search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cultivation"

    • அக்டோபர் மாதத்தில் மழை அளவு குறைந்ததால் அரியலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது
    • இந்த ஆண்டு சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் வடகிழக்கு பருவமழை காலத்தில் வழக்கமாக 485 மி.மீ. மழையினை பெறும். வழக்கமாக இந்தப் பருவ மழை அக்டோபர் 3-வது அல்லது 4-வது வாரத்தில் தொடங்கும். ஆனால் நடப்பு ஆண்டில் பருவமழை தாமதமாக தொடங்கியது.

    இருப்பினும் கடந்த அக் டோபரில் எந்த நாளிலும் நல்ல மழை பெய்யவில்லை என்று மாவட்ட வேளாண் மைத் துறை தெரிவித்துள் ளது.

    பொதுவாக அக்டோபர் மாதத்தில் அரியலூர் மாவட் டத்தில் சராசரி மழைப்பதிவு 127.71 மில்லி மீட்டர் ஆகும். ஆனால் சென்ற மாதம் 44.29 மிமீ பதிவாகியுள்ளது. பற்றாக்குறை 76 சதவீதமாக உள்ளது. இந்த மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 954 மில்லி மீட்டர். இதில் வடகிழக்கு பருவமழை யின் போது 485 மில்லி மீட்டர் மழையும், தென் மேற்கு பருவமழையின் போது 357 மில்லி மீட்டர் மழையும், கோடையில் மழையளவு 83 மி. மீட்டர் மழையும் பெற்று வந்தது. ஆனால் ஜனவரியில் இருந்து இதுவரை 440.95 மி.மீ. மட்டுமே பெற்றுள்ளது.

    தென்மேற்கு பருவம ழையும் மாவட்டத்தில் சரியாக பெய்யவில்லை. ஜூன் மற்றும் செப்டம்பர் இடையே 231.74 மி.மீ., மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் 140 மிமீ பதிவாகி யுள்ளது.இது பருவகால சராச ரியை விட 57 மிமீ அதிகம். அதே நேரம் அக்டோபரில் எந்த நாளிலும் கனமழை பெய்யவில்லை. இது பெருத்த ஏமாற்றம் அளிக்கி றது.

    இதுகுறித்து வேளாண் அதிகாரி ஒருவர் கூறும் போது,

    பொதுவாக அக்டோ பரில் விவசாயிகள் சாகுபடி பணிகளை தொடங்கு வார்கள். இந்த மாதத்தில் பெய்யும் மழை நெல் நாற்றுக்கு உதவும். இது நவம்பர் முதல் மற்றும் 2-வது வாரத்தில் வேகத்தை அதிகரிக்கும். ஆனால் வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் நெல் நடவு எதிர்பார்த்த அளவில் இல்லை.சம்பா சீசனில் வழக்கமாக 20,500 ஹெக்டேர் பரப்பள வில் நெல் நடவு செய்யப்ப டும். ஆனால் தற்போது மாவட்டத்தில் இதுவரை 7,300 ஹெக்டேர் பரப்ப ளவில் சாகுபடி நடந்துள் ளது. நெல் நடவு செய்த பெரும்பாலான விவசா யிகள், பாசனத்திற்கு பம்ப் செட்டை நம்பியுள்ளனர்.புள்ளம்பாடி வாய்க்கால் பாசனத்தை உறுதி செய்த விவசாயிகள், இன்னும் சாகுபடி செய்யவில்லை. மேட்டூர் அணையில் நீர்வ ரத்து வேகமாக குறைந்து வருவதால், அணை மூடப்ப டுவதற்கு முன்பே, கால்வாய் மூடப்பட்டதால், இந்த ஆண்டு சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்த ஆண்டு சராசரி நெல் நடவு பரப்பளவை விவசாயிகள் எட்டுவது சந்தேகம் என்றார்.

