search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dress"

    • காஞ்சிபுரம் பட்டு சேலைகள் நூலிலேயே சாயம் ஏற்றிய பின் நெய்யப்படுவதாகும்.
    • துணிகளுக்கு இயற்கை சாயங்களை உபயோகித்து வந்தனர் நம் முன்னோர்கள்.

    வண்ணங்கள் நம் கண்களுக்கு அழகையும் மனதிற்கு இனிமையையும் அளிக்கக் கூடியவை. வண்ணங்கள் இல்லாத வாழ்க்கை வெறுமை. இந்த காரணத்தினால் தான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வண்ணங்கள் கொண்டு ஓவியங்கள் தீட்டப்பட்டன. நம் தமிழக கோயில்களிலும் அஜந்தா எல்லோரா குகைகளிலும் இன்னும் உலகில் பல்வேறு இடங்களிலும். இன்றும் அழகாய் வண்ணமயமாய் இருக்கும் ஓவியங்கள் எல்லாமே இயற்கையான பொருட்களில் இருந்து எடுக்கப்பட்ட சாயங்களினால் தீட்டப்பட்டவையே. காலத்தை கடந்து நிற்கும் இயற்கை சாயங்களின் அற்புத தன்மையை அவை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. துணிகளுக்கும் இவ்வாறே இயற்கை சாயங்களை உபயோகித்து வண்ண உடைகளை அணிந்து வந்தனர் நம் முன்னோர்கள்.

    ஆனால் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் செயற்கை சாயங்கள் துணிகளில் கொண்டுவரப்பட்டன. செயற்கை சாயங்கள் வசதியாகவும் செலவு குறைவாகவும் இருந்த காரணத்தினால் அவைகள் இயற்கை சாயத்திற்கு மாற்றாக எல்லா இடங்களிலும் குறிப்பாக துணி நெசவுகளில் உபயோகப்படுத்தப்பட ஆரம்பித்தது. ஆனால் இந்த செயற்கை நிறமூட்டிகளினால் நச்சு கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு தாக்கம் ஏற்படுத்தக் கூடியதாக இருப்பதை இப்போது அனைவரும் உணர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இயற்கை சாயங்களுக்கு நாம் ஏன் மாறக்கூடாது என்று சமுதாய அக்கறை கொண்டவர்களும் புதுமை நோக்கம் கொண்டவர்களும் நினைக்கத் தொடங்கினர். அவ்வாறு நினைத்த ஆர்எம்கேவி நிறுவனத்தினர் களின் கருத்தில் உதித்து பத்தாண்டு கால ஆராய்ச்சிகளுக்கு பின்பு டஜன் கணக்கில் இயற்கை சாயங்களை தயாரிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து பிரத்தியேக உத்திகளையும் கண்டுபிடித்து அந்த இயற்கை சாயங்களை தங்கள் துணிகளில் ஏற்றி அழகான பட்டு சேலைகளை நெய்து உள்ளனர்.

    இதைப் பற்றி கூறிய ஆர்எம்கேவி நிறுவனத்தினர், "ஆர்எம்கேவி நேச்சுரல்ஸ் என்பது கைகளால் நெய்யப்பட்ட 100% சுத்தமான இயற்கை சாயங்களால் ஆன காஞ்சிபுரம் பட்டு சேலைகளின் கலெக்சன். இயற்கை சாயங்களை உருவாக்கும் பண்டைய கால வழிமுறைகள் காலப்போக்கில் அழிந்து விட்டன. அவற்றை பற்றி தெரிந்தவர்களும் மிகக் குறைவான எண்ணிக்கைகளில் உள்ள கைவினைஞர்கள் மட்டுமே.

    நாங்கள் இயற்கை சாயங்களை தயாரிப்பதற்கான வழிமுறைகளை கண்டு அறிந்ததோடு எங்கள் முயற்சியிலேயே பிரத்தியேக நிறங்களையும் புதிதாக உருவாக்கியுள்ளோம். நேச்சுரல்ஸ் கலெக்சன்ஸ் சேலைகள், மஞ்சுஸ்தா ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட உயரிய சிகப்பு மற்றும் ஆம்பர் நிற சாயங்களை கொண்டுள்ளது. அரக்கு மிகவும் ஆழ்ந்த கருஞ்சிவப்பு நிறத்தை உருவாக்கவும், இண்டிகோ நீல நிற சாயத்தையும், வெந்தயம், நெல்லிக்கனி, சிவப்பு மண், மாதுளை பழத்தோல்கள், மல்பெரி இலைகள் மற்றும் சாமந்திப்பூ போன்றவை சாயங்களை உருவாக்குவதற்கு பயன்படும் இயற்கை உட்பொருள்களில் சிலவாகும்.

    துணியை நெய்து சேலை உருவாக்கிய பின் தான் பொதுவாக துணிக்கு சாயம் ஏற்றப்படும். ஆனால் காஞ்சிபுரம் பட்டு சேலைகள் நூலிலேயே சாயம் ஏற்றிய பின் நெய்யப்படுவதாகும். அந்த முறையில் நாங்கள் பட்டு நூல்கள் தயாரிக்கும் செயல்முறை நிறைவு பெற்றவுடன் அவற்றிற்கு இயற்கையான மற்றும் மக்கும் தன்மை கொண்ட சாயங்களை ஏற்றி தேர்ந்த நெசவாளர்களால் தறிகளில் நெய்கிறோம். எனவே இனி வாடிக்கையாளர்கள் இயற்கை முறையில் சாயம் இடப்பட்ட காஞ்சிபுரம் பட்டு சேலையை தங்கள் கலெக்ஷனில் இனி வரும் விழா காலங்களில் வாங்கி சேர்த்துக் கொள்ளலாம்.

    ஆர்எம்கேவி லெனோ சேலைகள்

    ஆர்எம்கேவி லெனோ சேலைகள் என்ற புதிய லெனோ தொழில்நுட்பம் பற்றி அவர்கள் மேலும் கூறுகையில் "40 சதவீதம் எடை குறைக்கப்பட்டு கைகளால் நெய்யப்படும் காஞ்சிபுரம் பட்டு சேலைகள் இவை. பட்டுத்துணி நெசவில் லெனோ தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையை ஆரம்கேவி பெற்றுள்ளது. மிக நேர்த்தியான பட்டு நூல் மற்றும் தூய்மையான சரிகை ஆகியவற்றால் தயாரிக்கப்படும் இந்த அசல் காஞ்சிபுரம் பட்டு சேலைகள் காற்றோட்டமிக்க வடிவமைப்புடன் கைகளால் நெய்யப்பட்ட புதுமையான படைப்பாகும். மிக லேசான எடை கொண்ட இந்த சேலையை தற்கால இளைஞர்களை மனதில் கொண்டு உருவாக்கியுள்ளோம்.

    இந்த லெனோ சேலைகளில் பளிச்சென்ற வண்ணங்கள் மற்றும் பிரம்மிப்பூட்டும் டிசைன்கள் வழங்கப்பட்டுள்ளது. எங்களின் பிரத்தியேகமான புதுமை படைப்புகள் அனைத்தையும் போலவே லினோ பட்டுப் புடவைகளும் தமிழ்நாட்டில் உள்ள ஆர்எம்கேவி மையத்தில் கைகளால் நெய்யப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. தரமான நேர்த்தியான பட்டு நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றை எங்கள் தேர்ந்த நெசவாளர்கள் காப்புரிமை பெற்ற லினோ நெசவு தொழில்நுட்பத்தின் மூலம் கைகளால் நெய்ய்கிறார்கள். இதனால் இந்த காஞ்சிபுரம் பட்டு சேலைகள் மிகவும் லேசாகவும் காற்றோட்டம் கொண்டதாகவும் இளைஞர்களை கவரும் விதத்தில் உள்ளது. எளிமை மற்றும் உயிர்ப்பு கொண்ட இந்த சேலைகளை எந்த விழாவிற்கும் கொண்டாட்டத்திற்கும் வாங்கி அணியலாம்.

    1924 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆர்எம்கேவி நிறுவனம் கைகளால் நெய்யப்படும் காஞ்சிபுரம் பட்டு சேலைகளுக்கு புகழ் பெற்றது. இதன் கலையம்சம் மற்றும் புதுமை ஆகியவற்றிற்காக பல தேசிய விருதுகளை இந்நிறுவனம் பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்கது ஆர்எம்கேவி டிசைன் ஸ்டூடியோ பல தனித்துவமான பட்டு சேலைகளை உருவாக்கியுள்ளது. சின்னஞ்சிறு கிளியே, தர்பார் கிருஷ்ணா, ஐஸ்வர்ய பூக்கள், குரல் ஓவியம் போன்ற தீம் புடவைகளும், எந்த பக்கமும் திருப்பி அணிந்து கொள்ளக்கூடிய கிராண்ட் ரிவர்சல் புடவைகள், 50,000 நிறங்கள் கொண்ட சேலை, வர்ணஜாலம் ரகங்கள், நேச்சுரல் சில்க் ரகங்கள் மற்றும் லெனோ லைட் சேலை போன்றவை எங்களின் தனித்துவத்தை பறைசாற்றுபவைகள் ஆகும். இவற்றைக் கடந்து எங்களிடத்தே பேன்சி சேலைகள் எம்ராய்டரி சேலைகள் சல்வார் கம்மீஸ் பெண்கள் ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்தியேக ரகங்கள் என்று பலவிதமான ஆடைகளும் விற்பனைக்கு உள்ளன," என்றனர்.

