search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடை
    X

    துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடை

    • துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
    • தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் செயல்பட்டுவரும் ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் தொண்டி சார்பில் தொண்டி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பெண்களுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

    செயலாளர் முருகேசன், பேரூராட்சி மன்ற தலைவி ஷாஜகான் பானு ஜவஹர் அலிகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பட்டய தலைவர் ஷேக் மஸ்தான் ராஜா வரவேற்றார். முன்னாள் துணை ஆளுநர் சண்முகம், முன்னாள் தலைவர் சிவராமகிருஷ்ணன், பொருளாளர் பாண்டி, ரஜினி பிரசாந்த், சீத்தாராமன், எல்லார்சி சீனிவாசன் செயல் அலுவலர் செல்வராஜ், மேற்பார்வையாளர் கோவிந்தராஜ் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×