search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Director"

    சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நடிகை ஒரு சில படங்களுக்கு பின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினாராம். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறாராம். இதனால் ரசிகர்கள் பலர் நடிகையிடம் ஆபாசமான கேள்விகளை கேட்டு அது சர்ச்சையாகியும் உள்ளதாம்.

    இப்படி பரபரப்பாக சுற்றும் நடிகை ஒரு முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க ஆடிஷனுக்கு சென்றாராம். அங்கு இயக்குனர் நடிகையை பார்த்ததும் படுக்கையறைக்கு அழைக்கவே பயந்து போன நடிகை விட்டா போதும் சாமி என்று அங்கிருந்து தலைத்தெறிக்க ஓடிவிட்டாராம். 

    • தாரமங்கலம் நகராட்சியில் நகராட்சி கூடுதல் நிர்வாக இயக்குனர் விஜயகுமார் கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார்.
    • அதனை தொடர்ந்து புதிய நகராட்சி அலுவலக கட்டிடம். எரிவாயு தகனமேடை.உள்ளிட்ட பணிகளையும் ஆய்வு செய்தார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சியில் நகராட்சி கூடுதல் நிர்வாக இயக்குனர் விஜயகுமார் கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து புதிய நகராட்சி அலுவலக கட்டிடம். எரிவாயு தகனமேடை.உள்ளிட்ட பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது மண்டல இயக்குனர் பூங்கொடி அருமைக்கன்.மண்டல செயற்பொறியாளர் மகேந்திரன்.தாரமங்கலம் நகராட்சி ஆணையாளர் சேம் கிங்ஸ்டன். பொறியாளர் பிரேமா.மேட்டூர் நகராட்சி ஆணையாளர் நித்யா.நகராட்சி பொறியாளர் ஹரிகரன். குமாரபாளையம் நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன். எடப்பாடி நகராட்சி பொறியாளர் முருகேசன். ராசிபுரம் பொதுப்பணி மேற்பார்வையாளர் தேவி உள்ளிட்டோர் ஆய்வின் போது உடனிருந்தனர்.

    பிரபல இயக்குனர் முன்னணி நடிகரின் படத்தை இயக்கி வந்தாராம். இந்த படத்தில் கவர்ச்சி நடிகை கதாநாயகியாக கமிட்டானாராம். படப்பிடிப்புக்கு நடுவே கதாநாயகிக்கு ரூட் விட்ட இயக்குனர் அவர் மீது ஆசை கொண்டாராம். ஆனால் அதை நேராக சொல்ல தைரியம் இல்லாமல் தன் செயல்களில் காட்டி வந்தாராம்.

    ஒரு நாள் இயக்குனரும், கதாநாயகியும் பட விழாவில் கலந்து கொண்டிருக்கும்போது அனைவருக்கும் முன்னாள் இயக்குனர், கதாநாயகிக்கு பசக் என்று முத்தம் கொடுத்துவிட்டாராம். இதனால் நடிகை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றாராம்.

    • சேலம் மாவட்டம், பூலாம்பட்டி பேரூராட்சி பகுதியில் மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் கணேஷ்ராம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • தூய்மை பணிகள், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்து அங்கிருந்த ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், பூலாம்பட்டி பேரூராட்சி பகுதியில் மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் கணேஷ்ராம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அவர் பூலாம்பட்டி பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் மற்றும் பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் தூய்மை பணிகள், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்து அங்கிருந்த ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    தொடர்ந்து அவர் பூலாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு பகுதியில் உள்ள தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் திடீரென நுழைந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த உணவுப் பொருட்களின் தரம், பயன்படுத்தப்படும் காய்கறி அளவு, இருப்பு பதிவேடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த உதவி இயக்குனர் அங்கிருந்த சமையல் பணியாளர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவுகளை தயாரித்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். மேலும் அவர் அங்கு தயாரிக்கப்பட்டு இருந்த உணவு வகைகளையும் ருசி பார்த்தார். குழந்தைகளுக்காக இந்த உணவினை மிகுந்த கவனத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயார் செய்திட வேண்டுமென உத்தரவிட்டார்.

