search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dance"

    • கடந்த 3-ந் தேதி வரை தொடர்ச்சியாக 127 மணி நேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
    • நேபாள நாட்டை சேர்ந்த பந்தனா என்பவர் 126 மணி நேரம் தொடர்ச்சியாக நடனமாடியதே ஸ்ருஷ்டி முறியடித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஸ்ருஷ்டி சுதிர் ஜக்தீப். இவர் தொடர்ச்சியாக பல மணிநேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்டார். அதன்படி கடந்த மாதம் 29-ந் தேதி இந்த முயற்சியை தொடங்கிய அவர் கடந்த 3-ந் தேதி வரை தொடர்ச்சியாக 127 மணி நேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

    இதற்கு முன்பு நேபாள நாட்டை சேர்ந்த பந்தனா என்பவர் 126 மணி நேரம் தொடர்ச்சியாக நடனமாடியதே கின்னஸ் சாதனையாக இருந்த நிலையில், அதனை ஸ்ருஷ்டி முறியடித்துள்ளார்.

    இந்திய கலாசாரத்தை உலகிற்கு எடுத்து காட்டும் வகையில் கதக் நடன முறையை பின்பற்றி அவர் நடனமாடி சாதனை படைத்துள்ளார். இதற்காக தினமும் 4 மணி நேரம் தியான பயிற்சி, 3 மணி நேரம் உடற்பயிற்சி மற்றும் 6 மணி நேரம் நடன பயிற்சி மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

    • அகிராணி நாட்டுபுறப்பாடல் ஒன்றுக்கு அந்த சிறுவன் உற்சாகமாக நடனம் ஆடுகிறான்.
    • சிறுவனை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    சிறுவர்களின் சிரிப்பான பேச்சு, அழுகை, நடனம் போன்றவையும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகி விடும். அந்த வகையில் சீருடை அணிந்து கொண்டு ஒரு சிறுவன் அட்டகாசமாக நடனமாடும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

    அதில் அகிராணி நாட்டுபுறப்பாடல் ஒன்றுக்கு அந்த சிறுவன் உற்சாகமாக நடனம் ஆடுகிறான். மேலும் பாடலுக்கு ஏற்ப சிறுவனின் செய்கைகளும் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறது. இதனால் நெட்டிசன்கள் வீடியோவை வைரலாக்கி வருவதோடு, சிறுவனை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். 

    • திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தனியாக நடனம் புரிவார்.
    • தைப்பூசத்தன்று உமாதேவியுடன் இணைந்து நடனம் ஆடுகிறார்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் தைப்பூச பவுர்ணமி யாகமானது நடைபெற்றது.

    தைப்பூசத்தின் சிறப்புகள் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தனியாக நடனம் புரிவார்.நடன நிலையில் உள்ள சிவனை, நடராஜர் என வணங்கு கிறோம். தைப்பூசத்தன்று உமாதேவியுடன் இணைந்து நடனம் ஆடுகிறார்.

    இந்த நிலையை உமா மகேஸ்வரர் என்றழைக்கி றோம்.

    ஆகவே இந்ததைப்பூச திருநாள் சிவசக்திக்கு உகந்த நாளாகும்.மாத ம்தோறும் வரும் பௌர்ணமிதனையாகத்தை மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கும் ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் ராஜசரவணன், கோகுல கிருஷ்ணன், பழனிவேல் ஆகியோரும் ஸ்ரீ காங்கேய சித்தர் வழிபாட்டு குழுவை சேர்ந்த தமிழ் ஆசிரியர் சசிகுமார் ஆகியோர் இந்த மாத யாகத்தினையும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

    காரைக்கால் மற்றும் நாகூரைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றார்கள்.

    • ‘மிடில் கிளாஸ்’ முதல் ‘ஹை கிளாஸ்’ நடன அழகிகள் வரை சென்னையில் வாடகைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
    • ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரையில் அழகிகளை வாலிபர்கள் தற்காலிக வாடகைக்கு அமர்த்தி உள்ளனர்.

