search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளைநிலங்கள்"

    • மயானத்திற்கு பாதை இல்லாததால் இறந்தவர் உடலை எடுத்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
    • விளைநிலங்கள் வழியாக இறுதி ஊர்வலம் நடக்கிறது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேலராஜகுலராமன் ஊராட்சிக்கு உட்பட்ட அழகாபுரி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஊருக்கு வெளியே உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மயான கட்டிடம் அமைக்கப்பட்டது. ஆனால் பாதை வசதி ஏற்படுத்தப்பட வில்லை.

    இதனால் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயா னத்திற்கு தனியார் நிலங்கள் மற்றும் சிறு குறு, நீரோடை வழியாக இறந்தவர்களின் சடலங்களை கொண்டு சென்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது விவசாய நிலங்களில் சோளம் பயிரிட்டப்பட்டு உள்ளது.

    மேலும் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்தது உள்ளதால் சிறு குறு ஓடை களில் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. சம்பவத்தன்று அழகாபுரி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் உடல்நல குறைவால் உயிரி ழந்த நிலையில் அவரது உடலை விவசாய நிலங்க ளில் சாகுபடி செய்யப் பட்டுள்ள பயிர்களை கடந்தும் சிறு குறு நீரோடை களை கடந்தும் ஆபத்தான முறையில் மூதாட்டியின் உடலை கொண்டு சென்று மயானத்தில் அடக்கம் செய்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மயா னத்திற்கு செல்வதற்கு பாதை இல்லாததால் இறந்த வர்களின் உடலை கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் நிலவுகிறது.

    அதுவும் மழை காலங்க ளில் ஆபத்தான முறையில் செல்ல வேண்டி உள்ளது. மேலும் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மயானம் என்பதனால் மயான கட்டிடத்தின் மேற்கூரையும் சேதமடைந்து உதிர்ந்து வருவதனால் கட்டிடத்தை சீரமைத்து, மயானத்திற்கு பாதுகாப்பான முறையில் சென்று வர சாலை வசதியும் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகமும் உரிய அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மானாவாரி சாகுபடிக்காக விளைநிலங்களை உழவு செய்வது உட்பட பணிகள் தாமதமானது.
    • சீதோஷ்ண நிலை மாற்றத்தால் விளைநிலங்களில் சிறுதானியங்கள் விதைப்பு முற்றிலுமாக குறைந்துள்ளது.

    குடிமங்கலம்,:

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் வடகிழக்கு பருவமழையை ஆதாரமாகக்கொண்டு மானாவாரி சாகுபடி பல ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக மொச்சை, சோளம், கொண்டைக்கடலை, கொத்தமல்லி உள்ளிட்ட சாகுபடி அதிக அளவு மேற்கொள்ளப்படும்.

    கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொழிவு தாமதம், பனிப்பொழிவு குறைவு உள்ளிட்ட சீதோஷ்ண நிலை மாற்றங்களால் மானாவாரி சாகுபடியில் நிலையான விளைச்சல் கிடைப்பதில்லை. எனவே இத்தகைய சிறுதானிய சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்தாண்டும் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. புரட்டாசி மாத துவக்கத்திலும் மழை இல்லை. இதனால் மானாவாரி சாகுபடிக்காக விளைநிலங்களை உழவு செய்வது உட்பட பணிகள் தாமதமானது.

    இந்நிலையில் கடந்த வாரம் உடுமலை பகுதியில் பரவலாக மழை பெய்தது. விளைநிலங்களில் உழவு செய்யும் அளவுக்கு மழைப்பொழிவு இருந்தது. இதையடுத்து மானாவாரி சாகுபடிக்கு முன்னோட்டமாக உழவுப்பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    விவசாயிகள் கூறுகையில், மானாவாரி சாகுபடியில் தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வருகிறோம். இந்தாண்டு தாமதமாகவே விதைப்பு செய்யும் நிலை உள்ளது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால் விளைநிலங்களில் சிறுதானியங்கள் விதைப்பு முற்றிலுமாக குறைந்துள்ளது. பருவமழை கைகொடுத்தால் இந்தாண்டு நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்றனர்.

    • விளைநிலங்களின் வழியாக செல்லும் மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது.
    • எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்து ஏற்படலாம்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை அருகே முளப்பாக்கம் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

    இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விளைநிலங்கள் உள்ளன. இந்த விளைநிலங்களின் வழியாக செல்லும் மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது.

    இதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படலாம். இதுகுறித்து அந்தப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மின்சார வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்துள்ளனர்.

