search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coromandel Express derail"

    • சிகிச்சையிலிருந்த 793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 382 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • ரெயில் விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெறுவோர் குறித்த விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் அருகே மோதி விபத்து ஏற்பட்டது. அதிவேகத்தில் சென்ற போது நடந்த இந்த விபத்தால் ரெயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலைந்தது.

    நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 294-ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையிலிருந்த 793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 382 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ரெயில் விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெறுவோர் குறித்த விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    srcodisha.nic.in, bmc.govt.in, osdma.org ஆகிய இணையதளங்களில் சிகிச்சை பெறுவோர் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

    • நாட்டையே உலுக்கிய கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 294-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி தெரிவித்துள்ளார்.
    • விபத்துக்குள்ளான ரெயிலின் முன்பதிவு பெட்டியில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் அருகே மோதி விபத்து ஏற்பட்டது. அதிவேகத்தில் சென்ற போது நடந்த இந்த விபத்தால் ரெயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலைந்தது.

    ரெயில் விபத்து நடந்து 36 மணிநேரம் ஆனநிலையில் விபத்து நடந்த இடத்தில் உள்ள ரெயில் பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 7 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தண்டவாளத்தில் கிடந்த ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டன. தண்டவாளத்தில் கிடந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள், சரக்கு ரெயில் பெட்டிகள் என அனைத்து ரெயில் பெட்டிகளும் அகற்றப்பட்டது.

    நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 294-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி தெரிவித்துள்ளார்.

    விபத்து நடந்த இடத்தில் 2-வது நாளாக நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்னவ் கூறியதாவது:-

    ரெயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து உடல்களும் அகற்றப்பட்டுள்ளன. இந்தப் பாதையில் ரெயில்கள் ஓடத் தொடங்கும் வகையில் புதன்கிழமை காலைக்குள் சீரமைப்புப் பணிகளை முடிக்கும் வகையில் நடைபெறுவதாக கூறினார்.

    இதனிடையே விபத்துக்குள்ளான ரெயிலின் முன்பதிவு பெட்டியில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அவர்களின் நிலை என்ன என்பதை அறிய ஒடிசா அதிகாரிகளுடன் இணைந்து தமிழ்நாடு குழு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டி மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளதாக மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    ஒடிசா:

    கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் அருகே மோதி விபத்து ஏற்பட்டது.

    அதிவேகத்தில் சென்ற போது நடந்த இந்த விபத்தால் ரெயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலைந்தது. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் 290-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு இந்திய தலைவர்கள் மட்டுமின்றி, உலக தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு இந்தியா முழுவதும் பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர்தூவியும் அவர்களது ஆன்மா சாந்தியடைய அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் இந்த கோர ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பூரி கடற்கரையில் ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கிடப்பது போன்ற மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளார். அந்த மணல் சிற்பம் முன்பு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டி இந்த மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளதாக மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உயிர் பிழைத்தவர்கள் விரைவில் குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என கூறி உள்ளார்.

    இதேபோல் மேற்குவங்கம் மற்றும் புதுச்சேரியில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    தஞ்சாவூரில் பொதுமக்கள் தங்கள் வீடுகள் முன்பு வரிசையாக நின்று கையில் மெழுகுவர்த்தியை ஏந்தி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    திருவண்ணாமலை கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ரெயில் விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி மோட்சதீபம் ஏற்றப்பட்டது. இதேபோன்று, புதுக்கோட்டை, மதுரை, சென்னை, கோவை, நெல்லை உள்பட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    • உலகையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் 288 பேர் பலியாகி உள்ளனர்.
    • சுமார் 900 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பாலசோர் :

    மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்துசென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரெயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு விபத்துக்குள்ளாகின. உலகையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் 288 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 900 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து நடந்த பகுதியை மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று நேரில் பார்வையிட்டார். மேலும் விபத்துக்கான காரணங்கள் குறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    முன்னாள் ரெயில்வே மந்திரியான மம்தா பானர்ஜி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ரெயில்வேயின் செயல் திறனை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    விபத்து நடந்த வழித்தடத்தில் மோதல் தடுப்பு கருவி இல்லை. அது இருந்திருந்தால் இந்த பேரழிவு தடுக்கப்பட்டிருக்கும். ஒரு முன்னாள் ரெயில்வே மந்திரி என்ற முறையில் இந்த துறையின் உள் செயல்பாடுகள் எனக்கு தெரியும். அப்பாவி மக்களின் உயிரை ஆபத்தில் ஆழ்த்தும் இதுபோன்ற விபத்துகளை தடுப்பதற்கு சிறந்த ஒருங்கிணைப்பு அவசியம். ரெயில்வேயின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசர தேவை ஆகும்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