    சென்னை:

    புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், பண்ணை வீடுகள் முழு வீச்சில் களைகட்டியுள்ளது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குழு நடனங்கள், ஜோடி நடனங்கள் என பல்வேறு விதமான நடன நிகழ்ச்சிகளும் நட்சத்திர ஓட்டல்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவற்றில் ஜோடியாக சேர்ந்து நடனமாடும் கொண்டாட்டங்களில் வேறு யாரையும் அனுமதிக்கமாட்டார்கள். அந்த இடத்துக்கு ஜோடி இருந்தால் மட்டுமே செல்ல முடியும். இதுபோன்ற ஜோடி நடன கொண்டாட்டத்தில் பங்கேற்று நடனமாடுவதற்கு வாலிபர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

    இப்படி சென்று நடனமாட வாலிபர்கள் பலர் 'வாடகை ஜோடி'களை 'புக்' செய்து கொண்டாட்டத்துக்கு தயாராகியுள்ளனர்.

    இதற்காக 'மிடில் கிளாஸ்' முதல் 'ஹை கிளாஸ்' நடன அழகிகள் வரை சென்னையில் வாடகைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இன்று இரவில் வந்து நடனமாடுவதற்கு மட்டும் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரையில் அழகிகளை வாலிபர்கள் தற்காலிக வாடகைக்கு அமர்த்தி உள்ளனர்.

    நடன நிகழ்ச்சிகள் முடிந்ததும் அழகிகளை பத்திரமாக வீட்டு அருகே கொண்டு விட்டு விட வேண்டும் என்கிற ஒப்பந்தத்துடனேயே இதுபோன்ற அழகிகளை வாலிபர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அழைத்து செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.

    இத்தகைய இளைஞர்களின் புத்தாண்டு சபதம் என்னவாக இருக்கும்? என்பதே மிகப்பெரிய கேள்வி.

    • மாணவி சுபானு சிவதாண்டவ நடனமாடி பெருமை சேர்த்தார்.
    • உற்சாக வரவேற்பளித்து மாணவியை வெகுவாக பாராட்டினர்.

    சீர்காழி:

    மத்திய அரசு சார்பில் காசியில் தமிழ் சங்கமம் விழா கடந்த நவம்பர் 16ஆம் தேதி தொடங்கி ஒரு மாத காலம் நடைபெற்றது.தமிழ் சங்கமத்தில் தமிழ் இலக்கியம், கல்வி கலாச்சாரம், காசி மற்றும் தமிழ் கலாச்சாரமும், தென்னிந்தியாவின் கலாச்சாரம், இலக்கியம், உணவு, கைத்தறி விவசாயம், நாட்டுப்புற கலை ஆகியவற்றை காட்டும் 75 அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது,

    காசி மற்றும் தமிழ் நாட்டிற்கு இடையேயான பழமையான தொடர்பை விளக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக தமிழகத்தில் இருந்து 2500 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    இதில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்த யோகா மாணவி சுபானு பங்கேற்று காசி விஸ்வநாதர் ஆலயத்தில் 108 முத்திரைகளை காட்டி சிவதாண்டவம் நடன ஆடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி–சீர்காழிக்கு பெருமை சேர்த்தார்.

    மாணவி சுபானு யோகாவில் உலக அளவில் பல்வேறு சாதனைகள் புரிந்து 270க்கும் மேற்பட்ட தங்க பதக்கங்களை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

    காசி தமிழ் சங்கமம் முடிந்து சொந்த ஊரான சீர்காழி வந்தடைந்த சுபானுவை சீர்காழி ரயில் நிலையத்தில் பொதுமக்கள் சார்பாகவும் அவரது உறவினர்கள் மற்றும் சீர்காழி நகர பாஜக சார்பாகவும் உற்சாக வரவேற்பு அளித்து மாணவியை வெகுவாக பாராட்டினர்.

    • அழியும் நிலையிலுள்ள கலைகளை ஆவணப்படுத்த நடவடிக்கை.
    • பல ஆவணங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சி.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறை, பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகம், உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம், இந்திய மொழிகளின் நடுவண் மையம் ஆகியவை சாா்பில் 21-வது தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது.

    தொடக்க விழாவுக்கு துணைவேந்தர் திருவள்ளு வர் தலைமை தாங்கினார். பதிவாளர் தியாகராஜன் வரவேற்றார். விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு பேசியதாவது, நம்மிடமுள்ள பழங்கால கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், இலக்கியம், வரலாறு, பண்பாடு, நாகரீகம் சாா்ந்த பல ஆவணங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இது தொடா்பாக தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகம், பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலை க்கழகத் துணைவேந்தா்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனா். மேலும், அயலகத் தமிழா்கள் அதிக அளவில் பங்களிப்பு செய்கின்றனா்.