    இந்த திடீர் ஆய்வின்போது பூலாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவானந்தம், பேரூராட்சி தலைவர் அழகுதுரை, துணைத் தலைவர் முரளி மற்றும் முன்னாள் கவுன்சிலர் பழனிசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை பல படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறாராம். நடிகையின் மீது ஆசை கொண்ட இயக்குனர்கள் பலர் அட்ஜஸ்ட்மென்டுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் கேட்டு வந்தார்களாம். இதற்கு மறுத்த நடிகை ஒரு நாள் காரில் சென்று கொண்டிருக்கும் போது கார் வேறு பக்கமாக திரும்பியதாம். இதனால் பயந்து போன நடிகை என்ன நடக்குமோ என்று நினைக்கும் போது ஒருவர் திடீரென காரின் முன் பாய்ந்து காரை நிறுத்தினாராம். உடனே கீழே இறங்கிய நடிகை அவர்களை பளார் என்று கண்ணத்தில் ஒன்று வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாராம்.

    பல படங்களில் நடித்து பிரபலமான நடிகைக்கு வயது ஏற ஆரம்பித்தவுடன் மார்க்கெட் குறைய ஆரம்பித்துவிட்டதாம். பிரபலமாகிவிட்டோமே அதை தக்க வைத்து கொள்ள வேண்டுமே என நினைத்த நடிகை சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து சம்பாரித்து வந்தாராம். ஆனாலும் அவர் நினைத்த பாப்புலாரிட்டி கிடைக்கவில்லை என்றதும் ஆசை வார்த்தைகளை கூறி இயக்குனரை வளைத்துபோட்டு ஜாலியாக சுற்றி வருகிறாராம்.

    ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான நடிகைக்கு அந்த ஒரு சில படங்களுக்கு பிறகு யாருமே நடிக்க வாய்ப்பு தரவில்லையாம். சரி வாய்ப்பு கிடைக்க சமூக வலைதளத்தில் ஒரு எண்ட்ரிய போடுவோம் என நினைத்த நடிகை கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் நடத்தி பட்டைய கிளப்பினாராம்.

    இந்த புகைப்படங்களை எல்லாம் பார்த்த இயக்குனர் ஒருவர் சரி போனாபோகட்டுமே என்று நடிகைக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தாராம். இந்த படத்தில் நடித்து முடித்த நடிகைக்கு வேறு படங்கள் கைவசம் இல்லாததால் நேர்காணல்களில் இனி நடிக்கமாட்டேன் என்று கூறிவருகிறாராம். இதற்கு பலரும் நடிகை வாய்ப்பு கிடைக்காததால் இப்படி சொல்கிறார் என்கின்றனர்.

    இளம் நடிகை தன் திறமையால் படிப்படியாக முன்னேறி பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தாராம். இப்படி வளர்ந்து வரும் நிலையில் திடீரென நடிகையின் படங்களில் சில சரிவை சந்திக்கவே நடிகையை ஹீரோயினாக புக் செய்ய பல இயக்குனர்கள் தயங்கினார்களாம்.

    இதனால் சோகமான நடிகை கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்தாராம். அதுவும் வசூல் ரீதியாக முன்னேற்றத்தை தொடாததால் ஷாக்கான இயக்குனர் ஒருவர் தன் படத்தில் புக் செய்து படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில் நடிகையை படத்தில் இருந்து நீக்கிவிட்டாராம். இதனால் நடிகையை ராசி இல்லாதவர் என்று பலர் கூறுகிறார்கள்.

    முன்னணி நடிகை ஒருவர் அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்து வந்தாராம். திடீரென பிரபல இயக்குனர் தன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இந்த நடிகை தான் சரியாக இருப்பார் என்று அவரை புக் செய்தாராம். மிக பிரமாண்டமாக வெளியான இப்படத்தில் நடிகையின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்படவே பல இயக்குனர்கள் பார்வை நடிகையின் மீது திரும்பியதாம்.

    இப்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகையை பெரிய ஹீரோ ஒருவரின் படத்தில் ஹீரோயினாக நடிக்க புக் செய்தார்களாம். ஒப்பந்தம் செய்தது செய்தபடியே இருக்கிறது என்று நடிகையை ஷூட்டிங்கிற்கு வருமாறு இயக்குனர் அழைத்தால் இதோவரேன், அதோவரேன் என்று அலைக்கழித்து வருகிறாராம். இதனால் கடுப்பான இயக்குனர் இந்த நடிகையை வேண்டாம் நம்மோட அந்த நடிகையை புக் செய்யுங்கள் என்று மற்றொரு நடிகையை தட்டி தூக்கிவிட்டாராம்.

