search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "certification"

    • குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி. சார்பில் மாணவர்களுக்கு என்.சி.சி.சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • 2 முதல் 5 சதவீதம் அரசு பணி நியமனத்தில் இட உள் ஒதுக்கீடு வழங்கப்படும்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி. சார்பில் ஈரோடு 15-வது பட்டாலியன் கமாண்டிங் ஆபீசர் கர்னல் ஜெய்தீப், லெப்டினன்ட் கர்னல் கிருஷ்ணமூர்த்தி ஆணையின் படி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி ஆண்டுக்கு 50 மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி வழங்கி வருகிறார்.

    இவர்களுக்கு என்.சி.சி.ஏ.சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதன் மூலமாக போலீஸ், ராணுவம், ரயில்வே துறையில் 2 முதல் 5 சதவீதம் அரசு பணி நியமனத்தில் இட உள் ஒதுக்கீடு வழங்கப்படும். தலைமை ஆசிரியர் ஆடலரசு, பட்டாலியன் ஹவில்தார் தேவராஜ், கார்த்தி, விடியல் ஆரம்பம் பிரகாஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.

    இதே பள்ளியில் உலக பிசியோ தெரபி தினம் என்.சி.சி.சார்பில் கொண்டாடப்பட்டது. பிசியோதெரபி டாக்டர் செந்தில்குமார் பங்கேற்று முதலுதவி செய்யும் முறை, மருந்துகள் இல்லா மருத்துவம் குறித்து செயல்விளக்கம் கொடுத்ததுடன் 50 என்.சி.சி. மாணவர்களுக்கு நோட்டுகள், பேனாக்கள், மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினார். பள்ளி மேலாண்மை உறுப்பினர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் நெல் ஏஎஸ்டி16, டிபிஎஸ் 5, எம்டியு1010, ஏடி37, கோ51, ஜோதி ஆகிய ரகங்கள் பயிரிடப்பட்டு விதைப்பண்ணையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விதைப்பண்ணை பயிரானது தற்போது பூப்பருவம் மற்றும் அறுவடை பருவத்தில் உள்ளது.

    இவ்விதைப்பண்ணைகளை ஈரோடு மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் எஸ்.மோகனசுந்தரம் ஆய்வு மேற்கொண்டு விதைச்சான்று அலுவலர்கள் மற்றும் விதை உற்பத்தியாளர்களுக்கு தரமான விதை உற்பத்தி பயிற்சி அளித்தார்.

    இப்பயிற்சியின்போது விதைப்பயிர் நடவுமுறை, கலவன்கள் அகற்றும் முறை, பயிர் விலகு தூரம், குறித்தறிவிக்கப்பட்ட நோய்கள் பற்றி கூறினார்.

    மேலும் இந்த பருவத்தில் நெற்பயிரை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை கண்டறிந்து அவற்றை கட்டுப்படுத்தும் பயிர்பாதுகாப்பு முறைகளை பற்றி கூறினார்.

    இப்பயிற்சியின்போது ஈரோடு மாவட்ட விதைச் சான்று அலுவலர்கள், தனியார் விதை உற்பத்தியாளர்கள் மற்றும் டி.என்.பாளையம் வட்டார உதவி விதை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் சுத்தம் செய்யும் பணியினை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாஅவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
    • சிறப்பாக பணிபுரிந்த நிர்வாகத்திற்கும், துப்புரவு பணியாளர்களுக்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்பதனை வலியுறுத்தி கடலூர் மாநகராட்சி முழுவதும் மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இன்று காலை கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் எனது குப்பை எனது பொறுப்பு என்பதனை வலியுறுத்தி கடற்கரை முழுவதும் இருந்த குப்பைகளை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நகர்நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி மற்றும் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடலூர் அரசு பெரியார் கலைக்கல்லூரி, புனித வள்ளலார் கலைக் கல்லூரி மற்றும் நகராட்சி மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவர்கள் எனது குப்பை எனது பொறுப்பு அடிப்படையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு சிறப்பாக பணிபுரிந்த நிர்வாகத்திற்கும், துப்புரவு பணியாளர்களுக்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா, மாணவரணி தி.மு.க. துணை அமைப்பாளர் பாலாஜி, மண்டல குழு தலைவர் பிரசன்னா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சுதா ரங்கநாதன், செந்தில் குமாரி இளந்திரையன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • முன்னனி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 200-க்கும் அதிகமான காலிப்பணியிட ங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
    • வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக மாதந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் சிறு வேலைவாய்ப்பு முகாம்கள் அலுவலக வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