    உலகில் பல்வேறு இடங்களில் இதுவரை 128 தமிழ்த் தொடா்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நமது கலைகள் அழிந்து விடாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு தர வேண்டும் என்ற அடிப்படையில் சிலம்பாட்டம், நாட்டியம், நடனம், இசை, தெருக்கூத்து உள்ளிட்ட அழியும் நிலையில் இருக்கக்கூடிய கலைகளை ஆவணப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளோம்.

    கற்றல், கற்பித்தல் திட்டத்தில் நிகழாண்டு முதுநிலைப் பட்டம் வழங்கவுள்ளோம். அதற்கான பாடத்திட்டத்தை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.

    இப்பணி வருகிற மே மாதத்துக்குள் முடிவடைந்துவிடும். தமிழில் பிழையின்றி எழுதுதல் குறித்த குறுகிய காலப் பயிற்சி திட்டத்தின் கீழ் பாடங்களை எழுதி, மீளாய்வு செய்யப்பட்டு வழங்கப்படும்.

    புதிய தமிழ் இளங்கலைப் பட்டப்படிப்புக்கான பாடங்களை எழுதும் பணி நடைபெறுகிறது. முதுகலைத் தமிழ்ப் பட்டப்படிப்புக்கான பாடத்திட்டங்கள் உருவாக்க ப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னா், மாநாட்டு மலரை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் திருவள்ளுவன் வெளியிட, பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினரும், பெரம்பலூா் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பிரபாகரன் பெற்றுக் கொண்டாா்.

    பெரியாா் மணி யம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வேலுசாமி, உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத் தலைவா் (இலங்கை) தவரூபன், நிா்வாக இயக்குநா் (இந்தியா) பொன்னுசாமி, மாநாட்டுத் தலைவா் அப்பாசாமி முருகையன், துணைத் தலைவா் வாசு ரெங்கநாதன், தமிழ்ப் பல்கலைக்கழக மொழியியல் துறைத் தலைவா் மங்கையற்கரசி உள்ளிட்டோா் பேசினா். முடிவில் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகப் பதிவாளா் ஸ்ரீவித்யா நன்றி கூறினாா்.

    • போட்டியில் கிராமிய நடனம், நாட்டுப்புற நடனம், கரகாட்டம் என பல்வேறு பிரிவின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.
    • மாணவ- மாணவிகள் 1492 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிகாட்டினர்.

    தஞ்சாவூர்:

    அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கலை திறன்களை வெளி கொண்டு வரும் விதமாக பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி தஞ்சை மாவட்டத்தில் பள்ளி அளவில் கலைத் திருவிழா கடந்த நவம்பர் 23 முதல் 28-ம் தேதி வரை நடைபெற்றது. வட்டார அளவில் நவம்பர் 29 முதல் கடந்த 5-ந் தேதி வரை நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் தஞ்சையில் இன்று தொடங்கியது.
    வருகிற 12-ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறும்.

    இன்று நடந்த கலைத் திருவிழா போட்டியை டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவகுமார் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

    தஞ்சை மாவட்ட அளவில் நடந்த இந்த போட்டியில் கிராமிய நடனம், நாட்டுப்புற நடனம், கரகாட்டம், நவீன ஓவியம், புகைப்படம் எடுத்தல், தனிநபர் நடிப்பு உன்கிட்ட பல்வேறு பிரிவின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.

    இதேபோல் தஞ்சை தூய அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி, யாகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களிலும் கலை திருவிழா போட்டிகள் நடைபெற்றது.

    இதில் ஏற்கனவே வட்டார அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் 1492 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிகாட்டினர்.

    தொடர்ந்து வருகிற 12-ம் தேதி வரை இந்த கலை திருவிழா போட்டிகள் நடைபெறும். இதில் வெற்றி பெறும்
    மாணவ-மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வர்.

    மேலும் மாநில அளவில் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் , கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் தமிழக அரசால் வழங்கப்படும். மாநில அளவில் தர வரிசையில் முதன்மைப் பெறும் 20 மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.

    தஞ்சையில் நடந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர்( தொடக்க நிலை) திராவிட செல்வன், தஞ்சாவூர் கல்வி மாவட்ட அலுவலர் (தொடக்கநிலை ) திருநாவுக்கரசு, கும்பகோணம் கல்வி மாவட்ட அலுவலர் (இடைநிலை) ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் ரமேஷ் குமார் நன்றி கூறினார்.

