search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலத்தகராறில் பெண் உள்பட 2 பேருக்கு கொலை மிரட்டல்: தந்தை-மகன் மீது போலீசார் வழக்கு
    X

    நிலத்தகராறில் பெண் உள்பட 2 பேருக்கு கொலை மிரட்டல்: தந்தை-மகன் மீது போலீசார் வழக்கு

    அபிஷேகப்பாக்கத்தில் நிலத்தகராறில் பெண் உள்பட 2 பேருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை-மகன் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை ஈஸ்வரன்கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துவெங்கடாச்சலம் (வயது62). இவருக்கு தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கத்தில் சொந்தமாக நிலம் உள்ளது. இதற்கிடையே முத்து வெங்கடாசலத்துக்கும், அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவருக்கும் நிலத்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வெங்கடாச்சலம் தனது உறவினர் மீனாட்சி (60) என்பவருடன் அபிஷேகப்பாக்கத்தில் உள்ள நிலத்தை பார்வையிட சென்றார். அப்போது மாயகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் விக்னேஷ் ஆகிய 2 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து முத்துவெங்கடாச்சலம் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி மாயகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் விக்னேஷ் ஆகிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×