search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wandering Trees"

    • சுனாமி மற்றும் இயற்கை சீற்றத்தின் போது தண்ணீர் மற்றும் அலையின் வேகத்தை குறைப்பதில் இதன் பங்கு அளப்பரியது.
    • தனியார் துறைமுகம் வர உள்ளதா?அல்லது தொழிற்சாலைகள் தான் முக்கியமானதா? என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்.

    அலையாத்தி காடுகள் கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்புநிலங்களிலும், நதி முகத்துவாரங்களிலும், உவர் நீரிலும் வளரும் தாவரங்கள் ஆகும். இவை காடுகளை மட்டுமல்லாமல் மனிதர்கள் வாழும் நிலப்பரப்பையும் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

    சுனாமி மற்றும் இயற்கை சீற்றத்தின் போது தண்ணீர் மற்றும் அலையின் வேகத்தை குறைப்பதில் இதன் பங்கு அளப்பரியது.

    இதற்கு முன்பு மெரினா-பெசன்ட் நகர் இடையே அடையாறு ஆற்று கரையோரத்தில் அலையாத்தி காடுகள் இருந்து உள்ளன. தற்போது இல்லை. கொசஸ்தலை ஆற்றின் முகத்துவார பகுதிகளில் அலையாத்தி தாவரங்கள் சுமார் 9 அடி வரை உள்ளன. எண்ணெய் கசிவால் இந்த அலையாத்தி மரங்களில் சுமார் 3 அடி உயரத்திற்கு எண்ணெய் படர்ந்து இருந்தது.

    இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் கூறும்போது, எண்ணெய் கசிவு காரணமாக கொசஸ்தலை ஆற்று முகத்துவாரத்தில் உள்ள அலையாத்தி காடுகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. சுமார் 3 அடி உயரத்திற்கு இந்த தாவரங்களில் எண்ணெய் படந்து உள்ளது. இந்த பாதிப்பில் இருந்து இந்த மரங்கள் எப்படி மீளும் என்று தெரியவில்லை. அங்குள்ள விலங்குகளும் மிகவும் முக்கியமானது. இங்குள்ள அலையாத்தி காடுகளை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிச்சாரவத்தில் உள்ள அலையாத்தி காடுகளை போல் இங்குள்ள அலையாத்தி காடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்.?

    இங்கு தனியார் துறைமுகம் வர உள்ளதா?அல்லது தொழிற்சாலைகள் தான் முக்கியமானதா? என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்.

    பிச்சாவரத்தை போல் அலையாத்தி காடுகளை பாதுகாக்க அரசு ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி பாதுகாத்தால் தான் அடுத்துவரும் பாதிப்பு களில் இருந்து தற்காத்து கொள்ளமுடியும். இதனை அரசு உடனடியாக செய்ய வேண்டும் என்றார்.

    ×