    • மான்ஃபோர்ட் சி.பி.எஸ்.இ பள்ளி முதல் பரிசை பெற்று கோப்பையை கைப்பற்றியது.
    • நடனம், பாடல், மேற்கத்திய நடனம் மற்றும் கிராமிய நடனம் சிறப்பாக நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தாமரை பன்னாட்டுப்பள்ளியில் தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகை மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கிடையேயான இசை, நாட்டிய, நாடக கலைகளின் சங்கம திருவிழா "ஆரோஹண்" என்ற தலைப்பில் நடைபெற்றது.

    விழாவில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என 38 பள்ளிகள் போட்டிகளில் கலந்து கொண்டன. விழாவில் திரைப்பட புகழ் ஜாஃபர் சாதிக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் கூறியதாவது:- 'ஒவ்வொருவரும் முதலில் தன்னை நம்ப வேண்டும்.

    அப்போதுதான் மற்றவர்கள் நம்மை நம்புவார்கள். மேடை ஒன்றுதான் அதில் வெற்றி, தோல்வி என்பது இல்லை என்றார்.போட்டிகளில் அதிக பரிசுகளை பெற்று அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் பிரிவில் வல்லம் அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளியும், தனியார் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் பிரிவில் திருச்சி மான்ஃபோர்ட் சி.பி.எஸ்.இ பள்ளியும் முதல் பரிசை பெற்று கோப்பையை கைப்பற்றியது.போட்டிகளில் வென்ற பள்ளிகளுக்கு தாமரை பன்னாட்டுப்பள்ளியின் தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் நிர்மலாவெங்கடேசன், முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத், கும்பகோணம் தாமரை பன்னாட்டு ப்பள்ளியின் முதல்வர் விஜயா ஸ்ரீதர், இடைநிலை ஒருங்கிணைப்பாளர் சர்மிளா ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

    விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக தாமரை பன்னாட்டுப்பள்ளி மாணவ- மாணவிகளின் வரவேற்பு நடனம், பாடல், மேற்கத்திய நடனம் மற்றும் கிராமிய நடனம் சிறப்பாக நடைபெற்றது.

    • விநாயகர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு லோடு ஆட்டோக்கள், வேன் ஆகியவற்றின் மூலம் தஞ்சை ரெயிலடிக்கு கொண்டு வரப்பட்டன.
    • ஊர்வலத்திற்கு முன்பு சிறுவர்கள் தீச்சட்டி ஏந்தியும், பெண்கள் பாம்பு நடனமாடியும் சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தஞ்சை மாநகரில் சதுர்த்தியையொட்டி 52 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கரந்தை வடவாற்றில் கரைக்கப்பட்டன.

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி தஞ்சை பழைய பஸ் நிலையம், வாடிவாசல் கடைத்தெரு, பில்லுக்காரத்தெரு, செ க்கடித்தெரு, பூக்காரத்தெரு, கரந்தை மார்க்கெட், அண்ணாநகர், பர்மா காலனி, மானம்புச்சாவடி, கீழவாசல், மேலவீதி, வடக்குவீதி, சீனிவாசபுரம், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பா.ஜ.க., இந்து முன்னணி, விஸ்வரூப விநாயகர் விழாக்குழு, இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 74 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, காலையிலும், மாலையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    கடந்த 2 நாட்களில் 20-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டன. 3-ம் நாளான நேற்று மாலை தஞ்சை மாநகரில் ஆங்காங்கே வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு லோடு ஆட்டோக்கள், ஆட்டோக்கள், வேன் ஆகியவற்றின் மூலம் தஞ்சை ரெயிலடிக்கு கொண்டு வரப்பட்டன.

    பின்னர் பா.ஜ.க. பொருளாளர் விநாயகம் தலைமையில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.ராமலிங்கம், தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் ஆகியோர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

    இதையடுத்து பேண்டு வாத்தியம் முழங்க விநாயகர் சிலை ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் காந்திஜிசாலை, பழைய பஸ் நிலையம், தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி, கொடிமரத்துமூலை வழியாக கரந்தை வடவாறு பாலத்தை சென்றடைந்தது.