    • கடந்த வாரம் பரவலாக அனைத்து பகுதிகளிலும் விளைநிலங்களில் உழவு செய்யும் அளவுக்கு மழைப்பொழிவு இருந்தது.
    • இந்தாண்டு மண்டல பாசனத்துக்கு தண்ணீர் ஒரு சுற்றாக குறைக்கப்பட்டது.

    மடத்துக்குளம்:

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கு பிரதான சாகுபடியாக மக்காச்சோளம் இருந்தது. தீவன உற்பத்திக்கு மக்காச்சோளம் தேவை அதிகமாக இருப்பதால் நல்ல விலையும் கிடைத்து வந்தது. வழக்கமாக ஆகஸ்டு மாதத்தில் மண்டல பாசனத்துக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்.

    அதையொட்டி நடவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பயிரின் வளர்ச்சி தருணத்தில் பருவ மழை பெய்யும். எனவே அந்த சீசனில் 40 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படும். இந்தாண்டு மண்டல பாசனத்துக்கு தண்ணீர் ஒரு சுற்றாக குறைக்கப்பட்டது. மழையும் பெய்யவில்லை. இதனால் நான்காம் மண்டல ஆயக்கட்டு பகுதியில் விவசாயிகள் மக்காச்சோளம் நடவு செய்ய ஆர்வம் காட்டவில்லை. சிலர் மட்டும் உலர் தீவன தேவைக்காக மக்காச்சோளம் சாகுபடி செய்தனர். இந்நிலையில் கடந்த வாரம் பரவலாக அனைத்து பகுதிகளிலும் விளைநிலங்களில் உழவு செய்யும் அளவுக்கு மழைப்பொழிவு இருந்தது.

    இதையடுத்து பெரும்பாலான விவசாயிகள் பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் மானாவாரியாக மக்காச்சோளம் நடவு செய்ய துவங்கியுள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மக்காச்சோளம் 90 - 110 நாட்கள் வயதுடையது. பயிரின் வளர்ச்சித்தருணம் மற்றும் கதிர் பிடிக்கும் போது மழை பெய்தால் இறவை பாசனம் போல மானாவாரியிலும், விளைச்சல் கிடைக்க வாய்ப்புள்ளது. குறித்த நேரத்தில் மழை பெய்யாவிட்டால் பயிரின் வளர்ச்சி பாதித்து கதிர்கள் சரியாக பிடிக்காது. விளைச்சலும் ஏக்கருக்கு 100 கிலோ கொண்ட 10 மூட்டையாக குறைந்து விடும்.இருப்பினும் மக்காச்சோள பயிர்களை கால்நடைகளுக்கு உலர் தீவனமாக பயன்படுத்தலாம். வறட்சியால் தீவனத்துக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மானாவாரியாக மக்காச்சோளம் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டுகிறோம் என்றனர்.  

    • நடப்பாண்டு சுமார் 62 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
    • அறுவடை நேரத்தில் பெய்த மழையால் காய வைத்த நெல்மணிகள் நனைந்து போனது.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் விளங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். இதற்கு முக்கிய ஆதாரமாக காவிரி தண்ணீர் உள்ளது. நாகை மாவட்டத்தில் நடப்பாண்டு சுமார் 62 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் காவிரி ஆற்றில் போதிய அளவு தண்ணீர் திறக்கப்படாததால் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர் வறட்சியால் பாதிக்க ப்பட்டது.

    எஞ்சிய பயிர்களை மோட்டார் பம்பு செட்டுகள் மூலமாகவும், நீர்நிலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை எஞ்சின் மூலமாக வயலுக்கு பாய்ச்சியும் தற்போது விவசாயிகள் அறுவடை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் அறுவடை நேரத்தில் பெய்த மழையால் காய வைத்த நெல்மணிகள் நனைந்து போனது. இவ்வாறு மழையில் நனைந்த நெல்லை விவசாயிகள் சாலையில் போட்டு காய வைத்து வருகின்றனர். குறிப்பிட்ட அளவுக்கு மேல் நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் கொள்முதல் நிலையத்தில் நெல்லை எடுக்க மறுக்கின்றனர்.