    ஆனாலும் அது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்த பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    கடந்த 3 மாதத்திற்கு மேலாக சாய்ந்த நிலையில் உள்ள இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்து ஏற்படலாம்.

    அதற்கு முன்னதாகவே விழித்துக் கொண்டு மின்சார வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • விளை நிலங்களை அதிகாரிகள் பிளாட்டுகளாக மாற்ற அனுமதி அளித்துள்ளனர்.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் நெல், வாழை, தென்னை விவசாயம் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. மேற்கு மாவட்ட பகுதிகளில் ரப்பர் விவசாயமும் செய்ய ப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டம் முழுவ தும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 7500 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தற்போது சாகுபடி பரப்பளவு 5500 ஹெக்டே ராக குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் விளைநில ங்கள் எல்லாம் பிளாட்டு களாக மாற்றப்படுவது என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    சுசீந்திரம், தேரூர், திருப்பதிசாரம், பீமநகரி, சுங்கான்கடை பகுதிகளில் வயல்வெளிகள் மணல்க ளால் நிரப்பப்பட்டு பிளாட்டுகளாக மாற்றப்ப ட்டுள்ளது. இதனால் நெல் விவசாயம் அழியும் சூழலுக்கு தள்ளப்ப ட்டுள்ளது. இதை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள் கலெக்டரிடம் வலியுறுத்தினார்கள்.

    சுங்கான்கடை, திருப்பதிசாரம் பகுதிகளில் விளை நிலங்களை அதிகாரிகள் பிளாட்டுகளாக மாற்ற அனுமதி அளித்துள்ளனர்.

    எனவே கலெக்டர் நேரில் ஆய்வு செய்து அதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதுடன் அனுமதி வழங்கப்பட்ட பிளாட்டு களை ரத்து செய்ய வேண்டு ம் என்று கூறியிரு ந்தார்கள். இதைத்தொடர்ந்து கலெக்டரும் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து இருந்தார்.

    இந்த நிலையில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் வயல்கள் மணல் நிரப்பப்பட்டு பிளாட்டுகளாக மாற்றும் பணி நடைபெற்று வருவ தாக விவசாயிகள் மீண்டும் குற்றம் சாட்டி உள்ளனர். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்கு றியாகி வருகிறது என்றும் கூறினர். இதுகுறித்து நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் வின்ஸ் ஆன்றோ கூறுகையில், விளைநிலங்கள் பிளாட்டுகளாக மாற்று வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்க னவே நாங்கள் கலெக்டரிடம் மனு அளித்தோம். இது தொடர்பாக அதிகாரிகள் பறக்கை, லாயம் பகுதிகளில் ஆய்வு செய்தனர். தற்பொ ழுது பல்வேறு இடங்களில் விளைநிலங்கள் பிளாட்டுகளாக மாற்ற மணல் கொட்டப்பட்டு வருகிறது.

    குறிப்பாக திருப்பதிசாரம் பகுதியில் தற்பொழுது அதிக அளவு விளைநில ங்களில் மணல் நிரப்பி வருகிறார்கள். இதுதொ டர்பாக கலெக்டரிடம் விரைவில் புகார் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். விளைநிலங்கள் பிளாட்டுகளாக மாற்றுவதற்கு அதிகாரிகள் சிலரும் உடந்தையாக உள்ளார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.

    விளைநிலங்கள் உள்ள பகுதிகளை பிளாட்டுகளாக மாற்ற ஏற்கனவே வழங்கியுள்ள அனுமதியை மறுபரி சீலனை செய்து அந்த பிளாட்டிற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் கலெக்டரிடம் தெரிவித்தோம். அவரும் இது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். விவசாயத்தை பாதுகாக்க அனை வரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

    • ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் விளைநிலங்கள் வீட்டுமனைகளாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
    • ஆசை வார்த்தை கூறி விளைநிலங்களை பணக்காரர்கள் வாங்கி குவிக்கின்றனர் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    அபிராமம்

    கடந்த ஆண்டு ராமநாத புரம் மாவட்டம் முழுவதும் பருவமழை பொய்த்ததால் முதுகுளத்தூர், கடலாடி சாயல்குடி, கமுதி, அபிராமம் பகுதியில் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது. நெற்பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்பட்டது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் மகசூல் இழப்புகளுக்கு காப்பீட்டு தொகையும், வறட்சி நிவாரணமும் இன்று வரை வழங்கப்பட வில்லை. மேலும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடனையும் இன்றுவரை தள்ளுபடி செய்யவில்லை.

