் முருங்கைக்காய் கிலோ ஒன்றுக்கு 110 ரூபாய்க்கு விற்பனையானது.
வெள்ளகோவிலில் இயங்கும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு சுற்று வட்டார பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த முருங்கைக் காயை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதனை வியாபாரிகள் வாங்கி கோவை, சென்னை மார்க்கெட்டுக்கு அனுப்புகின்றனர். மேலும் அருகில் உள்ள ஒட்டன்சத்திரம் மார்கெட்டுக்கும் விவசாயிகள் முருங்கையை விற்பனைக்கு கொண்டு செல்வர்.இந்த வாரம் மர முருங்கை ,செடி முருங்கை,கரும்பு முருங்கை அனைத்து ரகமும் கிலோ 110 ரூபாய்க்கு விலைபோனது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், முருங்கைக்கு நிலையற்ற விலையால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், இந்த பகுதியில் அதிக முருங்கை சாகுபடி நடைபெற்று வருவதால், இங்கு முருங்கை பொருட்களை பவுடராக்கும் தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டாக உள்ளது. தொழிற்சாலை அமைக்கப்பட்டால் ஒரு சீரான விலை கிடைக்கும் வாய்ப்பு இருக்கும். தற்போது பூக்கள் உதிர்வால் விளைச்சல் குறைந்த நிலையில் இருப்பதால் விலை உயர்ந்து விற்பனையானது எனக்கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்