    தண்ணீர் இன்றி வறட்சியால் கஷ்டப்பட்டு காப்பாற்றி வந்த நெல்மணிகள் கடைசி நேரத்தில், ஈரப்பதத்தால் கை விரித்து விட்டதே என்று நாகை விவசாயிகள் வேதனை தெரிவி க்கின்றனர். மேலும் வறட்சி பாதிப்புக்காக அரசு அறிவித்த நிவாரண தொகையும் தற்போது வரை வந்து சேரவில்லை. இருந்தும் பல்வேறு சிரமங்களை தாண்டி அறுவடை
    செய்ததால், திடீரென பெய்த மழையால் காய வைத்த நெல் மணிகள் நனைத்து விட்டன.

    மேலும் தற்போது விட்டு, விட்டு பெய்து வரும் மழையால் நெல்மணிகளை காய வைப்பதில் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும் எனவே நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும். அப்போதுதான் நஷ்டத்தில் இருந்து விவசாயி கள் ஓரளவாவது தப்பிக்க முடியும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மானாவாரி சாகுபடிக்காக விளைநிலங்களை உழவு செய்வது உட்பட பணிகள் தாமதமானது.
    • சீதோஷ்ண நிலை மாற்றத்தால் விளைநிலங்களில் சிறுதானியங்கள் விதைப்பு முற்றிலுமாக குறைந்துள்ளது.

    குடிமங்கலம்,:

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் வடகிழக்கு பருவமழையை ஆதாரமாகக்கொண்டு மானாவாரி சாகுபடி பல ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக மொச்சை, சோளம், கொண்டைக்கடலை, கொத்தமல்லி உள்ளிட்ட சாகுபடி அதிக அளவு மேற்கொள்ளப்படும்.

    கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொழிவு தாமதம், பனிப்பொழிவு குறைவு உள்ளிட்ட சீதோஷ்ண நிலை மாற்றங்களால் மானாவாரி சாகுபடியில் நிலையான விளைச்சல் கிடைப்பதில்லை. எனவே இத்தகைய சிறுதானிய சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்தாண்டும் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. புரட்டாசி மாத துவக்கத்திலும் மழை இல்லை. இதனால் மானாவாரி சாகுபடிக்காக விளைநிலங்களை உழவு செய்வது உட்பட பணிகள் தாமதமானது.

    இந்நிலையில் கடந்த வாரம் உடுமலை பகுதியில் பரவலாக மழை பெய்தது. விளைநிலங்களில் உழவு செய்யும் அளவுக்கு மழைப்பொழிவு இருந்தது. இதையடுத்து மானாவாரி சாகுபடிக்கு முன்னோட்டமாக உழவுப்பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    விவசாயிகள் கூறுகையில், மானாவாரி சாகுபடியில் தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வருகிறோம். இந்தாண்டு தாமதமாகவே விதைப்பு செய்யும் நிலை உள்ளது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால் விளைநிலங்களில் சிறுதானியங்கள் விதைப்பு முற்றிலுமாக குறைந்துள்ளது. பருவமழை கைகொடுத்தால் இந்தாண்டு நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்றனர்.

    • 2023-24-ம் ஆண்டுக்கான பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் ராபி செயல்படுத்த ஒரு காப்பீட்டு நிறுவனத்தை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.
    • விவசாயிகள் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் முன் இத்திட்டத்தின் மூலம் தங்களது பயிர்களை காப்பீடு செய்து கொள்ளவும்.

    திருப்பூர்

    திருப்பூர் மாவட்டத்திற்கு 2023-24-ம் ஆண்டுக்கான பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் ராபி செயல்படுத்த ஒரு காப்பீட்டு நிறுவனத்தை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.

    ராபி பருவத்தில் நெல்-2, மக்காசோளம்-3, கொண்டைக்கடலை, நிலக்கடலை மற்றும் சோளம் போன்ற அறிக்கை செய்யப்பட்டு விவசாயிகள் காப்பீடு கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே ராபி பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் தாங்கள் பயிர்க்கடன் பெறும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ தங்கள் விருப்பத்தின் பேரில் அறிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்து கொள்ளலாம்.