    முன்னதாக டாக்டர்கள், நர்சுகள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய 50 பேர் கொண்ட மேற்கு வங்காள குழு விபத்து நடந்த இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேலும் 110 ஆம்புலன்ஸ்கள் மற்றும் உபகரணங்களும் விபத்து நடந்த இடத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

    விபத்தில் சிக்கிய ரெயிலில் இருந்த 60 சதவீத பயணிகள் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் எனக்கூறிய அவர், இந்த விபத்தில் உயிரிழந்த மேற்கு வங்காளத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

    • பெங்களூரு-ஹவுரா ரெயிலில் கர்நாடகத்தை சேர்ந்த 110 பேர் ஆன்மிக பயணம் மேற்கொண்டனர்.
    • கடவுள் அருளால் 110 பேரும் விபத்தில் சிக்காமல் உயிர் தப்பியுள்ளனர்.

    பெங்களூரு :

    ஒடிசா மாவட்டம் பாலசோர் மாவட்டம் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு 3 ரெயில்கள் விபத்துக்குள் சிக்கின. இதில் பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலும் ஒன்று. இந்த சங் கிலி தொடர் விபத்தில் 288 பேர் பலியானார்கள். மேலும் 800-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில், பெங்களூரு-ஹவுரா ரெயிலில் கர்நாடகத்தை சேர்ந்த 110 பேர் ஆன்மிக பயணம் மேற்கொண்டனர். அதாவது சிக்கமகளூரு மாவட்டம் கலசா, ஒரநாடு, உத்தரகன்னடா மாவட்டம் சிர்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த அவர்கள் ரெயிலில் பயணம் செய்தனர்.

    ஜெயின் சமுதாயத்தை சேர்ந்த இவர்கள் 24-வது சமண தீர்த்தங்கரர் முக்தி பெற்ற தலமான ஜார்கண்ட் மாநிலம் கிரிதிக் மாவட்டத்தில் உள்ள சம்மேட் ஷிகர்ஜி ஜெயின் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பயணம் செய்த ரெயில் விபத்தில் சிக்கினாலும், 110 பேரும் பயணம் செய்த ரெயில் பெட்டிகள் விபத்தில் இருந்துதப்பின. இதனால் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.

    இந்த நிலையில் 110 பேரும் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பிய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அதாவது, 110 பேரும் 30-ந்தேதி சிக்கமகளூரு மாவட்டம் ஒரநாடு அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் கூடினர். அங்கு அவர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் கோவில் முன்பு அவர்கள் குழு புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர்.

    பின்னர் அங்கிருந்து வாகனங்களில் பெங்களூரு பையப்பனஹள்ளியில் உள்ள சர் எம்.விஸ்வேசுவரய்யா ரெயில்வே முனையத்துக்கு 31-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு வந்துள்ளனர். ஆனால் காலை 10.30 மணிக்கு வரவேண்டிய ரெயில் 2 மணி நேரம் தாமதமாக பகல் 12.30 மணிக்கு வந்துள்ளது. அதன் பிறகே அவர்கள் எஸ் 5, எஸ்.6 மற்றும் 7-வது ரெயில் பெட்டிகளில் ஏறி பயணம் செய்துள்ளனர்.

    அவர்கள் பயணித்த ரெயில்பெட்டி கடைசியில் இருந்துள்ளது. அந்த ரெயிலின் என்ஜின் விசாகப்பட்டினத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 110 பேர் பயணம் செய்த 3 ரெயில் பெட்டிகளும் முன்னால் சென்றுள்ளது.

    அதன்பிறகு தான் ஒடிசா அருகே பெங்களூரு-ஹவுரா ரெயில் விபத்தில் சிக்கியுள்ளது. இதில் கடைசி 2 பொதுப்பெட்டிகளும், ஒரு பிரேக் வேனும் தடம் புரண்டுள்ளது. இந்த விபத்தில் 110 பேர் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

    இதுகுறித்து 110 பேரில் பயணம் செய்யும் மால பிரகாஷ் ஜெயின் என்பவரின் சகோதரர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிக்கமகளூருவில் இருந்து 110 பக்தர்கள் அஜித்குமார் ஜெயின் என்பவர் தலைமையில் பெங்களூரு-ஹவுரா ரெயிலில் புறப்பட்டு சென்றனர். இதில் எனது அண்ணன் மால பிரகாஷ் ஜெயின், அண்ணி லாவண்யாவும் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் பயணித்த ரெயில் பெட்டிகள் சர் எம்.விஸ்வேசுவரய்யா ரெயில் முனையத்தில் இருந்து ரெயில் புறப்பட்ட போது, கடைசியில் இருந்தது. இடையில் ரெயில் என்ஜின் மாற்றப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பயணித்த பெட்டிகள் என்ஜினுக்கு அடுத்தபடியாக முன்னோக்கி இணைக்கப்பட்டுள்ளது.

