search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்வி அலுவலகம் முற்றுகை: நெல்லையில் 46 ஆசிரியர்கள் மீது வழக்கு
    X

    கல்வி அலுவலகம் முற்றுகை: நெல்லையில் 46 ஆசிரியர்கள் மீது வழக்கு

    நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய 46 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பாளையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு ஓராண்டு ஆகியும் மாத சம்பளம் வழங்காததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.

    நெல்லை மாவட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் ஆரோக்கியராஜ், பட்டதாரி ஆசிரியர்கள் கழக நெல்லை மாவட்ட தலைவர் மாரியப்பன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகனை சந்தித்து மனு கொடுக்க சென்றனர். அவரது அறைக்கு செல்ல 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என போலீசார் கூறினர்.

    இதையடுத்து ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 46 ஆசிரியர்களை போலீசார் கைது செய்து பாளையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இரவு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக மாவட்ட தலைவர் முருகன் உள்பட 46 ஆசிரியர்கள் மீதும் பாளை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

    Next Story
    ×