search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector"

    • மீன்வள தினத்தை முன்னிட்டு கடல்வாழ் உயிரின உணவு கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரை பூங்கா வில் உலக மீன்வள தினத்தை யொட்டி கடல் வாழ் உயிரினங்களின் உணவு கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உணவு கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

    இக்கண்காட்சி அரங்கில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைத்து பல அறிய வகை மீன்கள் மூலம் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள் இடம்பெற்றன. மாலை 4 மணிக்கு தொடங்கிய கண்காட்சி இரவு 8 மணிக்கு முடி வடைந்தது. இதில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

    கண்காட்சி அரங்கில் நவீன மின்னணு திரை அமைத்து தமிழக அரசால் மீனவர்களுக்கு வழங்கும் அரசு நலத்திட்டங்கள் குறித்தும், மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் தொழிலில் ஈடுபட்டு அதன் மூலம் பெறப்படும் வருமா னம் மற்றும் மீனவர்க ளுக்கான பயிற்சி மற்றும் பேரிடர் காலங்களில் பாது காப்புடன் சென்று வருவ தற்கான வழிகாட்டுதல் குறித்த குறும்படங்கள் திரை யிடப்பட்டது.

    குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டிருந்தது. உணவு கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயகுமார், மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா. உதவி இயக்குநர்கள் சிவகுமார் (மண்டபம்), அப்துல்காதர் ஜெய்லானி (ராமேசுவரம்), மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவி த்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர். இந்த குறைதீர்வு கூட்டத்தில், பட்டா தொடர்பாக 124 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 55 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 46 மனுக்களும், குழந்தைகள் கல்வி உதவித்தொகை தொடர்பாக 34 மனுக்களும், ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 82 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 47 மனுக்களும், தையல் இயந்திரம் கோரி 33 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 35 மனுக்களும், மாற்றுத்திறனாளி நல அலுவலகம் தொடர்பாக 23 மனுக்களும், இதர மனுக்கள் 144 ஆக மொத்தம் 623 மனுக்கள் வரப்பெற்றன.

    பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கலெக்டர் அருண் தம்புராஜ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடை உபகரணத்தை 14 நபர்களுக்கு ரூ.75,000 மதிப்பீட்டிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 1 பயனாளிக்கு தையல் எந்திரத்தையும் வழங்கினார்.இக்கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் ரமா மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழ் வளர்ச்சித்துறை யின் மூலம் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்த ரங்கம் நிகழ்ச்சி 2 நாட்கள் நடைபெற்றது.
    • அனைவரையும் ஈர்க்கக்கூடியது தமிழ்மொழி என கலெக்டர் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மன்னர் துரை சிங்கம் அரசு கலைக்கல்லூ ரியில் தமிழ் வளர்ச்சித்துறை யின் மூலம் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்த ரங்கம் நிகழ்ச்சி 2 நாட்கள் நடைபெற்றது. இதில் கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கி பேசியதா வது:-

    நமது தாய் மொழியான தமிழ் மொழிக்கு தனிச்சிறப்பு உள்ளது. உலக மொழிகளில் எளிமையாக கற்றுக் கொள்ளும் வகையிலும், சிறப்பு வாய்ந்த மொழி யாகவும் தமிழ் மொழி திகழ்கிறது. தமிழ் மொழிக ளிலுள்ள வார்த்தைகளின் அர்த்தங்களை எளிதில் உணர்ந்து, அனைவரையும் ஈர்க்கக்கூடிய வகையிலும் ரசிக்கத்தக்க வகையிலும் உள்ளது. பல்வேறு காலச்சூழ் நிலையில் மாற்று மொழிக ளின் பயன்பாடுகள் அத்தி யாவசியம் அதிகரித்து வந்தாலும், தாய்மொழி பயன்பாட்டை தவிர்க்கக்கூடாது.