    இந்த ரெயில் விபத்தில் சிக்கி, கடைசி 2 பொதுப்பெட்டியும், ஒரு பிரேக் வேனும் சிக்கியுள்ளன. இதனால் 110 பேரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியுள்ளனர். அவர்கள் மாற்று ரெயில் மூலம் புறப்பட்டு சென்றுள்ளனர். கடவுள் அருளால் 110 பேரும் விபத்தில் சிக்காமல் உயிர் தப்பியுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரெயில் விபத்துகளுக்கு முக்கிய காரணமாக சிக்னல் பிரச்சினை இருந்து வருகிறது.
    • ‘கவாச்’ தொழில்நுட்ப அமைப்பின் செயல்பாட்டை ஏற்கனவே ரெயில்வே மந்திரி அஷ்விணி வைஷ்ணவ் தானே சோதித்துப்பார்த்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஒடிசாவில் ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் சங்கிலித்தொடர் விபத்தில் சிக்கி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி இருப்பது நாட்டையே துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

    இந்த ரெயில் விபத்தை 'கவாச்' (கவசம்) என்னும் அதிநவீன தொழில்நுட்ப அமைப்பின் மூலம் தடுத்து இருக்க முடியும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்த 'கவாச்' தொழில்நுட்ப அமைப்பு விபத்து நடந்த தடத்தில் இல்லை என்பது இங்கு கவனிக்கத்தக்க அம்சம் ஆகும். டிரைவரின் தவறினாலோ அல்லது பிற காரணங்களினாலோ நேருகிற ரெயில் விபத்துகளைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த 'கவாச்' தொழில்நுட்ப அமைப்பு.

    இந்த 'கவாச்' தொழில்நுட்ப அமைப்பு, தானியங்கி முறையில் இயங்குவது ஆகும். இது இந்திய ரெயில்வேக்காக 'ஆர்.டி.எஸ்.ஓ.' என்று அழைக்கப்படுகிற ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிலை அமைப்பு, இந்தியாவின் 3 விற்பனை நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கி உள்ளது.

    ரெயில் விபத்துகளுக்கு முக்கிய காரணமாக சிக்னல் பிரச்சினை இருந்து வருகிறது. ரெயிலை இயக்கும் டிரைவர் சிக்னலை தவற விடுகிறபோது, இந்த அமைப்பு அவரை உஷார்படுத்தி விடும்.

    மேலும், 2 ரெயில்கள் அதிவேகமாக வரும்போது தடம் மாறி மற்றொரு ரெயிலுடன் மோதும் வாய்ப்பு ஏற்படுமானால் தன்னிச்சையாகவே ரெயிலின் வேகம் குறைக்கும் தொழில்நுட்பத்தை இந்த 'கவாச்' அமைப்பு கொண்டுள்ளது. ரெயிலை டிரைவர் இயக்கி வருகிறபோது, அவர் பிரேக் போடத்தவறினாலும், தானியங்கி முறையில் இது பிரேக் போட்டு ரெயிலின் வேகத்தை குறைக்கும்.

    இந்த 'கவாச்' தொழில்நுட்ப அமைப்பின் செயல்பாட்டை ஏற்கனவே ரெயில்வே மந்திரி அஷ்விணி வைஷ்ணவ் தானே சோதித்துப்பார்த்துள்ளார். அந்த சோதனை வெற்றி கண்டிருக்கிறது. இது குறித்து அப்போது அவர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அந்த பதிவில் அவர், "கவாச் அமைப்பினைக் கொண்டு மோதல் சோதனை வெற்றிகரமாக நடந்தது. இந்த 'கவாச்' அமைப்பானது, 380 மீட்டர் தொலைவில் மற்றொரு லோகோ முன்னால் வந்தபோதே, லோகோவை தன்னிச்சையாக நிறுத்திவிட்டது" என கூறி இருந்தார்.

