என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
- கிளவுட் கம்ப்யூட்டிங் குறித்த ஒரு வார ஆன்லைன் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் நடத்தியது.
- டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 60 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி மையம் இணைந்து கிளவுட் கம்ப்யூட்டிங் குறித்த ஒரு வார ஆன்லைன் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் நடத்தியது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 60 ஆசிரியர்கள் பங்கேற்றனர். 9 நிபுணர்கள் பயிற்சி வழங்கினர். கல்வி குழுமத்தின் தலைவர் ஜோதிமணி அம்மாள், செயலர் செந்தில் குமார், இணை செயலர் சங்கர் கணேஷ் மற்றும் ஆலோசகர் பரமேஸ்வரன் ஆகியோர் முகாமில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். கல்வி நிறுவனத்தின் கல்வி சார் இயக்குனர் முனைவர் மோகன், கல்லூரி முதல்வர் முனைவர் ராமபாலன், தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் முனைவர் மணிகண்டன் ஆகியோர் முகாமில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியை பேராசிரியர்கள் நாகலட்சுமி, முனைவர் லாவண்யா, முனைவர் ராஜூ மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஆசிரியர்கள் நடத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்