    இவ்வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சாவூரில் உள்ள முன்னனி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 200-க்கும் அதிகமான காலிப் பணியிட ங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

    இம்முகாமில் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ, பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம்.

    மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணிவாய்ப்பினை பெற்று கொள்ளுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

    • கிளவுட் கம்ப்யூட்டிங் குறித்த ஒரு வார ஆன்லைன் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் நடத்தியது.
    • டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 60 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி மையம் இணைந்து கிளவுட் கம்ப்யூட்டிங் குறித்த ஒரு வார ஆன்லைன் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் நடத்தியது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 60 ஆசிரியர்கள் பங்கேற்றனர். 9 நிபுணர்கள் பயிற்சி வழங்கினர். கல்வி குழுமத்தின் தலைவர் ஜோதிமணி அம்மாள், செயலர் செந்தில் குமார், இணை செயலர் சங்கர் கணேஷ் மற்றும் ஆலோசகர் பரமேஸ்வரன் ஆகியோர் முகாமில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். கல்வி நிறுவனத்தின் கல்வி சார் இயக்குனர் முனைவர் மோகன், கல்லூரி முதல்வர் முனைவர் ராமபாலன், தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் முனைவர் மணிகண்டன் ஆகியோர் முகாமில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியை பேராசிரியர்கள் நாகலட்சுமி, முனைவர் லாவண்யா, முனைவர் ராஜூ மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஆசிரியர்கள் நடத்தினர்.

    • செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரிக்கு தேசிய தர மதிப்பீட்டில் ஏ பிளஸ் தரச்சான்று அளித்துள்ளது.
    • அந்த வரிசையில் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியும் அந்த பெருமையை பெற்றுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரிக்கு ஏ பிளஸ் தரச்சான்று தேசிய தர மதிப்பீட்டு நிறுவனம் அளித்துள்ளது.

    சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிர்லாஸ்பூரில் அமைந்துள்ள குரு காசி தாஸ் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர். அலோக் சக்கரவால் தலை மையில் வந்த குழுவினர் கல்லூரியின் உள்கட்ட மைப்பு வசதிகள், பேராசிரி யர்களின் தரம், மாணவ ர்களுக்கு வேலை வாய்ப்பு வசதிகள் மற்றும் தேர்ச்சி விகிதம் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின் மதிப்பெண் 4-க்கு 3.32 அளித்து ஏ பிளஸ் தரச்சான்றிதழ் வழங்கப்ப ட்டுள்ளது.

    இது குறித்து கல்லூரியின் தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா கூறியதாவது:-

    எங்கள் கல்லூரி 25-ம் ஆண்டில் எடுத்து வைக்கும் இந்த தருணத்தில் ஏ பிளஸ் தரச்சான்று கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பின் தங்கிய மாவட்டமென அழைக்கப்படும் ராமநாத புரம் மாவட்டத்தில் பெரு நகரங்களுக்கு இணையான வசதிகளை நம் பகுதியிலும் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்து உள்ளது,

    ராமநாதபுரம் மாவ ட்டத்தில் முதல் பொறியியல் கல்லூரியாகவும், தமிழ கத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 17 கல்லூரிகள் தான் இந்த ஏ பிளஸ் சான்றிதழை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியும் அந்த பெருமை யை பெற்றுள்ளது. கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், அலுவலக ஊழியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளின்படி படிவம் எண்.5-ஐ பூர்த்தி செய்து கையொப்பமிட வேண்டும்.
    • திருப்பூர் மாநகராட்சி 4 மண்டல அலுவலகங்களில் கட்டிட நிறைவு சான்றுக்கு சிறப்பு முகாம் நடக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் கட்டிட நிறைவு சான்றுக்கு விண்ணப்பிக்க 4 மண்டல அலுவலகங்களில் நாளை 29-ந்தேதி (புதன்கிழமை) சிறப்பு முகாம் நடக்கிறது.

