என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "complaint register"
புதுச்சேரி:
புதுவை ஈஸ்வரன்கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துவெங்கடாச்சலம் (வயது62). இவருக்கு தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கத்தில் சொந்தமாக நிலம் உள்ளது. இதற்கிடையே முத்து வெங்கடாசலத்துக்கும், அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவருக்கும் நிலத்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று வெங்கடாச்சலம் தனது உறவினர் மீனாட்சி (60) என்பவருடன் அபிஷேகப்பாக்கத்தில் உள்ள நிலத்தை பார்வையிட சென்றார். அப்போது மாயகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் விக்னேஷ் ஆகிய 2 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து முத்துவெங்கடாச்சலம் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி மாயகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் விக்னேஷ் ஆகிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
பாளையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு ஓராண்டு ஆகியும் மாத சம்பளம் வழங்காததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.
நெல்லை மாவட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் ஆரோக்கியராஜ், பட்டதாரி ஆசிரியர்கள் கழக நெல்லை மாவட்ட தலைவர் மாரியப்பன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகனை சந்தித்து மனு கொடுக்க சென்றனர். அவரது அறைக்கு செல்ல 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என போலீசார் கூறினர்.
இதையடுத்து ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 46 ஆசிரியர்களை போலீசார் கைது செய்து பாளையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இரவு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக மாவட்ட தலைவர் முருகன் உள்பட 46 ஆசிரியர்கள் மீதும் பாளை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் நேற்று இரவு விழுப்புரம் மாவட்டத்தில் ஸ்வாமிங் ஆப்ரேஷன் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியில் போலீஸ்சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலும், விழுப்புரத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையிலும் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசார் நேற்று இரவு மாவட்டத்தில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
மேலும் வாகன சோதனை மற்றும் பழைய குற்றவாளிகளை கண்காணித்தல் போன்றவற்றில் ஈடுபட்டனர். இந்த திடீர் வாகன சோதனையில் 1430 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 36 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யக்கோரி ஆர்.டி.ஓ. வுக்கு பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.
மேலும் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 6 பேர் மீதும், ஓட்டுனர் உரிமம், உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டிய 571 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மொத்தம் 640 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 89 தங்கும் விடுதிகள் மற்றும் லாட்ஜூகளில் போலீசார் சோதனை செய்தனர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பா.ஜனதா கட்சி சார்பில் உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணி பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு பேசினார். அவர் போது, மத கலவரத்தை தூண்டும் வகையிலும், மேலும் மாவட்ட நிர்வாகத்தை குறித்தும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி, முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், பா.ஜனதா பிரமுகர் கருப்பு முருகானந்தம் மீது மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மீது வழக்குபதிவு செய்யப்பட்ட சம்பவம் முத்துப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்