search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Environmentalist"

    • சுனாமி மற்றும் இயற்கை சீற்றத்தின் போது தண்ணீர் மற்றும் அலையின் வேகத்தை குறைப்பதில் இதன் பங்கு அளப்பரியது.
    • தனியார் துறைமுகம் வர உள்ளதா?அல்லது தொழிற்சாலைகள் தான் முக்கியமானதா? என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்.

    அலையாத்தி காடுகள் கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்புநிலங்களிலும், நதி முகத்துவாரங்களிலும், உவர் நீரிலும் வளரும் தாவரங்கள் ஆகும். இவை காடுகளை மட்டுமல்லாமல் மனிதர்கள் வாழும் நிலப்பரப்பையும் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

    சுனாமி மற்றும் இயற்கை சீற்றத்தின் போது தண்ணீர் மற்றும் அலையின் வேகத்தை குறைப்பதில் இதன் பங்கு அளப்பரியது.

    இதற்கு முன்பு மெரினா-பெசன்ட் நகர் இடையே அடையாறு ஆற்று கரையோரத்தில் அலையாத்தி காடுகள் இருந்து உள்ளன. தற்போது இல்லை. கொசஸ்தலை ஆற்றின் முகத்துவார பகுதிகளில் அலையாத்தி தாவரங்கள் சுமார் 9 அடி வரை உள்ளன. எண்ணெய் கசிவால் இந்த அலையாத்தி மரங்களில் சுமார் 3 அடி உயரத்திற்கு எண்ணெய் படர்ந்து இருந்தது.

    இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் கூறும்போது, எண்ணெய் கசிவு காரணமாக கொசஸ்தலை ஆற்று முகத்துவாரத்தில் உள்ள அலையாத்தி காடுகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. சுமார் 3 அடி உயரத்திற்கு இந்த தாவரங்களில் எண்ணெய் படந்து உள்ளது. இந்த பாதிப்பில் இருந்து இந்த மரங்கள் எப்படி மீளும் என்று தெரியவில்லை. அங்குள்ள விலங்குகளும் மிகவும் முக்கியமானது. இங்குள்ள அலையாத்தி காடுகளை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிச்சாரவத்தில் உள்ள அலையாத்தி காடுகளை போல் இங்குள்ள அலையாத்தி காடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்.?

    இங்கு தனியார் துறைமுகம் வர உள்ளதா?அல்லது தொழிற்சாலைகள் தான் முக்கியமானதா? என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்.

    பிச்சாவரத்தை போல் அலையாத்தி காடுகளை பாதுகாக்க அரசு ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி பாதுகாத்தால் தான் அடுத்துவரும் பாதிப்பு களில் இருந்து தற்காத்து கொள்ளமுடியும். இதனை அரசு உடனடியாக செய்ய வேண்டும் என்றார்.

    • சுற்றுச் சூழல் ஆர்வலர் தாமோதரனின் இயற்கைக்கான சேவையை பாராட்டி அவருக்கு சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழக அரசு சார்பில் விருது வழங்கப்பட்டது.
    • தாமோதரன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதியை நேரில் சந்தித்து விருதையும், சான்றிதழையும் வழங்கி வாழ்த்து பெற்றார்.

    தூத்துக்குடி:

    கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கடந்த மாதம் 1-ந்தேதி தமிழக கிழக்குக் கடற்கரையில் சுமார் 1076 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரே நாளில் ஒரு கோடி பனை விதைகள் நடவு செய்த உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்து பனை விதை நடவுப் பணியை சிறப்பாக மேற்கொண்டு, தொடர்ந்து முதல்-அமைச்சரின் "பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்கு" வலுசேர்க்கும் விதமாக பசுமை காடுகளையும் உருவாக்கி வரும் தூத்துக்குடி சுற்றுச் சூழல் ஆர்வலரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும், தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) நிறுவனத் தலைவர் எம்.ஏ.தாமோதரனின் இயற்கைக்கான சேவையை பாராட்டி அவருக்கு சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழக அரசு சார்பில் விருது வழங்கப்பட்டது.

    அதனை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் நாராயணன் மற்றும் தமிழக அரசு சுற்றுச் சூழல், காலநிலை மாற்றத்திற்கான அமைச்சர் மெய்யநாநன் ஆகியோர் விருதும், சான்றிதழும் வழங்கிப் பாராட்டினர்.

    அமைச்சர்களிடம் விருது பெற்ற சுற்றுச் சூழல் ஆர்வலர் தாமோதரன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதியை நேரில் சந்தித்து விருதையும், சான்றிதழையும் கலெக்டரிடம் வழங்கி வாழ்த்துப் பெற்றார். அப்போது முதல்-அமைச்சரின் பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்கு வலுசேர்க்கும் விதமாக தொடர்ந்து பசுமைக்கான பணியை மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து செயல்படுத்துவோம் என தாமோதரன், மாவட்ட கலெக்டரிடம் உறுதியளித்தார்.

    ×