    • கம்பளி ஆடைகளை பராமரிக்க பயன்படுத்தக்கூடிய எளிய குறிப்புகள் உள்ளன.
    • இந்த சிறிய குறிப்புகள் உங்கள் ஆடைகளின் ஆயுளை அதிகரிக்கும்

    மற்ற ஆடைகளை விட கம்பளி ஆடைகளுக்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது, ஏனெனில் இவை மென்மையானவை மற்றும் மிக எளிதாக மங்கலாம் அல்லது சுருங்கலாம், எனவே இந்த வகையான ஆடைகளுக்கு சரியான கவனிப்பு தேவை.

    குளிர்காலத்தில் கம்பளி ஆடைகள் ஒவ்வொருவர் முகத்திலும் மலர்ச்சி தரும் ஒன்று, ஆனால் இந்த ஆடைகளுக்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படுவதால் அவற்றை கவனிப்பது கடினம், எனவே அவற்றை நன்றாக பாதுகாக்க வேண்டும், இல்லையெனில் ஒவ்வொரு குளிர்காலத்திலும் அவற்றை புதிதாக வாங்க வேண்டும்.

    நம் கம்பளி ஆடைகளை நாம் நன்றாக கவனித்துக் கொண்டால் இவை நீண்ட காலம் நீடிக்கும். உங்கள் கம்பளி ஆடைகளை பராமரிக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில எளிய குறிப்புகள் இங்கே உள்ளன.

    பொதுவான குறிப்புகள்

    1.ஒவ்வொரு பயன்பாட்டிற்குப் பிறகும் உங்கள் கம்பளி ஆடைகளை பிரஷ் கொண்டு நன்றாக துடைக்க வேண்டும், இதனால் தூசிகள் மீது ஒட்டாது.

    2.எப்பொழுதும் கம்பளி ஆடைகளை பேட் செய்யப்பட்ட ஹேங்கர்களில் தொங்கவிடவும் மற்றும் துணிகளின் அனைத்து பட்டன்கள் மற்றும் ஜிப்பர்கள் எப்போதும் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்யவும்.

    3.உலர் துணிகளை கவனமாக மடித்த பிறகு உலர்த்தி பைகளில் வைக்கலாம். துணிகளைப் போடுவதற்கு முன், உங்களின் பணம், அணிகலன்கள், நகைகள் போன்றவை ஸ்வெட்டர்கள் அல்லது ஜாக்கெட்டுகளின் பாக்கெட்டுகளில் இருந்தால் அவற்றை அகற்றவும்.

    4.ஆடைகள் ஈரமாக இருந்தால் அவற்றை அறை வெப்பநிலையில் எப்போதும் உலர்த்தவும், அவற்றை உலர வைக்க ஹீட்டர் அல்லது சூரிய ஒளியைப் பயன்படுத்த வேண்டாம்.

    5.நீங்கள் துணிகளை நீண்ட நேரம் அணிய விரும்பினால், அவற்றை நன்றாக துவைத்த பின் அணியவும். அதனால் புழுக்கள் வராமல் இருக்கும்.

    6. நீங்கள் திரும்ப பயன்படுத்த இருக்கும் ஆடைகளை வைக்கும் பெட்டியில் அல்லது அல்மிராக்களில் எப்பொழுதும் உலர்ந்த வேப்ப இலைகள், ஃபீனைல் உருண்டைகளை போட்டு வைக்கவும்.

    கம்பளி துணிகளை துவைக்கும் போது முன்னெச்சரிக்கைகள்

    1.கம்பளி துணிகளை துவைக்கும்போது வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தவும்.

    2. லேசான சோப்பு, மென்மையான திரவ சோப்பு அல்லது அதிக இரசாயனங்கள் இல்லாத வேறு ஏதேனும் லேசான திரவத்தைப் பயன்படுத்தவும். இந்த சோப்புகள் உங்கள் ஆடைகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் மற்றும் வண்ணங்கள் மங்காமல் தடுக்கும்.

    3. துணிகளை 4-5 நிமிடங்களுக்கு சோப்புப் பொருட்களில் ஊறவைத்து, மென்மையாக கைகளால் தேய்க்கவும் (பிரஷ் பயன்படுத்த வேண்டாம் அல்லது சலவை இயந்திரத்தில் துவைக்கவும்) துணிகளை சாதாரண நீரில் துவைக்க வேண்டும், இதனால் டிடெர்ஜென்ட் அவற்றில் இருந்து முற்றிலும் அகற்றப்படும்.

    4.தண்ணீரை அகற்றுவதற்கு மென்மையான டவல்களுக்கு இடையில் துணிகளை அழுத்தவும், பிழிய வேண்டாம்.

    5. கம்பளி ஆடைகளை உலர வைக்க ஹேங்கரில் தொங்கவிடாதீர்கள், செய்தித்தாள், மடிப்பு படுக்கை போன்றவற்றின் மீது எப்போதும் நேராக வைக்கவும்.

    கம்பளி ஆடைகளை சலவை செய்யும் போது முன்னெச்சரிக்கைகள்

    1.நீராவி இஸ்திரியை எப்போதும் பயன்படுத்தவும் மற்றும் கம்பளி அமைப்பில் வைக்கவும்.

    2.துணிகளை உலர வைக்க அவற்றை அயர்ன் செய்யாதீர்கள்.

    3.முடிந்தால் துணிகளை தலைகீழாக (உள் பக்கம்) இருந்து அயர்ன் செய்யவும். முன் பக்கத்தை அயர்ன் செய்ய வேண்டுமானால் எப்போதும் பருத்தி துணியை கம்பளி துணியின் மேல் போடவும்.

    4. ஆடைகள் முழுவதும் இஸ்திரி பெட்டியால் அழுத்தி தேய்க்க வேண்டாம், மெதுவாக அழுத்தவும்.

    இந்த சிறிய குறிப்புகள் உங்கள் ஆடைகளின் ஆயுளை அதிகரிக்கும், எனவே அவற்றைப் பயன்படுத்தி வித்தியாசத்தைப் காணுங்கள்.

    • 'லட்கான்', பல்வேறு ரகங்கள் மற்றும் வடிவங்களில் கிடைக்கிறது.
    • இதை வீட்டிலேயே எளிதாக தயாரிக்க முடியும்.

    லெகெங்கா, சுடிதார், குர்த்தி, பிளவுஸ், பாவாடை என அனைத்து விதமான ஆடைகளிலும் லட்கானைத் தொங்க விட்டு அலங்கரிக்கிறார்கள். பெண்கள் ஜடையில் சூடிக்கொள்ளும் 'குஞ்சம்' போன்ற அமைப்பில் இருக்கும் 'லட்கான்', பல்வேறு ரகங்கள் மற்றும் வடிவங்களில் கிடைக்கிறது. இதை வீட்டிலேயே எளிதாக தயாரிக்க முடியும். அதற்கான குறிப்புகள் இங்கே…

    தேவையான பொருட்கள்: துணி, ஊசி, நூல், சில்க் கயிறு, அளவுகோல், கத்தரிக்கோல்.

    செய்முறை: துணியில் 2x2 அங்குல நீள அகலத்தில் இரண்டு துண்டுகள் வெட்டிக்கொள்ளவும். அதனைப் பாதியாக மடித்து இரண்டு எதிரெதிர் முனைகளை ஒன்றாகத் தைக்கவும். அதில் ஒரு முனை மட்டும் திறந்து இருக்கும்படி செய்யவும். இப்போது சில்க் கயிற்றின் முனையில் முடிச்சு போடவும். தைத்து வைத்திருக்கும் துணிக்கு உள்ளே கயிற்றை நுழைத்து பின்பு வெளியே எடுத்து துணியைத் திருப்பவும். பிறகு திறந்திருக்கும் மற்றொரு முனையையும் ஊசி நூல் கொண்டு தைக்கவும். இதேபோல் மற்றொரு சில்க் கயிற்றிலும் செய்யவும்.

    அடுத்ததாக, துணியில் 4x4 அங்குல நீள அகலத்தில் 16 துண்டுகள் வெட்டிக்கொள்ளவும். சதுர வடிவ துணியின் ஒரு முனையை அதன் எதிர் முனையுடன் வைத்து மடித்தால் முக்கோண வடிவம் கிடைக்கும். அதைப் பக்கவாட்டில் மடித்தால், சிறிய அளவிலான முக்கோண வடிவ துணி கிடைக்கும். இப்போது முக்கோணத்தின் அடிப்பகுதியில் உள்ள துணிகளை ஒன்றாக வைத்து தைக்கவும். இதேபோல் 16 துண்டு துணிகளையும் தைக்க வேண்டும். பின்னர், முக்கோண துணிகளை உள்ளிருந்து வெளியே திருப்பிக்கொள்ளவும். சில்க் கயிற்றில் ஏற்கனவே தைத்த சதுர வடிவ துணிக்கு கீழே எதிர் எதிர் முனையில் முக்கோண துணி துண்டுகளை வைத்து தைக்கவும். ஒரு கயிற்றில் எட்டு முக்கோண துணிகளைத் தைக்கலாம். மற்றொரு கயிற்றில் எட்டு முக்கோண துணிகளை எதிர் எதிர் திசையில் ஒன்றன் கீழ் ஒன்றாக வைத்து தைத்தால் அழகான 'லட்கான்' தயார்.