    கடன் பெறா விவசாயிகள் நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கலை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று அதனுடன் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் முன் இத்திட்டத்தின் மூலம் தங்களது பயிர்களை காப்பீடு செய்து கொள்ளவும். மேலும் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலரையோ தொடர்பு கொள்ளலாம்.

    பயிர் காப்பீடு பீரிமியம் தொகையாக நவம்பர் 15-ந் தேதிக்குள் ஏக்கருக்கு நெற்பயிருக்கு ரூ.562.5 தொகையும், நவம்பர் 30-ந் தேதிக்குள் மக்காச்சோளத்துக்கு ரூ.535.43 தொகையும், கொண்டக்கடலைக்கு ரூ.210 தொகையும், டிசம்பர் 15-ந் தேதிக்குள் சோளத்துக்கு ரூ.46.30 தொகையும், டிசம்பர் 31-ந் தேதிக்குள் நிலக்கடலைக்கு ரூ.472.50 தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.

    இத்தகவலை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • தண்ணீர் பற்றாக்குறையால் குறுவை சாகுபடி செய்த மகசூல் பெருமளவு குறைந்தது.
    • ரூ.35-க்கு விற்கப்பட்ட அரிசி தற்போது ரூ.50-க்கு விற்பனையாகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்கள் தமிழகத்தின் உணவு தேவை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. இந்த ஆண்டு குறுவை பாசனத்திற்கு குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இருந்தாலும் கர்நாடக அரசு உரிய காவிரி நீரை தமிழகத்திற்கு வழங்காததால் இந்த ஆண்டு குறுவை விளைச்சல் கடுமையாக பாதிப்பட்டுள்ளது.

    மேலும் தண்ணீர் பற்றாக்குறையால் குறுவை சாகுபடி செய்த மகசூல் பெருமளவு குறைந்தது. மேலும் அடுத்த ஆண்டு முதல் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என்ற அபாய நிலை ஏற்பட்டு விடுமோ என விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

    இது தவிர கர்நாடகாவில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு வரக்கூடிய அரிசி லோடுகள் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது.இதனால் மைசூர் பொன்னி ,கர்நாடக பொன்னி போன்ற அரிசிகளின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.4 வீதம் மூட்டை ஒன்றுக்கு ரூ.100 வரை விலை அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றம் மேலும் அதிகரிக்கும் என அரிசி வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து அரிசி வியாபாரிகள் கூறும்போது:-

    கடந்த ஆறு மாதங்களில் ரூ.35-க்கு விற்கப்பட்ட அரிசி தற்போது ரூ.50-க்கு விற்பனையாகிறது . கர்நாடகா, தமிழகத்திலும் அரிசி உற்பத்தி இந்த ஆண்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் இன்னும் விலை ஏற வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே உள்ள நெல்களை அரவை செய்து தற்போது குறைந்து விலைக்கு வழங்கி வந்தாலும் இனி வரக்கூடிய காலங்களில் மேலும் உயர வாய்ப்புள்ளது என்றனர். அரிசி விலை உயர்வால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிப்பட்டு உள்ளனர்.

    • சுமார் 700-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர்.
    • வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் கடைமடைக்கு போதிய அளவு கிடைக்காததாலும், அணையின் தண்ணீர் நிறுத்தப்பட்டதாலும், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் குளம், வாய்க்கால் போன்ற நீர் நிலைகளில் டீசல் மோட்டார் பம்பு செட்டு மூலம் தண்ணீர் இறைத்து பயிர்களை பாதுகாத்து வருகின்றனர்.