    இளம் வயதில் சினிமா துறையில் அறிமுகமான நடிகை தன் கவர்ச்சியாலும், அழகாலும் முன்னணி நாயகர்களுடன் நடித்து பிரபலமானாராம். நடிகையை எப்படியாவது தங்கள் படத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்று நினைத்த அக்கட இயக்குனர்கள் நான், நீ என்று போட்டிப்போட்டுக் கொண்டு தங்கள் படங்களில் அவரை புக் செய்தார்களாம்.

    இதனால் குஷியான நடிகை உச்ச நடிகையாக வலம் வந்தாராம். தற்போது நடிகைக்கு வயதாகிவிடவே இயக்குனர்கள் எல்லாம் நடிகையை கதாநாயகி பதவியிலிருந்து விலக்கி ஒரு ஐட்டம் பாடலுக்கு மட்டும் ஆடுங்கள் என்று கேட்டு வருகிறார்களாம். ஆனால், 50 வயதிற்கு மேற்பட்ட நடிகர்களோ நான் நடித்தால் அந்த நடிகையுடன் தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து வருகிறார்களாம்.

    தனக்கு வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்று ஏக்கத்தில் இருக்கும் நடிகை சரி படங்களில் தான் வாய்ப்பு கிடைக்கவில்லை வெப் தொடரிலாவது நடிப்போம் என்று முடிவெடுத்து கவர்ச்சியில் இறங்கிவிட்டாராம்.

    சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகை ஒரு பெரிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானாராம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி எப்படியாவது வெள்ளித்திரையில் இடம்பிடித்துவிட வேண்டும் என்று நினைத்த நடிகைக்கு ஏமாற்றமே மிஞ்சியதாம்.

    காத்திருந்து.. காத்திருந்து கண்கள் பூத்த நடிகை திடீரென கவர்ச்சி அவதாரம் எடுத்தாராம். பெரிய இயக்குனர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் எல்லாம் வாய்ப்புக்காக வளைத்து வளைத்து கவர்ச்சி உடையில் வலம் வந்த நடிகை சமூக வலைதளத்தையும் விட்டு வைக்காமல் கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி தெளித்தாராம்.

    இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலர் என்ன இந்த நடிகை இப்படி பண்றாங்க என்று வசைபாடி வருகிறார்களாம். இதையெல்லாம் கண்டுகொள்ளாத நடிகை நான் செய்வதை தான் செய்வேன் என்று படு கவர்ச்சியாக உலா வருகிறாராம்.

    குறும்படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை அதன் பின்னர் ஒரு சில படங்களில் குறிப்பிட்ட காட்சிகளில் நடிக்க ஒப்பந்தமானாராம். இப்படி கிடைத்த படங்களில் நடித்து கொண்டிருக்கும் போது நடிகையை பிரபல இயக்குனர் ஒருவர் தன் படத்தில் நடிக்க அணுகினாராம். இதனால் படு குஷியான நடிகை அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

    ஆனால், அந்த இயக்குனர் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று ஸ்டிரிக்டாக கூறிவிட்டாராம். இந்த வாய்ப்பை நழுவவிட்டால் வேறு வாய்ப்புகள் கிடைக்காதே என்று நினைத்த நடிகை நிர்வாணமாக நடிப்பதற்கு ஓகே சொன்னாராம். இதுதான் வாய்ப்பு என்று நிர்வாண காட்சியை பலமுறை ரீடேக் எடுத்தாராம் இயக்குனர்.

    ஒரு வழியாக படம் வெற்றி பெற்றதும் வாய்ப்புகள் குவியும் என நினைத்த நடிகைக்கு ஒன்றிரண்டு பட வாய்ப்புகள் கிடைத்ததோடி சரி அதன்பின் நடிகை சினிமா பக்கமே வரமுடியாமல் ஆகிவிட்டதாம். இதானல் விரக்தியடைந்த நடிகை சமூக வலைதளத்திலாவது பிரபலமாகலாம் என்று கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறாராம்.

    ×