    குறிப்பு: லட்கானில் உங்களின் கற்பனைக்கு ஏற்ப மணிகள், கற்கள், கண்ணாடிகள், பாசிகள், நூல் துண்டுகள் போன்றவற்றைச் சேர்த்து அலங்கரிக்கலாம்.

    • செமி பேம்பு புடவைகள் எடை குறைவாக இருக்கும்.
    • ப்யூர் சில்க் புடவைகள் குறைந்த எடை கொண்டது.

    ஒவ்வொரு பண்டிகை காலத்திற்கும் புதுவிதமான துணி வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. அதுவும் தீபாவளி சமயம் என்றால் புதுப்புடவைகளின் வரவிற்கு அளவே இல்லை என்று சொல்லலாம். சரி என்னென்ன புடவைகள் வந்திருக்கின்றன. என்னுடன் ஷாப்பிங் வரத் தயாரா?

    *சினியா சில்க் புடவைகள் : மிகவும் மென்மையான, குறைந்த எடை கொண்ட இந்தப் புடவைகள் பனாரசி பார்டர்களுடன் வந்திருக்கும் ப்யூர் சில்க் புடவைகள் ஆகும். இந்த புடவைகளில் ஷார்ட் அண்ட் லாங் பார்டர்களுடன் பாரம்பரிய வண்ணங்களில் ப்ரோக்கேட் மற்றும் ஜியாமெட்ரிக் டிசைன்களில் ஏராளமான புதுவரவுகள் வந்திருக்கின்றன. பார்டரும், பல்லுவும் ஒரே நிறத்தில் இருக்க அதற்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் உடல் பகுதியானது இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு இருப்பது மிகவும் அழகாக உள்ளது. உடல் பாகம் சிவப்பு நிறத்திலும் பார்டர் மற்றும் பல்லு பச்சை நிறத்தில் இருப்பது போலவும், உடலுக்கு கிளி பச்சை நிறம் என்றால் பார்டர் மற்றும் பல்லு மஜந்தா நிறத்தில் இருப்பது போலவும்,உடல் பாகம் மஞ்சள் நிறத்தில் இருந்தால் பார்டர் மற்றும் பல்லு பச்சை நிறத்தில் இருப்பது போலவும், உடலுக்கு பீச் கிரீன் நிறம் என்றால் பார்டர் மற்றும் பல்லு கத்தரிப்பூ நிறத்தில் இருப்பது போலவும் கான்ட்ராஸ்ட்டாக வண்ணங்களை கொடுத்து இந்தப் புடவைகளை மிகவும் அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள். இந்தப் புடவைகள் அனைத்திற்கும் பிளெயின் வண்ணத்தில் பிளவுஸ் இணைக்கப் பட்டிருப்பது கூடுதல் சிறப்பாக இருக்கின்றது.

    இந்த சினியா சில்க் புடவைகளிலேயே காப்பர் மற்றும் சில்வர் பார்டர்களுடன் வரும் டிஜிட்டல் பிரிண்டிங் புடவைகள் பார்வைக்கு எளிமையாகவும் அதே நேரத்தில் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அணிவதற்கு நேர்த்தியாகவும் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்திருப்பது அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கின்றது.இந்த புடவைகளின் மேல் மற்றும் கீழ் பகுதியில் மிகவும் சிம்பிளான சரிகை பார்டர்கள் கொடுக்கப்பட்டிருப்பது அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளது.

    *செமி பேம்பு புடவைகள் : எடை குறைவாக இருக்கும் இந்தப் புடவைகள் பத்திக் டிசைன்களுடன் எளிமையான கடி சரிகை பார்டர்களுடன் பல்வேறு வண்ணங்களில் வாங்கக் கூடிய விலையில் வந்திருப்பது வரவேற்கும் விதத்தில் இருக்கின்றது. உடல் பகுதி மற்றும் பல்லு ஒரே வண்ணத்திலும் , உடல் பகுதியும் பல்லுவும் காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் இருப்பது போன்றும் புடவைகள் வந்துள்ளன.

    *செமி ரா சில்க் புடவைகள் : வேறுபட்ட வண்ணங்கள் மற்றும் வித்தியாசமான டிசைன்களில் பார்டர்கள் இல்லாமல் வரும் இந்த செமி ரா சில்க் புடவைகளின் அழகைக் கூற வார்த்தைகளே இல்லை எனலாம்.எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஃபிளோரல் டிசைன்கள் உடல் பகுதியிலும் பல்லுவிலும் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு கண்கவர் வண்ணங்களில் வந்திருக்கும் இந்த புடவைகளை உடுத்திப் பார்க்கும் பொழுதுதான் அதனுடைய அழகு முற்றிலுமாகத் தெரியும்.சரிகை மற்றும் நூலினால் நெய்யப்பட்டிருக்கும் டிசைன்கள்,பார்ப்பவர்களை வாங்கத் தூண்டும் வண்ணங்களில் வந்திருக்கும் இந்தப் புடவைகளை மிகவும் அட்டகாசம் என்று சொல்லலாம்.

    *பனாரசி ஜார்ஜெட் புடவைகள்: அனைத்து வகையான விழாக்களுக்கும் அணிந்து கொள்ளும் விதத்தில் ரிச் ஆன்டிக் பார்டர்கள் மற்றும் கான்ட்ராஸ்ட் வண்ணங்களில் அசத்தலாக வந்திருக்கும் இந்தப் புடவைகள் நம்மிடம் கட்டாயம் இருக்க வேண்டிய புடவைகளில் ஒன்று என்று உறுதியாகச் சொல்லலாம். ஆரஞ்சு வண்ணத்திற்கு வெளிர் நீலம், க்ரீம் வண்ணத்திற்கு மஜந்தா, மஞ்சள் வண்ணத்திற்கு மஜந்தா,க்ரீம் வண்ணத்திற்கு கருப்பு என ஆன்டிக் பார்டர்களுடன் வரும் இந்தப் புடவைகள் விருந்து உபச்சார நிகழ்ச்சிகள், வரவேற்பு நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள் என அனைத்திற்கும் உடுத்திச்செல்வதற்கு ஏற்றவை.

    *செமி லினன் புடவைகள் : மென்மையாகவும், உடுத்துவதற்கு எளிதாகவும், எடை குறைவாகவும், சிறு நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்வதற்கு ஏற்றவையாகவும் இருக்கும் இந்த புடவைகளில் பாந்தினி, கலம்காரி மற்றும் அஜ்ராக் என பலவிதமான பிரிண்ட்கள் செய்யப்பட்டு வருகின்றன.கடி ஜரி பார்டர்,மதுபானி பிரிண்டட் பார்டர், பைப்பிங் பார்டர் மற்றும் எளிமையான ஜரி பார்டர்கள் என இந்தப் புடவைகளை அருமையாக வடிவமைத்திருக்கிறார்கள்.அனைவரும் வாங்கக் கூடிய விலையில் இந்தப் புடவைகள் இருப்பது மற்றொரு சிறப்பாகும்.

    *பியூர் ஜூட் சில்க் : ஜரி மற்றும் சில்க் த்ரெட்டில் உடலில் சிறு எம்பிராய்டரியும், பார்டரில் அதைவிட சற்று பெரிய அளவில் எம்பிராய்டரி செய்யப்பட்டு எளிமையான பல்லுவுடன் வந்திருக்கும் இந்த ஜூட் சில்க் புடவைகள் உடுத்துவதற்கு எளிதாகவும் நேர்த்தியான தோற்றத்தைத் தருபவையாகவும் இருக்கின்றன.பல்லுவில் டாசில்ஸ் வைத்து வருவது புடவைக்கு கூடுதல் அழகைத் தருகிறது. ஜூட் சில்கில் ஜகார்ட் மற்றும் பார்டர்களுடன் வரும் புடவைகள் அருமையாக இருக்கின்றன.

    • அவினாசி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
    • 170 பேருக்கு சீருடை மற்றும் இனிப்பு வழங்கினார்

    அவினாசி :

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவினாசி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. அவினாசி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி தலைமை தாங்கி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் 170 பேருக்கு சீருடை மற்றும் இனிப்பு வழங்கினார். நல்லது நண்பர்கள் அறக்கட்டளை நிர்வாகி ரவிக்குமார், துளிர்கள் அமைப்பு ஸ்ரீகண்டன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    இவர்களுக்கான புத்தாடைகள் எச்.பி., பங்க் உரிமையாளர் ராஜ் மற்றும் அவரது துணைவியார் கீதா ராஜ் வழங்கினர். நிறைவாக சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி நன்றி கூறினார்.

    • துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
    • தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் செயல்பட்டுவரும் ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் தொண்டி சார்பில் தொண்டி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பெண்களுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

    செயலாளர் முருகேசன், பேரூராட்சி மன்ற தலைவி ஷாஜகான் பானு ஜவஹர் அலிகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பட்டய தலைவர் ஷேக் மஸ்தான் ராஜா வரவேற்றார். முன்னாள் துணை ஆளுநர் சண்முகம், முன்னாள் தலைவர் சிவராமகிருஷ்ணன், பொருளாளர் பாண்டி, ரஜினி பிரசாந்த், சீத்தாராமன், எல்லார்சி சீனிவாசன் செயல் அலுவலர் செல்வராஜ், மேற்பார்வையாளர் கோவிந்தராஜ் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • இந்தப் புடவைகளில் இருக்கும் டிசைன்களும் வகைகளும் ஏராளம் என்று சொல்லலாம்.
    • மகாராஷ்டிர மணப்பெண்களின் பாரம்பரிய புடவை என்று இந்த நவாரி புடவைகளைக் கூறலாம்.

    தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்பது கெஜப் புடவைகளை ஒத்து இருக்கும் புடவைகளை மகாராஷ்டிர மாநிலத்தில் நவாரி புடவைகள் என்று அழைக்கிறார்கள். இந்த ஒன்பது கெஜ புடவைகளை ஒவ்வொரு மராட்டியப் பெண்களும் விழாக்காலங்களில் தவறாமல் அணிந்து விழாக்களை கொண்டாடுகிறார்கள். அதிலும் குறிப்பாக விநாயகர் சதுர்த்தி, மராட்டிய புதுவருடப்பிறப்பு போன்ற விழாக்களில் மராட்டியப் பெண்கள் இந்த நவாரி புடவைகளை அணிந்து தங்க நகைகளால் தங்களை அலங்காரம் செய்து கொண்டு அவர்களது பாரம்பரிய நடனத்தை ஆடுவதைப் பார்க்க முடியும்.

    நவாரி புடவைகளின் தோற்றம்

    ஒன்பது கெஜப் புடவைகளான இந்த நவாரி புடவைகள் ஒரு வரலாற்றுச் சூழலைக் கொண்டவையாகும். மராட்டி ஆட்சிக்காலத்தின் போது, சக ஆண் வீரர்களுக்கு உதவி செய்வதற்காக பெண்களை பணியமர்த்தியதாகக் கூறப்படுகிறது.அவர்களுக்கு உதவும் பொழுது வசதியாக இருப்பதற்காக ஆண் கால்சட்டையை ஒத்த நவாரிபுடவைகளை மகாராஷ்டிரப் பெண்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அப்பொழுதிலிருந்தே இந்தப் புடவைகள் மகாராஷ்டிரப் பெண்களின் பாரம்பரிய உடையாக மாறிவிட்டது. இந்தப் புடவைகளை அணியும்போது மராட்டியப் பெண்கள் ஆண்களுக்கு சமமான அந்தஸ்தைப் பெறுவதாக நினைக்கிறார்கள்.

    கலாச்சார முக்கியத்துவம்

    மகாராஷ்டிர மணப்பெண்கள் தங்கள் திருமண விழாக்களில் தவறாமல் அணியும் ஒரு பாரம்பரிய புடவை என்று இந்த நவாரி புடவைகளைக் கூறலாம்.பொதுவாக ஒரு பாரம்பரிய பாணியை கொண்டிருக்கும் இந்தப் புடவைகளை மணப்பெண்கள் அணியும் பொழுது மிகவும் அழகாகவும், மென்மையாகவும் காட்சியளிக்கிறார்கள். குறிப்பாக மகாராஷ்டிராவின் பல மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி மற்றும் "குடி பாட்வா" போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் நவாரி புடவைகளை அணியாத பெண்களை நாம் காண்பது அரிது.

    நவாரி புடவையை உடுத்தும் முறை

    நாம் சாதாரணமாக புடவைகளை அணிந்து கொள்வதற்கு உள்பாவாடையை பயன்படுத்துவோம்.. ஆனால், இந்த நவாரி புடவைகளை அணிந்து கொள்வதற்கு உள்பாவாடையோ அல்லது ஷிம்மியோ அவசியமில்லை.இந்தப் புடவைகள் பெரும்பாலும் பருத்தியில் தயாரிக்கப்படுவதால் இந்தப் புடவைகளை முதல் முறையாக அணிந்தாலும் அவற்றை அணிந்து கொண்டு செல்வது சிரமமாக இருக்காது.

    # ஒரு ஜோடி இறுக்கமான ஸ்லாக்குகளை அணிந்து,மடிப்புகளைப் பாதுகாக்க, தொப்புளுக்குக் கீழே ஒரு மைய முடிச்சைக் கட்டி, உங்கள் இடதுபுறத்தில் ஒரு மீட்டர் நீளத்திற்கு புடவையை விட்டுவிட வேண்டும்.

    * இடது தோளில் உள்ள சேலையின் பல்லுவை எடுத்து, அதை போர்த்தி, உங்கள் தோள்பட்டையின் வலது முனைக்கு கொண்டு வரவேண்டும்.

    * இப்போது, சேலையின் மீதமுள்ள பகுதியுடன், 4-5 அங்குல மடிப்புகளை உருவாக்கத் தொடங்கவும்.

    * மடிப்புகளை மீண்டும் மடித்து, அவற்றை நேர்த்தியாக இழுத்து, நடுப்பகுதியை உள்ளிழுக்கவும்.

    * மீதமுள்ள மடித்த புடவையைக் கொண்டு வந்து, அதை உங்கள் இடுப்பின் வலது பக்கம் சுற்றிக்கொண்டு உங்கள் முன் பக்கம் கொண்டு வர வேண்டும்.கால்களுக்கு அருகில் இருக்கும் புடவையின் பகுதியை ஒரு அடுக்கில் மடித்து, முன்பக்கத்தில் இருந்து ஒரு டோத்தி பேண்ட் போல் தோன்றும் வகையில் உங்கள் இடுப்பில் செருக வேண்டும்.

    பல்வேறு வடிவமைப்புகள்

    இந்தப் புடவைகளில் இருக்கும் டிசைன்களும் வகைகளும் ஏராளம் என்று சொல்லலாம்.ஆரம்ப காலங்களில் பருத்தியில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த இவ்வகை புடவைகள் இப்பொழுது பட்டு மற்றும் சாட்டின் உட்பட மற்ற துணி வகைகளிலும் தயாரிக்கப்படுகின்றன.இந்தப் பாரம்பரிய புடவைகளில் கவர்ச்சிகரமான மலர்கள், உருவங்கள் மற்றும் வடிவங்களை பிரிண்ட் செய்து மிகவும் அழகாக வடிவமைக்கிறார்கள்.அரைக்கை பிளவுஸ் உடன் இந்த புடவைகளை அணிவதைக் காட்டிலும், முக்கால் கை மற்றும் ஸ்லீவ்லெஸ் போன்ற பிளவுஸ் டிசைன்களுடனும் இந்தப் புடவைகளை அணியும்போது அவை மிகவும் பிரமாதமான தோற்றத்தை உருவாக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

    பட்டு நவாரி புடவைகளின் பிரபலத்திற்கு அதன் அடர்த்தியான வடிவ பார்டர்களும் ஒரு காரணமாகும்.இந்த பார்டர்கள் பெரும்பாலும் வெள்ளி அல்லது தங்க நூலினால் எம்பிராய்டரி செய்யப்படுகின்றது.அப்படியே தைய்க்கப்பட்டு ஆயத்தமாக வரும் நவாரி புடவைகளை வாங்கி அணிந்து கொள்வதை இப்பொழுது பெண்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.இந்த புடவைகளை அணிந்து கொள்வதும் எளிது.

    சுவையான தகவல்கள்

    * மராட்டியப் பெண்களின் மிகவும் பிரபலமான ஆடைகளில் ஒன்றாக நவாரி புடவை கருதப்படுகிறது.

    * பண்டிகைகளின் போது பெண்கள் இந்தப் புடவைகளை அணிந்து வருவதைப் பார்க்கும் பொழுது அது மாநிலத்தின் பழமையான பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது.

    * சிவப்பு, நீலம் , பச்சை, மஞ்சள், ஆரஞ்சு போன்ற அடர்த்தியான வண்ணங்களில் பார்டர்கள் வைத்து வரும் இந்தப் புடவைகள் மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்தைத் தருவதாக இருக்கும் . இந்தப் புடவைகளை உடுத்தும் பொழுது மூக்கு புள்ளக்கு,ஒட்டியாணம்,காதணிகள், கருகமணி மாலை, சோக்கர்,நெற்றிச்சுட்டி, ஹாரம் மற்றும் கைகளில் கண்ணாடி வளையல் களுடன் கூடிய பிற வளையல்கள் போன்ற நகைகளை தவறாமல் அணிகிறார்கள்.

    * மராட்டிய மணப்பெண்கள் தங்களது திருமணத்திற்கு பைத்தானி பட்டினால் தயாரிக்கப்பட்ட நவாரி புடவைகளை தேர்ந்தெடுக்கிறார்கள்.மிகவும் மென்மையாக தங்க நிறத்தில் கிடைக்கும் இந்தப் புடவைகள் மராட்டிய மணமகளின் சரியான தேர்வாக இருக்கும்.

    • குழந்தை தவழ ஆரம்பித்த பிறகு, அதிக அளவில் ஆடைகள் தேவைப்படும்.
    • ஒரு சில துணிகள் மற்றும் நிறங்கள் மட்டுமே குளிர்காலத்திற்கு ஏற்றது.

    குழந்தைகளுக்கான ஆடைகளை தேர்ந்தெடுக்கும்போது, சவுகர்யம் மற்றும் சுலபமாக பராமரிப்பதை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் ஆடைகள் மென்மையானதாகவும், இழுதன்மையுடன் வளைக்கக் கூடியதாகவும், எரிச்சல் ஏற்படுத்தாதவாறும் இருக்க வேண்டும். ஈரப்பதம் இருந்தால் ஆவியாகி காற்றோட்டம் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். போதுமான காற்றோட்டம் இன்மை, ஈரத்தால் தோலில் அரிப்பு ஏற்படுத்தும் விளைவுகளை உண்டாக்கும். ஆடைகள் எளிமையானதாகவும், சிறப்பானதாகவும் செய்யப்பட்டு இருக்க வேண்டும். அழகிற்காக கத்தரித்து ஆடை அலங்கரிக்கப்பட்டிருந்தால் சலவை செய்யும்போது மிகுந்த கவனம் தேவைப்படும். மேலும், இது போன்று கத்தரித்து அலங்கரிக்கப்படுவது குழந்தைக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.