    ஒரு சில பகுதிகளில் மோட்டார் மூலம் இறைப்பதற்கு கூட தண்ணீர் இல்லை என பாதித்த பயிர்களை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    நாகை மாவட்டத்தில் 50,000 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு குறுவை அறுவடை பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். தாமதமாக சாகுபடி பணியில் ஈடுபட்ட குறுவை சாகுபடி விவசாயிகளும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சம்பா பணியை மேற்கொண்ட விவசாயிகளும் தண்ணீர் இன்றி பயிர் பாதித்துள்ளதாக கவலை அடைந்துள்ளனர்.

    திருப்பூண்டி அருகே கீழையூரில் இருந்து திருப்பூண்டி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை அருகே சந்திரநதி வாய்க்கால் பாசனத்தில் காரப்ப பிடாகை, சிந்தாமணி, திருப்பூண்டி, பிஆர்பபுரம், காமேஸ்வரம், காரைநகர் உள்ளிட்ட பகுதிகளில் 700 மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையால் திருப்பூண்டி அருகே சந்திரநதி வாய்க்காலில் தேங்கிய மழைநீரை டீசல் மோட்டார் மூலம் இறைத்து ஒரு சில விவசாயிகள் விவசாயப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் வாய்காலை ஆழப்படுத்தி தண்ணீர் எடுத்தால் வரும் காலங்களில் அதில் சீராக தண்ணீர் வராது. எனவே வாய்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தண்ணீர் வழங்காததால் சாகுபடி பயிர்கள் கருகி வருகின்றன.
    • சம்பா சாகுபடியும் தொடங்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

    திருத்துறைப்பூண்டி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் திருத்துறைப்பூண்டியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்பட்டதும் விவசாயிகள் உற்சாகத்துடன் வழக்கமான அளவை விட அதிக அளவில் குறுவை சாகுபடி மேற்கொண்டனர். செப்டம்பர் 30-க்குள் சம்பா சாகுபடி பணிகள் நிறைவடைய வேண்டும்.

    ஆனால், தமிழகத்திற்கு, கர்நாடகம் வழக்கமாக வழங்க வேண்டிய தண்ணீரை வழங்காததால் சாகுபடி பயிர்கள் கருகி வருகின்றன. சம்பா சாகுபடியும் தொடங்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

    எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பயிர்களை காப்பாற்றவும், சம்பா சாகுபடி தொடங்கவும் உரிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிதாக உருவாக்கப்பட்ட இனத்தை தான் வண்ணக் கோழிகள் என்று அழைக்கிறார்கள்.
    • வண்ணக்கோழி ரகங்களை எளிதான முறையில் வீடுகளில் வளர்க்க முடியும்.

    நாட்டுக் கோழி இனத்தில் இருந்து கால்நடை பல்கலைக்கழகத்தால் புதிதாக உருவாக்கப்பட்ட இனத்தை தான் வண்ணக் கோழிகள் என்று அழைக்கிறார்கள். வண்ணக்கோழி ரகங்களை எளிதான முறையில் வீடுகளில் புறக்கடை முறையில் வளர்க்க முடியும்.

    நந்தனம் 1 மற்றும் 2, கிரிராஜா, கிரிராணி, வனராஜா, சுவர்ணதாரா என பல்வேறு இனக் கோழிகள் சமீபகாலங்களில் கால்நடை பல்கலை கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வண்ணக் கோழி இனங்கள் உருவ ஒற்றுமையில் நாட்டுக்கோழி போன்றே காணப்பட்டாலும், இவை நாட்டு கோழிகளை விட மேம்பட்டவை. வண்ணக் கோழிகளை வீடுகளில் புறக்கடை முறையில் எளிதாக வளர்த்து பொருளாதாரம் ஈட்டலாம்.

    நாட்டு கோழிகளை வணிகரீதியாக வளர்க்கும் போது சில குறைபாடுகள் உள்ளன. ஆனால், நாட்டு கோழிகளில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள வண்ணக்கோழிகளில் அந்த குறைபாடுகள் களையப்பட்டுள்ளன. வண்ணக்கோழிகள் நாட்டுக் கோழிகளை விட துரிதமாக எடை கூடும். இவை அனைத்து வகையான தட்பவெப்ப நிலையிலும் வளரக் கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

    மேலும், நாட்டுக்கோழிகளை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியும், அதிக முட்டைகள் இடும் திறனும் கொண்டது. இதன் முட்டைகள் நாட்டுக் கோழி முட்டைகளை போலவே பழுப்பு நிறம் கொண்டதால் நாட்டுக் கோழி முட்டைகளின் விலைக்கே விற்பனை செய்யலாம்.

