என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முருங்கை காய்கள்"
- ஒரு கிலோ செடி முருங்கை ரூ.12-க்கும், மர முருங்கை ரூ.8-க்கும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
- அரசு முருங்கை பவுடர் தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி, மாம்பாறை, கோவிந்தாபுரம், அய்யம்பாளையம், கள்ளிமந்தயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முருங்கைக்காய் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்த முருங்கைக்காய்கள் ஒட்டன்சத்திரம் மற்றும் மார்க்கம்பட்டி பகுதியில் உள்ள சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது முருங்கை வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.100-க்கு விற்ற முருங்கை தற்போது விலை கடுமையாக சரிந்துள்ளது.
ஒரு கிலோ செடி முருங்கை ரூ.12-க்கும், மர முருங்கை ரூ.8-க்கும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. பல்வேறு இன்னல்களுக்கிடையே விவசாயம் செய்து காய்கறிகளை சந்தைக்கு கொண்டு வந்தால் செலவு செய்த பணத்திற்கு கூட விலை கிடைக்காததால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். இதனால் பெரும்பாலான விவசாயிகள் முருங்கை காய்களை கால்நடைகளுக்கு தீவனமாக போட்டு வருகின்றனர்.
நிலத்தை உழுது பயிரிட்டு முறையாக தண்ணீர் பாய்ச்சி, உரம் வைத்து பராமரித்து வருடம் முழுவதும் வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காதது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதற்கு அரசு தீர்வு காணவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சீசன் காலங்களில் அதிகளவில் முருங்கை விளைகிறது. இதனை பவுடராக்கி வருடம் முழுவதும் பயன்படுத்தலாம். இதற்கு அரசு முருங்கை பவுடர் தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
- ஞானசேகர் தன்னுடைய நிலத்தில் கரும்பு, நெல், மரவள்ளி உள்ளிட்டவை சாகுபடி செய்து வருகிறார்.
- முருங்கை மரத்தை இயற்கை முறையில் தொழு உரம், புண்ணாக்கு உள்ளிட்டவை வைத்து பராமரித்து வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை மண்ணாடிப்பட்டு அருகே உள்ள சுத்துக்கேணி கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகர்.
விவசாயியான இவர் தன்னுடைய நிலத்தில் கரும்பு, நெல், மரவள்ளி உள்ளிட்டவை சாகுபடி செய்து வருகிறார். இவரது வீட்டு தோட்டத்தில் முருங்கை மரம் வைத்துள்ளார்.
இந்த முருங்கை மரத்தை இயற்கை முறையில் அதாவது தொழு உரம், புண்ணாக்கு உள்ளிட்டவை வைத்து பராமரித்து வருகிறார்.
இதில் தற்போது முருங்கைக்காய்கள் காய்த்துள்ளது. ஒவ்வொரு காயும் குறைந்தபட்சம் 5 அடி நீளம் உள்ளது. இது அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சாதாரணமாக ஒரு முருங்கைக்காய் அதிகபட்சம் 2 அடி இருக்கும்.
ஆனால், ஞானசேகரன் தோட்டத்தில் இருக்கும் முருங்கைக்காய்கள் 5 அடி நீளம் இருப்பதால் அதனை அப்பகுதி மக்கள் அதிசயத்துடன் பார்த்து செல்கிறார்கள்.
இதுகுறித்து விவசாயி ஞானசேகர் கூறுகையில், இயற்கை முறையில் பயிர் பாதுகாப்பு செய்யப்பட்டு வரும் இந்த முருங்கை 5 அடி நீளமுள்ள காய்கள் காய்த்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அனைவரும் வந்து இதனை ஆச்சரியத்துடன் பார்த்து செல்வதாகவும் இந்த மரத்திலிருந்து பதிவு போட்டு தங்களுக்கு தருமாறு கேட்டு செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்