    பின்னப்பட்ட துணியால் ஆன ஆடைகள் உடல் அசைவுகளுக்கு ஏற்றவாறு இழுதன்மை பெற்று நீளும் திறன் பெற்றும் இருக்கும். எனவே குழந்தைக்கு பின்னப்பட்ட துணியாலான ஆடையை அணிவிப்பது மிகவும் எளிது. முன்பக்கம் அல்லது பின்பக்கத்தில் ஆடையின் திறப்பு மேல் இருந்து கீழ்வரை அமைத்து இருப்பது ஆடை அணிவித்தலை எளிமையாக்கும். முடிச்சு போட்டு கட்டுபவை அல்லது தட்டையான பொருத்துவான்கள் மிகவும் பொருத்தமாக இருக்கும். கழுத்துப் பகுதிக்கு இழுத்து கட்டக்கூடியவைகளை அநேகமாக பரிந்துரைப்பதில்லை. ஏனெனில், கட்டக்கூடிய நாடாவால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும். முடிச்சு போட்டு கட்டக்கூடியன அல்லது பொத்தான்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால், அவை பாதுகாப்பான முறையில் தைக்கப்பட்டுள்ளனவா என்பதை அடிக்கடி கவனிக்க வேண்டும்.

    குழந்தை தவழ ஆரம்பித்த பிறகு, அதிக அளவில் ஆடைகள் தேவைப்படும். முக்கியமாக குழந்தையின் பாதுகாப்பை மனதில் கொள்ள வேண்டும். சட்டையில் அழுக்குபடாதிருக்க சட்டையின் மேல் முழுவதுமாக அணியப்படும் ஆடையே இருபாலின குழந்தைகளுக்கும் எளிமையான ஆடையாகும். முக்கியமாக கால்கள் பிரியும் இடத்தில் கொக்கிகள் பொருத்தியிருந்தால் குழந்தைகளுக்கு டையாப்பர் மாற்றுவதற்கு உதவியாக இருக்கும். முழுவதுமாக மூடப்பட்ட ஆடையானது குழந்தைகளின் கால் முட்டிகளை மூடும் கவசமாக தரையில் இருந்து உராய்வதை பாதுகாக்கும். கால்சட்டையின் கால்பகுதி குழந்தையின் முட்டிகளுக்கு அதிக பலமளிக்க கூடியதாக இருப்பதால் நீடித்து உழைக்குமாறு இருப்பது அவசியம்.

    ஆரோக்கியம், தோரணை மற்றும் சுயமரியாதை ஆகியனவற்றிற்கு தகுந்த ஆடைகள் தேவைப்படுகிறது. சம்பாதிப்பதை எல்லாம் செலவு செய்பவரை விட வரவு செலவு திட்டமிட்டு வாழ்க்கை நடத்துபவர் பொதுவாக மிகுந்த மகிழ்வோடு, திருப்திகரமாகவும் வாழ்வார். நமது ஆசை மற்றும் தேவைகள், எல்லைகள் அற்றவை என்பது உண்மை. ஒப்பிடுகையில் நமது தேவைகள் மிகவும் குறைவே. குடும்ப வாழ்வில் தேவைகளை ஒழுங்காக்குவது இன்றியமையாதது மற்றும் முக்கியமானது. ஒருவரது ஆளுமை வளர்ச்சிக்கு, அனைத்து தேவைகளையும் நிறைவாக்குவது என்பது விரும்பத்தக்கதல்ல. விருப்பங்கள் மற்றும் தேவைகள் ஆகியவற்றிக்கு இடையே வித்தியாசம் உள்ளது. ஒரு நல்ல ஆடை வாங்குவதற்கான திட்டத்தில் விருப்பம் மற்றும் தேவை அடங்கியிருக்கும்.

    ஆடைக்கான துணியை தேர்ந்தெடுக்கும் போது குழந்தையின் வயதை மனதில் கொள்ள வேண்டும் சிறு குழந்தைகளுக்கு, மென்மையான வெளிர் நிறத்தில் அழகான, கச்சிதமான அச்சுக்கள் உள்ள துணியை தேர்ந்தெடுக்கலாம். பின் குழந்தைப் பருவ நிலையை அடையும் போது, ஆண் குழந்தைகள் நீலம், சாம்பல் நிறத்துடன் கூடிய நீலம் மற்றும் பிரவுன் போன்ற ஆண்மை தன்மை வாய்ந்த நிறங்களை விரும்புவர். பிங்க், பச்சை மற்றும் சிவப்பு போன்ற பெண்மைத்தன்மை வாய்ந்த நிறங்களை உடைய உடைகளை பெண் குழந்தைகள் விரும்பி அணிவர். சில மென்மையான துணிகளை வளரிளம் பெண்களுக்கு தேர்வு செய்யலாம்.

    வளரிளம் ஆண்களுக்கு சற்று கடினமான துணிகள் உகந்தவை. உடையின் ஸ்டைலும் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப மாறுகின்றன. கிலைன் உடைகள் சிறு குழந்தைகளுக்கு பொருத்தமானவை. அதிக அளவு சுருக்கங்களுடன் கூடிய பிராக்குகள் போன்ற உடைகள் பெண் குழந்தைகளுக்கு உகந்தவை. இது போன்றே சிறிய வயதினருக்கு பலவகை காலர்கள் பொருத்தமாக இருக்கும், உதாரணத்திற்கு, குழந்தைக்கான காலர் வளரிளம் பருவத்தினருக்கு பொருத்தமானதாக இருக்காது. ஒரு சில துணிகள் மற்றும் நிறங்கள் மட்டுமே குளிர்காலத்திற்கு ஏற்றது.

    உதாரணத்திற்கு சின்தெடிக்குகள், பட்டு மற்றும் கம்பளி ஆகியன குளிர் காலத்திற்கு ஏற்றவை, ஏனெனில், அவை வெப்பத்தை கடத்தாதவை. பருத்தி மற்றும் சின்தெடிக் இணைத்து தயாரிக்கப்பட்ட பருத்தி ஆகியன வெயில் காலத்திற்கு ஏற்றவை. ஏனெனில், அவை உறிஞ்சும் தன்மையுடன், வெப்பம் கடத்தும் தன்மையும், கொண்டவை. குளிர் மற்றும் வெம்மையான நிறங்கள் உள்ளன. குளிர் நிறங்கள் என்பவை குளுமையுடன் தொடர்புடையன. உதாரணத்திற்கு நீலம், பச்சை, வெள்ளை முதலானவை வெம்மையான நிறங்கள் வெப்பத்தை கடத்தாது. மேலும் வெம்மை நிறங்கள் வெப்பத்துடன் தொடர்புடையது. உதாரணத்திற்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள். ஆகவே, வெம்மை நிறங்கள் குளிர்காலத்திற்கும், குளுமையான நிறங்கள் வெயில் காலத்திற்கும் ஏற்றவை.

    • புடவை தவிர்த்து மேலும் இந்திய பெண்களுக்கு பல ஆடைகள் உள்ளன.
    • லெகங்கா சோலியின் இன்னொரு வடிவம் தான் லஞ்சா.

    இந்திய பெண்கள் ஆடைகள் என்றாலே நினைவுக்கு வருவது புடவை மட்டும் தான். ஆனால் புடவையும் தவிர்த்து மேலும் இந்திய பெண்களுக்கு பல ஆடைகள் உள்ளன. அவற்றில் சில வகைகளையும் தற்காலத்திற்கு ஏற்றார் போல் அவை அடைந்த மாற்றத்தையும் காண்போம்.

    புடவை- இந்திய பாரம்பரிய உடை என்றால் நினைவுக்கு வருவது புடவை. ஆனால் அந்த புடவை வகையில் 80 வகைகள் உள்ளது என்பது தெரியுமா? பெங்காளி, ஓடி, குடகு, மலையாளி, என 80 வகையாக புடவை கட்டும் விதங்கள் உள்ளன. புடவை என்பது ஒரு ரவிக்கை மற்றும் உள்ளாடையை கொண்டது. ரவிக்கை மற்றும் உள்ளாடை மீது புடவையை சுற்றி கட்டுவது பாரம்பரிய முறையாகும். தற்காலங்களில் புடவை தைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு வசதி என்னவென்றால் நீங்கள் அதை கவுன் போலவே மாட்டிக் கொள்ளலாம். தற்காலத்திற்கு ஏற்றார் போல் புடவை பல மாற்றங்களை அடைந்துள்ளது. புடவையில் பிரில் வைப்பது ரவிக்கைகளில் பப்ஸ் வைப்பது, ஒன்-ஷோல்டர், ஆப் - ஷோல்டர் போன்ற பல வகையான மாற்றங்களை அவை அடைந்துள்ளன. இன்றளவும் இந்திய பெண்களால் பெரிதும் விரும்பப்படும் ஆடையாகும்.