    தாய்நாட்டில் முழுமையாக பேச்சு முதல் கோப்புகள் பராமரிப்பு வரை தமிழ் மொழியை பின்பற்றி பாதுகாப்பதுடன், வருங்காலச் சந்ததியினருக்கு நீங்கள் ஒரு முன்மாதிரியாக திகழ்ந்திட வேண்டும். இதனை கருத்தில் கொண்டு அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

    தாய்மொழியை காப்பதும் அதன் மூலம் அலுவலக செயல்பாடுகளை செயல்படுத்துவதும் என ஒவ்வொன்றையும் முழுமையாக பின்பற்றி அனைவரும் தமிழ்மொழியை பாதுகாத்திட வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் ஆஷா அஜித் பரிசுகள் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் நாகராசன், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் துரையரசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சண்முக சுந்தரம், தொழிலாளர் உதவி ஆணையர் கோட்டீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேதாளை மக்கள் தொடர்பு முகாமில் 52 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • ராமநாதபுரம் கலெக்டர் வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை கிராமத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் 2 பயனாளிகளுக்கு மாற்று திறனாளி உதவித்தொகை ஆணைகள், 4 பயனாளிகளுக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவி தொகை ஆணைகள், 1 பயனாளிக்கு ஆதரவற்ற விதவை உதவித்தொகை ஆணை, 25 பயனாளிகளுக்கு இ-பட்டாக்கள், 4 பயனாளி களுக்கு முழுப்புலம் பட்டா மாறுதல் ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ. 26,585 மதிப்பிலான விலை யில்லா தையல் இயந்திரங்கள், 2 பயனாளிகளுக்கு ரூ. 10,036 மதிப்பிலான விலையில்லா சலவை பெட்டிகள்,

    வேளாண்மைத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ. 690 மதிப்பிலான தென்னங் கன்று திரவ உயிரி உரங்களையும், தோட்டக்கலைத்துறை மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.800 மதிப்பிலான மரக்கன்றுகள் என மொத்தம் 52 பயனாளிகளுக்கு 1.46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.

    முன்னதாக அரசு துறைகளின் சார்பில் மேற் கொள்ளப்பட்டுவரும் திட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் கோபு, மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன், மண்டபம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்புலெட்சுமி ஜீவானந்தம் , ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் முரளிதரன், வேதாளை ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அல்லா பிச்சை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு சார்பில் பயிற்சி பட்டறை நடந்தது.
    • தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களின் ஒன்றாக செயல்பட்டு வருகின்றன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நான் முதல்வன் நிரல் திருவிழா அறிமுகம் மற்றும் விளக்கப்பட்டரை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களின் ஒன்றாக செயல்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் நோக்கம் தொழில், கல்வி மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்களின் எதிர்கா லத்திற்கான திட்ட இலக்கீட்டை எளிதாக கை யாளும் வகையில் அவர்க ளுக்கான வழிகாட்டுதலை மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

    பொதுவாக கல்லூரி இறுதியாண்டில் படிக்கும் மாணவர்களுக்கான திட்டத்தின் போது அவர்க ளுக்கு ஏற்படும் இடையூறு களை கண்டறிந்து சரியான வழிகாட்டுதலை மேற் கொள்ள செய்வதன் மூலம் ஒவ்வொரு மாணவரின் எதிர்காலம் சிறந்து விளங்கும். அதுதான் நான் முதல்வன் என்னும் திட்டத்தில் உன்னத லட்சியமாகும்.

    இத்திட்டத்தில் மாணவர்களுக்கு தக்க வழிகாட்டுதலை மேற்கொள்ள சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. மற்றும் அண்ணா பல்கலைக் கழகத்தை சேர்ந்த அனுபவம் மிக்க மாணவர்கள் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு புராஜக்ட் திட்டத்திற்கு தக்க ஆலோசனை மற்றும் வழி காட்டுதலை செய்து கொடுப்பதற்கான பணி களை தொழில் பயிற்சி நிலையம் முதல்வர்கள் மற்றும் கல்லூரி முதல் வர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாண வர்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களின் இறுதி யாண்டு கல்வியை முடித்து ஒவ்வொருவரின் லட்சிய மும் நிறைவேறிடும் வகை யில் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் உதவி இயக்குநர் திறன் பயிற்சி குமரவேல், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் மாரிமுத்து, ஓம் பிரகாஷ் திட்ட மேலாளர் ரூபன், மாவட்ட தொழில் மையம் உதவி பொறியாளர் பிரதீப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.62.68 லட்சம் மதிப்பில் மானிய உதவிகளை விருதுநகர் கலெக்டர் வழங்கினார்.
    • மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களிடம் நேரில் சென்று கலெக்டர் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

    இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித் தொகை, திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளி கள், மூத்த குடிமக்களிடம் நேரில் சென்று கலெக்டர் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    முன்னதாக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கொட்டகை அமைத்தல், கறவைப்பசு, ஆடுகள் மற்றும் நாட்டுக் கோழிகள் கொள்முதல் செய்தல், பசுந்தீவன பயிர் சாகுபடி செய்தல், இயந்திர புல் நறுக்கும் கருவி கொள்முதல் செய்தல் உள்ளிட்ட கால்நடை சார்ந்த தொழில் புரிவதற்கும், கருவிகள் கொள்முதல் செய்வதற்கும் 30 பயனா ளிகளுக்கு மொத்தம் ரூ.99.50 லட்சம் திட்ட மதிப்பில் ரூ.62.68 லட்சம் அரசு மானி யத்திற்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை கலெக்டர் அனிதா, மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்கழுவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுற்றுச் சூழல் ஆர்வலர் தாமோதரனின் இயற்கைக்கான சேவையை பாராட்டி அவருக்கு சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழக அரசு சார்பில் விருது வழங்கப்பட்டது.
    • தாமோதரன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதியை நேரில் சந்தித்து விருதையும், சான்றிதழையும் வழங்கி வாழ்த்து பெற்றார்.

    தூத்துக்குடி:

    கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கடந்த மாதம் 1-ந்தேதி தமிழக கிழக்குக் கடற்கரையில் சுமார் 1076 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரே நாளில் ஒரு கோடி பனை விதைகள் நடவு செய்த உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்து பனை விதை நடவுப் பணியை சிறப்பாக மேற்கொண்டு, தொடர்ந்து முதல்-அமைச்சரின் "பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்கு" வலுசேர்க்கும் விதமாக பசுமை காடுகளையும் உருவாக்கி வரும் தூத்துக்குடி சுற்றுச் சூழல் ஆர்வலரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும், தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) நிறுவனத் தலைவர் எம்.ஏ.தாமோதரனின் இயற்கைக்கான சேவையை பாராட்டி அவருக்கு சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழக அரசு சார்பில் விருது வழங்கப்பட்டது.

    அதனை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் நாராயணன் மற்றும் தமிழக அரசு சுற்றுச் சூழல், காலநிலை மாற்றத்திற்கான அமைச்சர் மெய்யநாநன் ஆகியோர் விருதும், சான்றிதழும் வழங்கிப் பாராட்டினர்.

    அமைச்சர்களிடம் விருது பெற்ற சுற்றுச் சூழல் ஆர்வலர் தாமோதரன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதியை நேரில் சந்தித்து விருதையும், சான்றிதழையும் கலெக்டரிடம் வழங்கி வாழ்த்துப் பெற்றார். அப்போது முதல்-அமைச்சரின் பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்கு வலுசேர்க்கும் விதமாக தொடர்ந்து பசுமைக்கான பணியை மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து செயல்படுத்துவோம் என தாமோதரன், மாவட்ட கலெக்டரிடம் உறுதியளித்தார்.

    • மதுரையில் நடப்போம் நலம் பெறுவோம் திட்ட தொடக்க விழா நடந்தது.
    • அனைத்து பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் நடை பயிற்சியில் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்புடன் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை நடத்தும் சுகாதார நடை பயிற்சி நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் தொடக்க விழா நடந்தது.

    மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கேணிக்கரை காவல் நிலையத்தில் தொடங்கி, ஆஷி பன்னோக்கு மருத்து வமனை, அம்மா பூங்கா, வேலுமாணிக்கம் ஹாக்கி மைதானம், புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக பி ன்புறம், போலீஸ் சூப்பி ரண்டு முகாம், மகாத்மா காந்தி நகர், கிழக்கு கடற்கரை சாலை (Ajfan Dates), புதிய சோதனை சாவடி, காவல் கண்கா ணிப்பாளர் முகாம், அரசு விருந்தினர் மாளிகை வழியாக கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் வரை மொத்தம் 8 கி.மீ நடை பயணம் மேற்கொள்ள ப்பட்டது.அனைத்து பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் நடை பயிற்சியில் கலந்து கொண்டனர். மேலும் நடை பயிற்சி மேற்கொள்பவர்கள் வசதிக்காக குடிநீர், ஓய்வு நாற்காலிகள் மற்றும் வழிகாட்டி பலகைகள், நடைபயிற்சி நன்மைகள் குறித்த பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.

    இத்திட்டத்தினை இன்று காலை சனிக்கிழமை ராம நாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க துரை,மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜீலு,சார் கலெக்டர் அப்தாப் ரசூல்,சுகாதார பணிகள் துணை இயக்குநர்கள் அர்ஜுன் குமார் (ராமநா தபுரம்), இந்திரா (பர மக்குடி),செய்தி மக்கள் தொடர்பு அலு வலர்பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) விஜயகுமார், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் தினேஷ்கு மார்,மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ராமநாதபுரம் நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம், வாலாந்த ரவை ஊராட்சி மன்றத் தலைவர் முத்தமிழ் செல்வி பூரணவேல்,உட்பட உள்ளாட்சி பிரதிநி திகள், அரசு அலுவ லர்கள் பங்கேற்றனர்.

    • விருதுநகர், சிவகங்கையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • வாக்குச்சாவடி நிலை அலுவர்கள் மூலமாக நேரடியாகவும், இணையதள வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர், சிவகங்கையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடர்பாக கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேலை வாய்ப்பு, பயிற்சித் துறை ஆணையாளர் சுந்தரவல்லி தலைமையில் அங்கீக ரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடந்தது.

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக 4,5,18,19-ந் தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களின் போது கடைபிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும், இரட்டைப் பதிவுகளை நீக்கம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும், வாக்காளர் பட்டியலில் 18 வயது பூர்த்தியான எவரும் விடுபட்டு விடக்கூடாது எனவும், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் எனவும் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரால் எடுத்துரைக்கப்பட்டது.

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் ஆஷா அஜித் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவர்கள் மூலமாக நேரடியாகவும் மற்றும் இணையதள வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விருதுநகரில் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் தொடர் செயல்பாடுகளே வெற்றியை தரும்.
    • பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், வத்திராயிருப்பு நாடார் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அம்மாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவி களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரை யாடினார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    நமக்கான அன்றாட வாழ்க்கையில் விருப்பமான ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கு பல்வேறு தரவுகள் நமக்கு தேவைப்படுகிறது. அதோடு அதனை அடைவதற்கான நமது முயற்சியும் தேவைப் படுகிறது. அதுபோல உயர்கல்வியில் நமக்கு விருப்பமான துறையை படிப்பதற்கு அதற்கான புரிதலும், அதற்கான கல்லூரிகள், மதிப்பெண்கள் ஆகிய தரவுகளை அறிந்து கொண்டு அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    ஒரு காலத்தில் மாண வர்களுக்கான வாய்ப்புகள் குறித்து அறிந்து கொள்வது மிகவும் அரிதாக இருந்தது. ஆனால் தற்போது அதற் கான தகவல்கள் அனைத்தும் இணையதளம் மூலம் கைப்பேசியில் பெற முடிகிறது.

    மாணவர்கள் தங்க ளுக்கான இலக்கை நிர்ண யித்துக் கொண்டு, அதற் கான முயற்சிகளை நீங்கள் தான் எடுக்க வேண்டும். தற்போது மேற்கொள்ளப் பட்டு வரும் முயற்சிகளை விட சிறிதளவு அதிகமான முயற்சிகள் மேற்கொள்ளும் போது நமக்கான கனவினை அடை யலாம்.