    ஆனால் நேற்று முன்தினம் விபத்து நடந்த பாலசோர் தடத்தில் இந்த 'கவாச்' அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை என்று இந்திய ரெயில்வே செய்தி தொடர்பாளர் அமிதாப் சர்மா உறுதிப்படுத்தி உள்ளார். இந்த 'கவாச்' தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்பு, நாட்டில் 1,455 கி.மீ. தடங்களில்தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தகவல்கள் கூறுகின்றன.

    • ஒடிசா ரெயில் கோர விபத்து, நாட்டையே உலுக்கி உள்ளது.
    • துரதிர்ஷ்டவசமான இந்த விபத்து குறித்து ரெயில்வேயும், அரசும் விசாரணை நடத்த வேண்டும்.

    புதுடெல்லி :

    ஒடிசா ரெயில் கோர விபத்து, நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த விபத்து தொடர்பாக அனுதாபங்களை தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், விபத்துக்கு பொறுப்பேற்று ரெயில்வே மந்திரி பதவி விலகுவாரா என கேட்கின்றனர். அது வருமாறு:-

    காங்கிரஸ்பாராளுமன்றக் கட்சி தலைவர் சோனியா காந்தி:-

    ஒடிசாவில் பேரழிவாய் நடந்திருக்கிற பயங்கர ரெயில் விபத்தால் நான் மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்துள்ளேன். பலியானோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கல்களையும் தெரிவிக்கிறேன்.

    தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார்:-

    ஒடிசாவில் நடந்துள்ள இதுபோன்ற ரெயில் விபத்தை நாடு சமீபத்தில் கண்டது இல்லை. கடந்த காலத்தில் இப்படி பெரும் விபத்துகள் நடந்த போது ரெயில்வே மந்திரிகள் பதவி விலகி உள்ளனர். ஆனால் இதுபற்றி தற்போது யாரும் பேசவில்லை.

    துரதிர்ஷ்டவசமான இந்த விபத்து குறித்து ரெயில்வேயும், அரசும் விசாரணை நடத்த வேண்டும்.

    தேசியவாத காங். செய்தி தொடர்பாளர் கிளைடி கிராஸ்டோ:-

    ஒடிசா ரெயில் விபத்துக்காக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்னவ் தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆனால் இது எந்தப் பலனையும் தராது. ஏனென்றால் தார்மீகத்தில் பா.ஜ.க. நம்பிக்கை வைத்திருந்தால் அது மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்களில் நீண்டகாலமாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரிஜ் பூஷண் சரண்சிங்கை பதவி விலகச் சொல்லி இருக்கும்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்:-

    முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ரெயில்வே மந்திரி, எப்போதுமே ரெயில்வே அமைப்பு பாதுகாப்பானது, விபத்து நேராது என்று கூறி வந்துள்ளார். 1956-ம் ஆண்டு நடந்த ரெயில் விபத்தைத் தொடர்ந்து அப்போதைய ரெயில்வே மந்திரி லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகினார். ஆனால் தற்போது மோடி அரசில் உள்ள ரெயில்வே மந்திரியிடம் இதை நாம் எதிர்பார்க்க முடியாது. கொஞ்சமாவது வெட்கம் இருந்தால், ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    • ஒடிசாவில் கோர விபத்தில் 17 ரெயில் பெட்டிகள் தடம்புரண்டன.
    • விபத்து நடந்த இடத்தில் ரெயில் பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகிய கோர சம்பவம் நடைபெற்றது. இந்த கோர விபத்தில் 17 ரெயில் பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது. 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஒடிசா ரெயில் விபத்து நடந்து 36 மணிநேரம் ஆனநிலையில் விபத்து நடந்த இடத்தில் உள்ள ரெயில் பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 7 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தண்டவாளத்தில் கிடந்த ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டன.

    தண்டவாளத்தில் கிடந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள், சரக்கு ரெயில் பெட்டிகள் என அனைத்து ரெயில் பெட்டிகளும் அகற்றப்பட்டது.

    தண்டவாளங்கள் மற்றும் மின் இணைப்புகள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது வருகிறது. விரைவில் சீரமைப்பு பணிகள் முடிந்து ரெயில்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
    • 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    வாஷிங்டன் :

    ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். இரங்கல் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:-

    ரெயில் விபத்து செய்தியை அறிந்ததும் இதயமே நொறுங்கி விட்டது. இந்தியர்களுடன் அமெரிக்க மக்கள் துணை நிற்பதாக ஜோ பைடன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • சரக்கு ரெயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதி பெட்டிகள் தடம் புரண்டது
    • விபத்தில் இதுவரை 260 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்

    ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நேற்று மூன்று ரெயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதுவரை 261 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 900 பேர் காயமடைந்துள்ளனர். ஒரே இடத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் மூன்று ரெயில்கள் விபத்துக்குள்ளானது பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இருந்தாலும் எதிர்க்கட்சிகள், அரசியல் கட்சிகள் தற்போது இதுகுறித்து விமர்சனம் செய்யவில்லை.