    பொதுவாக, கோழிகளுக்கு வழக்கமான தீவனத்துடன் கரையான்களை உணவாக அளிக்கும் போது கோழியின் உடல் வளர்ச்சி வளர்ச்சி விகிதம் 15 சதவீதம் வரை அதிகரிக்கிறது. கரையான்களில் 36 சதவீதம் புரதம், 44 சதவீதம் கொழுப்பு உள்ளது.

    கரையான்களை உணவாக கொடுப்பதால் கோழிகளின் இதனால் தீவனச்செலவு பெரும்பகுதி குறைந்து விடும். கரையான்களை வீட்டின் அருகிலேயே உற்பத்தி செய்யலாம். கிழிந்த கோணிப்பை, பழைய துணி, காய்ந்த மாட்டு சாணம், உலர்ந்த இலை, கூழான மரக்கட்டைகள் மற்றும் வைக்கோல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஒரு மண் பானைக்குள் போட்டு அந்த பானையில் அடைத்து, நீர் தெளித்து தரையில் கவிழ்த்து வைக்கவும். 24 மணி நேரத்தில் இதில் கரையான் உற்பத்தி ஆகி இருக்கும்.

    வண்ணக்கோழிகளுக்கு கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு ஆகியவற்றை 30 முதல் 35 பங்கும், கடலைப் புண்ணாக்கு 15 பங்கும், தவிடு வகைகள் 15 பங்கும், சமையலறை கழிவுகள் 5 சதவிகிதமும், கரையான் 10 பங்கும், புளியங்கொட்டை 10 பங்கும், கருவாட்டு தூள் 5 பங்கு, தாது உப்பு 1 பங்கு மற்றும் வைட்டமின் கலவை 1 பங்கும் எடுத்து நன்றாக இவற்றை கலந்து கொண்டு கோழி தீவனம் தயாரிக்கலாம்.

    இவைதவிர வேலி மசால், குதிரை மசால் மற்றும் அசோலா போன்ற நீலப்பச்சை பாசியை 5 முதல் 10 சதவிகிதம் அறுவடை செய்து கொடுக்கலாம். வேலிமசால், குதிரை மசால் போன்ற பசுந்தீவனங்களை அளிக்கலாம்.

    வண்ணக்கோழிகளை நோய்களில் இருந்து பாதுகாக்க தகுந்த காலகட்டத்தில் தடுப்பூசிகளை அளிப்பது நல்லது. இந்த வகை கோழிகளின் குஞ்சுகளுக்கு பிறந்த 6-வது நாள் லசோட்டா தடுப்பூசியும், 12-வது நாள் கம்போரா தடுப்பூசியும், 27-ம் நாள் மீண்டும் லசோட்டா தடுப்பூசியும், இரண்டாவது மாதத்தில் ராணிகெட் தடுப்பூசியும், தொடர்ந்து 3 மாதத்திற்கு ஒரு முறை ராணிகெட் தடுப்பூசி அளிக்கப்பட வேண்டும்.

    நாட்டுக் கோழிகளை ஒப்பிடும் போது வண்ணக் கோழிகள் அதிக அளவு சிறப்பம்சங்களை கொண்டுள்ளன. நாட்டுக் கோழிகள் 8 வார கால அளவில் 600 முதல் 800 கிராம் எடை அளவே எடை கூடுகிறது. ஆனால், வண்ணக் கோழிகள் இதே 8 வாரங்களில் ஆயிரத்து 500 முதல் ஆயிரத்து 600 கிராம் எடையை அடைகிறது. அதே போல், நாட்டு கோழிகள் ஆண்டுக்கு அதிகபட்சமாக 7௦ முட்டைகள் வரை இடுகிறது.