    காக்ரா சோலி- காக்ரா சோலியை லெகங்கா ஜோலி என்றும் அழைக்கப்படும். இது ஒரு துப்பட்டா ஒரு ரவிக்கை மற்றும் இடுப்பில் இருந்து முழங்கால் வரை நீண்ட ஆடை உள்ளடக்கியது. இது முகலாயர் காலத்தில் அறிமுகமானது. புடவைக்கு அடுத்து பெண்களால் பெரிதும் விரும்பப்படும் ஆடையாகும். இதன் வடிவமைப்பில் தற்போதைய காலத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் வந்துள்ளன. துப்பட்டாவிற்கு பதிலாக பௌ வைப்பது, பொத்தான் வைத்த ஷர்ட்களோடு அணிவது, நீண்ட மற்றும் குறுகிய சோலியோடு அணிவது மேலும் இடுப்பில் அணியப்படும் ஆடையின் அளவுகளில் பல வேறுபாடுகள் உள்ளன. இது எல்லாவிதமான விழாக்களிலும் அணியக்கூடியது.

    லஞ்சா - லெகங்கா சோலியின் இன்னொரு வடிவம் தான் லஞ்சா. வேறுபாடு என்னவென்றால் ரவிக்கையின் அமைப்பும், இடுப்பில் அணியும் ஆடையின் அமைப்பும். இடுப்பில் இருந்து அணியும் ஆடையின் நீளம் காக்ரா சோலியை விட அதிகமாக இருக்கும். அதே போல் ரவிக்கை நீளம் இடுப்பை தாண்டி நீளும். இது மிகவும் பாரம்பரியமான ஒரு ஆடை வகையாகும். திருமணங்கள் விழா காலங்கள் போன்றவற்றில் முகலாய அரச வம்சத்தில் இன்றளவும் அணியப்படும் பாரம்பரிய உடையாகும். தற்காலத்திற்கு ஏற்றார் போல் லஞ்சாவில் ரவிக்கைக்கு பதிலாக ஜாக்கெட்டும் இடுப்பில் இருந்து அணியப்படும் ஆடையில் நிறைய பிரில்கள் வைத்து நவீனமாக்கப்பட்டுள்ளது. இதை பெண்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர். திருமணங்களில் மணப்பெண் ஆடையாகவும் இது உள்ளது.

    தோத்தி குரதா- தோத்தி என்பது இந்திய ஆண்களின் பாரம்பரிய உடையாகும். ஒரு நீளமான துணி இடுப்பில் சுற்றிக் கொள்வது தோத்தி எனப்படும். பெரும்பாலும் இந்திய ஆண்கள் பகலிலும் இரவிலும் இதை பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது பெண்களும் நிறைய பயன்படுத்துகிறார்கள். பருத்தி மற்றும் மஸ்லின் துணிகளை கொண்டு ஆண்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பெண்கள் சில்க் மற்றும் சாட்டின் துணிகளை கொண்டு தோத்தி குருதா தைத்து கொள்கிறார்கள். இது ரெடிமேடாகவும் கிடைக்கும். அப்படியே வாங்கி அணிந்து கொள்ளும் வகையிலும் விற்கப்படுகிறது. தற்காலத்துக்கு ஏற்றார் போல் இது மாற்றம் அடைந்திருக்கிறது. புடவை கட்டுவது போல இதை வடிவமைத்திருக்கின்றார்கள். இடுப்பில் பெல்ட்டும் அணிந்து கொள்ளலாம்.

    சல்வார் சூட்- புடவை அல்லது காக்ரா ஜோலிக்கு அடுத்ததாக விரும்பப்படும் இந்திய பாரம்பரிய உடைகளில் ஒன்று சல்வார் கமீஸ். இது மிகவும் வசதியான ஒரு ஆடை. இது சல்வார் கமீஸ் மற்றும் துப்பட்டாவும் ஒருங்கிணைப்பாகும். சல்வார் என்பது ஒரு தளர்வான பைஜாமா ஆகும். இடுப்பு பகுதியில் மட்டும் அது இறுக்கமாக இருக்கும் மற்றும் கணுக்கால் பகுதியில் இறுக்கமாக இருக்கும். இடையில் காற்றில் பறப்பது போல் தளர்வாக இருக்கும். கம்மீஸ் என்பது மேலாடை ஆகும். இது சல்வாருக்கு மேல் அணியப்படுவது. முழங்கால் அளவு நீண்டிருக்கும். காலத்துக்கு ஏற்றார் போல் இதில் பல மாற்றங்கள் அடைந்து கொண்டே இருக்கின்றன. தற்காலத்தில் மிகவும் குறுகிய அளவு கொண்டு அரை ட்ரவுசர் போலவும் இருக்கின்றன. சில சமயங்களில் மேலே போடப்படும் துப்பட்டா பல வகைகளில் வடிவமைக்கப் படுகின்றன. இடுப்பில் அணியப்படும் சல்வார் பல ப்ளீட்ஸ் கொண்டதாகவும் வடிவமைப்பில் சில மாற்றங்களோடும் வந்து கொண்டிருக்கின்றன.

    அனார்கலி சூட்- அனார்கலி சூட் என்பது நீண்ட குர்தாமற்றும் இறுக்கமான சுடிதார் பேண்டிகளின் தொகுப்பாகும். குர்தா இடுப்பு வரை இறுக்கமாக இருந்து பின்பு முட்டிக்கு கீழ் வரை தளர்வாக இருக்கும். இது ஒரு அரசு பாரம்பரிய உடையாகும். வசதியான உடையும் ஆகும். தற்போது அனார்கலி சூட்சில் பல நவீனமான அலங்கார வகைகள் வந்துள்ளன. ஜாக்கட் ஸ்டைல், கேப் ஸ்டைல், ஃப்ளோர் லென்த் கவுன் போன்றவை ஆகும். சமீப காலங்களில் இது பெரிதும் விரும்பப் படும் ஆடையாக உள்ளது.

    குர்தா மற்றும் சுடிதார்- இது குர்தி மற்றும் சுடிதார் ஒருங்கிணைக்கப்பட்டதாகும். சுடிதார் கால்களின் அளவைவிட மிக நீண்டு இருக்கும். இதனால் கணுக்கால் பகுதியில் சுருட்டி வைப்பார்கள். இது வளையல் போல் தோற்றம் அளிப்பதால், இதற்கு சுரிதார் என்று பெயர் வந்தது. சூரி என்றால் வளையல் என்று பொருள். இதுவும் முகலாயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. பாகிஸ்தான் பஞ்சாபி பெண்களால் பெரிதும் விரும்பி அணியப்படும் வகையாகும். ஆனால் தற்போது இந்தியாவிலும் பெண்கள் அணிந்து கொள்கின்றார்கள். தற்காலத்தில் குர்தி தரையை தொடும் அளவு நீண்டதாக மேற்கத்திய நாடுகளைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. குர்தியின் நீளமும் குறைக்கப்பட்டு கணுக்கால அளவு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பல வகைகளில் விருப்பத்திற்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

    பெண்களின் ஷர்வாணி- ஷர்வாணி என்பது ஆண்களுக்கான உடையாகும். இது முகலாயர் காலத்தில் அணியப்பட்டு வந்த உடையாகும். அரசாங்க மற்றும் உயர்ந்த மனிதர்கள் அணியக்கூடிய ஆடையாகும். ஆனால் தற்போது ஷர்வாணி உடையாகிப்போனது. இது காட்டன், காட்டன் சில்க், ஷிபான், பட்டு போன்ற பல வகை துணி வகைகளால் செய்யப்படுவது. இதன் மேலாடை எம்ராய்டரி மற்றும் கலைநயத்தால் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இது பெண்களுக்கு புது வகையான ஆடை வகையாகும். திருமணம் பண்டிகைகள் மற்றும் பல விழாக்களில் இதை அணிந்து கொள்ளலாம். தற்காலத்தில் ஷர்வாணி மேலாடையில் காலர் வைத்தும் காலர் இல்லாமலும் கட் வைத்தும் பல வடிவங்களில் நவீனமாக வடிவமைக்கப்படுகிறது.

    இண்டோ- வெஸ்டர்ன் சுட்ஸ்- குர்த்தியோடு இணைக்கப்பட்ட தளர்வான டவுசர்களின் தொகுப்பாகும். பல்லாசு சூட் தற்காலத்தில் இது மிகவும் விரும்பப்பட்டு அணியப்படும் ஆடை வகையாகும். இதில் பல வகைகளும் உண்டு. நீண்ட, குறுகிய, ஏ-லைன் போன்ற பல வடிவமைப்புகள் இதில் வருகின்றது. மேற்கத்திய ஆடை வகைகளின் தாக்கம் இதில் இருக்கும். பொதுவாக இது துப்பட்டா இல்லாமல் அணியப்படும். பூட்-பாண்ட், கிராப்டு-பாண்ட், சிகரட்-பாண்ட் போன்றவற்றோடு குர்தி பொருந்தி வரும். பொதுவாக இந்த வகையில் துப்பட்டா அணியப்படுவதில்லை. பல வகையான பாண்டு வகைகளோட இது பொருந்தி வருகிறது.