    மீட்பு பணி நிறைவடைந்து ரெயில் தண்டவாளங்கள் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. ரெயில் விபத்து குறித்து உயர்மட்ட குழு விசாரிக்கும் என இந்திய ரெயில்வே துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

    தற்போது தொடக்க கட்ட விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட விசாரணையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் லைன் மாறி சென்றதுதான் இந்த கோர விபத்துக்கு முக்கிய காரணம் என தகவல் தெரிவிப்பதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

    பஹனாகா பஜார் ரெயில் நிலையம் அருகே நான்கு ரெயில் தண்டவாளங்கள் உள்ளன. அதில் ஒன்று லூப் லைன். லூப் லைன் ரெயில் நிலையம் அருகே மற்ற ரெயில்களுக்கு வழி விடவும், ரெயில்கள் எளிதாக சென்று வருவதற்காகவும் அமைக்கப்படும். அந்த லூப் லைன் சுமார் 750 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும்.

    அந்த லூப் லைனில்தான் சரக்கு ரெயில் நின்று கொண்டிருந்துள்ளது. மெயின் லைனில் வரக்கூடிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் திடீரென லூப் லைன் வழியாக சென்றுள்ளது. கோரமண்டல் ரெயில் 128 கி.மீட்டர் வேகத்தில் எதிர்பாராத விதமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயில் மேல் மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் தடம் புரண்ட பெட்டிகள் மற்றொரு தண்டவாளத்தில் சரிந்து விழுந்ததால் அந்த வழியாக 116 கி.மீட்டர் வேகத்தில் வந்த பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ், தடம் புரண்ட கோரமண்டல் ரெயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால்தான் இந்த கோர விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இது குறித்து ரெயில்வே துறையில் உள்ள அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. முழுமையான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நாசவேலைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து இதுவரை அதிகாரிகள் யாரும் பேசவில்லை.

    முழு விசாரணை முடிந்த பின்னர்தான் இதுகுறித்து தகவல் வெளிப்படையாக தெரியவரும்.

    கவாச் என்ற ரெயில் மோதல் தவிர்ப்பு சிஸ்டம் அந்த வழிப்பாதையில் இல்லை என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

    • ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்திய மந்திரிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    • புவனேஸ்வர் விமான நிலையத்தில் இருந்து விபத்து நடைபெற்ற பகுதிக்கு ஹெலிகாப்டரில் வந்தடைந்தார்.

    ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகிய கோர சம்பவம் நடைபெற்றது. இந்த கோர விபத்தில் 17 பெட்டிகள் தடம்புரண்டன. விபத்தில் 261 பேர் பலியாகியுள்ளனர். 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    இதையடுத்து ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்திய மந்திரிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது கோர விபத்து எப்படி நடந்தது? மீட்பு மற்றும் மீட்கப்பட்டவர்களின் நிலை, மீட்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, நிவாரண விவரங்கள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் ஆலோசனையில் கலந்து கொண்டனர். ரெயில் விபத்து குறித்து பெண் அதிகாரி ஒருவர் மோடியிடம் விளக்கினார்.

    இந்த நிலையில் ரெயில் விபத்து நடந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு மேற்கொண்டார். புவனேஸ்வர் விமான நிலையத்தில் இருந்து விபத்து நடைபெற்ற பகுதிக்கு ஹெலிகாப்டரில் வந்தடைந்தார்.

    விபத்து நடந்த பஹானாகா பஜார் ரெயில் நிலைய பகுதியை பிரதமர் மோடி பார்வையிட்டார். பிரதமர் மோடியுடன் ரெயில்வே அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.

    பின்னர் அங்கிருந்து கட்டாக் மருத்துவமனைக்கு செல்லும் பிரதமர் அங்கு விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

    • அமைச்சர் உதயநிதி தலைமையில் தமிழக குழு ஒடிசாவில் உள்ளது
    • தமிழகத்தில் சிகிச்சைக்காக மூன்று மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன

    ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகிய கோர சம்பவம் நடைபெற்றது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது. 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணியளவில் ஒடிசாவில் இருக்கும் உதயநிதி தலைமையிலான தமிழக குழுவுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

    அப்போது, அங்குள்ள நிலை குறித்து கேட்டறிந்தார். சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர், அரசுத்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    ×