    திருப்பூர் மாநகராட்சி 4 மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி மூலம் கட்டிட அனுமதி பெற்று கட்டிடம் கட்டி உள்ளவர்கள் கட்டிட நிறைவு சான்று பெறுவதற்கு தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளின்படி படிவம் எண்.5-ஐ பூர்த்தி செய்து கையொப்பமிட வேண்டும்.

    அந்த படிவத்துடன் திருப்பூர் மாநகராட்சியில் பதிவு பெற்ற பொறியாளர் மற்றும் பதிவு பெற்ற கட்டுமான பொறியாளரிடம் படிவம் 6,7,8 ஆகியவற்றை பூர்த்தி செய்து கையொப்பம் பெற்று வரைபடத்துடன் படிவத்தை அந்தந்த மண்டல அலுவலகத்தில் நேரடியாக வழங்க வசதியாக சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

    இதன்படி நாளை (புதன்கிழமை) காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை வேலம்பாளையம் 1-வது மண்டல அலுவலகத்தில்1,9 முதல் 15-வது வார்டுகள், 21 முதல் 27-வது வார்டுகள் வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நஞ்சப்பா நகரில் உள்ள 2-வது மண்டல அலுவலகத்தில் 2 முதல் 8-வது வார்டுகள் வரையும், 16 முதல் 20-வது வார்டுகள் வரையும், 30,31,32 ஆகிய வார்டுகளை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    நல்லூர் 3-வது மண்டல அலுவலகத்தில் 33 முதல் 35-வது வார்டுகள் வரையும், 44 முதல் 51-வது வார்டுகள் வரையும், 56, 58, 59,60 ஆகிய வார்டுகளை சேர்ந்தவர்களும், ஆண்டிப்பாளையத்தில் உள்ள 4-வது மண்டல அலுவலகத்தில் 28,29,36 முதல் 43-வது வார்டு வரையும், 52 முதல் 55-வது வார்டு வரையும், 57 ஆகிய வார்டுகளை சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

    இளம் பொறியாளர், உதவி பொறியாளர்கள் அனுமதி பெற்ற வரைபடத்தின் படி கட்டுமானம் கட்டப்பட்டுள்ளதா என கள ஆய்வு செய்து கட்டிட நிறைவு சான்று உடனடியாக வழங்குவார்கள்.இந்த தகவலை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

    மோடி திரைப்படத்திற்கான சான்றிதழ் குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. #PMNarendraModi #ModiBiopic
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘பி.எம்.நரேந்திரமோடி’ என்ற பெயரில் திரைப்படம் தயாராகி உள்ளது. இதில் மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்ப்பு மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக படத்தை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டது.

    பின்னர் இந்த படத்திற்கு தடை விதிக்கக் கோரி டெல்லி, மும்பை ஐகோர்ட்டுகளில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடியாகின. சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் இன்னும் சான்றிதழ் வழங்காததால், படத்தை வெளியிடுவது குறித்து நீதிபதிகள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. படம் வெளியாவது விதிமீறலா என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.



    இதையடுத்து, தேர்தல் ஆணையம் உடனடியாக மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு ஒரு கடிதம் எழுதியது. அதில், பிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவை தெரிவிக்கும்படி கூறியுள்ளது. தணிக்கை வாரியம் அளிக்கும் தகவலின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்.

    பாராளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 11ம் தேதி (நாளை) படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. #PMNarendraModi #ModiBiopic

    ×