    ஆனால், வண்ணக் கோழிகள் 100 முதல் 120 முட்டைகளை இடுகிறது.மேலும், நாட்டுக் கோழி முட்டையின் எடை 45 முதல் 50 கிராம் அளவே இருக்கிறது.ஆனால், வண்ணக் கோழிகளின் முட்டை 55 முதல் 65 கிராம் வரை இருக்கிறது. எனவே, தொழில்முனைவோர் வண்ணக் கோழிகளை வளர்த்து லாபம் பெறலாம்.

    • கர்நாடக அரசு மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பை தாமதப்படுத்தி வருகிறது.
    • 13 லட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா சாகுபடி பணிகளை தொடங்குவதா?

    பூதலூர்:

    காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவத்தில் 5.75 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தால் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கோடை காலம் போல கொளுத்திய வெயிலால் குறுவை பயிர்செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப்பட்டது.

    மேட்டூர் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் டெல்டா பாசனத்திற்கு காவிரி மற்றும் வெண்ணாற்றில் 6 நாட்களுக்கு ஒரு முறை மாறி மாறி தண்ணீர் விடப்பட்டது. அவ்வாறு 6 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விடப்பட்ட போதும் முழு அளவில் ஆறுகளில் தண்ணீர் திறக்கப்படவில்லை .இதனால் குறுவை நடவு செய்த வயல்கள் டெல்டா மாவட்டங்களில் பல பகுதிகளில் காய்ந்து வெடிப்பு நிலை காணப்பட்டது.

    இது போன்ற ஒரு சூழ்நிலையில் விவசாயிகளை பாதுகாக்க வேண்டிய வேளாண் துறை நீர் பற்றாக்குறை காலங்களில் எந்த விதமான யுக்தியை மேற்கொண்டால் நல்ல முறையில் விளைச்சல் எடுக்கலாம் என்ற எந்த ஆலோசனையையும் வழங்க வில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். மேலும் முன்சம்பா மற்றும் இயல்பான சம்பா சாகுபடிக்காக டெல்டா மாவட்டங்களில் நாற்றங்கால் தயாரிப்பு பணிகளை தொடங்காத சூழ்நிலையும் தற்போது நிலவுகிறது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து ,நீர் இருப்பு மிகவும் குறைவான நிலையில் உள்ளது. தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியத்தில் முறையிட்டு , உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ளது. இதிலும் கூட கர்நாடக அரசு மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பை தாமதப்படுத்தி வருகிறது.

    இதனால் தற்போது பயிர் செய்யப்பட்டுள்ள 5.75 லட்சம் ஏக்கர் குறுவை பயிர் விளைந்து அறுவடை செய்யமுடியுமா?என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் 13 லட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா சாகுபடி பணிகளை துவக்குவதா? தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்குமா?என்ற குழப்பத்தில் விவசாயிகள் உள்ளனர். ஆழ்துளை கிணற்று பாசன விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளை மேற்கொண்டாலும் ,வெயில் காரணமாகநிலத்தடி நீர் குறைந்து பயிர் பாதிப்பு ஏற்படும் என்று கூறுகின்றனர்.

    மேட்டூர் அணையின் நீர் இருப்பு மிகவும் குறைந்துள்ள நிலையில். இன்னும் எத்தனை நாட்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்பது புரியாத நிலையில் விவசாயிகள் தவித்துக் கொண்டுள்ளனர். விவசாயிகளுக்கு ஒரு தெளிவான விளக்கத்தை வேளாண் துறை தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

    குறைந்த நீரைக் கொண்டு குறுவை சாகுபடி நிறைவு செய்வது எப்படி? சம்பா சாகுபடி பணிகளில் எந்தவிதமான முறைகளை கையாண்டால் குறைந்த நீர் திட்டமிடலில் அதிக மகசூல் அல்லது விவசாயிகளை நஷ்டப்படுத்தாத மகசூல் பெறலாம் என்பது குறித்து தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

    • செம்பனேரி பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
    • சுமார் 62 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கபட்டாலும் போதுமான தண்ணீர் வரத்தின்றி விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

    பயிர்கள் கருக தொடங்கின.