    இந்திய கவுன்- இந்திய கவுன்கள் பெரும்பாலும் துப்பட்டா சேர்ந்தே வருகின்றது. இது ஒரு மேல் நாட்டு கலாச்சார வகை ஆடையாகும். இதில் பலவகைகள் உண்டு. ஒன்-சோல்டர், பெல்-ஸ்லீவ்டு கவுன்ஸ், சாரி-ஸ்டைல் கவுன் போன்று பல வகைகள் இருக்கின்றன. இதன் மேலாடையில் இந்திய கலாச்சாரப்படி பல அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. எம்பிராய்டிங், மணி வைத்து தைப்பது போன்று பல வகைகளில் அலங்காரம் செய்யப்படுகின்றன. தற்போது இது புடவையைப் போன்ற வடிவமைப்பில் கிடைக்கின்றது. பெரும்பாலான பெண்கள் இதை விரும்பி அடைகின்றனர்.

    சறாரா மற்றும் கறாரா சூட்- சறாரா மற்றும் கறாரா சூட் குர்தி, துப்பட்டா மற்றும் சறாரா/ கறாரா இவற்றின் தொகுப்பாகும். குர்தி நீண்டும் இருக்கும் குறைவாகவும் இருக்கும் நடுத்தர அளவிலும் இருக்கும். இது முட்டிவரை இறுக்கமாக இருந்து அதன் பின் தளர்வாக இருக்கும். இவை தங்க நிற இழை மற்றும் பைப்பிங் போன்றவற்றால் அலங்காரப்படுத்தப்படும். இது முகலாய காலத்தில் அறிமுகப்படுத்தப் பட்டதாகும். இன்றளவும் லக்னோவில் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் இதை அணிந்து கொள்கிறார்கள். பாகிஸ்தானில் மணப்பெண்கள் இதை திருமண ஆடையாகவே அணிந்து கொள்கின்றார்கள். தற்காலத்தில் உயர்ந்த இடுப்பு சறாரா மற்றும் கறாரா சூட்டும் கிடைக்கின்றன.

    மேலே சொன்ன வகைளில் உங்களின் விருப்பமான ஆடையைகளை வாங்கி மகிழுங்கள்.

    • இந்தப் புடவைகள் ஒரு கதையை கூறுவது போலவும் நமக்கு தோன்றுகின்றது.
    • சாட்டின் சில்க் புடவைகள் எப்படிப்பட்ட உடல்வாகு இருக்கும் பெண்களும் அணியலாம்.

    அனைத்து பருவங்களிலும் அணியக் கூடிய வகையில் வந்திருக்கும் ஜூட் லினன் சில்க் புடவைகள் மிகவும் நேர்த்தியான தோற்றத்தைத் தருபவையாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக மிருதுவான பிளெயின் வண்ணங்களில் வரும் புடவைகளுக்கு தலைப்பில் வரும் குஞ்சம்(டேஸில்ஸ்) கூடுதல் அழகைத் தருவதாக இருக்கின்றது.மிகவும் மிருதுவான பீச், சந்தனம், பிஸ்தா, ஆரஞ்சு,கிரே, பிங்க் வண்ண புடவைகளுக்கு போச்சம்பள்ளி மற்றும் இக்கத் டிசைன்களை டிஜிட்டல் பிரிண்டிங் செய்து பிளவுஸ் பீஸாகத் தருகிறார்கள்.

    இந்த பிளவுஸ் பீஸ்கள் அந்தப் புடவைக்கு காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் இருப்பது போல் கொடுக்கப்பட்டிருப்பது கூடுதல் அழகாக இருக்கின்றது. இதுபோன்ற லினன் ஜூட் புடவைகள் பெயர் மற்றும் வண்ணத்திற்கு ஏற்றது போலவே மிகவும் மிருதுவாக, மென்மையாக இருக்கின்றன. இந்தப் பிளெயின் புடவைகளில் கோல்டன் ஜரி கட்டங்கள் வருவதுபோல வடிவமைக்கப்பட்டு வருவது கூடுதல் அழகாக இருக்கின்றது. புடவை தலைப்பில் வரும் குஞ்சங்களும், கோல்டன் மற்றும் புடவை நிறத்தில் வருவதுபோல செய்திருப்பது மிகவும் அருமையாக இருக்கின்றது.

    பிச்வாய் சில்க் புடவைகள்

    மிக மிருதுவான துணியில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை மிகவும் அழகாக ஒரு ஓவியம் போல பிரிண்ட் செய்து புடவையில் தருவது பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கின்றது.உடலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அந்த கதாபாத்திர பிரிண்ட்டுகள் இருக்க தலைப்பு மற்றும் பார்டரில் அந்த கதாபாத்திரங்கள் அடர்ந்த காடுகள் மற்றும் சோலைகளில் இருப்பது போன்று வடிவமைப்பது இருப்பதை வர்ணிக்க ஒரு நாள் போதாது என்று சொல்லலாம். காடு, மலை, குளம், பறவைகள், விலங்குகள் என இயற்கையையும் அத்துடன் மனிதர்கள் இருப்பதையும் தத்ரூபமாக ஒரு ஓவியம் போல இந்தப் புடவைகள் நம் கண்முன் கொண்டுவருகின்றன.

    இந்தப் புடவைகளுக்கு தரப்படும் வண்ணமும் அதன் மென்மையும் நம்மை வாங்கத் தூண்டுகின்றன என்று சொல்லலாம். இந்தப் புடவைகள் ஒரு கதையை கூறுவது போலவும் நமக்கு தோன்றுகின்றது. உடல் முழுவதும் சிவோரி பிரண்ட்கள் ஒரு தனிப்பட்ட வண்ணத்திலோ அல்லது பல வண்ணங்கள் கலந்தோ இருப்பது போன்று வடிவமைத்து தலைப்பில் தஞ்சாவூர் ஓவியம் போன்று ஓவிய கதாபாத்திரங்களை நம் கண் முன்னே கொண்டுவருவது இந்தப் புடவைகளின் தனிச்சிறப்பாகும்.

    பிளெயின் வண்ண உடல் பகுதியில் மயில், மான், அன்னப்பறவை, யானை, மரம் போன்ற பிரிண்ட்களை சிறிய அளவில் தந்து சிறிய தாமரைப் பூவை பார்டராக வைத்து தலைப்பில் தாமரைப்பூ மற்றும் மயில் வடிவத்தை பெரிய அளவில் பிரிண்ட் செய்து வரும் புடவைகளின் அழகைக் காண கண் கோடி வேண்டும்.கலம்காரி டிஜிட்டல் பிரிண்ட் உடல் முழுவதும் இருக்க பார்டரில் பெரிய டிசைன்களை வடிவமைத்து இருப்பது வித்தியாசமாக இருக்கின்றது. இந்தப் புடவைகளுக்கு தலைப்பு மிகவும் சிறியதாக இருப்பது சற்றே வித்தியாசமாக இருக்கின்றது.

    சாஃப்ட் காதி சில்க் புடவைகள்

    பிளெயின் வண்ணப் புடவைக்கு தலைப்பு மற்றும் பார்டர் பூ டிசைன் வருவதுபோல் வடிவமைத்து தலைப்பில் டேஸில்ஸ் எனப்படும் குஞ்சம் தொங்குவதுபோல் வடிவமைத்திருப்பது இந்தப் புடவைக்கு கூடுதல் அழகைத் தருகிறது. மஞ்சள், பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, நீலம் போன்ற வண்ணங்களை உடலுக்குத் தந்து பார்டர் மற்றும் தலைப்பில் பெரிய பூ டிசைன் இருப்பது போன்று தயாரிக்கப்படும் இந்த சாஃப்ட் காதி சில்க் புடவைகள் அலுவலகங்களுக்கு அணிந்து செல்வதற்கு மிகவும் வசதியாக இருக்கும். இந்த சாஃப்ட் காதி சில்க் புடவைகளிலேயே இக்கத் டிசைன்களை மிகவும் அழகாகத் தந்திருக்கிறார்கள். பார்டரும், பிளவுஸும் ஒரே டிசைனில் இருப்பது அருமையாக இருக்கின்றது. அணிந்தால் உடலுடன் ஒட்டி வரும் இந்தப் புடவைகளை விரும்பாத பெண்களே இருக்க மாட்டார்கள். உடல் முழுவதும் பிரிண்ட்கள் இருக்க பார்டர் மற்றும் பிளவுஸ் பிளெயினாக இருப்பது போன்று வரும் புடவைகள் சற்று வித்தியாசமாக இருக்கின்றன.பல வண்ணங்கள் மற்றும் டிசைன்களில் வரும் இந்த சாஃப்ட் காதி சில்க் புடவைகள் வெளியில் உடுத்திச் செல்வதற்கு ஏற்றவையாக உள்ளன.

    சாட்டின் சில்க் புடவைகள்

    தொட்டாலே வழுவழுப்பாகவும், மெத்தென்றும் இருக்கும் இந்த சாட்டின் சில்க் புடவைகள் எப்படிப்பட்ட உடல்வாகு இருக்கும் பெண்களும் அணியும் பொழுது அவர்களை சற்று குறைந்த உடல்வாகு இருப்பதுபோல் காட்டக்கூடிய புடவை என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த புடவைகளில் ஏராளமான டிசைன்கள் மற்றும் வண்ணங்கள் வருவதால் எதை எடுப்பது எதை விடுவது என்று யோசிக்கத் தோன்றுகிறது. அதிலும் இந்த புடவைகளில் வரும் டிஜிட்டல் பிரிண்ட்டுகள் இந்தப் புடவையின் அழகை மேலும் கூட்டிக் காட்டுகின்றன.சாட்டின் சில்க் புடவைகளுக்கு அதிகப் பராமரிப்பு தேவையில்லை. இந்தப் புடவைகளின் தலைப்பில் மட்டும் டிசைன்கள் வந்து உடல் முழுவதும் பிளெயினாக காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் வருவது, தலைப்பில் வரும் பெரிய டிசைன் பார்டரிலும் அதே பெரிய அளவில் வருவது, தலைப்பில் வரும் டிசைன் இரண்டு பக்க பார்டரி லும் வந்து உடல் பகுதி பிளெயினாக காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் வருவது என ஒவ்வொரு புடவையும் மிகவும் வித்தியாசமாகவும் அழகாகவும் விற்பனைக்கு வந்துள்ளன.