    யார் தொடர்ச்சியாக ஒரு செயலை செய்கிறார் களோ அவர்கள் மிகப் பெரிய வெற்றியாளர்களாக ஆகிறார்கள். வெற்றி பெறு வதற்கும், சாதிப்பதற்கும் அறிவும், திறமையும் தேவை யில்லை. தொடர்ச்சியான செயல்பாடு தான் தேவை என்பதுதான் இத்தனை ஆண்டுகால மனித குல வரலாறு நமக்கு தரும் செய்தி. எனவே, மாணவ, மாணவிகள் தங்களது தொடர்ச்சியான செயல் பாடுகள் மூலம் பெறும் நல்ல மதிப்பெண்கள் மூலம், வாய்ப்புகளை பெறும் போது, நிச்சயமாக வெற்றி யடையலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • 35 தூய்மை காவலா்களுக்கு பரிசுகளை வழங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    ஊட்டி,

    ஊட்டி ஊராட்சி ஒன்றியம், மேல்குந்தா ஊராட்சிக்குட்பட்ட கூா்மயாபுரம் சமுதாய கூடத்தில் உள்ளாட்சிகள் தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடை பெற்றது. மாவட்ட கலெக்டர் அருணா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.

    கிராமசபை கூட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், மகளிா் சுயஉதவிக்குழு உருவாக்குதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து கலெக்டர் அருணா கூட்டத்தில் பேசியதாவது:-

    பொதுமக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மூலம் களஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கு மாா்பக புற்றுநோய் குறித்து விழிப்புணா்வு அவசியம் இருக்க வேண்டும். அதற்காக சுகாதாரதுறை மூலம் மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த முகாம்களில் பெண்கள் தயக்கமின்றி பங்கேற்று பரிசோதனை செய்துகொள்ள முன்வர வேண்டும்.

    மேல்குந்தா கிராம ஊராட்சியில் பல்வேறு திட்டப் பணிகள் நிறைவு பெற்று உள்ளன. இவை அனைத்தும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சாா்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 10 பேருக்கு தலா ரூ.1000 மதிப்பில் மருத்துவ பெட்டகம், 5 பேருக்கு தலா ரூ.2000 மதிப்பில் ஊட்டச்சத்து பொருள்கள் அடங்கிய பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டன.

    தொடர்ந்து 35 தூய்மை காவலா்களுக்கு பரிசுகளை வழங்கிய மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம் இருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவா் மாயன் (எ) மாதன், தோட்டக்கலை இணைஇயக்குநா் ஷிபிலாமேரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் வாஞ்சி நாதன், ஊட்டி கோட்டாட்சியா் மகராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குநா் பாலுசாமி உள்பட பலா் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
    • புனரமைப் பதற்கான நடவடிக்கை களை மேற்கொள்வதற்கு அதிகாரிகளிடம் அறிவு றுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், ராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் நடை பெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், வேளாண்மைத்துறை மூலம் டி.மானகசேரி கிராமத்தில் தரிசு நிலங்களில் செம்மை நெல் சாகுபடி எந்திரம் மூலம் நடைபெற்று வரும் நடவு பணிகள், நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையில் நடவு செய்யப் பட்டுள்ள கரும்புகள் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் குதிரைவாலி விதைகள், ரூ.42 ஆயிரம் மானியத்தில் சுழல் கலப்பையும், ரூ.2,500 மானியத்தில் நெல் விதைக்கும் கருவியையும், ரூ.6 ஆயிரம் மானியத்தில் சோளம் இடு பொருட்கள், பண்ணை கருவிகளை பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லியில் உள்ள பருத்தி ஆராய்ச்சி மையத்தை கலெக்டர் பார்வையிட்டார். ராஜபாளையம் நகர் பகுதியில் உள்ள அங்கன் வாடிகளுக்கு சென்று கலெக்டர் ஆய்வு செய்தார்.அங்கு சேதமடைந்த கட்டி டங்களை புனரமைப் பதற்கான நடவடிக்கை களை மேற்கொள்வதற்கு அதிகாரிகளிடம் அறிவு றுத்தினார்.

    ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். 

    ×