    நாகை மாவட்டத்தில் இந்தாண்டு சுமார் 62,000 ஏக்கரில் குறுவை சாகுபடி நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் பெருமளவிலான விவசாயிகள் ஆற்று பாசனத்தை மட்டுமே நம்பி சாகுபடி செய்திருந்தனர்.

    ஆனால் காவிரியில் இருந்து போதிய தண்ணீர் வராததால் பாசன நீர் கிடைக்காமல் பல இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகினர்.

    குறிப்பாக நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட ஆதமங்கலம், கீரங்குடி, வடமருதூர், தென்மருதூர், ராமச்சந்திரபுரம், கீழக்கண்ணாப்பூர், செம்பேனேரி பகுதிகளில் சுமார் 30000 ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

    பெரும்பாலான பாசன வாய்க்கால்கள் வறண்டு காணப்படுவதால் நீர் கிடைக்க இனியும் வழியில்லை என முடிவெடுத்த விவசாயிகள் விளை நிலங்களில் கால்நடைகளை விட்டு மேய்க்க தொடங்கிவிட்டனர்.

    மேலும் ஏக்கருக்கு சுமார் 25,000 வரை கடன் பெற்று சாகுபடி செய்யப்பட்ட நிலையில் உரிய தண்ணீர் கிடைக்காததால் கருகி வருகிறது.

    எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மறு விவசாயம் செய்யவும் சம்பா சாகுபடிக்கு தயாராகும் வகையில் சம்பா தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும்.

    உரிய கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களுக்கான இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தக்கை பூண்டு, கொழிஞ்சி ஆகிய பயிர்களை சாகுபடி செய்வது குறித்து பேசினார்.
    • அமிர்த கரைசலை பயன்படுத்தி சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெறலாம் என்றார்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை அடுத்த கடிச்சம்பாடி கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாய பயிற்சி ஊராட்சி துணை தலைவர் சிவபாலன் தலைமையில் நடைபெற்றது.

    முன்னதாக கும்பகோணம் வட்டார துணை வேளாண் அலுவலர் சாரதி அனைவரையும் வரவேற்றார்.இதில் தஞ்சை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) ஈஸ்வர் கலந்துகொண்டு பேசுகையில்:-

    பாரம்பரிய நெல் ரகங்கள் அதன் குணாதிசயங்கள் சாகுபடி முறைகள் பற்றியும், மூலிகை பூச்சி விரட்டிகள் பஞ்சகவ்யா, மீன் அமிலம், அமிர்த கரைசல் பயன்படுத்தி சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெறலாம் என்றும், அறுவடைக்கு பின் அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்வது குறித்தும், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பதிவு செய்து விற்பனை செய்தால் அதிக விலை பெறலாம் என்று பேசினார்.

    தொடர்ந்து, துணை வேளாண் அலுவலர் சாரதி பேசுகையில்:- இயற்கை வேளாண்மையில் அதிக மகசூல் பெற பசுந்தால் உர பயிர்கள் சணப்பு, தக்கை பூண்டு, கொழிஞ்சி ஆகிய பயிர்களை சாகுபடி செய்வது குறித்தும், அதனால் மண்வளம் மேம்படுவது குறித்தும் பேசினார். மேலும், இயற்கை முறையில் சாகுபடி செய்தால் ஆரோக்கியமான வாழ்வு வாழலாம் என்றார்.

    முடிவில் கும்பகோணம் வட்டார வேளாண்மை அலுவலர் அசோக் ராஜ் நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் கலைவாணன், மணவாளன், தனசேகரன் மற்றும் இளமதி ஆகியோர் செய்திருந்தனர்.

    ×