    • ஓவிய கதாபாத்திரங்களை நம் கண் முன்னே கொண்டுவருவது இந்தப் புடவைகளின் தனிச்சிறப்பாகும்.
    • தத்ரூபமாக ஒரு ஓவியம் போல இந்தப் புடவைகள் நம் கண்முன் கொண்டுவருகின்றன.

    மிக மிருதுவான துணியில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை மிகவும் அழகாக ஒரு ஓவியம் போல பிரிண்ட் செய்து புடவையில் தருவது பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கின்றது. உடலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அந்த கதாபாத்திர பிரிண்ட்டுகள் இருக்க தலைப்பு மற்றும் பார்டரில் அந்த கதாபாத்திரங்கள் அடர்ந்த காடுகள் மற்றும் சோலைகளில் இருப்பது போன்று வடிவமைப்பது இருப்பதை வர்ணிக்க ஒரு நாள் போதாது என்று சொல்லலாம்.

    காடு, மலை, குளம், பறவைகள், விலங்குகள் என இயற்கையையும் அத்துடன் மனிதர்கள் இருப்பதையும் தத்ரூபமாக ஒரு ஓவியம் போல இந்தப் புடவைகள் நம் கண்முன் கொண்டுவருகின்றன. இந்தப் புடவைகளுக்கு தரப்படும் வண்ணமும் அதன் மென்மையும் நம்மை வாங்கத் தூண்டுகின்றன என்று சொல்லலாம். இந்தப் புடவைகள் ஒரு கதையை கூறுவது போலவும் நமக்கு தோன்றுகின்றது.

    உடல் முழுவதும் சிவோரி பிரண்ட்கள் ஒரு தனிப்பட்ட வண்ணத்திலோ அல்லது பல வண்ணங்கள் கலந்தோ இருப்பது போன்று வடிவமைத்து தலைப்பில் தஞ்சாவூர் ஓவியம் போன்று ஓவிய கதாபாத்திரங்களை நம் கண் முன்னே கொண்டுவருவது இந்தப் புடவைகளின் தனிச்சிறப்பாகும்.

    பிளெயின் வண்ண உடல் பகுதியில் மயில், மான், அன்னப்பறவை, யானை, மரம் போன்ற பிரிண்ட்களை சிறிய அளவில் தந்து சிறிய தாமரைப் பூவை பார்டராக வைத்து தலைப்பில் தாமரைப்பூ மற்றும் மயில் வடிவத்தை பெரிய அளவில் பிரிண்ட் செய்து வரும் புடவைகளின் அழகைக் காண கண் கோடி வேண்டும். கலம்காரி டிஜிட்டல் பிரிண்ட் உடல் முழுவதும் இருக்க பார்டரில் பெரிய டிசைன்களை வடிவமைத்து இருப்பது வித்தியாசமாக இருக்கின்றது. இந்தப் புடவைகளுக்கு தலைப்பு மிகவும் சிறியதாக இருப்பது சற்றே வித்தியாசமாக இருக்கின்றது.

    • இவ்வகைச் சேலைகளினால் சுற்றுச் சூழலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை.
    • இந்த புடவைகள் நீண்ட ஆயுளைக் கொண்டவையாக அறியப்படுகிறது.

    பருத்தி, பட்டு, ரேயான், பாலியஸ்டர் எனப் பல்வேறு துணி ரகங்களில் நெய்யப்படும் சேலைகளைப் பற்றி நாம் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இயற்கையான தாவரங்களின் நார்களைக் கொண்டும் புடவைகள் தயாராகி வருகின்றன. அதுவும் கற்றாழை, சணல், வாழை, புளிச்சை கீரை நார், மூங்கில் நார்கள் என அனைத்து நார் வகை உணவுப் பொருட்களைக் கொண்டு புடவைகள் தயாரிக்கப்படுகின்றன.

    நூலினால் தயாராகும் சேலைகளுக்கு இருக்கும் அத்தனை அழகும், வனப்பும் நார்களைக் கொண்டு நெசவு செய்யப்படும் சேலைகளிலும் இருக்கின்றன.

    சணல் புடவைகள்

    காய்கறிச் செடிகளின் தோல்களிலிருந்து தயாரிக்கப்படும் தங்கநிற நார்களால் மிகவும் நேர்த்தியாகத் தயாரிக்கப்படுபவையே சணல் புடவைகள். முற்றிலும் மக்கக்கூடிய மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய சணலினால் உருவாக்கப்படும் இந்த ஆர்கானிக் புடவைகளில் செய்யப்படும் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் இதன் அழகை மேலும் கூட்டுகின்றன. விழாக்களுக்கு இந்த புடவைக்கு ஏற்ற நகை அலங்காரத்துடன் அணியும் பொழுது அனைவரின் கவனமும் உங்களைச் சுற்றியே இருக்கும். மலர்கள் மற்றும் செக்ட் பிரிண்ட்டுகளுடன் வரும் இந்தப் புடவைகளின் அழகை வெல்ல வேறு புடவைகள் இல்லை என்று சொல்லலாம்.

    மூங்கில் பட்டுப் புடவைகள்

    மூங்கிலின் உட்புறமிருக்கும் பகுதியிலிருந்து எடுக்கப்படும் நார்களைக் கொண்டு இந்தப் புடவைகள் நெசவு செய்யப்படுகின்றன. பாராட்டத்தக்க உறிஞ்சுதல் திறனுடன், வெப்பத்தை மூழ்கடித்து, கோடை காலத்தில் அணியும் பொழுது குளிர்ச்சி தரக்கூடிய மூங்கில் இழைகளால் ஆன புடவைகள், பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுவதற்கான ஆற்றலையும் கொண்டவையாக இருப்பதால் இவை புதிய யுகத்தின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

    இந்த மூங்கில் நார்களும் பட்டு நூல்களைப் போலவே மென்மையாக இருப்பதால் அவை இரண்டையும் இணைத்து மூங்கில் பட்டுப் புடவைகளை உருவாக்குகிறார்கள். பல்வேறு வடிவமைப்புகள் மற்றும் கைகளினால் அச்சிடப்பட்டு வருகிறது இந்த மூங்கில் புடவைகள். பாரம்பரிய அச்சிடு மற்றும் சிறந்த ஜரி அலங்காரங்களுடன் வரும் மூங்கில் புடவைகள் எந்தவொரு சந்தர்ப்பத்திற்கும் அணியக் கூடிய சிறந்த தேர்வாகும். கனமான பார்டர்கள் மற்றும் விரிவான புட்டாக்களுடன் வரும் மூங்கில் பட்டுப்புடவையை நீங்கள் அணியும் பொழுது அவை உங்கள் பெண்மைக்கு ஒரு தனித்துவமான பிரமாண்டத்தைக் கொடுக்கும்.

    கற்றாழை நார் புடவைகள்

    மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் மட்டுமே பயன்பட்டு வந்த கற்றாழையானது இப்பொழுது வண்ணப் புடவைத் தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளன. நூல்களின் விலையேற்றத்தால் அவற்றிற்கு மாற்றாக வந்த கற்றாழை நார்ச் சேலைகளுக்கு இப்பொழுது மக்களிடையே ஏக வரவேற்பு இருப்பதினால் அதன் தேவை மிக அதிக அளவில் இருக்கின்றது. பச்சையாக இருக்கும் நார்களை மொத்த விலைக் கடைகளிலிருந்து வாங்கி வந்து அவற்றை எளிமையான பிளீச்சிங் மூலம் சுத்தம் செய்து அதிலிருக்கும் கொழுப்புகளை அகற்றி பிறகு மென்மையான முறையில் ஒற்றை ஒற்றை நார்களாக பிரித்தெடுத்து பின்பு அந்த நார்களைக் கொண்டு புடவைகள் தயாரிக்கப்படுகின்றன.

    கற்றாழை நார்களைக் கொண்டு தயாரிக்கப்படும் எழிலான புடவைகளின் விலையானது பாரம்பரியமாகத் தயாரிக்கப்படும் புடவைகளின் விலையை விடக் குறைவாகவே உள்ளது. மேலும் இதுபோன்று இயற்கையாகக் கிடைக்கும் தாவரங்களின் நார்களினால் உருவாக்கப்படும் இவ்வகைச் சேலைகளினால் சுற்றுச் சூழலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை. இவை ஆர்கானிக் புடவைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் புடவைகள் என்று பெயர் பெற்ற சணல், வாழைநார், மூங்கில், காட்டுபட்டு மற்றும் கற்றாழை நார் கொண்டு நெசவாளர்களின் புத்திசாலித்தனமான கைவினைத் திறனைப் பயன்படுத்தி வடிவமைக்கப்படும் இவ்வகை சேலைகள் செயற்கை இழைகளால் தயாரிக்கப்படும் புடவைகளைக் காட்டிலும் நீண்ட ஆயுளைக் கொண்டவையாக அறியப்படுகிறது.

    ×