    பின்னர் ஒவ்வொரு விநாயகர் சிலையாக வடவாற்றில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்திற்கு முன்பு சிறுவர்கள் சிலம்பாட்டம் ஆடியபடியும், சூருள்வாள் சுற்றியபடியும் சென்றனர்.

    இதைத்தொடர்ந்து இந்து முன்னணி சார்பில் தஞ்சை ரெயிலடியில் இருந்து புறப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு மாவட்ட செயலாளர் குபேந்திரன் தலைமை தாங்கினார்.

    மேளதாளத்துடன் புறப்பட்ட இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வடவாறு பாலத்தை சென்றடைந்தது. பின்னர் வடவாற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. ஊர்வலத்திற்கு முன்பு சிறுவர்கள் தீச்சட்டி ஏந்தியும், பெண்கள் பாம்பு நடனம் ஆடியும் சென்றனர்.

    விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது பிரச்சினை ஏதும் ஏற்படாமல் இருக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று மட்டும் கரந்தை வடவாற்றில் 52 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

    • புதுக்கோட்டையில் 1,000 பேர் 8 மணி நேர தொடர் நடனம் நடைபெற்றது
    • செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு

    புதுக்கோட்டை:

    செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக புதுக்கோட்டையில் 1000 பேர் பங்கேற்று விழிப்புணர்வு சாதனைகளுடன் 8 மணி நேரம் இடைவிடாது நிகழ்த்திய நடன நிகழ்ச்சியானது உலக சாதனை பட்டியலில் இடம் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    44 -வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28-ந் தேதி மாமல்லபுரத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. இது குறித்து தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செஸ் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உலக சாதனை நிகழ்வாக ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பெறும் வகையில் 1000 நபர்கள் பங்கேற்று இடைவிடாது 8 மணி நேரம் நடனமாடிய செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி களைச் சர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் நடனக் கலைஞர்கள் பங்கேற்று காலை 11 மணி முதல் 8 மணி நேரம் சுமார் 1,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்று நடனம், சதுரங்கா ஒளிரும் முகங்கள் என்ற தலைப்பில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் சதுரங்கம் போட்டியை நினைவூட்டும் வகையிலான அலங்கார ஆடைகளுடன் வேடமணிந்து பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.

    வர்ஷா என்ற திருநங்கை ஆணி பலகை மீது நின்று தலையில் கரகம் வைத்து நடனமாடினார். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மற்றும் நாட்டியாலயா பள்ளிகளைச் சேர்ந்த நபர்கள் இடைவிடாத நடனமாடி செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    தொடர்ந்து 8 மணி நேரமாக நடனமாடிய சாதனை நிகழ்ச்சியை உலக சாதனை நிகழ்வாக ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் பதிவு செய்யும் வகையில் அந்நிறுவனத்தைச் சார்ந்த நபர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர.

    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் குமரன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

    பிரதமர் மோடி எழுதிய குஜராத்தி பாடலுக்கு பார்வையிழந்த மாணவிகள் ஒன்றுகூடி ‘கர்பா’ நடனம் ஆடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. #Visuallychallengedgirls #songwrittenbyModi
    புதுடெல்லி:

    பிரதமராக பதவியேற்பதற்கு முன்னர் குஜராத் மாநில முதல் மந்திரியாக பதவி வகித்த பிரதமர் மோடி குஜராத்தி மொழியில் சில கவிதை தொகுப்புகளை இயற்றியுள்ளார்.

    அவ்வகையில், கடந்த 2012-ம் ஆண்டு  ‘குமே அய்னோ கர்போ’ என்ற தலைப்பில் பாடல் ஒன்றை அவர் எழுதியிருந்தார்.



    இந்நிலையில், நவராத்திரி விழாவையொட்டி அந்த பாடலுக்கு பார்வையிழந்த மாணவிகள் ஒன்றுகூடி ‘கர்பா’ நடனம் ஆடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

    அகமதாபாத் நகரில் உள்ள அந்த் கன்யா பிரகாஷ் குருஹ் பள்ளியை சேர்ந்த இந்த பார்வையிழந்த மாணவிகள் குஜராத்தில் மிகவும் பிரசித்தியான ‘கர்பா’ நடனத்தின் மூலம்  தனது பாடலுக்கு உயிரூட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, அந்த நடனக் காட்சி வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் இணைத்து வெளியிட்டுள்ளார். #Visuallychallengedgirls #songwrittenbyModi




    ×