    நெல், உரம், உழவு செய்யும் கூலி உயர்வு காரணமாகவும், வேளாண் இடுபொருட்கள் விலை உயர்வு காரணமாகவும் விவசாயிகள் விவசாயத்தை நம்பி இருந்ததில் எந்தவித பயனுமில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி பணக்காரர்கள் விவசாய நிலங்களை வாங்கி குவித்து வீட்டுமனைகளாகவும், பிளாட்டுகளாகவும் மாற்றிவிட்டனர். இதன் காரணமாக விவசாய நிலங்கள் என்பது விவசாயிகளுக்கு எட்டாக்கனியாகி விட்டது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    கடும் வறட்சி, புயல், வெள்ள சேதம் என்றாலே பாதிக்கப்படுவது நாங்கள் தான். அபிராமம் பகுதியில் நெல், மிளகாய், பருத்தி விவசாயம்தான் அதிகமாக உள்ளது. அதிகமாக மழை பெய்தா லும், வறட்சியானலும் பாதிக்கப்படுவது நாங்கள்தான். விவசாயம் செய்வதற்கு வட்டிக்கு வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் எந்த பயனும் இல்லாததால் விரக்தியில் இருக்கிேறாம்.

    அப்படிபட்ட விவசாயிகளிடம் ஆசை வார்த்தை கூறி விளைநிலங்களை பணக்காரர்கள் வாங்கி குவிக்கின்றனர் என்றார்.

    • வெள்ளை மதகு அருகே விளை நிலத்தில் மணல்களை கொட்டி நிரப்புகின்றனர்.
    • பல்வேறு விதமான இடையூறுகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

    கடலூர்:

    காட்டுமன்னா ர்கோவில் ஓமாம்புலியூர் கொள்ளிடம் ஆற்றங்கரையிலிருந்து சுமார் ஆயிரக்கணக்கான டன் மணல் கனரக வாகனங்கள் மூலம் எடுக்கப்பட்டு வெள்ளை மதகு அருகே விளை நிலத்தில் மணல்களை கொட்டி நிரப்புகின்றனர். இதுமட்டுமல்லாமல் வெளியில் இருந்து வரப்படும் கனரக வாகனங்களுக்கு மணலை விற்பதற்கு தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் தற்பொழுது பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    பொது மக்களுக்கு பல்வேறு விதமான இடையூறுகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த மணல் கொட்டி விற்பனை செய்வதற்கு விளைநிலத்தை வீணடிப்பததையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளும் கோரிக்கை வைக்கின்றனர். கொள்ளிடம் ஆற்றில் இருந்து நேரடியாக மணலை அள்ளுவதற்கு வழிவகை செய்யாவிட்டால் ஒரு நாள் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் நடைபெறும் என அகில இந்தியவிவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் நெல், தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர்.
    • காட்டு யானைகள் மீண்டும் நெல் வயல்களை சேதப்படுத்தி சென்றுள்ளன.

    தென்காசி:

    தென்காசி அருகே திரவியநகர், மத்தளம்பாறை உள்ளிட்ட கிராமங்களை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் நெல், தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் அந்த பகுதிகளில் நெல் நடவு செய்யப்பட்டு நெற்கதிரில் பால் பிடிக்கும் நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து காட்டு யானைகள் கீழே இறங்கி வந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

    தற்போது மீண்டும் காட்டு யானைகள் நெல் வயல்களில் இறங்கி சேதப்படுத்தி சென்றுள்ளன. மேலும் அருகில் இருந்த வயல்களில் உள்ள வாழை மற்றும் தென்னை மரங்களையும் பிடுங்கி எரிந்து சேதப்படுத்தி உள்ளன.

    இதனால் விவசாயி கள் இரவில் விவசாய நிலங்களுக்கு காவலுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். காட்டு யானைகளை வெடி களை வெடிக்க செய்து விவசாயிகள் விரட்டினாலும் அவை தொடர்ந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதால் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். எனவே வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆற்றங்கரையில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.
    • பொன்னானியில் ஆறு செல்கிறது.

    ஊட்டி,

    பந்தலூர் அருகே பொன்னானி, சக்கரைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். பொன்னானியில் ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் மழை காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அப்போது அருகே பொதுமக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுவது தொடர் கதையாக உள்ளது. இதனால் சில வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால், பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டது. இதனால் பொன்னானி ஆற்றை தூர்வாரி, அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை மூலம் ெபாக்லைன் எந்திரம் மூலம் ஆறு தூர்வாரப்பட்டது. இந்தநிலையில் பொன்னானியில் இருந்து அம்மங்காவு செல்லும் சாலையில் பாலம் அருகே சக்கரைகுளம் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. தடுப்புச்சுவர் அதே பகுதியில் ஆதிவாசி காலனி இருக்கிறது. அப்பகுதியில் ஆற்றின் கரையோரத்தில் மண்அரிப்பு ஏற்பட்டு உள்ளதால், பலத்த மழை பெய்யும் சமயங்களில் காலனி உள்பட கிராமத்துக்குள் வெள்ளம் புகும் அபாயம் உள்ளது. மேலும் விளைநிலங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்து தேங்கும் நிலை காணப்படுகிறது.

    • நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமங்கள் ஆகும்.
    • ஒற்றை யானை என இரவு நேரங்களில் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது

    வடவள்ளி

    கோவை தொண்டா முத்தூர் சுற்றுவட்டர பகுதியான அட்டுக்கல், குப்பேபாளையம், தேவரா யபுரம், சிலம்பனூர், நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமங்கள் ஆகும்.

    இந்த பகுதி மக்கள் அதிக அளவில் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில வாரங்களாக யானைகள் கூட்டமாகவும், ஒற்றை யானை என இரவு நேரங்களில் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதில் சுமார்‌ 20 வயது மதிக்கத்தக்க ஒற்றை டஸ்கர் இன யானை குப்போபாளையம், அட்டுக்கல் உள்ளிட்ட பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக விளை நிலங்களில் புகுந்து சோளம், கடலை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    குப்பேபாளையம் பகுதியில் வெங்காய பட்டறை ஒன்றை இடித்து தள்ளி சூறையாடியது. ஜெயப்பரகாஷ் என்பவரது தோட்டத்தில் புகுந்து மோட்டார் பம்புகளை இடித்து தள்ளியது. யானையை பார்த்து அங்கு கட்டி வைக்கப்பட்டு இருந்த கால்நடைகள் மிரண்டு ஓடியது.

    இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் அட்டுக்கல் வழியாக கெம்பனூர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை காட்டுயானை வடக்கு வீதியில் ரங்கராஜ் என்பவர் வீட்டின் முன்பு நீண்ட நேரம் நின்றது.

    நாய்கள் சத்தம் கண்டதை கண்டு வெளியில் வந்த சிலர் யானை நிற்பதை கண்டு திடுக்கிட்டனர். உடனடியாக செல்போன் மற்றும் வாட்ஸ் அப் மூலமாக அருகில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்து உஷார் படுத்தினர். யானை ஊருக்குள் பல இடங்களில் சுற்றி இன்று அதிகாலை 5 மணியளவில் வனப்பகுதியை நோக்கி சென்றது.

    யானை ஊருக்குள் வீதியில் வந்ததை மாடியில் நின்றவாறு சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தொண்டாமுத்தூர் அருகே விளைநிலம் மற்றும் குடியிருப்பையொட்டி பகுதிகளில் யானைகள் முகாமிட்டு இருப்பது அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த ஒரு‌மாதத்தில் மட்டும் போளுவாம்பட்டி வனச்சரகத்தில் இரண்டு நபர்கள் யானை தாக்கி இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • யானைகள் விளை நிலங்களில் வராமல் இருப்பதற்கு அகழிகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.
    • யானைகளால் ஏற்பட்டுள்ள சேதத்திற்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட பூதப்பாண்டி அருகே உள்ள மலையடிவார பகுதிகளில் யானைகள் போன்ற வனவிலங்குகள் ஆண்டு தோறும் விளைநிலங்களில் புகுந்து பயிர்கள், வாைழ மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தி விவசாயிகளுக்கு தீங்கு விளைவித்து வருகின்றன. இதனால் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    ஒரு சில நாட்களுக்கு முன்பாக பூதப்பாண்டி அருகே தெள்ளாந்தி, உடையார்கோணம் பகுதியில் மணிகண்டன் என்பவரது தோட்டத்தில் யானைக்கூட்டம் புகுந்து சுமார் 1000 வாழைகளை பிடுங்கி நாசப்படுத்தி உள்ளது. மேலும் அருகில் உள்ள தென்னந்தோப்பிற்குள் புகுந்து 18 தென்னை மரங்களையும் நாசப்படுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற யானைகளின் அட்டகாசங்கள் தொடர்ந்து வருகிறது.

    எனவே வனத்துறையினர் தனிக்கவனம் செலுத்தி யானைகள் விளை நிலங்களில் வராமல் இருப்பதற்கு அகழிகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். யானைகள் இந்த பகுதிக்குள் நுழைந்தால் அதனை விரட்டுவதற்கு தேவையான அனைத்து உத்திகளையும் வனத்துறையினர் கையாள வேண்டும். தற்போது யானைகளால் ஏற்பட்டுள்ள சேதத்திற்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

    ×